ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 23 ஜூலை, 2012

ரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல

 
[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3 ]
 
அன்பு தம்பிக்கு,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

நீ எழுதிய மெயில் (கடிதம்) கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். என்னுடைய மூன்று கடிதங்களுக்கு ஒரு பதிலையாவது நீ எழுதினாய் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.  நீ அந்த கடிதத்தில். பைபிளின் தேவனாகிய "யெகோவா தேவனும், அல்லாஹ்வும் ஒருவரே" என்று குறிப்பிட்டு இருந்தாய். இன்று அதே தலைப்பு குறித்து ஒரு சில விவரங்களை சுருக்கமாக நான் உனக்கு எழுதட்டுமா? நம்முடைய இந்த உரையாடல் மிகவும் உபயோகமான ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு தவறான தகவலை முஸ்லிம்கள் உனக்குச் சொல்லியுள்ளார்கள். பைபிளின் தேவனும், குர்-ஆனின் அல்லாஹ்வும் ஒரே நபர் அல்ல, இவர்கள் வெவ்வேறானவர்கள். வானத்துக்கும் பூமிக்கும் எவ்வளவு தூரம் இருக்கிறதோ அவ்வளவு இடைவெளி இவ்விருவருக்கும் இடையே உள்ளது.  நீ சௌதி சென்ற பிறகு பல மாதங்களாக சபை ஐக்கியத்தையும், சகோதர ஐக்கியத்தையும் உதறி தள்ளிவிட்டதினால் தான், நீ இஸ்லாமியர்களின் சொற்களை கேட்டு, அவர்கள் சொல்வது உண்மை என்று நம்பியுள்ளாய். சரி விஷயத்திற்கு வருகிறேன். யெகோவா தேவனும், அல்லாஹ்வும் வெவ்வேறானவர்கள் என்பதை விளக்க ஒரு புத்தகமே எழுதலாம், ஆனால், நீண்ட விளக்கங்களை படித்தால் என் தம்பிக்கு சலிப்பு உண்டாகுமே என்ற எண்ணத்தால்,  சுருக்கமாக சில குறிப்புக்களை எழுதுகிறேன். உனக்கு நேரம் கிடைக்கும்போது நான் சொல்லும் விவரங்களை நீயே படித்து தெரிந்துக்கொள்.

• முதலாவதாக, பைபிளின் இறைவன் தன்னை திரித்துவ தேவனாக வெளிப்படுத்துகிறார், பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராக  இருக்கிறார். ஆனால், அல்லாஹ்வோ ஏக இறைவனாக தம்மை வெளிப்படுத்துகிறார்.

• இரண்டாவதாக, பைபிளின் தேவன் தம்மை ஒரு பிதாவாக அனேக இடங்களில் தம்மை வெளிப்படுத்துகிறார். ஆனால், அல்லாஹ்வோ ஒரு எஜமானன் போல காட்சி அளிக்கிறார். தம்மை பின்பற்றுபவர்களை தன் பிள்ளைகளைப்போல அன்பாக பார்க்காத இறைவனாக அல்லாஹ் இருக்கிறார். உனக்கு சந்தேகம் இருந்தால், இஸ்லாமிய அறிஞர்களை கேட்டுப்பார், அதாவது "நான் அல்லாஹ்வை அப்பா என்று அழைக்கலாமா? அப்பா என்ற உரிமையோடு வேண்டிக்கொள்ளலாமா?" என்று கேட்டு தெரிந்துக்கொள். ஜாக்கிரதை நீ இஸ்லாமியர்களிடம் கேட்கும் கேள்விகள் உன்னை ஆபத்தில் கொண்டுச் சேர்க்கும்.

• மூன்றாவதாக, பைபிளின் தேவன் மக்களின் மீது "நிபந்தனையற்ற அன்பை பொழிகிறார், பாவி மீதும் அன்பு கொள்கிறார், அவன் திருந்தி மறுபடியும் தன்னிடம் வருவதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளார்". ஆனால், அல்லாஹ் இப்படி இல்லை. அவர் தீயவர்களை நேசிப்பதில்லை, பாவிகளை நேசிப்பதில்லை (ஸூரா 28:77, 30:45).  நற்செயல்களைச் செய்து தம்மை தொழுதுக்கொள்கிறவர்களை மட்டுமே நேசிக்கிறார் (ஸுரா 2:195, 2:222, 3:76, 3:146, 3:159, 5:13). நாம் பாவிகளாக இருக்கும் போதே நம் தேவன் நம்மீது அன்பு கூர்ந்து, தம்மைத் தாமே நமக்காக ஒப்புக்கொடுத்தார் (உனக்கு பைபிள் வசனங்களை அதிகமாக மேற்கோள் காட்டவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். இன்னும் உன் பைபிள் உன்னிடம் உள்ளதா? அல்லது அதனை தூக்கி எறிந்துவிட்டாயா?)

• நான்காவதாக, பைபிளின் தேவன்  நம் நிலைக்கு இறங்கிவந்து நம்முடன்  ஒரு நண்பனைப்போல நட்புறவை வைத்துக்கொள்ள  விரும்புகிறார். நாமும் முழு இருதயத்தோடு அவரை நேசிக்கவேண்டும் என்று விரும்புகிறார்.  ஆனால், அல்லாஹ் தன் மக்களிடம் எதிர்ப்பார்ப்பதெல்லாம் 'கீழ்படிதல்' மட்டுமே ஆகும்.  இயந்திரங்களைப் போல மக்கள் தன்னை தொழுதுக்கொள்ள வேண்டும், புரிந்தாலும், புரியாவிட்டாலும் தன் வேதத்தை படிக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார். கிறிஸ்தவர்களுக்கு தேவன் ஆறுதல்படுத்தும் பிதாவாகவும் உற்ற நண்பனாகவும் இருக்கிறார். ஆனால், முஸ்லிம்களுக்கு அல்லாஹ் அதிகாரம் செலுத்தும் ஒரு எஜமானனாக இருக்கிறார்.

• ஐந்தாவதாக,  பைபிளின் தேவன் அன்பானவர் மட்டுமல்ல, அவர் பரிசுத்தராகவும் பரிபூரண நீதியுள்ளவராகவும் இருக்கிறார். அதாவது நாம் பாவம் செய்யும் போது நம் தேவனுக்கு அவமானத்தை கொண்டு வருகிறோம், அவருக்கு எதிராக செயல்படுகிறோம், இதற்காக நீதியுள்ள தேவனிடமிருந்து நமக்கு தண்டனை காத்திருக்கும். அவர் நீதியுள்ளவர் என்பதால் தண்டனை நமக்கு தப்பாது.  அதே நேரத்தில் அவர் அன்புள்ளவராக இருப்பதினால், நம்முடைய தண்டனையை  அவர் தம்முடைய வார்த்தையை குமாரனாக அனுப்பி தாமே அதனை சுமந்தார். ஆனால், மக்கள் பாவங்கள் செய்து அல்லாஹ்வை அவமானப்படுத்தினாலும் சரி, சில சடங்காச்சாரங்களை செய்து மன்னிப்பு கேட்டால் அதனை அல்லாஹ் மன்னித்துவிடுகிறார், தன் நீதி பற்றி தனக்கே அக்கரையில்லாத இறைவனாக அல்லாஹ் காணப்படுகிறார்.  தம்மை மக்கள் அவமானப்படுத்தினதை காற்றில் விட்டுவிட்டார். எனவே அல்லாஹ் "பரிபூரண நீதியுள்ள நியாயாதிபதி" அல்ல. பைபிளின் தேவன் பரிபூரண நீதியுள்ள நியாயாதிபதியாகவும் இருக்கிறார், அதே நேரத்தில் அன்பாகவும் இருக்கிறார்.

• ஆறாவதாக பைபிளின் தேவன் தம்மை விட பெரியவர் யாரும் இல்லை என்பதால் தம்மீது மட்டுமே சத்தியம் செய்வார். ஆனால், அல்லாஹ் அனேக காரியங்கள் மீது சத்தியம் செய்வார், அதாவது இரவின் மீதும், மலையின் மீதும், நட்சத்திரங்கள் மீதும், நகரத்தின் மீதும், காலத்தின் மீதும் இன்னும் அனேக விஷயங்கள் மீதும் சத்தியம் செய்கிறார்.  இவ்விருவருக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தைப் பார்.

• ஏழாவதாக, பைபிளின் தேவனின் பரலோகம் அல்லது சொர்க்கம் ஆவிக்குரிய சொர்க்கமாகும். பரலோகில் திருமணம் இல்லை, உடலுறவு இல்லை என்று வேதம் தெளிவாகச் சொல்கிறது. ஆனால், அல்லாஹ்வின் சொர்க்கமோ, மோகம் நிறைந்த ஒரு இடமாக காட்சி அளிக்கிறது. குறைந்த பட்சம் ஒரு முஸ்லிம் சொர்க்கத்தில் தன் மனைவியோடு உடலுறவு கொள்கிறார் என்று சொன்னாலும் ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அல்லாஹ்வின் சொர்க்கம் கிட்டத்தட்ட ஒரு விபச்சார விடுதி போல காட்சி அளிக்கிறது (தம்பி இந்த வார்த்தையை பயன்படுத்த எனக்கு வேதனையாக உள்ளது, ஆனால் வேறு வழியில்லை, உண்மை கசக்கத்தான் செய்யும்). அனேக கன்னிப்பெண்கள் முஸ்லிம்களுக்கு கிடைப்பதாகவும், அவர்களோடு முஸ்லிம்கள் உடலுறவில் ஈடுபட்டு இருப்பதாகவும் இஸ்லாம் கூறுகிறது. நீ சிந்தித்துப்பார், பைபிளின் தேவனின் சொர்க்கத்திற்கும், அல்லாஹ்வின் சொர்க்கத்திற்கும் இடையே எவ்வளவு பெரிய இடைவெளி, இவ்விருவரும் ஒருவராக இருக்கமுடியுமா? நிச்சயமாக இல்லை.

இப்படி அனேக வித்தியாசங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம். ஒரு சில மாதங்களாக இஸ்லாமியனாக இருக்கின்ற நீ, நிச்சயம் இஸ்லாமிய சொர்க்கம் பற்றி, அல்லது இஸ்லாமியர்களுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் பெண்கள் பற்றிய ஒரு பிரசங்கத்தையாவது (பயானை) கேட்டு இருப்பாய் என்று நிச்சயமாக நான் நம்புகிறேன். 

ஆகவே, தம்பி நீ நினைப்பதுபோல, பைபிளின் தேவனும் குர்-ஆனின் அல்லாஹ்வும் ஒருவரல்ல என்பதை நீ புரிந்துக்கொள்ளவேண்டும்.

இதைப் பற்றி இன்னும் அதிகமாக உனக்கு விவரம் தேவைப்பட்டால் எனக்கு தெரிவிக்க மறந்துவிடாதே.

அடுத்த கடிதத்திலுல் உன்னை சந்திக்கிறேன்.

இப்படிக்கு
உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.

கருத்துகள் இல்லை: