ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 29 ஜூலை, 2013

2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை ”கொள்ளையிட்ட” மாமனார். மாமனாரின் ”கொள்கையை” கொள்ளையிட்ட மருமகன்

2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை "கொள்ளையிட்ட" மாமனார். மாமனாரின் "கொள்கையை" கொள்ளையிட்ட மருமகன்

[முந்தைய ஏழு தொடர் கட்டுரைகளை கீழேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி படிக்கலாம்: 2013 ரமளான் நாள் 1நாள் 2நாள் 3நாள் 4நாள் 5 , நாள் 6 & நாள்7.]

அன்பான தம்பிக்கு, 

உன் அண்ணன் எழுதும் கடிதம். என் கடிதங்களை நீ படிக்கிறாய் என்று நம்புகிறேன்.  உன் உடல் நிலை சரியில்லை என்று அம்மா சொன்னார்கள், உனக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக சொன்னார்கள். இப்போது எப்படி உள்ளது? உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள் தம்பி. நோன்பு என்றால் பகலில் வயிற்றை காலியாக வைத்துவிட்டு, இரவில் வயிறு தாங்கமுடியாத அளவு சாப்பிடுவது அல்ல.  

ஒரு முஸ்லிம் குடும்பத்தில், சாதாரண மாதங்களில் உணவிற்காக ஆகும் செலவை விட, நோன்பு மாதத்தில் (ரமளான்) அதிகமாக செல்வாகிறது. ரமளானில் உணவிற்கு இப்படி செலவு அதிகமானால், இம்மாதத்தை "நோன்பு மாதம்" என்று ஏன் நாம் அழைக்கவேண்டும்? உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இந்த மாதம் "விருந்து மாதம்" என்று அழைக்கலாம், பல வகையான பண்டங்கள், மாமிச உணவுகள் அதிகமாக செலவிடப்படுகின்ற மாதம் இது, இதை நோன்பு மாதம் என்று சொல்வது தவறல்லவா? என்னடா, அண்ணன் இன்று போர்கள்/சண்டைகள் பற்றி பேசுவதை விட்டுவிட்டு, சாப்பிடுவது பற்றி பேசுகிறார் என்று நினைக்கிறாயா? நீ அம்மாவிடம் உன் உடல் நிலைப்பற்றி சொன்னாய் அல்லவா, அதுவும் அளவிற்கு அதிகமாக நீ சாப்பிட்டதால் வயிற்றில் சிறிது பிரச்சனை என்றுச் சொன்னாய் அல்லவா! அதனால் உன் ஜீரண பிரச்சனை நீங்க சிறிது சோடா கொடுக்கலாம் என்று எண்ணி சில வரிகளை எழுதினேன். சரி, இப்போது விஷயத்துக்கு வருகிறேன்.

2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை "கொள்ளையிட்ட" மாமனார். மாமனாரின் கொள்கையை கொள்ளையிட்ட மருமகன்

தம்பி, இந்த கட்டுரையில் இன்னொரு (ஒன்பதாவது) வழிப்பறி கொள்ளையை காண்போம். 

1) மருமகனின் வியாபார பொருட்களை கொள்ளையிட்ட மாமனார்:

ஹிஜ்ரி 6ம் ஆண்டு, ஐந்தாம் மாதத்தில் இஸ்லாமியர்கள் குறைஷி வியாபாரிகளை தாக்கி கொள்ளையிடுகின்றனர். இந்த முறை இந்த வியாபாரத்தை நடத்திச் செல்பவர் யார் என்று பார்த்தால், முஹம்மதுவின் மருமகன் ஆவார். 

இதைப் பற்றி ரஹீக் புத்தகத்தில் (பக்கம் 332) என்ன எழுதியிருக்கிறது என்பதை படிப்போமா?

5) ஹிஜ்ரி 6, ஜுமாதா அல்ஊலா மாதத்தில் "ஈஸ்" என்ற இடத்திற்கு ஜைத் அவர்களை 170 வீரர்களுடன் அனுப்பி வைத்தார்கள். அங்கு குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் நபி (ஸல்) அவர்களின் மருமகனார் அபுல் ஆஸின் தலைமையின் கீழ் தங்கியிருந்தது. அங்கு சென்று முஸ்லிம்கள் அனைத்தையும் கைப்பற்றினர். ஆனால், அபுல் ஆஸ் தப்பிச் சென்று மதீனாவில் நபியவர்களின் மகளார் ஜைனபிடம் அடைக்கலம் தேடினார். மேலும், தனது பொருட்களைத் திருப்பித் தருமாறு நபியவர்களிடம் கோரும்படி ஜைனபிடம் கேட்டுக் கொண்டார். அவரும் தனது கணவன் கோரிக்கையை நபியவர்களிடம் சொல்லவே, நபியவர்கள் பொருள்களை திரும்பத் தருமாறு மக்களிடம் கேட்டார்கள். ஆனால், எவரையும் அதற்காக நிர்பந்தப் படுத்தவில்லை.

நபியவர்களின் விருப்பத்திற்கிணங்க சிறிய பெரிய அனைத்து பொருட்களையும் நபித் தோழர்கள் திரும்பக் கொடுத்து விட்டனர். அபுல் ஆஸ் அவற்றை எடுத்துக் கொண்டு மக்கா சென்று உரியவர்களிடம் அப்பொருட்களை ஒப்படைத்துவிட்டு இஸ்லாமை ஏற்று மதீனா திரும்பினார். நபி (ஸல்) அவர்கள் மூன்று வருடம் கழித்துத் திரும்பிய தமது மருமகன் அபுல் ஆஸிற்குத் தனது மகள் ஜைனபை முதல் திருமண ஒப்பந்தத்தைக் கொண்டே சேர்த்து வைத்தார்கள்.


இப்னு இஷாக்:

இப்னு இஷாக்கின் சீரத் ரஸூல் அல்லாஹ் புத்தகத்தில் பக்கம் 316, 317ம் பக்கத்தில் இந்த நிகழ்ச்சி பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் என்னவென்றால், முஹம்மது முஸ்லிம்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைப்பதும்,  அதற்கு முஸ்லிம்கள் கொடுத்த பதிலுமாகும். அதாவது தன் மருமகனின் வியாபார பொருட்களை நீங்கள் விரும்பினால், அவருக்கு திருப்பித் தரலாம், அல்லது அவைகளை அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த பொருட்களாகையால், உரிமையோடு வைத்துக்கொள்ளலாம் என்று முஹம்மது கூறினார்: இதனை இப்போது படியுங்கள்:

"This man is related to us as you know and you have taken property of his. If  you think well to restore it to him we should like that; but if you will not it is booty which God has given you and  you have the better right to it." (THE LIFE OF MUHAMMAD, A translation of IBN ISHAQ's Sirat Rasul Allah, by A Guillaume)

2) முஹம்மது ஒரு நல்ல அப்பா!

முஹம்மது தன் மகளுக்கு ஒரு நல்ல அப்பாவாக இந்த நிகழ்ச்சியில் காணப்படுகிறார்.  நீங்கள் இப்னு இஷாக்கின் சரித்திரத்தில் இந்த நிகழ்ச்சியை படித்தால்,  முஹம்மதுவின் மகள் ஜைனப் எல்லாருக்கும் முன்பாக தன்னிடம் பாதுகாப்புக்காக சேர்ந்து இருக்கும் தன் கணவர் பற்றி கூறுகிறார். இதனை கேட்ட முஹம்மது தொழுகை முடிந்ததும், தன் மகளின் விருப்பத்தின் படியே செய்தார். தன் மருமகனின் பொருட்களை திருப்பி தரும் படி முஸ்லிம்களிடம் பேசி, தன் மகளுக்கு நன்மையை செய்தார். அதாவது ஜைனப்பின் கணவர் திரும்ப வந்து தன் மனைவியோடு வாழ்க்கை நடத்துகிறார். ஆக, முஹம்மது ஒரு அருமையான அப்பாவாக இங்கு காணப்படுகிறார். தன் மகளின் வாழ்க்கையை திரும்ப கட்டிய நல்ல அப்பா முஹம்மது ஆவார். [ஆனால், பத்ரூ போருக்கு பிறகு தன் மகளையும், அவரது கணவரையும் பிரித்தவரும் இதே அப்பா தான்!]

3) முஹம்மது, ஒரு நல்ல மாமனார்:

முஹம்மது நல்ல அப்பாவாக மட்டுமல்ல, நல்ல மாமனாராகவும் நடந்துக்கொண்டார். தன் சகாக்களிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறார். இவரின் மீது வைத்த மரியாதையின் காரணமாக முஸ்லிம்கள்  எல்லா பொருட்களையும் திருப்பித் தருகின்றனர். இதனால், முஹம்மதுவின் மருமகனார் மக்கா சென்று, யார் யாருக்கு எவைகளை தரவேண்டுமோ அவைகளை கொடுத்துவிடுகிறார். இவர் ஒரு நல்ல வியாபாரி என்பதையும் நிருபித்துவிட்டார்.

4) முஹம்மது ஒரு நல்ல தலைவரா?

பி ஜைனுல் ஆபீதின் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் சில நேரங்களில் இன்றைய அரசியல் தலைவர்களோடு, முஹம்மதுவை ஒப்பிட்டு பேசுவார்கள். இன்றைய தலைவர்கள் தங்கள் சொந்த குடும்பத்திற்காக அனேக வசதிகளை சலுகைகளை அரசாங்க அதிகாரத்தை பயன்படுத்தி பெற்றுக்கொள்வார்கள். சட்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவார்கள். தங்களுக்காக, தங்கள் மகன், மகள் போன்றவர்களுக்காக அநீதியான முறையில் சொத்துக்களை குவித்துக்கொள்வார்கள். ஆனால், எங்கள் இறைத்தூதரோ, இப்படியெல்லாம் செய்யவே இல்லை என்று அழுத்தந்திருத்தமாக பீஜே அவர்கள் கூறுவார்கள்.  ஆனால், இந்த நிகழ்ச்சியை நாம் பார்த்தால், நமக்கு தெரிவது என்ன? ஒரு நல்ல தலைவராக முஹம்மது நடந்துக்கொண்டாரா?  உலக மக்களுக்கு ஒரு சட்டம் தனக்கு ஒரு சட்டம். தன் மகள் விரும்புகிறார் என்பதற்காக, தன் மருமகன் என்பதற்காக இவர் 'கொள்ளையிட்ட சொத்துக்களை' திரும்ப தன் மருமகனிடமே கொடுப்பதற்காக தன் சகாக்களோடு பேசுகிறார்.

தன் சகாக்களின் அனுமதியோடு தானே, முஹம்மது செயல்பட்டார் என்று சிலர் கேட்கலாம். ஆனால், கேள்வி என்னவென்றால், " இவர் தன் மகளுக்காக, மருமகனுக்காக சகாக்களிடம் கேட்டே இருக்கக்கூடாது, அப்போது தான் இவர் ஒரு நல்ல தலைவர், நீதியானவர்" என்று தெரியவரும். ஆனால், இவரோ, ஒரு விண்ணப்பத்தை முன்வைக்கிறார், பொதுவாக முஹம்மதுவின் மீது அன்புவைத்திருக்கும் நபர்கள் என்ன செய்வார்கள்? முஹம்மதுவிற்கு எது மகிழ்ச்சியைத் தருமோ அதையேச் செய்வார்கள்.  இதை அறிந்து தான் இவர் கேட்கிறார், இவர் கேட்டது போலவே நடந்தது. 

ஆக, முஹம்மது ஒரு நல்ல அப்பா ஆவார், நல்ல மாமனார் ஆவார், ஆனால் நல்ல தலைவர் அல்ல. தன் சொந்த மகளுக்காக தன் அதிகாரத்தை பயன்படுத்தி சலுகைகளை பெற்றுக்கொண்டார். இன்றைய அரசியல் தலைவர்களுக்கும் முஹம்மதுவிற்கும் இந்த விஷயத்தில், எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், முஹம்மது இப்படி தன் மகளுக்காக தன் அதிகாரத்தை துர்பிரயோகம் செய்தது இது இரண்டாவது முறையாகும். 

பத்ரூ போரும், முஹம்மதுவின் அதிகார துர்பிரயோகமும்:

பத்ரூ போர் நடக்கும் போது, அதில் இதே மருமகன் மக்காவினரின் சார்பாக பங்கு பெற்றார், மேலும் கைதியாக முஸ்லிம்களால் பிடிபட்டார். தன் கணவரை விடுவிக்க, முஹம்மதுவின் மகள் (அப்போது அவர்கள் மக்காவில் கணவரோடு இருந்தார்கள், ஹிஜ்ரா செய்யவில்லை) தனக்கு தன் தாய் கதிஜா அவர்கள் திருமண பரிசாக கொடுத்த நக்லெஸ்ஸை கொடுத்து அனுப்பி, அதை வைத்துக்கொண்டு, தன் கணவரை விடுவிக்கும் படி முஹம்மதுவிடம் அனுப்பினார்கள். அந்த நக்லெஸ்ஸை கண்டதும், முஹம்மதுவிற்கு தம்முடைய காலஞ்சென்ற மனைவி கதிஜா ஞாபம் மேலோங்க, தன் சகாக்களிடம் முஹம்மது விண்ணப்பம் வைத்த போது, அவர்கள் எந்த ஒரு பணத்தையும் (நக்லஸ்ஸையும்) எடுத்துக்கொள்ளாமல், அடிமையாக பிடிபட்ட முஹம்மதுவின் மருமகனை விடுவிக்க ஒப்புக்கொண்டார்கள். முஹம்மதுவின் மீது வைத்த அன்பின் அடிப்படையில் அவர்கள் இப்படி செய்தார்கள்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை முஹம்மது இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் மூலம் புறக்கணித்துள்ளார், தன் சகாக்களின் அன்பை தனக்கு சாதகமாக்கிவிட்டார்.  ஆக, முஹம்மது ஒரு நல்ல தலைவர் அல்ல, இன்றைய தீய அரசியல் தலைவர்களுக்கு இவர் எந்த வகையிலும் குறைவில்லை.

5) மாமனாரின் கொள்கையை கொள்ளையிட்ட மருமகன்

வியாபாரத்திற்கு கொண்டு வந்த அனைத்து பொருட்களையும் முஹம்மது திருப்பிகொடுக்க, இவர் அவைகளை மக்காவிற்கு கொண்டு வந்து, யார் யாருக்கு தரவேண்டுமோ அவர்களுக்கு கொடுத்துவிடுகிறார், அதன் பிறகு மதினாவிற்கு வந்து, தான் முஸ்லிமாக மாறுவதாக கூறுகிறார். முஹம்மது தன் மகளை மறுபடியும் இவருக்கு மனைவியாக தருகிறார்.  இப்படி முஹம்மதுவின் மருமகன் முஸ்லிமாக மாறுகிறார், இவர் ஒரு நல்ல வியாபாரி என்பதை நிருபித்துவிட்டார். ஒரு நல்ல வியாபாரி எந்த இடத்தில் அதிக லாபம் வருமோ அந்த இடத்தில் தானே வியாபாரம் செய்வார்?

[இந்த நிகழ்ச்சி நடந்து  ஒரு ஆண்டுக்கு பிறகு, முஹம்மதுவின் மகள் மரித்துவிட்டார்கள், அதன் பிறகு ஒரு ஆண்டில் இந்த மருமகனும் மரித்துவிடுகிறார்]


 முடிவுரை: தம்பி, உன் இறைத்தூதர் ஒரு நல்ல அப்பாவாக இருந்தார், மாமனாராக இருந்தார், ஆனால் நல்ல நீதியான தலைவராக வாழ தவறிவிட்டார். தொண்டர்களின் அறியாமையை மூலதனமாக வைத்து வாழும் அரசியல் தலைவரைப் போல, இவரும் நடந்துக்கொண்டார்.  தன் குடும்பம், தன் மகள்கள் என்றால் முஹம்மதுவிற்கு அன்பு அப்படியே பொங்கிவிடும், ஆனால், மற்றவர்கள் என்றால் அல்லாஹ் குறுக்கே வந்துவிடுவார், இஸ்லாம் குறுக்கே வந்துவிடும், ஷரியா சட்டம் குறுக்கே வந்துவிடும்.  ஊருக்குத் தான் உபதேசம் உனக்கு இல்லையடி என்றுச் சொன்னானாம் ஒருத்தன், அது போல முஹம்மதுவின் சில விஷயங்களை பொறுத்தமட்டில் தனக்கு ஒரு நியாயம், ஊருக்கு இன்னொரு நியாயம். 

தம்பி, உன்னிடம் ஒரு கேள்வி கேட்கனும், அதாவது தாங்கள் மக்காவில் விட்டுவந்த சொத்துக்களை மீட்கத் தான் கொள்ளையிட்டார்கள் என்றுச் சொன்னால், எத்தனை ஆண்டுகள் இதனை தொடர்ந்தார்கள்? தொடர்ந்து கொள்ளையடித்துக்கொண்டே இருந்தார்களே! இவர்களுடைய சொத்துக்களுக்கு இணையான பொருட்களை கொள்ளையிட்ட பிறகும் ஏன் தொடர்ந்து வழிப்பறி கொள்ளையில் உன் இறைத்தூதர் ஈடுபட்டார்?  

தம்பி, இஸ்லாமின் கொள்ளை ஒரு தொடர் கதையாக தொடர்ந்துக்கொண்டே இருந்தது. உலகத்திலேயே கொள்ளையை ஒரு வழிமுறையாக பின்பற்றிக்கொண்டு, அது நல்லது என்றுச் சொல்லி இன்றுவரை மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கின்ற ஒரே மார்க்கம் 'இஸ்லாம்' என்றுச் சொன்னால் மிகையாகாது தம்பி.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.  அதுவரைக்கும் அடுத்த வழிப்பறி கொள்ளை எது? என்று சிறிது ஆய்வு செய்து பார்த்துக்கொள்.

இப்படிக்கு, 
உன் அண்ணன் 
உமர்

கருத்துகள் இல்லை: