ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

ரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்

[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2கடிதம் 3கடிதம் 4கடிதம் 5கடிதம் 6கடிதம் 7கடிதம் 8 , கடிதம் 9, கடிதம் 10, கடிதம் 11, கடிதம் 12கடிதம் 13 ]

அன்புள்ள தம்பிக்கு,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.
 
இன்று ஒரு முக்கியமான விஷயத்தை உன்னோடு பகிர்ந்துக்கொள்ளப் போகிறேன். நீ விரும்பினால், இதனை படித்துவிட்டு, இந்த மெயிலை அழித்துவிடு. ந

நீ ஒரு இஸ்லாமிய நாட்டில் இப்போது வாழ்ந்துக்கொண்டு இருக்கிறாய், மற்றும் உன்னை ஒரு இஸ்லாமியனாக பிரகடனம் செய்துவிட்டாய். எனவே, இனி நீ மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், நான் பேச்சு சுதந்திரத்தை பயன்படுத்துவேன், உண்மையை பேசுவேன், தீய காரியங்களுக்கு எதிர்த்து குரல் கொடுப்பேன், பெண் உரிமைக்காக போராடுவேன், குறைந்த பட்சம் குரல் கொடுப்பேன் என்றுச் சொல்லி, சுதந்திரமாக செயல்பட்டால், ஆபத்து உன் வாசற்படியில் படுத்துயிருக்கிறது என்பதை அறிந்துக்கொள். இந்த ஆபத்து வேறு மார்க்கத்தார்கள் மூலம் அல்ல, இஸ்லாமியர்கள் மூலமாகவே உனக்கு  வரும் என்பதை மறந்துபோகாதே,

ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமை தழுவும் போது, இஸ்லாமியர்கள் உனக்கு நண்பர்களாக இருந்து அன்போடும், நட்புடனும் கவனித்துக்கொள்வார்கள். ஆனால், நீ சிறுவயது முதற்கொண்டு ஒரு கிறிஸ்தவனாக வளர்க்கப்பட்டபடியினால் சுதந்திரமாக வாழ கற்றுக்கொண்டு இருக்கிறாய்.  கிறிஸ்தவம் பற்றி நகைச்சுவையாக ஏதாவது சொன்னாலும் உன்னை யாரும்(கிறிஸ்தவர்கள்)  ஒன்றும் சொல்லமாட்டார்கள், கருத்து சுதந்திரம் உனக்கு இருந்தது. இப்பொது இஸ்லாமியனாக மாறியதால், இனி நீ சுதந்திரமாக செயல்படமுடியாது, குறைந்தபட்சம், சௌதியில் இருக்கும் வரையில் நீ சுதந்திரமாக இருக்க முடியாது.

குர்-ஆன் பற்றியோ, முஹம்மது பற்றியோ, இஸ்லாம் பற்றியோ நீ எவைகளை பேசினாலும், அவைகளை சிந்தித்து பேசவேண்டும்.

உன்னை அறியாமல் இஸ்லாமுக்கு எதிராக ஏதாவது சொல்லிவிட்டு, அதன் பிறகு, "நான் வேடிக்கையாகத் தான் சொன்னேன்" (அ) "இதில் என்ன தவறு, இது பொதுவாக விஷயம் தானே" என்று நீ கூறினால், இஸ்லாமியர்கள் அதனை அங்கீகரித்துக் கொள்ளமாட்டார்கள். நீ உண்மையாகவே அறியாமையில் சொல்லியிருந்தாலும், ஆபத்து உனக்குத் தான். எனவே, இதர இஸ்லாமியர்களிடம் பேசும் போதும், இணையத்தில் எழுதும் போதும், எதை செய்தாலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதை உனக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாமியர்கள் எப்படி நடந்துக் கொள்வார்கள் என்பதற்கு ஒரு நடந்த நிகழ்ச்சியை உனக்கு தெரிவிக்கிறேன்.

பாங்களாதேஷ் நாட்டில் ஒரு குறிப்பிட்ட செய்தித்தாளில் ஒரு சிறிய கார்ட்டூன் மற்றும் ஒரு நகைச்சுவை செய்தி வந்தது. இஸ்லாமியர்கள் தங்கள் பெயர்களுக்கு முன்னால் "முஹம்மது" என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்வது அங்கு வழக்கமாக இருந்தது. ஒரு சின்ன பையனிடம் ஒரு முதியவர் (இஸ்லாமிய இமாம்) உன் பெயர் என்ன என்று கேட்டார். அவன் "முஹம்மது" என்ற வார்த்தையை விட்டுவிட்டு, தன் பெயரை மட்டும் சொன்னான், உடனே அந்த முதியவர், பெயருக்கு முன்னால் இருக்கும்  "முஹம்மது" என்ற வார்த்தையை விட்டுவிடாதே, அதோடு சேர்த்து பெயரைச் சொல்லவேண்டும் என்று அறிவுரை கூறினார். அதன் பிறகு அந்த பையனிடம் உன் கையில் இருப்பது என்ன என்று கேட்க, அந்த பையன் தன் கையில் பூனையை வைத்து இருந்ததினால், இப்போது கேட்ட அறிவுரையின் படி, "முஹம்மது பூனை" என்று சொல்கிறான். இது தான் கார்ட்டூன் சொல்லும் செய்தி.

http://en.wikipedia.org/wiki/2007_Bangladesh_cartoon_controversy
http://news.bbc.co.uk/2/hi/7006528.stm
http://www.islam-watch.org/Assets/Aalpin_Muhammad_Cartoon.jpg

இந்த கார்ட்டூனை வரைந்தவனும் ஒரு இஸ்லாமியன் தான். இஸ்லாமியர்கள் கொந்தளித்தார்கள், மிகப்பெரிய கலவரம் நடந்தது.  பூனைக்கு முன்னால் எங்கள் நபியின் பெயரைச் சொல்வதா? இது மிகப்பெரிய அவமானம் என்று கலவரத்தில் ஈடுபட்டார்கள். அதை வரைந்தவன் இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை, நான் அறியாமல் இதை செய்துவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டான், செய்தித்தாளின் முதலாளியும் மன்னிப்பு கோரினார், இஸ்லாமியர்கள் கேட்டபாடில்லை. எனவே, அரசாங்கம் அந்த வாலிபனை கைது செய்து பாதுகாப்பிற்காக சிறையில் அடைத்தது. மேலும் என்ன நடந்தது என்பதை மேலேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி அறிந்துக்கொள்.

நான் என்ன சொல்லவருகிறேன் என்றால்,  நீ அறிந்து செய்தாலும், அறியாமையில் செய்தாலும் இஸ்லாமிய மக்களில் சிலர் உன்னை மன்னிக்கமாட்டார்கள்.  இது ஒரு புறமிருக்க, ஒரு வேளை, சில மாதங்களுக்கு பிறகு, உண்மை இஸ்லாமை அறிந்துக்கொண்டு, எனக்கு இது சரிபட்டு வராது என்று எண்ணி, இஸ்லாமை விட்டு வெளியரங்கமாக நீ வெளியேற நினைத்தால், அதுவும் உனக்கு ஆபத்தாக முடியும்.  ஒரு முறை இஸ்லாமியனாக மாறி மறுபடியும் அதைவிட்டு வெளியேறினால், இஸ்லாமியர்கள் காயப்படுவார்கள், அவர்களை நீ ஏமாற்றிவிட்டதாகவும், இஸ்லாமை அவமானப்படுத்திவிட்டதாகவும் நினைப்பார்கள். இஸ்லாமியர்களின் மனநிலை கடினமான உண்மைகளை கிரகிக்கமுடியாத நிலையில் இருக்கிறது.

ஆகையால், நீ இஸ்லாமை விட்டு வெளியேற விரும்பினால், யாரிடமும் சொல்லாமல் இருப்பது தான் நல்லது மற்றும் நீ அப்போது இந்தியாவில் வந்து நிரந்தரமாக தங்குவது தான் உனக்கு பாதுகாப்பு.

நீ இப்போது என்னிடம் "அண்ணே, இஸ்லாமில் என் நம்பிக்கை திடமாக உள்ளது, என் இஸ்லாமிய நண்பர்கள் அன்பானவர்கள், நான் தவறு செய்தால் அவர்கள் மன்னிப்பார்கள், நீங்கள் சொல்வது போல வன்முறையில் ஈடுபடமாட்டார்கள்" என்று சொல்ல விரும்புவாய்.  நல்லது தம்பி, உன் நண்பர்கள் உன்னை நேசித்து, எந்த நிலையிலும் உனக்கு ஆபத்து விளைவிக்காமல் இருந்தால் அதுவே எனக்கு போதும், ஆனால் உன் நண்பர்களாக இல்லாமல் இருக்கும் இதர இஸ்லாமியர்களிடமிருந்து பிரச்சனை நேரங்களில் உன்னை எப்படி பாதுகாத்துக்கொள்வாய்? எனவே, உன் மீது அன்பு கூர்ந்து நான் வேண்டிக்கொள்வதெல்லாம், எச்சரிக்கையாக இரு என்பது மட்டும் தான்.

தம்பி, நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய், வேகம் குறைந்தாலும், நீ கீழே இறங்கப் பார்த்தாலும் உனக்கு ஆபத்து, எனவே தொடர்ந்து உன் பயணம் வேகமாக தொடரட்டும்.  நீ கீழே இறங்க விரும்பினால், நான் உனக்கு முன்னமே சொன்னது போல இந்தியாவிற்கு வரும் வரை எச்சரிக்கையாக இரு.

எனக்கு இரண்டு காரியங்கள் மீது முழு நம்பிக்கை உண்டு, முதலாவது நீ எல்லாவற்றையும் ஆராய்ந்து சரி பார்க்க ஆரம்பித்துள்ளாய் என்பதாகும் (இப்படி இல்லையென்றால் நீ என்னோடு கடிதத் தொடர்பு வைத்துக்கொண்டு இருப்பாயா?), இரண்டாவது இஸ்லாம் என்றால் என்ன என்பதும் எனக்குத் தெரியும். உன்னைப்போல ஆராய்ச்சி செய்து படித்துப் பார்த்து சிந்தித்து செயல்படுபவனை இஸ்லாம் ஒருபோதும் அனைத்துக்கொள்ளாது, அல்லது உன் மனது இஸ்லாமை தொடர்ச்சியாக பிடித்துக்கொண்டு இருக்காது. எனவே ஒரு நாள் நீ உண்மையை அறியும் போது, உனக்கு இந்த என்னுடைய வார்த்தைகள் உபயோகமாக இருக்கும் என்பதற்காக இவைகளை எழுதுகிறேன்.

இப்போது உனக்கு நானே அனுமதி தருகிறேன், இந்த கடிதத்தை படித்துவிட்டு, உன்னால் என் வார்த்தைகளை ஜீரணித்துக்கொள்ள முடியாவிட்டால், இதனை கிழித்து எரிந்துவிடு (உன் கணினியிலிருந்து அழித்துவிடு). ஆனால், எப்போதும் உன் மீதே அன்பு கூர்ந்து காத்துக்கொண்டு இருக்கின்ற ஒரு சகோதரன் இந்தியாவில் உனக்கு உண்டு என்பதை மறந்துவிடாதே.

புலி மீது சவாரி செய்வது வீரமல்ல தம்பி, அது வீம்பு.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.

இப்படிக்கு, உன் அண்ணன்
தமிழ் கிறிஸ்தவன்.

கருத்துகள் இல்லை: