ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 31 மார்ச், 2015

பாகம் 2 - முஸ்லீம் அரச சபையில் அப்போஸ்தலர் பவுலடியார்

பாகம் 2 - முஸ்லீம் அரச சபையில் அப்போஸ்தலர் பவுலடியார்

(கற்பனை நாடகம் : முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர்கள் பேதுரு, யோவான், லூக்கா மற்றும் பவுல்)

இது ஒரு கற்பனை நாடகம் ஆகும். இயேசுவின் சீடர்களில் பலர் இதில் நடிக்கிறார்கள். ஒரு முஸ்லிம் அரசர் ஆட்சி செய்யும் நாட்டில், அவரது அரச சபையில் இந்த நாடகம் நடக்கிறது. முஹம்மதுவின் காலத்திற்கு பின்பு அவரது தோழர்கள் நாடுகளை ஆட்சி செய்தார்கள். அவர்களை "கலிஃபா" என்று அழைப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு கலிஃபாவின் ஆட்சி காலத்தில் இந்த உரையாடல் நடப்பதாக நாம் கற்பனை செய்துள்ளோம்.  இயேசுவின் சீடர்கள் அக்காலத்தில் உயிரோடு இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். இஸ்லாமிய ஆட்சி நடக்கும் அந்த நாட்டில் இயேசுவின் சீடர்களாகிய பேதுரு, யோவான், லூக்கா மற்றும் பவுலடியார் சுவிசேஷம் சொல்லும் போது, கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார்கள். இந்த நாடகம் கற்பனைத் தான் ஆனால், அரசருக்கும், இயேசுவின் சீடருக்கும் இடையில் நடைபெறும் உரையாடல்களில், குர்-ஆன் மற்றும் பைபிள் வசனங்கள் மேற்கோள் காட்டி பேசப்படுகின்றது. முஸ்லிம்கள் சத்தியத்தை அறியவேண்டும், மெய்யான வழியை பின்பற்றவேண்டும் என்பதற்காக இந்த தொடர் கட்டுரைகள் பதிக்கப்படுகின்றன. 

அந்த இஸ்லாமிய அரசர் முதலாவது பேதுருவை அழைத்து பேசுகிறார், அதனை முதல் பாகத்தில் இங்கு சொடுக்கி படிக்கவும்.

பாகம் 2

[இஸ்லாமிய அரச சபைக்கு அப்போஸ்தலர் பவுல் கொண்டு வரப்படுகின்றார். பவுலடியாரிடம் இஸ்லாமிய அரசர் கேள்விகளை தொடுக்கிறார், இவர்கள் மத்தியிலே நடைப்பெற்ற சூடான உரையாடலை படியுங்கள்.]

அரசர்: பவுல் அவர்களே, உம்மை இஸ்லாமிய அரச சபைக்கு அன்புடன் வரவேற்கிறேன்.

பவுல்: அரசர் வாழ்க, என்னை அன்புடன் வரவேற்றதற்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், அரசருக்கு ஒரு கேள்வி: "எங்களை கைது செய்து, சிறைச்சாலையில் அடைத்து, குற்றவாளிகளை நடத்துவதைப் போல நடத்திவிட்டு, இப்போது அரச சபைக்கு அன்புடன் வரவேற்கிறேன் என்றுச் சொல்வது ஏற்புடையதாக இருக்கின்றதா அரசே?".

அரசர்: ம்ம்ம். . . உங்களுக்கு கொஞ்சம் வாய் நீளம் என்று கேள்விப்பட்டுள்ளேன், அது உண்மை என்பதை இப்போது அறிந்துக் கொண்டேன்.

பவுல்: உங்கள் மனது புண்படுத்தப்பட்டு இருந்தால் என்னை மன்னிக்கவும். ஆனால், "இஸ்லாம் ஆட்சி செய்யும் நாட்டில் சொல்லப்படும் வார்த்தைகளுக்கும், செய்யப்படும் செயல்களுக்கும்" இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதினால் தான் நான் கேள்வி கேட்டேன். என்னை எதற்காக அழைத்தீர்கள் என்பதை நான் அறிந்துக்கொள்ளலாமா?

அரசர்:  நேற்று நான் பேதுருவிடம் பேசினேன். உங்களிடம் கூட சில கேள்விகளைக் கேட்கலாம் என்று எண்ணி இன்று உங்களை அழைத்தேன்.

பவுல்: ஒரு இஸ்லாமிய அரசருக்கு முன்பாக இயேசுவின் நற்செய்தியைக் குறித்து பேச எனக்கு கிடைத்த வாய்ப்புக்காக, நான் கர்த்தரை துதிக்கிறேன். என்னை அழைத்த உங்களுக்கும் என் நன்றிகளை மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசர்:  நீங்கள் நான்கு பேரும் என் நாட்டில் அதாவது இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாட்டில் எதற்காக வந்தீர்கள்?

பவுல்: உலக இரட்சகர் இயேசுக் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை உங்களுடைய நாட்டில் வாழும் மக்களுக்குச் சொல்ல நாங்கள் வந்தோம்.

அரசர்: எங்கள் இஸ்லாமிய நாட்டில் உங்கள் நற்செய்தியைச் சொல்ல உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

பவுல்: இயேசு எங்களுக்கு கட்டளை கொடுத்துள்ளார். அவரது கட்டளையின் பேரில் நாங்கள் உலகமெங்கும் அவரது நற்செய்தியை பரப்பிக்கொண்டு இருக்கிறோம். 

வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்று இயேசு கட்டளையிட்டுள்ளார் (மத்தேயு 28: 18-20).

அரசர்:  பவுல் அவர்களே, உங்களிடம் இயேசு அந்த கட்டளையைக் கொடுத்தாரா? நீங்கள் அவரை பார்த்தீர்களா? இயேசுவின் 12 சீடர்களில் ஒருவராக நீங்கள் இருந்தீர்களா? எனக்கு தெரிந்த வரை நீங்கள் இயேசுவை சந்திக்கவே இல்லை என்பது தானே உண்மை.

பவுல்: அரசே, நான் இயேசுவின் 12 சீடர்களில் ஒருவனல்ல. ஆனால் நான் இயேசுவை சந்தித்து இருக்கிறேன். இயேசுவின் சீடர்களையும் நான் சந்தித்து இருக்கிறேன், அவரது தாயாரையும் சந்தித்து பேசும் பாக்கியத்தையும் நான் பெற்றுள்ளேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

நான் எப்படி இயேசுவை சந்தித்தேன் என்பதை உங்களுக்கு விவரிக்கிறேன். ஆரம்பத்தில் நான் இந்த கிறிஸ்தவ மார்க்கத்தாரை வெறுத்தேன். 

நான் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் துன்பப்படுத்தினேன். . . . நான் சகோதரருக்கு நிருபங்களை வாங்கிக்கொண்டு, தமஸ்குவிலிருக்கிறவர்களும் தண்டிக்கப்படும்படிக்கு, அவர்களைக் கட்டி, எருசலேமுக்குக் கொண்டுவரும்படி அவ்விடத்திற்குப் போனேன். அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமான போது, மத்தியான வேளையிலே, சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது. நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். 

அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார்.  என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக்கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப் போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகு கொடுத்து வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன். 

அப்பொழுது வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவனுமாகிய அனனியா என்னும் ஒருவன், என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; அந்நேரமே நான் பார்வையடைந்து, அவனை ஏறிட்டுப் பார்த்தேன். அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார். நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்குமுன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய் என்றான். [அப்போஸ்தலர் 22:4-15]

இப்படித்தான் நான் இயேசுவை சந்தித்தேன்.

அரசர்: அருமையான கற்பனை!  பவுலடியாரே உங்களுக்கு கற்பனைத் திறன் அதிகம் என்பதை நான் அறிந்துக் கொண்டேன். நீங்கள் சொல்லும் இந்த  கற்பனைக் கதையை நான் எப்படி நம்புவது? நீங்கள் உண்மையைத் தான் சொல்கிறீர் என்பதற்கு என்ன ஆதாரம்?

[அரசர் சரியான கேள்வியை கேட்டுவிட்டார் என்றுச் சொல்லி, அந்த சபையிலிருந்த மக்கள் எல்லோரும் தலையை அசைத்து, தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறார்கள்]

பவுல்: அரசே! நானும் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கிறேன், கோபப்படாமல் பதில் சொல்லுங்கள்.

அரசர்: நான் கோபம் கொள்ளமாட்டேன், நீங்கள் எந்த கேள்வியையானாலும் கேட்கலாம். 

பவுல்: முஹம்மது யார்?

அரசர்: அவர் இறைவன் அனுப்பிய தீர்க்கதரிசி ஆவார்.

பவுல்:  உங்களுக்கு எப்படித் தெரியும்? 

அரசர்: அவரே எங்களுக்குச் சொன்னார். முஹம்மது (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் தியானத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது, (ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, 'ஓதும்' என்றார். அதற்கவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே!' என்றார்கள். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள். "அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டி அணைத்து என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டி அணைத்துவிட்டுவிட்டு, 'படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதும்! அவனே மனிதனை 'அலக்'கில் (கருவளர்ச்சியின் ஆரம்பநிலை) இருந்து படைத்தான். ஓதும்! உம்முடைய இரட்சகன் கண்ணியம் மிக்கவன்' என்றார்." . . .  (ஸஹீஹ் புகாரி எண் 3).

ஜிப்ராயீல் தூதனை மேற்கண்ட விதமாக எங்கள் இறைத்தூதர் சந்தித்தார், அப்போது தான் அவர் குர்-ஆனின் முதல் வசனத்தைப் பெற்றார்.

பவுல்:  முஹம்மது அவர்கள் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா?

அரசர்: ஆம், நிச்சயமாக நம்புகிறேன்.

பவுல்:  அரசே! முஹம்மது அவர்கள் சொன்ன இந்த கதையை நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்? முஹம்மது அவர்கள் சொல்வது ஒரு கற்பனைக் கதையாகக் கூட இருக்கலாம் அல்லவா?  அவர் உண்மையைத் தான் சொல்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம்?

அரசர்: இல்லை இல்லை, அவர் சொன்னது உண்மை தான்.

பவுல்:  அதைத் தான் நான் கேட்கிறேன், அவர் சொன்னது உண்மைத் தான் என்பதை எப்படி நாம் கண்டுபிடிப்பது? இயேசு என்னை சந்தித்தார் என்பதை நம்ப மறுக்கும் நீங்கள், எப்படி முஹம்மது சொன்னதை மட்டும் நம்புகிறீர்கள்?

ஒரு முறை நான் இயேசுவை சந்தித்ததை நம்ப மறுக்கும் நீங்கள், 100க்கும் அதிகமான முறை காபிரியேல் தூதன் வந்து முஹம்மதுவிற்கு வசனங்களை கொடுத்தார் என்பதை மட்டும் எப்படி நம்புகிறீர்கள்? இது இரட்டை வேடம் போடுவதாகுமல்லவா?

அரசர்: அவர் இறைத்தூதர், ஆகையால் அவரை நாங்கள் நம்புகிறோம்.

பவுல்:  அவர் இறைத்தூதர் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவர் பொய் கூட சொல்லியிருக்கலாம் அல்லவா?

அரசர்:  எங்கள் இறைவேதம் குர்-ஆன் தான் "அவரை இறைத்தூதர்" என்றுச் சொல்கிறது, இது போதாதா நாம் நம்புவதற்கு?

பவுல்: குர்-ஆன் இறைவேதம் என்று  யார் சொன்னார்கள்? தான் சொன்ன வசனங்கள் இறைவன் கொடுத்த வசனங்கள் என்று யார் சொன்னார்கள்?

அரசர்: எங்கள் முஹம்மது (ஸல்) தான் சொன்னார்.

பவுல்: குர்-ஆனுக்கு முஹம்மது சாட்சி, முஹம்மதுவிற்கு குர்-ஆன் சாட்சி. இது எப்படி உண்மையாக இருக்கும்? மெய்யான இறைவன் தான் குர்-ஆனை கொடுத்தார் என்றும், அதே இறைவனுடைய தீர்க்கதரிசி தான் முஹம்மது என்பதற்கு ஏதாவது ஆதாரங்களை அல்லாஹ் கொடுத்துள்ளாரா?  முந்தைய தீர்க்கதரிசிகள் போல முஹம்மது ஏதாவது அற்புதங்கள் செய்தாரா?

அரசர்: குர்-ஆன் தான் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அற்புதம்.  

இயேசு உங்களை சந்தித்ததைப் பற்றி கேட்டால், காபிரியேல் தூதன் முஹம்மதுவை சந்தித்தது பற்றி கேள்வி கேட்பது சரியில்லையே!

பவுல்:  இவ்விரண்டும் வெவ்வேறானவை அல்லவே! காபிரியேல் தூதன் முஹம்மதுவை 100 முறைக்கும் அதிகமாக சந்திக்க முடியுமானால்! இயேசு ஏன் என்னை ஒரு முறை சந்திக்க முடியாது? 

இயேசு என்னை சந்தித்தது உண்மை, தம்முடைய சீடனாக என்னை மாற்றிக் கொண்டது உண்மை, அவருடைய நற்செய்தியை சுமந்துச் செல்லும் அப்போஸ்தலனாக மாற்றியது உண்மை. உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? 

அரசர்: நீங்கள் அதிகமாக பேசுகிறீர்கள்! நடக்க முடியாத நிகழ்ச்சி நடந்ததாக சொல்கிறீர்கள்? இது அசாத்தியம்.

பவுல்:  உங்கள் முஹம்மதுவும் நடக்க முடியாத நிகழ்ச்சிகள் நடந்ததாக, 23 ஆண்டுகள் சொல்லிக்கொண்டு இருந்தார்,  அவர் சொல்வதையெல்லாம் உண்மையென்றுச் சொல்லி, அனேகர் நம்பினார்கள்.  ஒரு முறையாவது, "முஹம்மது சொன்னது பொய்யாக இருந்திருந்தால் என்னவாகும்?" என்ற கேள்வியை நீங்கள் உங்களுக்குள் கேட்டுக்கொண்டதுண்டா?   ஒரு வேளை காபிரியேல் தூதன் அல்லாமல், வேறு ஒரு தீய சக்தி முஹம்மதுவை சந்தித்து இருந்திருக்கலாம் அல்லவா?

[அரச சபையில் இருந்த மக்கள், எழுந்து நின்று "நிறுத்து, நிறுத்து" என்று சத்தமிட்டனர், அரசரின் முகம் சிவந்துவிட்டது, கண்களில் கோபம் தென்பட்டது, அவர் தன் கைகளை அசைத்து அமருங்கள் என்று சைகை காட்டினார். சில நொடிகளில் அரச சபை அமைதியாயிற்று]

அரசர்: எங்கள் சபையில் வந்து எங்கள் இறைத்தூதர் பற்றி பேச உங்களுக்கு பயமில்லையா?

பவுல்:  அரசே! உண்மை பேசுபவன் ஏன் பயப்படவேண்டும்?

அரசர்: உங்களுக்கு திமிரு அதிகம் என்று நினைக்கிறேன்.

பவுல்:  ஆம், இயேசு மீது நான் வைத்திருக்கும் என் பக்திக்கு கொஞ்சம் திமிரு அதிகம் தான்.

அரசர்: உங்களுக்கு, அதிக படிப்பு பைத்தியமாக்கியுள்ளது பவுலடியாரே!

பவுல்:  உங்களின் அறியாமை, உங்களை ஏமாற்றிவிட்டது அரசரே! 

[அரசருக்கு மறுபடியும் கோபம் வருகிறது… ஆனால் அதை கட்டுப்படுத்திக் கொண்டு தொடர்கிறார்]

அரசர்: நான் யார் தெரியுமா? நான் நினைத்தால் உங்களை இப்போதே கொடுமையாக தண்டிக்கமுடியும், கொல்லவும் முடியும்?

பவுல்:  அரசே, கொலை செய்வதைத் தவிர உங்களால் வேறு எதைத் தான் செய்யமுடியும்? 

சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள். நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று இயேசு சொல்லியுள்ளார். (லூக்கா 12:4,5)

எனவே, கிறிஸ்தவர்களை பயப்படை வைத்து ஏதாவது சாதித்து விடலாம் என்று மனப்பால் குடிக்காதீர்கள் அரசரே!  கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் (பிலிப்பியர் 1:21)

அரசர்: உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பைத் தருகிறேன், ஒரு சிறப்பான நன்மையை உங்களுக்குத் தருகிறேன், அதை ஏற்றுக்கொண்டால் பிழைப்பீர்கள், அதை ஏற்றுக்கொள்ள மறுத்தால், மரணம் நிச்சயம் என்பதை மட்டும் அறிந்துக் கொள்ளுங்கள்.

என் பேச்சைக் கேட்டு, நீங்கள் ஒரு முஸ்லிமாக மாறினால், உங்களுக்கு ஒரு  உயர்ந்த பதவியை என் அரச சபையில் தருவேன்.  மேலும் உங்களுக்கு பிடித்தமான நான்கு பெண்களை திருமணம் செய்துக் கொள்ளலாம், நல்ல அழகான குடும்பத்தை அமைத்துக் கொள்ளலாம்.  இந்த நாட்டில் பணம் பதவி அதிகாரத்தோடு வாழலாம். உங்கள் முடிவை இப்போது சொல்லவேண்டாம், உங்கள் நண்பர்களோடு பேசி முடிவு எடுங்கள். 

பவுல்:  இதைப் பற்றியெல்லாம் முடிவு எடுக்க அவகாசம் தேவையில்லை இஸ்லாமிய நாட்டு அரசரே.  இயேசுவின் அன்பை விட்டு எங்களை பிரிக்க நீங்கள் எடுத்த முயற்சி தோல்வி அடையும். 

கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,  உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். (ரோமர் 8:36-39).

உங்கள் இறைத்தூதர் உயிரோடு இருந்த காலத்தில், உயிருக்கு பயந்து முஸ்லிம்களானவர்கள் உண்டு, பண ஆசையினாலும், பதவி ஆசையினாலும் முஸ்லிம்களானவர்களும் உண்டு, அப்படியே கிறிஸ்தவர்களும் இருப்பார்கள் என்று நீங்கள் நினைப்பது தவறு.  

உங்கள் இஸ்லாமை விட்டுவிட்டு, உண்மை மார்க்கத்தை பின் பற்றும் படி உங்களை அழைக்கிறேன். முந்தைய தீர்க்கதரிசிகளின் வழியில் நடக்க வாருங்கள் என்று உங்களை அழைக்கிறேன். முந்தைய வேதங்களின் வழியில் நடக்க வாருங்கள் என்று உங்களை அழைக்கிறேன்.  கொலைகள், வன்முறைகள் போன்றவற்றை விட்டுவிட்டு, அன்புடன் வாழ உங்களை அழைக்கிறேன்.

அரசர்: நிறுத்துங்கள்.. நிறுத்துங்கள்... என் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு,  இப்போதே என்னை கிறிஸ்தவனாக மாற்றி, இங்கேயே எனக்கு ஞானஸ்நானம் கொடுத்துவிடுவீங்க போல இருக்கே!

பவுல்:  நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறைய மாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள்தவிர, முழுவதும் என்னைப் போலாகும்படி தேவனை வேண்டிக் கொள்ளுகிறேன் அரசரே (அப்போஸ்தலர் 26:29)

[அரசரின் கோபம்… உச்சக் கட்டத்தை அடைகிறது… ]

அரசர்: யாரங்கே! உடனே… இவரை அழைத்துச் செல்லுங்கள்… நாம் மறுபடியும் சொல்லும் வரை இவர்களை என் முன்னே கொண்டு வராதீர்கள்…. 

[மயான அமைதி அரச சபையை சூழ்கிறது. அரசர் பவுலடியாரை கண்சிமிட்டாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார். காவலாளிகள் பவுலடியாரை மறுபடியும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்கிறார்கள். சிறைச்சாலையில் பேதுரு, யோவான் மற்றும் லூக்கா ஜெபித்துக்கொண்டு இருக்கிறார்கள்.  பவுலடியாரைக் கண்டதும், என்ன நடந்தது என்று விசாரித்தார்கள், பவுலடியாரும் நடந்ததைச் சொல்கிறார். அனைவரும் முழங்கால் படியிட்டு, தங்கள் கைகளை வானத்துக்கு நேராக நீட்டி, ஜெபித்துக்கொண்டு இருந்தார்கள்…..]

அடுத்த பகுதியில், இந்த இஸ்லாமிய அரசர், இயேசுவின் அன்பான சீடனாகிய யோவானை அழைத்துப் பேசுகிறார்….

"முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர்கள்" கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/disciples_at_islamic_court/paul_at_islamic_court.html