ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 7 ஜூன், 2017

2017 ரமளான் (26) – நிலமெல்லாம் இரத்தம் – முஹம்மது எத்தனை போர்கள் புரிந்தார் என்று அல்லாஹ்வை விட பாரா நன்கு அறிவார்

இக்கட்டுரைக்கு தொடர்புடைய முந்தைய கட்டுரைகள்:

பாரா அவர்களின் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தின் 20ம் அத்தியாயத்திற்கு அறிமுக பதில்களாக மேற்கண்ட இரண்டு கட்டுரைகள் பதிக்கப்பட்டது. தற்போதைய கட்டுரையில் பாரா அவர்கள், 20ம் அத்தியாயத்தில் எழுதிய விவரங்கள் எப்படி குர்-ஆனுக்கு முரண்படுகின்றது என்பதை சுருக்கமாக காண்போம்.

கட்டுரையின்  தலைப்புக்கள்:

1) பாராவின் படி முஹம்மது செய்த மொத்த யுத்தங்கள் எத்தனை?

2) குர்-ஆனின் படி முஹம்மது செய்த யுத்தங்கள் எத்தனை?

3) பாரா  அல்லது அல்லாஹ்  - யார் உண்மையைச் சொல்கிறார்கள்?

4) முடிவுரை


1) பாராவின் படி முஹம்மது செய்த மொத்த யுத்தங்கள் எத்தனை?

இந்த கேள்விக்கு பதில் கொடுப்பதில், உலக முஸ்லிம்களை விட பா. ராகவன் அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். பாரா ஒரே அடியாக அடித்துச் சொல்கிறார், முஹம்மதுவின் காலத்தில் அவர் மரணிப்பதற்கு முன்பு செய்த யுத்தங்கள் வெறும் மூன்று தான். இதை யாராவது மறுத்தால் அவன் பொய்யன், அவன் யூதன் என்று குற்றஞ்சாட்டுகிறார்  . ஏனென்றால் யூதன் பொய் சொல்லுவான் என்று பாராவிற்கும் நன்கு தெரிந்திருக்கிறது (கி.பி. 7ம் நூற்றாண்டில் பல யூதர்கள் வாழ்ந்த மதினாவின் ஒரு முக்கியமான  தெருவில் தான் பாராவும் வாழ்ந்திருக்கிறார் என்பது போல, வெட்டு ஒன்று துண்டு இரண்டு போல, கச்சிதமாக சொல்கிறார் பாரா).

போங்கையா! மூன்றே போர்கள தான் நடந்துள்ளது என்று பாரா 20ம் அத்தியாயத்தில் எவ்வளவு அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் என்பதைப் பாருங்கள்.

பாரா அவர்கள் எழுதியவை:

பா.ராகவன் - நிலமெல்லாம் இரத்தம்

அத்தியாயம் 20 - இஸ்லாம் வாள்முனையில் பரவியதா?

. . . மாறாக, ஒட்டுமொத்த மத்திய ஆசியாவிலும் மிகக்குறுகிய காலத்தில் செல்வாக்குப் பெற்று, முகம்மது நபியின் மறைவுக்குப் பின் மிகச்சில ஆண்டுகளிலேயே ஐரோப்பாவுக்கும் கிழக்காசியாவுக்கும் பரவி, உலகின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் காலூன்றி நிற்க முடிந்திருக்கிறதென்றால், அது எவ்வாறு பரவியது என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது.

இதை ஆராய்வதற்கு முதல் தடையாக இருப்பது, "அது அச்சுறுத்தலால் பரப்பப்பட்ட மதம்" என்கிற முன் அபிப்பிராயம், அல்லது முன் முடிவு அல்லது முன் தீர்மானம். இந்த முன் தீர்மானம் அல்லது முன் அபிப்பிராயத்தை இஸ்லாத்தைக் காட்டிலும் வேகமாகப் பரப்பி வேரூன்றச் செய்தவர்கள் மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள். பெரும்பாலும் யூதர்கள். சிறுபான்மை கிறிஸ்துவ சரித்திர ஆய்வாளர்கள்.

மிகவும் அற்பமானதொரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம். முகம்மது நபியின் காலத்தில் இஸ்லாத்தை முன்னிட்டு மொத்தம் சுமார் எழுபத்தைந்து அல்லது எண்பது யுத்தங்கள் நிகழ்த்தப்பட்டதாக அனைத்து மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்களும் சொல்கிறார்கள். அத்தனை யுத்தங்களிலும் ரத்த ஆறு பெருகியதென்றும் யுத்தக் கைதிகளை வாள்முனையில் மிரட்டி இஸ்லாத்தில் இணைத்ததாகவும் ஏராளமான சம்பவங்களை இந்தச் சரித்திர ஆய்வாளர்கள் பட்டியலிடுகிறார்கள்.

உண்மையில் முகம்மது நபியின் காலத்தில் நடைபெற்ற யுத்தங்களாக ஆதாரங்களுடன் கிடைப்பது மொத்தம் மூன்றுதான். பத்ரு, உஹைத், ஹுனைன் என்கிற மூன்று இடங்களில் முஸ்லிம்கள் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இஸ்லாம் குறித்து அல்லாமல், முகம்மது நபியின் வாழ்க்கை குறித்து ஆராய்ச்சி செய்திருக்கும் மேற்கத்திய ஆய்வாளர்களின் நூல்களில் இந்த யுத்தங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. உண்மையில் எண்பது யுத்தங்கள் அவர் காலத்தில் நடந்திருக்குமானால், இந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் அவற்றையும் அவசியம் பதிவு செய்திருப்பார்கள். மாறாக, மேற்சொன்ன மூன்று யுத்தங்கள் பற்றி மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள்.

இதைக்கொண்டே, இஸ்லாத்தை முன்னிட்டு முகம்மது நபியின் காலத்தில் நிகழ்த்தப்பட்ட யுத்தங்கள் மூன்றுதான் என்கிற முடிவுக்கு வரவேண்டியதாகிறது.

ஆக, முகம்மது நபியின் காலத்தில் யுத்தங்களின் மூலம் இஸ்லாம் பரப்பப்படவில்லை என்கிற முடிவுக்கே வரவேண்டியதாகிறது. ஆதாரங்களுடன் உள்ள மூன்று யுத்தங்கள் கூட ஒரே தினத்தில் ஆரம்பித்து, நடந்து, முடிந்தவையாகவே இருக்கின்றன. அதாவது, ஒருநாள் கலவரம்.

கட்டக்கடைசி வினாடி வரை அவர் யுத்தங்களைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளையே மேற்கொண்டிருப்பதாகச் சரித்திரம் சுட்டிக்காட்டுகிறது. தவிர்க்கவே முடியாத மூன்று சந்தர்ப்பங்களில்தான் முகம்மது, யுத்தத்துக்கான உத்தரவு அளித்திருக்கிறார்.

பாரா அவர்கள் மேற்கண்ட வரிகளில் தெளிவாகவும், மிகவும் நம்பிக்கையாகவும் எழுதுகிறார் "ஆதாரங்களுடன் கிடைத்திருப்பது மூன்று யுத்தங்கள் தான், அவைகள்: பத்ரு, உஹைத், மற்றும் ஹுனைன்". இதற்கு மேலே யாராவது எண்ணிக்கையை உயர்த்தினால், அது ஆதாரமற்ற விவரமாகும். வாசகர்கள் இந்த விவரத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

2) குர்-ஆனின் படி முஹம்மது செய்த யுத்தங்கள் எத்தனை?

இப்போது நாம் என்ன செய்யப்போகிறோம் என்றால், பாரா அவர்கள் சொன்னது குர்-ஆனோடு ஒத்துப்போகிறதா? இல்லையா? என்பதை பார்க்கப் போகிறோம்.

பாரா சொன்னதுபோல, மூன்றை விட ஒரே ஒரு யுத்தம் பற்றி அதிகமாக குர்-ஆன் சொல்லியிருந்தால், என்ன செய்யலாம் என்று பாரா அவர்களிடமே கேட்போம். அவர் தனக்கு இஸ்லாமை கற்றுக்கொடுத்த முஸ்லிம் அறிஞரிடம் கேட்டு பதில் சொல்லுவார், சொல்லவேண்டும். ஏனென்றால், முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி, குர்-ஆன் தான் உண்மையான சரித்திரம், குர்-ஆனில் சொல்லப்பட்டவைகளில் ஒரு வரி, ஒரு எழுத்து கூட பொய்யாகாது. 

பாரா அவர்கள் குறிப்பிட்டது மூன்று போர்கள் - பத்ரு, உஹைத், மற்றும் ஹுனைன்

முதலாவதாக, இந்த போர்கள் பற்றி குர்-ஆன் ஏதாவது குறிப்பிடுகிறதா என்று பார்ப்போம். அதன் பிறகு வேறு ஏதாவது போர் பற்றி குர்-ஆன் குறிப்பிடுகின்றதா என்பதை ஆய்வு செய்வோம்.

போரின் பெயர்குர்-ஆன் வசனங்கள்இதர விளக்கங்கள்
பத்ரு3:13, 3:123-125 & 8வது அத்தியாயம்பத்ரு போர் பற்றிய விவரங்கள் இவ்வசனங்களில் காணப்படுகின்றது.
உஹைத்3:121,122, 8:36இப்னு கதீர் தம் விளக்கவுரையில் குர்-ஆன் 8:36ம் வசனம் உஹுத் போர் பற்றி பேசுகிறது என்று விளக்கமளித்துள்ளார். (https://en.wikipedia.org/wiki/Battle_of_Uhud )
ஹுனைன்9:25-26இவ்வசனங்களில் ஹுனைன் போர் பற்றி அல்லாஹ் சிறிய விளக்கமளிக்கின்றான்.

மேற்கண்ட குர்-ஆன் வசனங்களில், பாரா அவர்கள் குறிப்பிட்ட மூன்று போர்கள் பற்றி அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்.  ஆனால், பாரா அவர்களின் ஆய்வின் படி மூன்றுக்கு மேல் ஒரு போர் கூட நடக்கவில்லை, அதில் முஹம்மது கலந்துக்கொள்ளவே இல்லை, அவர் தம் சகாக்களுக்கு கட்டளையிடவும் இல்லை. இது உண்மையா? வாருங்கள் மறுபடியும் குர்-ஆனில் தேடுவோம்.

குர்-ஆனில் பதிவான இதர போர்கள்: 

 

போரின் பெயர்குர்-ஆன் வசனங்கள்இதர விளக்கங்கள்
அகழ்ப்போர்33:9 – 33:27அகழ்ப்போர் பற்றி இவ்வசனங்கள் கூறுகின்றன.
கைபர்48:20இந்த வசனத்தில் கைபர் போர் பற்றி அல்லாஹ் பேசுகின்றான். கைபர் போர் - ta.wikipedia.org/s/5v82

இன்னும் ஏதாவது போர்கள் பற்றி குர்-ஆன் சொல்கின்றதா? என்று நான் தேடிப்பார்க்கவில்லை. நமக்கு இது போதும். 

3) பாரா  அல்லது அல்லாஹ் - யார் உண்மையைச் சொல்கிறார்கள்?

பாராவும் குர்-ஆனில் பதிவாகியுள்ள அகழ்ப்போரும்:

இந்த கட்டுரையில் நான் குர்-ஆனிலிருந்து மட்டுமே போர்கள் பற்றிய விவரங்களை எடுத்துள்ளேன். ஹதீஸ்களிலிருந்தோ, இதர சரித்திர நூல்களிலிருந்தோ நான் விவரங்களை எடுக்கவில்லை. 

பாரா அவர்களிடம் கேட்கவேண்டியவைகள்:

1) குர்-ஆன் அகழ்ப்போர் என்ற இன்னொரு போர் பற்றி பேசுகின்றது ( குர்-ஆன் அத்தியாயம் 33:9-27). உங்களின் ஆய்வின் படி, வெறும் மூன்றே மூன்று போர்கள் தான் நடந்தன, மேலும் முஹம்மது அவைகளில் மட்டுமே பங்கு பெற்றார். ஆனால், குர்-ஆனின் படி அகழ்ப்போரும்  நான்காவதாக வருகிறது. இதற்கு உங்கள் பதில் என்ன? உங்களின் கட்டுரைகளை சரிபார்த்த நாகூர் ரூமி அவர்களின் பதில் என்ன? நீங்கள் சரியா அல்லது அல்லாஹ் சரியா?

2) உங்கள் ஆய்வின் படி, மூன்றுக்கு மேல் போர்களை முஹம்மது செய்தார் என்றுச் சொல்பவர்கள், யூதர்கள் ஆவார்கள் மேலும் அவர்கள்  பொய்யர்கள் ஆவார்கள். ஆக, குர்-ஆனின் 33வது அத்தியாயம் யூதர்களின் கைவேலை என்றுச் சொல்வீர்களா?

3) போனஸுக்காக, கைபர் என்ற போர் பற்றிய ஒரு வசனத்தையும் சுட்டிக்காட்டியுள்ளேன். இதுவும் யூதர்களின் கைவேலையா?

4) தமிழ் முஸ்லிம்களுக்கு உங்கள் பதில் என்ன? என்னை மன்னித்துவிடுங்கள் நான் தவறு செய்துவிட்டேன் என்று மன்னிப்பு கோருவீர்களா? அல்லது நான் சொன்னது தான் உண்மை, குர்-ஆன் சொன்னது பொய் என்றுச் சொல்வீர்களா?

தமிழ் முஸ்லிம்களுக்கு:

தமிழ் முஸ்லிம்களே, ஒரு மாற்று மதக்காரர் இஸ்லாமுக்கு ஆதரவாக புத்தகம் எழுதினால், அதன் மீது ஆய்வு செய்யாமல், மேலோட்டமாக மேய்த்துவிட்டு, திருப்தியாக 'ஆஹா ஓஹோ' என்று பாராட்டுகிறீர்களே! இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? 

நான் ஒரு அறிவுரை கூறட்டுமா? நீங்கள் நேராக பாரா அவர்களிடம் சென்று, 'அய்யா பாரா அவர்களே, உங்கள் புத்தகத்துக்கு நன்றி. ஆனால், இந்த 20வது அத்தியாயத்தை திருத்துங்கள், அதில் பிழைகள் உள்ளது, அதை மாற்றி எழுதி பதித்து விடுங்கள், அல்லது அதனை முழுவதுமாக நீக்கிவிடுங்கள். எங்கள் உயிரினும் மேலான முஹம்மது நபி அவர்கள் செய்த போர்கள் வெறும் மூன்று என்று நீங்கள் சொல்லி, குர்-ஆனுக்கு முரணாக எழுதிவிட்டீர்கள், இது எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. அடுத்த பதிப்பில்ப அதனை மாற்றிவிடுங்கள்' என்று ஒரு வேண்டுகோள் வையுங்கள். இந்த மாற்றத்தை செய்வேன் என்று அவர் ஒப்புக்கொள்ளும்படி மிகவும் தாழ்மையாக வேண்டிக்கொள்ளுங்கள் [ஒருவேளை அவர் திருத்துகிறேன் என்று ஒப்புக்கொண்டால், மூன்று போர்கள் என்ற இடத்தில் அவர் என்ன எண்ணை போடப்போகிறார்? என்று ஒரு முறை கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் வீட்டுக்கு போன பிறகு, அவர் மூன்று போர்கள்  இல்லை,  முஹம்மது செய்தது வெறும் ஐந்து போர்கள் என்று எழுதினால், மறுபடியும் நீங்கள் அவரது வீட்டுக்குச் செல்லவேண்டி வரும் என்பதை அவருக்கு தெரிவியுங்கள். ஆனால், உண்மையான எண்ணிக்கை யாருக்காவது தெரியுமா?]

4) முடிவுரை:

பாரா அடித்துச் சொன்னார் "முஹம்மது செய்தது மூன்று போர்கள் தான் என்று", ஆனால் குர்-ஆனோ 'போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு, அட கிறுக்கு உனக்கு இருக்கு இப்ப எண்ணாத மனக் கணக்கு' என்று நம்மைப் பார்த்துச் சொல்கிறது. 

இதில் யார் சொல்வது சரி? குர்-ஆனா? அல்லது பாராவா?

"இதில் என்ன சந்தேகம், பாரா தான் தவறு செய்தார்" என்று முஸ்லிம்கள் சொல்வார்கள், ஆனால் பாரா ஒப்புக்கொள்ளவேண்டுமே! அவருக்கு உதவிய நாகூர் ரூமி அவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டுமே!

அடுத்த கட்டுரையில், ஆதார பூர்வமான ஹதீஸ்களின் படி முஹம்மதுவின் காலத்தில் அவர் புரிந்த, அவர் கட்டளையிட்ட போர்கள் எத்தனை என்பதை பார்ப்போம். ஏற்கனவே, குர்-ஆனை படிக்காமல் எழுதிய பாவத்துக்காக பாரா மாட்டிக்கொண்டு முழிக்கிறார், இப்போது ஹதீஸையும் நாம் ஆய்வு செய்தால் முஸ்லிம்கள் கூட மாட்டிக்கொண்டு முழுத்தாலும் முழிக்கலாம். ஆனால், அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று மாட்டிக்கொண்டு முழிக்கவேண்டும்? அல்லாஹ் நோஸ் த பெஸ்ட்.

அடுத்த தொடரில் சந்திப்போம்.


2016-2017 ரமளான் தொடர் கட்டுரைகள்

ரமளான் தொடர் கட்டுரைகள் (2012 - 2017)

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2016ramalan/2017ramalan26.html


கருத்துகள் இல்லை: