ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

ரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்

அன்புள்ள தம்பிக்கு.

உன் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

உன் கடிதம் கண்டேன், அதில் நீ எழுதியவைகளை படித்தேன், ஆனால், இந்த கடிதத்தில் நீ எழுதியவைகளை படிக்கும் போது, இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி உனக்கு குழப்பம் இருப்பதாக உணர்ந்தேன்.
உன்னை குழப்பியவர்கள் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்கவுமில்லை உயிர்த்தெழவுமில்லை. யூனுஸ் நபியின் அடையாளம் இயேசுவின் சிலுவை மரணத்திற்கு ஒப்பிட முடியாது என்று  உன்னிடம் கூறியதாக தெரிகிறது. இந்த கடிதத்தில்  வாழ்விலும், மரணத்திலும் எப்போதும் நம்மை வெற்றி சிறக்கச் செய்யும் ஒரே வல்லமையாகிய இயேசுக் கிறிஸ்துவின் (ஈஸா அல்-மஸீஹ்) வல்லமையை, யோனா தீர்க்கதரிசியின் அடையாளம் மூலம் நான் உனக்கு விளங்கப்படுத்துகிறேன்.
1) விசுவாசியாத மக்களுக்காக ஒரே ஒரு அடையாளம்:
இயேசுக் கிறிஸ்து தாம் பூமியில் வாழ்ந்த காலத்தில் தம்மை விசுவாசிக்காத மக்களுக்கு, தம்முடைய ஆதிகாரத்தை நிரூபிக்க, ஒரே ஒரு அற்புத அடையாளம் மட்டுமே கொடுக்கப்படும் என்று அறிவித்தார். அது யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயாகும் (மத்தேயு 12:38-41 மற்றும் லூக் 11:29-30).
இஸ்லாத்தில் யூனுஸ் (துல் நூன் - Dhan-Nun) நபியைப்பற்றிய இந்த சம்பவம்  குறிப்பிடப்பட்டுள்ளதை குர்ஆனில் நீ காணலாம்.
யோனா கடலில் வீசியெறியப்பட்டான், அங்கு அவன் ஒரு மிகப்பெரிய மீனால் விழுங்கப்பட்டு, இயல்பில் அவன் இறந்தான். ஆனால் மூன்று நாளைக்குப் பின் மீன் யோனாவை வெட்டாந்தரையில் வாந்திபண்ணிற்று; தேவன் அவனை திரும்பவும் உயிரோடு எழுப்பினார் என்பதை நீ மறந்திருக்க வாய்ப்பில்லை.
இஸ்லாமியர் கூற்றுபடி, யோனா மீனின் வயிற்றில் மூன்று நாள் சுவாசமில்லாமலேயே அற்புதவிதமாக உயிரோடு காக்கப்பட்டான் என்று கூறுவது இந்த கதைக்கு எந்த பலனையும் கொடுக்கப்போவதில்லை. மேலும் இயேசு இந்த கதையை பயன்படுத்துவதிலிருந்து, அவர் யோனா இறந்ததை புரிந்துகொண்டிருந்தார் என்பது தெளிவாகிறதல்லவா?
யோனா தம் அனுபவத்தைக் குறித்து விவரிக்கும்போது, "நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன்" (யோனா 2:2); "ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர்" (யோனா 2:6) என்று கூறுகிறான்.
உன்னுடைய சில முஸ்லீம் நண்பர்கள் மூன்று பகல் மற்றும் மூன்று இரவு என்ற கருத்தின் அடிப்படையில் உன்னுடன் விவாதம் செய்திருப்பார்கள். இது, இயேசு வாக்களித்து நிறைவேற்றின உன்னத வாக்குத்தத்தமான மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல் என்ற மிக முக்கிய கருத்தை மறைப்பதற்கு மேற்கொள்ளப்படும் வாதமாகும். உனக்கு ஒரு உதாரணத்தின் மூலம் இதனை புரிய வைக்கிறேன். உனது நண்பன் உனக்கு  5 நிமிடத்தில் 10 லட்சம் ரூபாய் தருவதாக வாக்களித்து விட்டு, உன் கடிகாரத்தின்படி 10 நிமிடங்கள் சென்றபின்பே அவன் அந்த பணத்தை தருவதால், நீ அந்த பணத்தை வாங்க மறுப்பதை போலாகும். நீ சிந்தித்து பார்ப்பாய் என்று நம்புகிறேன். இந்த மூன்று நாள் இரவு பகல் என்பதைப் பற்றி விவரமாக விளக்கம் தேவையானால் எனக்கு தெரிவிக்க மறக்காதே.
2) கொடுக்கவும் மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் அதிகாரம்:
உனக்கு இன்னும் தெளிவாக புரிய, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைக் குறித்து இயேசுக் கிறிஸ்து கூறிய வேறு சில முன்கூற்றுகளையும் பார்போம்.
 இயேசுக் கிறிஸ்து தம் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைக்குறித்து ஏற்கனவே பலமுறை கூறியுள்ளார். உதாரணமாக மாற்கு 8:31, 10:34. அவர் தீர்க்கதரிசனமாகவோ, வாக்குத்தத்தமாகவோ மட்டும் இதை கூறாமல், தம் சீஷர்கள் இந்த சம்பவத்தைக்குறித்து அறிந்திருக்கவும், அதை எதிர்பார்த்திருக்கவும் வேண்டுமென விரும்பினார்.
அவர் இதை, வெறுமனே, நடக்கப்போகும் ஒரு சம்பவமாக மாத்திரம் கூறாமல், தமக்குள்ள அதிகாரம் நிறைவேறுதலைக் குறித்தே பேசினார். "அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு" (யோவான் 10:17-18)
உனது இஸ்லாமிய நண்பர்கள் இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை உணரும் போது அவர்கள் உனக்கு இப்படி சொல்வார்கள். "ஈஸா மரித்தோரை எழுப்பினார் என்று குர்ஆன் சொல்கிறது. ஆக, அவருக்கு முன் பலர் உயிர்த்தெழுந்து உள்ளனரே! எனவே ஈஸாவின் உயிர்த்தெழுதலை மட்டும் எப்படி விசேஷமாக கருத முடியும்?"

இந்த கேள்விகளுக்கு பதில் மிகவும் சுலபமானது. இயேசு எப்படி லாசருவை மரித்தோரிலிருந்து எழுப்பினார், எப்படி நாயீன் ஊர் விதவையின் மகனை எழுப்பினார் என்றெல்லாம் வேதத்தில் சுவிசேஷ நூல்களில் விரிவாக நீ வாசித்திருக்கிறாய். லாசருவுக்கு, தாமாக மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும் வல்லமை இல்லை. அவருக்கு அதை முன்னறிவிக்கவும் இயலவில்லை. ஆனால் இயேசுவோ, தாம் மரித்தோரிலிருந்து எழுந்திருப்பதை முன்னறிவித்ததுமல்லாமல் அதை நிறைவேற்றிக் காண்பித்தார்.
இயேசு சிலுவையிலறையப்பட்டு, மரித்து கல்லறையில் அடக்கம்செய்யப் பட்டார். ஆனால் மூன்றாவது நாள் உயிரோடு எழுந்தார். அவர் உயிர்த்தெழுந்தபின்பு, பலமுறை தம்மைப் பின்பற்றியவர்களுக்கு காணப்பட்டார். உதாரணமாக, மகதலேனா மரியாள் மற்றும் சில பெண் சீடர்கள், பேதுரு, எம்மாவூருக்கு சென்ற இரு சீடர்கள், 11 அப்போஸ்தலர் கூடியிருந்த இடம், மேலும் 500 பேர் கூடியிருந்த கூட்டத்திலும் (1 கொரி. 15:3-7) அவர் தம்மை வெளிப்படுத்தினார். 40 நாட்களுக்குப் பின் அவர் பரத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தம் சீடர்களை வல்லமையால் ஆட்கொள்ளும் படி பரிசுத்தாவியின் வரத்தை பொழிந்தருளினார்.
3) இஸ்லாமியர்களின் குழப்பம்:

தம்பி, உன்னுடைய இஸ்லாமிய நண்பர்கள் இயேசு நேரடியாக கடவுளால் மரணமில்லாமல் வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்றும், அவர் திரும்பவும் வரும்வரை அங்கேயே இருப்பார் என்றும் உனக்கு போதிக்கின்றனர்.

இவர்கள் சொல்லும் இந்தக் கதை இயேசுவின் பரிகாரபலி (குர்பானி)யையும், மரணத்திலிருந்து வெற்றி பெற்றதையும் மாத்திரம் மறுக்க முயலவில்லை, மாறாக ஒரு மனிதன் சாதாரண மனித உடலோடு 2000 வருடமாக பரலோகத்தில் வாழ்வதாக ஒரு விநோதமான, தேவையற்ற அற்புதமாகிய ஒரு கருத்தையும் முன்வைக்கிறது. ஆனால் சிலர் இந்த விநோதத்தை தவிர்க்கும்பொருட்டு, இயேசு சிலுவையில் மரிக்கவுமில்லை, வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுமில்லை, மாறாக அவர் எல்லோரையும்போல எங்கோ ஒரு இடத்தில் ஒரு சாதாரண மரணமடைந்தார் என்கின்றனர். உதாரணமாக அகமதியா முஸ்லீம்கள், அவர் காஷ்மீரில் மரணமடைந்தார் என்கின்றனர். கிறிஸ்தவரோடு பல விவாதங்கள் செய்த அகமது தீதட் என்பவர் இந்த கருத்தை ஒருவகையாக  போதித்துவந்தார். குர்-ஆனும் இஸ்லாமியர்களும் அதிகமாக குழம்பியிருக்கிற ஒரு காரியம் உண்டு என்றுச் சொன்னால், அது இயேசுவின் சிலுவை மற்றும் உயிர்த்தெழுதல் பற்றியதாகும். ஒவ்வொரு இஸ்லாமிய அறிஞரும் ஒவ்வொரு விதமாக பதில் அளிப்பார்.
எனதன்பு தம்பியே, யோனாவின் அடையளத்தை இயேசுவின் மரணத்தோடு ஒப்பிட்டு பார்த்து ஓரளவிற்கு தெளிவடைந்திருப்பாய் என்று நம்புகிறேன்.
கடிதம் மிகவும் நீண்டதாக இருக்கக்கூடாது என்பதற்காக, நான் சுருக்கமாக எழுதுகிறேன். கண்டிப்பாக நீ ஒரு மெயில் அனுப்புவாய் என்று எதிர்பார்க்கிறேன். உன் சந்தேகங்களை எழுது. என்னால் முடிந்த மட்டும் உனக்கு தெளிவு படுத்த முயற்சிக்கிறேன். நாளை ஒரு கடிதத்தோடு உன்னை சந்திக்கிறேன். அதாவது  சிலுவையின் நேரத்தில் அல்லாஹ் செய்த காரியங்கள் எவ்வளவு பெரிய பாதிப்பை இஸ்லாமுக்கு உண்டாக்கியிருக்கிறது என்பதை அடுத்த கடிதத்தில் உனக்கு விவரிப்பேன்.
இப்படிக்கு, உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.

கருத்துகள் இல்லை: