ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 23 ஜூலை, 2013

2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்

2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்

முந்தைய ஐந்து தொடர் கட்டுரைகளை கீழேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி படிக்கலாம்:


ஆறாவது தொடர் கட்டுரையை இப்போது படிப்போம்.
----------------------------------------------------

அன்புள்ள தம்பிக்கு,

ஒவ்வொரு நாளும் கடிதம் எழுதும் நீ, ஏன் நேற்று எழுதவில்லை? அலுவலகத்தில் வேலை  அதிகமாக உள்ளதா? அல்லது எனக்கு எழுதக்கூடாது என்று எண்ணிவிட்டாயா?

நீ விரும்பியபடியே,  இந்த கடிதத்தில் முஹம்மது புரிந்த இதர வழிப்பறி கொள்ளைகள் பற்றிய கேள்விகளை உன்னிடம் கேட்கிறேன்.

முதல் மூன்று வழிப்பறி கொள்ளைகள்:

முஹம்மது மதினாவிற்குச் சென்றுவிட்ட பிறகு அவர் தம்முடைய சஹாபாக்களை குறைஷிகளின் வியாபாரிகளை கொள்ளையிட அனுப்பினார்.  முதல் மூன்று வழிப்பறி கொள்ளைகளைப் பற்றி முந்தைய கடிதத்தில் எழுதினேன். இப்போது இன்னும் நான்கு வழிப்பறி கொள்ளைகள் பற்றி மிக சுருக்கமாக காண்போம். இந்த வழிப்பறி கொள்ளைகள் "முஹம்மது ஒரு உண்மையான நபி அல்ல" என்பதை நிருபிக்கின்றன, மேலும்  இஸ்லாமியர்களை தர்மசங்கட சூழ்நிலையில் தள்ளுகின்றன. 

அடுத்த நான்கு வழிப்பறி கொள்ளைகள் (மூலம்: ரஹீக் மற்றும் இதர சரித்திர புத்தகங்கள்)

நான்காவது வழிப்பறி கொள்ளை – 'அப்வா' (அ) 'வத்தான்'

ஹிஜ்ரி 2ல் ஸஃபர் (கி.பி. 623 ஆகஸ்டு) மாதம் நபி (ஸல்) அவர்கள் 70 முஹாஜிர்களுடன் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடை மறிப்பதற்காக "அல்அப்வா" அல்லது "வத்தான்" என்ற இடத்தை நோக்கிச் சென்றார்கள். ஆனால், சண்டை ஏதும் நடைபெறவில்லை. . . . இந்த போரின் போது "ழம்ரா"  கிளையினரின் தலைவரான அம்ர் இப்னு மக்ஷி என்பவருடன் நட்பு உடன்படிக்கை செய்தார்கள். 

[இந்த வழப்பறியில், குறைஷிகளை இவர்கள் சந்திக்கமுடியவில்லை, ஆனால், "ழம்ரா" இனத்தவரை கொள்ளையடித்தார்கள், அதன் பிறகு அவர்களோடு உடன்படிக்கை செய்துக்கொண்டார்கள், ரஹீக் புத்தகத்தில் இவர்களை கொள்ளையிட்டது பற்றி அதன் ஆசிரியர் எழுதவில்லை]

ஐந்தாவது வழிப்பறி கொள்ளை – 'பூவாத்'

ஹிஜ்ரி 2, ரபீவுல் அவ்வல் (கி.பி. 623 செப்டம்பர்) மாதம்  நபி (ஸல்) தங்களது 200 தோழர்களுடன் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை வழிமறிப்பதற்காகச் சென்றார்கள். இந்த வியாபாரக் கூட்டத்தில் உமய்யா இப்னு கலஃபும் நூறு குறைஷிகளும் இருந்தனர். இவர்களுடன் 2500 ஒட்டகங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் "ரழ்வா" என்ற மலைக்கருகில் உள்ள "பூவாத்" என்ற இடம் வரை சென்றார்கள். ஆனால், வியாபாரக்
கூட்டம் அந்த இடத்தை முன்கூட்டியே கடந்து விட்டதால் சண்டை ஏதும் நடைபெறவில்லை.

ஆறாவது வழிப்பறி கொள்ளை – 'துல் உஷைரா':

ஹிஜ்ரி 2ல் ஜுமாதா அல்ஊலா அல்லது ஜுமாதா அல் ஆகிரா (கி.பி. 623 நவம்பர் அல்லது  டிசம்பர்) மாதம் நபி (ஸல்) அவர்கள் தமது 150 அல்லது 200 முஹாஜிர் தோழர்களுடன் இந்தப் போருக்காக புறப்பட்டர்கள். இப்போரில் கலந்து கொள்ளும்படி எவரையும் நிர்பந்திக்கவில்லை. இந்த 150 (அல்லது) 200 தோழர்களும் 30 ஒட்டகங்களில் ஒருவர் மாறி ஒருவராக பயணித்தனர். மக்காவிலிருந்து வியாபாரச் சாமான்களுடன் ஷாம் நோக்கி சென்று கொண்டிருந்த குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தினரை வழிமறிப்பதே நபி (ஸல்) அவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால், நபி (ஸல்) அவர்கள் "துல் உஷைரா" என்ற இடத்தை அடைவதற்குப் பல நாட்களுக்கு முன்னதாகவே அக்கூட்டம் அந்த இடத்தைக் கடந்து விட்டது தெரியவந்தது.

அன்பான தம்பி, மேற்கண்ட மூன்று வழிப்பறி கொள்ளைகளிலும் முஹம்மதுவிற்கு எதுவும் கிடைக்கவில்லை. மொத்தம் ஆறு வழிப்பறி கொள்ளைகளை முஹம்மது மேற்கொண்டாலும், அவர் குறைஷிகளை பிடிக்கமுடியவில்லை, அவர்கள் வேறு வழியாகவோ அல்லது இவர்களுக்கு முன்பாகவோ கடந்துச் சென்றுவிட்டார்கள். இந்த மேற்கண்ட  ஆறு வழிப்பறி கொள்ளைகள்  முஹம்மதுவின் நபித்துவம் பற்றிய அனேக சந்தேகங்களை எழுப்புகிறது.  அவைகளை கீழ்கண்ட ஏழாவது வழிப்பறி கொள்ளைப் பற்றி நாம் தெரிந்துக்கொண்ட பின்பு பார்க்கலாம். முஹம்மது ஒரு உண்மையான தீர்க்கதரிசியா? அல்லது கள்ளத் தீர்க்கதரிசியா? என்பது இதன் மூலம் விளங்கும்.

ஏழாவது வழிப்பறி கொள்ளை – "நக்லா'
 
இந்த ஏழாவது வழிப்பறி கொள்ளை வித்தியாசமானது. முஹம்மதுவின் வார்த்தைகளுக்கு கீழ்படியாமல் போனதே, வெற்றியின் இரகசியம் ஆகிவிட்டது.  முஹம்மதுவிற்கு கீழ்படிவது அல்லாஹ்விற்கு கீழ்படிவதற்கு சமம் இல்லையா? இப்படியிருக்க முஹம்மதுவின் வார்த்தைகளை உதறித்தள்ளியதே, அல்லாஹ்வின் விருப்பத்தின் படி செய்வது போல ஆகிவிட்டது. 

இந்த விவரம் பற்றி விவரமாக ரஹீக் புத்தகத்தின் 203ம் பக்கத்தில் படிக்கவும். நான் இங்கு சுருக்கமாக எழுதுகிறேன்.

அ) முஹம்மது 12 நபர்களை அனுப்பி, குறைஷி வியாபாரிகளை வேவு பார்த்து வரும் படி அனுப்புகிறார். 

ஆ) அவர்களும் சென்று வேவு பார்க்கிறார்கள், இவர்கள் தலைச்சவரம் செய்துச் சென்றதாலும், அந்த மாதம் புனித மாதம் என்பதாலும் குறைஷி வியாபாரிகள் இவர்கள் மீது சந்தேகம் கொள்ளவில்லை. இவர்கள் மூலம் ஆபத்து வராது என்று நினைத்துவிட்டார்கள்.

இ) ஆனால், முஹம்மது அனுப்பிய நபர்களோ, இந்த அருமையான சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது என்ற எண்ணத்தில், அதாவது பொருட்களுடன் இருக்கும் குறைஷி வியாபாரிகளை விட்டுவிடக்கூடாது, அவர்களை தாக்கி கொள்ளையிடவேண்டும் என்று தங்களுக்குள் முடிவு செய்துக்கொண்டார்கள்.

ஈ) முஹம்மதுவின் வார்த்தைக்கு விரோதமாக செயல்பட்டு, அவர்கள் குறைஷிகளை கொள்ளையிட்டு, கொலையும் செய்து பொருட்களை மதினா கொண்டுவந்துவிட்டார்கள். முஹம்மதுவிற்கும் ஐந்தில் ஒரு பாகத்தை கொடுத்தார்கள், ஆனால் முஹம்மது இந்த செயலை வெறுத்தார், அவர் கோபத்தில் இருந்தார். முஹம்மது தனக்கு கொடுத்த பொருட்கள் மற்றும் பிடிபட்ட கைதிகள் பற்றி மௌனம் சாதித்தார். 

உ) குறைஷிகள் முஹம்மது பற்றி தவறாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். புனித மாதத்திலும் இவர் வன்முறையில் ஈடுபடுகிறார், இவர் எப்படி நபியாக இருக்கமுடியும்? என்று கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.  முஹம்மதுவின் வார்த்தைக்கு எதிராக செயல்பட்டதினால், சஹாபாக்கள் தர்ம சங்கடமான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு துக்கமாக இருக்கிறார்கள்.

ஊ) இந்த சமயத்தில் அல்லாஹ் குர்ஆன் 2:217 வசனத்தை இறக்கி, "சஹாபாக்களின் செய்கைகளுக்கு ஆதரவாக" பேசினார். இதன் பிறகு முஹம்மது இயல்பு நிலைக்கு திரும்பினார், பொருட்களை பெற்றுக்கொண்டார். சஹாபாக்களும் நிம்மதியடைந்தார்கள்.

இது தான் நக்லா கொள்ளைப் பற்றிய விவரங்கள். மேற்கண்ட அனைத்து விவரங்கள் பற்றி ரஹீக் என்ற புத்தகத்தில் படிக்கலாம் (பக்கங்கள் 201, 202 & 203). 

இப்போது மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளும், எப்படி முஹம்மதுவின் நபித்துவத்தை சந்தேகத்திற்கு உட்படுத்துகிறது? என்பதைக் காண்போம்.

முஹம்மதுவின் வஹி பற்றி இஸ்லாமிய நம்பிக்கை:

1) இஸ்லாமியர்களின் படி முஹம்மது ஒரு தீர்க்கதரிசி ஆவார்.

2) இவருக்கு இரண்டு வகையான வஹிகளை (வெளிப்பாடுகளை) அல்லாஹ் கொடுத்தார்.

3) முதல் வகை வஹி -  ஜிப்ராயீல் தூதன் குர்-ஆனை முஹம்மதுவிற்கு ஓதிக் காண்பிப்பார், அதனை முஹம்மது மக்களுக்கு ஒதிக்காண்பிப்பார், அதுவே குர்-ஆன்.

4) இரண்டாவது வகையான வஹியை யார் கொண்டு வந்தார்கள் என்று தெரியாது, ஆனால் அதனை முஹம்மது பெற்று, அதன் படி தான் மற்றவர்களுக்கு கட்டளைகளை கொடுத்தார், தானும் அந்த வஹியின் படியே வாழ்ந்து காட்டினார். அதாவது, முஹம்மதுவின் பேச்சும், செயல்களும் இரண்டாவது வஹியின் படியே இருந்தது.  சண்டைக்குச் செல்லும் படி, முஹம்மது சஹாபாக்களுக்கு கட்டளை கொடுத்தால், இவருக்கு அல்லாஹ்விடமிருந்து இரண்டாவது வகையான வஹி ஏற்கனவே வந்துள்ளது என்று பொருள்.  இதனை அடிப்படையாகக் கொண்டு முஹம்மது சஹாபாக்களை போருக்கு செல்லும் படி, குறைஷிகளின் வியாபாரிகளை தாக்கி, அவர்களின் பொருட்களை அபகரிக்கும் படி கூறியுள்ளார்.

5) முஹம்மதுவின் சொல்லும் செயலும் அல்லாஹ்வின் வஹியாகும். ஆகையால் தான் முஸ்லிம்கள் முஹம்மதுவை அப்படியே காபி அடித்து வாழவேண்டும் என்று உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். முஹம்மது தாடி விட்டால், முஸ்லிம்களும் தாடி விடுகிறார்கள். இஸ்லாமின்படி, இப்படி முஹம்மதுவை முழுவதுமாக பின்பற்ற முஸ்லிம்கள் முயற்சிப்பது மிகவும் நல்ல விஷயம் ஆகும்.

தம்பி, மேற்கண்டவைகள் இஸ்லாமிய நம்பிக்கைகளாகும், இதனை நீ மறுக்கமாட்டாய் என்று நம்புகிறேன். இவைகளை மனதில் வைத்துக்கொண்டு, நாம் இப்போது "நக்லா" என்ற வழிப்பறி கொள்ளை நிகழ்ச்சியை சுற்றியுள்ள விஷயங்களை ஆய்வு செய்வோம்.   தம்பி, இந்த விஷயங்கள் மிகவும் முக்கியமானவைகள், இவைகளை கூர்ந்து கவனி.

முதல் ஆறு வழிப்பறி கொள்ளைகள் தோல்வியை தழுவியது ஏன்?

அ) முதன் முதலாக குறைஷி வியாபாரிகளை கொள்ளையிட முஹம்மது ஆறுமுறை சஹாபாக்களை அனுப்பினார். ஆனால், ஒரு முறையும் அவரால் குறைஷி வியாபாரிகளை கொள்ளையிட முடியவில்லை. இவர்களின் கைக்கு பிடிபடாமல் குறைஷிகள் வேறு வழியாக சென்றுவிட்டார்கள், சில நேரங்களில் முஸ்லிம்கள் அந்த இடத்தை அடைவதற்கு முன்பே, அதை தாண்டி சென்றுவிட்டார்கள். முஸ்லிம்கள் வெறுங்கையோடு திரும்பி வந்தார்கள்.

ஆ) முஹம்மது ஒரு நபியானால், தனக்கு வந்த வஹியின்படிதான் அவர் அனைத்தையும் செய்தார் என்றுச் சொல்வது உண்மையானால், ஏன் இத்தனை முறை, முஹம்மதுவிற்கு வந்த வஹி தோல்வி அடைந்தது?

இ) இந்த ஆறுமுறை கொள்ளையிட முஹம்மது அனுப்பியது தன்னுடைய சொந்த சிந்தனை என்று இதன் மூலம் தெரிகின்றதல்லவா? இப்படி சண்டையிட முஹம்மது அனுப்பியது தன் சொந்த சிந்தனையிலிருந்து வந்த செயல் என்று கருதினால்,  இன்னும் எவைகளையெல்லாம் அவர் சொந்தமாக கூறியிருப்பார் எந்த சந்தேகம் எழுகின்றது.  ஹதீஸ்களில் வரும் விவரங்களில் எத்தனை சதவிகிதம் வஹி? எத்தனை சதவிகிதம் சொந்தமாக இட்டுக்கட்டியது?

ஈ) "இல்லை.. இல்லவே இல்லை. முஹம்மது தனக்கு வந்த இரண்டாவது வகையான வஹியின் படி தான் அல்லாஹ்வின் காரியங்களைச் செய்வார்" என்று முஸ்லிம்கள் சொல்வார்களானால், ஏன் அந்த ஆறுமுறையும் தோல்வியை தழுவினார்கள்? இதனால் அல்லாஹ்வின் வஹியில் தவறு இருக்கிறது என்று நாம் எண்ணவேண்டி வருமே!

உ) அல்லாஹ் என்பவர் சர்வ ஞானி என்றால், குறைஷிகள் எந்த வழியில் செல்கிறார்கள்? எந்த காலத்தில் அந்த குறிப்பிட்ட இடத்தை அடைவார்கள் என்று அல்லாஹ் அறியாமல் போனதென்ன? அவர் ஏன் தன் நபிக்கு தவறான விஷயங்களை வஹியாக சொன்னார்?  ஒரு முறை இரு முறை அல்ல, ஆறுமுறையும் இப்படியே நடந்தது.

இப்பொழுது நக்லா வழிப்பறி கொள்ளைப் பற்றி பார்ப்போம்.

அல்லாஹ்வின் வஹியை பெற்றவர்கள் யார்? முஹம்மதுவா? (அ) சஹாபாக்களா? 

நம்முடைய கேள்விகள் என்னவென்றால்:

1) முஹம்மதுவிற்கு வஹி வந்து அதன்படி தான் அவர் சஹாபாக்களை நக்லாவிற்கு சண்டையிடக்கூடாது என்று சொல்லி அனுப்பினாரா? அல்லது சுமயாக சிந்தித்து, அல்லாஹ் கட்டளையிடாமலேயே அனுப்பினாரா?

2) வஹி வந்ததால் தான் முஹம்மது அனுப்பினார் என்றுச் சொன்னால்? சஹாபாக்கள் செய்தது முஹம்மதுவிற்கு / அல்லாஹ்விற்கு எதிரான செயல் அல்லவா?

3) சஹாபாக்களின் செய்கைகளை ஆதரித்து  அல்லாஹ் வசனத்தை இறக்குகிறார், அப்படியானால் ஏன் அவர் முதலில் சண்டையிடக்கூடாது என்று முஹம்மதுவிற்கு சொல்லவேண்டும்? அதன் பிறகு, சண்டையிட்டு கொள்ளையிட்டதை ஆதரிக்கவேண்டும்? அல்லாஹ் முஹம்மதுவோடு விளையாடுகிறாரா?

4) நக்லா நிகழ்ச்சிப் பற்றி, முஹம்மதுவிற்கு எட்டாத ஞானம் கூட சஹாபாக்களுக்கு எட்டியது என்று நாம் சொல்லலாம் அல்லவா? அதாவது அல்லாஹ் சிந்தித்தது போலவே, சஹாபாக்கள் சிந்தித்து செயல்பட்டார்கள். ஆனால், அல்லாஹ் சிந்தித்தது போல முஹம்மது சிந்திக்கவில்லை.

5) முஹம்மது நபியா அல்லது சஹாபாக்கள் நபிகளா?

6) நிலைமை இன்னும் மோசமாக மாறுகிறது, அதாவது ஆறுமுறை முஹம்மது குறைஷி வியாபாரிகளை கொள்ளையடிக்க அனுப்பினார், முஹம்மதுவின் வார்த்தைகளின்படியே அவர்கள் செய்தார்கள், அதனால் தோல்வி தான் மிஞ்சியது. ஏழாவது முறையும் அனுப்பினார், இந்த முறை முஹம்மதுவின் பேச்சை கேட்காமல், சொந்தமாக முடிவு எடுத்தார்கள், இதனால் வெற்றியும் பெற்றார்கள், பொருட்களையும் கொள்ளையடித்தார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, அல்லாஹ்வின் அனுமதியும் கிடைத்துவிட்டது, தண்டனையிலிருந்தும் தப்பித்தார்கள். முஹம்மதுவின் வார்த்தைகளை கேட்காததினால் கிடைத்த நன்மைகளைப் பாருங்கள்.

7) கடைசியாக, முஹம்மதுவையும், அல்லாஹ்வையும் வெற்றிப்பெற வைத்தவர்கள் சஹாபாக்கள் என்றுச் சொன்னால் மிகையாகாது.

தம்பி, நபி செய்யும் அனைத்து செயல்களுக்கும் "இறைவனின் வஹியை" வம்புக்கு இழுப்பதினால் வந்த பிரச்சனையை பார்த்தாயா?

முஹம்மது பேசினால் வஹி, 
பேசாமல் இருந்தாலும் வஹி,
நடந்தால் வஹி, 
சிரித்தால் வஹி, 
விரலை ஆட்டினால் வஹி, 
விரலை ஆட்டாமல் இருந்தால் வஹி,
தாடி வைத்தால் வஹி, 
தாடியை கத்தரித்தால் வஹி, 
மக்கள் கேள்வி கேட்டு முஹம்மது பதில் சொன்னால் வஹி, 
பதில் சொல்லாமல் இருந்தாலும் வஹி, 
மக்கள் கேள்வி கேட்காமலேயே அவராக பதில் சொன்னலும் வஹி 
அவர் உண்மையைச் சொன்னாலும் வஹி,
பொய்யைச் சொன்னாலும் வஹி,
அவர் கட்டுக்கதைகளைச் சொன்னாலும் வஹி,
இட்டுக்கட்டிச் சொன்னாலும் வஹி

இப்படி ஒரு மனிதனை விக்கிரமாக பூஜிக்கிறீர்கள் நீங்கள். இதனால் விளையும் பிரச்சனைகளை பார்த்தாயா தம்பி?

இரண்டாவது வகை வஹி முஹம்மதுவிற்கு வருவது போல,  சஹாபாக்களுக்கும் அதே வஹி வந்து அவர்கள் (அல்லாஹ்வின் விருப்பத்தின் படி) செயல்பட்டதாக மேற்கண்ட நிகழ்ச்சியில் காண்கிறோம்.

முஹம்மது கொள்ளையடிக்க அனுப்பியது தன் சுய விருப்பத்தின் படியா? அல்லது வஹியின் அடிப்படையிலா? தம்பி உன்னால் பதில் சொல்லமுடியுமா? [தமிழ் நாட்டின் இஸ்லாமிய அறிஞர்களிடம் இதற்கு பதில் இருந்தாலும் அனுப்புங்கள்]

உன்னுடைய பதிலுக்காக எதிர்ப்பார்க்கிறேன்.

இப்படிக்கு 
உன் அண்ணன்
உமர்

கருத்துகள் இல்லை: