ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 25 மே, 2018

2018 ரமளான் - 5: பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர், புதிய ஏற்பாட்டின் பர்னபாவா?

முந்தைய கட்டுரையில், பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர், இயேசுவின் உள்வட்ட சீடராக இருந்தவர் அல்ல, அவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மோசடி நபர் என்பதைக் கண்டோம். 

முதல் நூற்றாண்டில், இதர அப்போஸ்தலர்களோடு சேர்ந்து ஊழியம் செய்த "பர்னபா"  என்பவர்,  இந்த 'பர்னபா சுவிசேஷத்தின் ஆசிரியர் அல்ல' என்பதை சான்றுகளுடன் இப்போது காண்போம்.

ஒரு புத்தகம் பர்னபா பெயரை ஏந்தி இருந்தால், உடனே அது முதல் நூற்றாண்டின் புதிய ஏற்பாட்டு பர்னபா எழுதி இருப்பார் என்று முடிவு செய்யமுடியாது. அந்த விவரம் உண்மையா? என்பதை ஆய்வு செய்து முடிவு செய்யவேண்டும். முக்கியமாக, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நூல்களாக இருந்தால், அவைகளின் உண்மையான ஆசிரியர் யார்? அவைகள் எழுதப்பட்ட காலக்கட்டம் என்ன? போன்றவைகளை கண்டறிய சில வழிமுறைகளை பின்பற்றி கண்டுபிடிக்கலாம்.

கீழ்கண்ட இரண்டு வகையான சான்றுகள் இப்புத்தகத்தின் உண்மை நிலையை அறிந்துக்கொள்ள‌ நமக்கு உதவியாக இருக்கும்.

1) அகச்சான்றுகள் (Internal Evidences):

எந்த ஒரு புத்தகமானாலும் சரி, அந்த புத்தகத்தின் வரிகளில் காணப்படும் சரித்திர, புவியியல், மொழி நடை, எழுத்துவடிவம் மற்றும் இறையியல் விவரங்களை ஆய்வு செய்தால், அதன் காலத்தை கண்டுபிடிக்கலாம் அல்லது குறைந்தபட்சம் எழுதப்பட்ட காலத்திற்கு நெருங்கி வந்துவிடலாம். 

இதன் அடிப்படையில் பர்னபா சுவிசேஷத்தின் அகச்சான்றுகளை, முதல் நூற்றாண்டு சரித்திர, புவியியல், மொழி நடை, எழுத்துவடிவம் மற்றும் இறையியல் விவரங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து உண்மையை கண்டரிய முடியும்.

2) புறச்சான்றுகள் (External Evidences):

கண்டெடுக்கப்பட்ட புத்தகத்தின் அல்லது கையெழுத்துப் பிரதிகளின் காலத்தை நவீன விஞ்ஞானத்தின் உதவியுடன் காலத்தை கண்டுபிடிப்பதாகும். மேலும், அதே காலத்தில் எழுதப்பட்ட இதர நூல்களோடு ஒப்பிட்டு அதன் காலத்தையும் இதர விவரங்களையும் கண்டுபிடிக்கமுடியும். 

இன்னும் அனேக வழிமுறைகள் இருந்தாலும், நாம் இந்த புத்தகத்தின் உண்மையை கண்டறிய மேற்கண்ட இரண்டு ஆய்வுகளின் முடிவு என்ன என்பதை கண்டறிந்தால், இந்த 'பர்னபா சுவிசேஷம்' புத்தகத்தின் ஆசிரியர் உண்மையாகவே முதல் நூற்றாண்டின் பர்னபா தானா? இல்லையா? என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

சான்றுகள்:

இந்த மோசடி சுவிசேஷத்தை முஸ்லிம்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள், இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் 'இந்த பர்னபா என்பவர், முதல் நூற்றாண்டின் பர்னபா ஆவார் மேலும் இயேசுவோடு ஊழியம் செய்த 12 சீடர்களில் இவரும் ஒருவர் ஆவார்' என்று முஸ்லிம்கள் கருதுவதாகும். ஆனால், இச்சான்றுகள் முஸ்லிம்களின் நம்பிக்கையை தகர்த்துவிடுகின்றது, மட்டுமல்ல, குர்-ஆனை பொய்யாக்கிவிடுகின்றது. சத்தியத்தை அறிந்துக்கொள்ளவேண்டும் என்று ஆர்வமுள்ள முஸ்லிம்கள் இச்சான்றுகளை மேலோட்டமாக பார்த்தாலும் கூட‌, உடனே தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்வார்கள். இப்போது இச்சான்றுகளில் சிலவற்றைக் காண்போம்.

சான்று 1. மஸீஹா(மேசியா) மற்றும் கிறிஸ்து என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை அறியாத பர்னபா

கிறிஸ்து என்ற கிரேக்க வார்த்தையும், மேசியா என்ற எபிரேய வார்த்தையும் ஒரே பொருளை கொண்ட வார்த்தைகளாகும். அதாவது மேசியா என்று எபிரேயத்தில் சொல்வதை கிரேக்க மொழியில் கிறிஸ்துஎன்று மொழியாக்கம் செய்யவேண்டும். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் தமிழில் "அபீஷேகம் செய்யப்பட்டவர் (அ) தெரிந்துக்கொள்ளப்பட்டவர்" என்பது பொருளாகும். சுருக்கமாகச் சொன்னால், இயேசு "கிறிஸ்து"வாக இருக்கிறார், இதை குர்‍ஆனில் "ஈஸா அல்-மஸீஹா" என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இயேசு என்பது அவருக்கு இட்டப்பெயர், மஸீஹா (மேசியா/கிறிஸ்து) என்பது அவரது பட்டப்பெயர்.

இந்த பர்னபா சுவிசேஷத்தின் ஆசிரியர் எப்படி தன் மோசடி புத்தகத்தை தொடங்குகிறார் என்பதை கவனிக்கவும்:

உலகிற்கு இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு புதிய தீர்க்கதரிசியும், கிறிஸ்து என்று அழைக்கப்பட்டவருமாகிய இயேசுவின் உண்மையான நற்செய்தி. இவருடைய அப்போஸ்தலனாகிய பர்னபா என்பவர் எழுதிய நற்செய்தி.

கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட நசரேயனாகிய இயேசுவின் அப்போஸ்தலர் பர்னபா, அமைதியையும், ஆறுதலையும் விரும்பும் உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் எழுதிக்கொள்வது. 

True Gospel of Jesus, called Christ, a new Prophet sent by God to the world: according to the description of Barnabas his apostle.

Barnabas, apostle of Jesus the Nazarene, called Christ, to all them that dwell upon the earth desireth peace and consolation.

மூலம்: http://www.sacred-texts.com/isl/gbar/gbar000.htm

"கிறிஸ்து (மஸீஹ்)" என்று அழைக்கப்பட்ட இயேசுவின் சுவிசேஷம் என்று தொடங்குகிறார். ஆனால், இந்த புத்தகம் முழுவதிலும் கவனித்தால், அனேக இடங்களில் இயேசு தான் "மேசியா இல்லை" என்றுச் சொல்வதை காணலாம். 

உதாரணத்திற்கு, கீழ்கண்ட இயேசுவின் பதிலை கவனிக்கவும்.  சில யூத தலைவர்கள் இயேசுவிடம் வந்து நீர் யார்? என்று கேள்வி கேட்டபோது, நான் மேசியா இல்லை என்று இயேசு பதில் கொடுத்ததாக பர்னபா சுவிசேஷம் சொல்கிறது:

இயேசு அறிக்கையிட்டு உண்மையைச் சொன்னார்: 'நான் மேசியா இல்லை.' 

Jesus confessed, and said the truth: 'I am not the Messiah.'

மூலம்: பர்னபா சுவிசேஷம் அத்தியாயம் 42: 

இந்த மோசடி சுவிசேஷத்தை எழுதியவருக்கு 'மேசியா' என்றாலும், 'கிறிஸ்து' என்றாலும் ஒன்று தான் என்ற உண்மை தெரியவில்லை. இவர் நிச்சயமாக கிறிஸ்தவத்தை முழுவதுமாக அறியாத அரைகுறை நபராக (முஸ்லிமாக) இருந்திருக்கவேண்டும்.  "நான் மேசியா இல்லை" என்று இயேசு புத்தகத்தின் உள்ளே சொல்லியிருக்கும் போது, அந்த புத்தகத்தை, 'கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட இயேசு' என்று தொடங்குவதிலிருந்து, தனக்குத்தானே முரண்படுகின்றார் இந்த பர்னபா சுவிசேஷத்தின் ஆசிரியர். 

இயேசு கிறிஸ்துவாக இருந்தால், அவர் எப்படி "கிறிஸ்து" இல்லை என்று மறுக்கமுடியும்?  இது இவ்வாசிரியர் செய்த மிகபெரிய இறையியல் தவறாகும்.

இவ்விவரம் சில முஸ்லிம்களுக்கு இன்னும் புரியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது, எனவே ஒரு இஸ்லாமிய உதாரணத்தைக் காண்போம். ஒரு புத்தகத்தில் 'அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஆவார்' என்று ஒருவர் எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதே புத்தகத்தில், 'நீங்கள் அல்லாஹ்வின் தூதரா?' என்று கேள்வி கேட்கப்பட்டால், அதற்கு முஹம்மது, 'நான் அல்லாஹ்வின் தூதர் இல்லை' என்று பதில் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த புத்தகத்தை படிக்கும் வாசகர்கள் இப்போது எந்த முடிவுக்கு வருவார்கள்? முஹம்மது அல்லாஹ்வின் தூதரா? இல்லையா? முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று புத்தகத்தின் தொடக்கத்தில் கூறிவிட்டு, புத்தகத்தின் உள்ளே "நான் அல்லாஹ்வின் தூதர் இல்லை" என்று முஹம்மது கூறினால், அப்புத்தகத்தை எழுதிய ஆசிரியர் ஒரு பொய்யர் என்று அர்த்தமாகின்றது அல்லவா? அல்லது அவருக்கு முஹம்மது பற்றிய‌ அடிப்படை உண்மைகள் தெரியவில்லை என்று அர்த்தமாகின்றது அல்லவா? இதே போலத்தான், இயேசுவைப் பற்றி பர்னபா சுவிசேஷத்தின் ஆசிரியர் தன்னுடைய அரைகுறை ஞானத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த மோசடியைச் செய்தவருக்கு எபிரேய மொழியில் மேசியா என்றால், கிரேக்க மொழியில் கிறிஸ்து என்று பொருள் என்ற அடிப்படை விவரம் கூட‌ தெரியவில்லை. இதனால், இவர் ஒரு மோசடி பேர்வழி என்பதை அறிந்துக்கொள்ளலாம்.  

குர்‍ஆனை கேவலப்படுத்தும் பர்னபா சுவிசேஷம்: 

குர்‍ஆனில் 'அல் மஸீஹ்' என்று அல்லாஹ்  இயேசுவை குறிப்பிடுகின்றான், ஆனால், பர்பனா சுவிசேஷம் 'இயேசு மஸீஹ் இல்லை' என்றுச் சொல்கிறது.

குர்‍ஆன் 3:45. மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

குர்‍ஆன் 4:157. இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்);  . . ..

குர்‍ஆன் 4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; . . .

குர்‍ஆன் 5:17. திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். "மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்" என்று (நபியே!) நீர் கேளும்; . . . .

குர்‍ஆன் 5:72. "நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: . . .

குர்‍ஆன் 5:75. மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். . . . (முஹம்மது ஜான் தமிழாக்கம்).

குர்‍ஆன் 9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; . . . .

குர்‍ஆன் 9:31. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; . . . .

மேற்கண்ட அனைத்து குர்‍ஆன் வசனங்களையும் பர்னபா சுவிசேஷம் பொய்யாக்குகிறது.

மேசியா/கிறிஸ்து வார்த்தைகளின் பயன்பாடு

மேசியா மற்றும் கிறிஸ்து என்ற வார்த்தைகள் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மத்தியிலே அதிகமாக பயன்படுத்தப்பட்ட சிறப்புமிக்க வார்த்தைகளாகும். முதல் நூற்றாண்டின் பர்னபா இந்த வார்த்தைகளை நன்கு அறிந்தவர், ஏனென்றால், இவர் பக்தியுள்ள கிறிஸ்தவராக இருந்தவர். முதல் நூற்றாண்டு பர்னபா 'சைப்ரஸ்' என்ற தீவில் வாழ்ந்துவந்த எபிரேயம் பேசும் யூதனாக இருந்தார், மேலும் இந்த தீவு கிரேக்க மொழி பேசும் மக்களைக் கொண்ட தீவாகும். இவர் கிரேக்க மொழி பேசும் நாடுகளுக்கு பயணம் செய்து சுவிசேஷ ஊழியம் செய்தவர். இவருக்கு தன் தாய்மொழியாகிய எபிரேயமும் தெரியும், தான் வாழும் நாட்டில் பேசப்படும் கிரேக்க மொழியும் தெரியும். இந்த நிலையில் இப்படிப்பட்ட அடிப்படை தவறை இவர் செய்திருக்கமுடியாது. இவ்வளவு புகழ் பெற்ற மேசியா மற்றும் கிறிஸ்து என்ற வார்த்தைகள் வெவ்வேறானவை என்று இவர் கருத வாய்ப்பு இல்லை. எனவே, இந்த அடிப்படை தவறைச் செய்தவர் ஒரு மோசடி நபராகத்தான் இருக்கமுடியும்.

அரபி குர்‍ஆனையும், தமிழ் குர்‍ஆனையும், தமிழ் பைபிளையும் நன்கு கற்றறிந்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு முஸ்லிம், ஒரு புத்தகம் எழுதும் போது, அதில், அரபி குர்‍ஆனில் வரும் மஸீஹா என்ற வார்த்தையும், தமிழ் பைபிளில் வரும் 'கிறிஸ்து' என்ற வார்த்தையும் வெவ்வேறானவை என்று விளக்கமளிப்பாரானால், அவரை என்னவென்றுச் சொல்லமுடியும்? அவர் ஒரு பொய்யர் மற்றும் பித்தளாட்டக்காரர் ஆவார் என்றும், தனக்கு அரைகுறை ஞானம் இருந்தும், தனக்கு எல்லாம் தெரியும் என்று பொய்யைச் சொல்லிக்கொண்டு திரிகிறார் என்றும் கருதுவோம் அல்லவா? அது போலத்தான், பர்னபா சுவிசேஷத்தை எழுதியவரும் கருதப்படுவார்.

பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர் முதல் நூற்றாண்டு பர்னபா இல்லை, அவர் பல நூற்றாண்டுகளை தாண்டி வாழ்ந்தவர், மேலும் தான் விவரிக்கும் நிகழ்ச்சி எந்த கலாச்சார சூழலில் நடந்தது, அப்பொழுது நடைமுறையில் இருந்த மொழிகள் பற்றிய விவரங்களை அறியாத ஒரு மோசடி பேர்வழி என்பது இதன் மூலம் அறிந்துக் கொள்ளமுடியும். 

முடிவுரை:

இக்கட்டுரையில் பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர் 'முதல் நூற்றாண்டு பர்னபா இல்லை' என்பதற்கு ஒரு அகச்சான்றைக் கண்டோம். இயேசுவோடு வாழ்ந்த ஒருவருக்கு தெரிந்திருக்கவேண்டிய அடிப்படை விவரம் (மேசியா என்றால் கிறிஸ்து என்று அர்த்தம் என்பதைக்) கூட தெரியாத இவர் எப்படி இயேசுவின் சீடராக இருந்திருக்கமுடியும்?

அடுத்த கட்டுரையில் இன்னும் சில சான்றுகளைக் காண்போம்.


Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/rebuttal_gob/rebuttal_gob_part5.htm

கருத்துகள் இல்லை: