ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 21 நவம்பர், 2012

அன்று சத்தாம், நேற்று லாடன் இன்று அஜ்மல் கசாப் - நீதி தூங்குவதில்லை

அன்று சத்தாம், நேற்று லாடன் இன்று அஜ்மல் கசாப் - நீதி தூங்குவதில்லை

2008ம் ஆண்டு, மும்பை மாநகரத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பிடிபட்ட அஜ்மல் கசாப் இன்று அதாவது நான்கு ஆண்டுகளுக்கு பின்பு காலை 7:30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார்.

அன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் 150க்கும் மேலானோர் கொல்லப்பட்டனர், அனேகர் காயப்பட்டனர். அனேகர் பெற்றோர்களை இழந்த அனாதைகள் ஆனார்கள், சிலர் விதவைகள் ஆனார்கள், வேறு சிலர் பிள்ளைகளை இழந்த பெற்றோர்களானார்கள். இவர்களின் எதிர் கால கனவுகள் மண்ணோடு மண்ணாக மறைந்துவிட்டது. இந்த செயல்களை புரிந்தவர்களில் ஒருவன் உயிரோடு இருந்தான் (அஜ்மல் கசாப்), இவனால் துன்பத்துக்கு ஆளானவர்கள் இவனுக்கு எப்போது தண்டனை கிடைக்கும்? தங்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்? என்று காத்திருந்தனர். நீதி தூங்கிவிட்டதா? அல்லது செத்துவிட்டதா? ஏன் நீதிமன்றங்கள் தாமதிக்கின்றன என்று புலம்பினார்கள்.

அஜ்மல் கசாப்புக்காக கருணை மனு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஜனாதிபதி இந்த மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது, இவனுக்கு கருணை காட்டக்கூடாது என்று மக்கள் விரும்பினர்.

நீதி தூங்குவதில்லை:

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வண்ணமாக, இந்திய மண்ணில் நீதி இன்னும் உயிரோடு தான் இருக்கிறது என்பதை நிருபிக்கும் வண்ணமாக, நம் ஜனாதிபதி இந்த கருணை மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை, கசாப்பிற்கு கருணை மன்னிப்பு அளிக்கவில்லை. இதன் பயனாக இன்று காலை 7:30 மணிக்கு கசாப் தூக்கில் இடப்பட்டார். இவரது உடலை தரும்படி இதுவரை யாரும் கேட்கவில்லை, முக்கியமாக பாகிஸ்தானும் கேட்கவில்லை என்று இன்று காலைச் செய்தி தெரிவிக்கிறது.

கடைசியில் அசத்தியம் அழிந்தது, சத்தியம் ஜெயித்தது.

நீதி தாமதித்தாலும், சரியான தண்டனையை கசாப்பிற்கு கொடுத்தது என்று மக்கள் நிம்மதி பெருமூச்சு விட ஆரம்பித்தனர்.

சிறப்புத் தொழுகை:

உலக மகா தீவிரவாதியாம் பின்லாடனின் மரணத்திற்கு பிறகு, இஸ்லாமியர்கள் அவனுக்காக சிறப்பு தொழுகை நடத்தினர். இந்தியாவில் நடந்த கோர தீவிரவாத செயலில் ஈடுபட்ட இந்த கசாப்பிற்காக முஸ்லிம்கள் (முக்கியமாக தமிழ் முஸ்லிம்கள்) சிறப்பு தொழுகை நடத்துவார்களா? அல்லது இந்திய மண்ணில் தீவிரவாத செயலை அரங்கேற்றியவன் யாராக இருந்தாலும் சரி அவன் ஒரு முஸ்லிமல்ல என்றுச் சொல்லி, கசாப்பின் செயலை கண்டித்து, அவனுக்கு கிடைத்த தண்டனையை ஆதரித்து தமிழ் முஸ்லிம்கள் செயல்படுவார்களா? தமிழ் முஸ்லிம்கள் தங்கள் இணைய தளங்களிலும், வார, மாத பத்திரிக்கைகளிலும் கசாப்பிற்கு கிடைத்த தண்டனை சரியானது தான் என்றுச் சொல்லி அறிக்கைவிடுவார்களா? இப்படி செய்து தாங்கள் எக்காலத்திலும் தீவிரவாத செயலுக்கு உடந்தையாக இருந்ததில்லை, இனியும் இருக்கமாட்டோம் என்பதை நிருபிப்பார்களா?

கசாப்கள் பிறந்துக்கொண்டே இருப்பார்கள்:

ஏதோ பின் லாடன் மரித்துவிட்டார், சத்தாம் உசேன் மரித்துவிட்டார், கசாப்பை நாம் தொலைத்துவிட்டோம் என்று யாரும் அதிக மகிழ்ச்சி அடையமுடியாது. தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் உலகில் இருக்கும் வரை (எந்த நாடுகள் என்று நான் சொல்லத்தேவையில்லை), இன்னும் அனேக லாடன்கள், சத்தாம் உசேன்கள், அஜ்மல் கசாப்கள் பிறந்துக்கொண்டே இருப்பார்கள், அவர்களை அந்நாடுகள் மற்ற நாடுகள் மீது ஏவிக்கொண்டே இருக்கும். ஆனால், நமக்கு இருக்கும் ஒரு நம்பிக்கை என்னவென்றால், இறைவன் இன்னும் இறந்துவிடவில்லை, இந்தியாவில் நீதி இன்னும் நிர்மூலமாகவில்லை என்பதாகும். தாமதித்தலும், நீதி தன் கடமையைச் செய்யும், இறைவன் பொறுமையாக இருந்து மக்களுக்கு நீதி செய்வான் என்பதாகும்.

எனவே, இந்தியாவில் நீதி தன் கடமையை செய்தமைக்காக, இந்த தண்டனை கசாப்பிற்கு கிடைக்க உழைத்த அனைத்து அரசாங்க ஊழியர்களுக்காக நமது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளவேண்டும்.

துன்மார்க்கனின் மரணத்தை தேவன் விரும்பாமல்…

ஒரு சராசரி இந்தியன் என்ற முறையில் நான் மேற்கண்ட விவரங்களை எழுதினேன். ஆனால், ஒரு கிறிஸ்தவனாக இருந்து பார்க்கும் போது, இந்த கசாப் மனந்திருந்தி இறைவனிடம் தான் செய்த பாவ செயலுக்கு மன்னிப்பை பெற்று இருந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்குமே என்று எண்ணத்தோன்றுகிறது. அனேகரின் மரணத்திற்கு காரணமான ஒரு மனிதன் மரித்தான், அவனுக்கு சரியான தண்டனை கிடைத்தது என்ற மகிழ்ச்சி ஒரு புறமிருக்க, உண்மையான இறைவனை அறியாது ஒரு உயிர் மரித்துவிட்டதே என்ற வேதனை உள்ளத்தை அதிகமாக வாதிக்கிறது.
துன்மார்க்கனின் மரணத்தை தேவன் விரும்பாமல், அவனின் மனந்திரும்புதலையே அவர் விரும்புகிறார்.

இன்று அதிகாலை நிறைவேற்றப்பட்ட தண்டனையின் மூலமாக, இந்திய மண்ணில் தன் கைவரிசையை யார் காட்டினாலும் சரி, அதை அரசு சகித்துக்கொள்ளமுடியாது என்பது நிருபணமாகியுள்ளது. தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களும், அதனை ஆதரிப்பவர்களையும் இந்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கும் என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டாகும்.

இப்படிக்கு
உமர்

ஞாயிறு, 18 நவம்பர், 2012

கேலியும் கௌரவமும்: முஹம்மது மற்றும் இயேசுவின் செயல்கள்

கேலியும் கௌரவமும்: முஹம்மது மற்றும் இயேசுவின் செயல்கள்

ஆசிரியர்: ரோலண்ட் கிளார்க்

முஹம்மதுவை கேலி செய்ததின் காரணமாக பெருகிவந்துக்கொண்டு இருக்கும் வன்முறையை சாந்தப்படுத்த, சி என் என் (CNN) என்ற தொலைக்காட்சி, ஒரு நிகழ்ச்சியில் சல்மான் ஷேக் என்ற ஒரு புத்திசாலி இஸ்லாமிய விரிவுரையாளரின் மேற்கோளை காட்டியது:

"லிபியா, எகிப்து, துனிஷியா, யெமன் மேலும் இதர இடங்களில் அரங்கேரிய புத்தியில்லாத வன்முறைகள், குற்றமற்ற அனேகரின் மரணத்திற்கு காரணமாக இருக்கிறது, மேலும் அதிக ஆபத்தை அது உண்டாக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் இது ஒரு சரியான வழிமுறையல்ல, இதைப் பற்றி ஒன்றும் செய்வதற்கில்லை".

இந்த கட்டுரை வெளியான சில நாட்களுக்குள்ளேயே, பாகிஸ்தானில் 15 பேர் கொல்லப்பட்டார்கள், இவர்கள் அப்பாவிகளாவார்கள், அதாவது இவர்களுக்கும் அந்த "முஸ்லிம்களின் அறியாமை" என்ற வீடியோவிற்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை.

தற்போது நடந்துக்கொண்டு இருக்கும் இந்த வன்முறை செயல்கள், நமக்கு 2006 ஆண்டு நடந்த வன்முறையை ஞாபகப்படுத்துகிறது, அதாவது இஸ்லாமின் மதிக்கத்தக்க நபி முஹம்மதுவை கேவலப்படுத்தும்படியாக வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள் அந்த வன்முறைக்கு காரணமாக இருந்தன. அந்த காலகட்டத்தில் முக்கியமான அனேக இஸ்லாமிய அறிஞர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை உணர்ந்தார்கள், அது என்னவென்றால் "குற்றமில்லாத மக்களை கொல்லும் இந்த வன்முறைகளினால், இஸ்லாம் கறைபடுத்தப்படுகிறது" என்பதாகும். ஆப்கானிஸ்தானின் ஒரு முக்கியமான இஸ்லாமிய இமாம், முஹம்மது உஸ்மான் என்பவர் "இந்த வன்முறை செயல்கள் இஸ்லாமுக்கு கெட்ட பெயரை கொண்டுவருகிறது" என்று கூறியுள்ளார் (Islamism: A Cartoon of Islam).

தாவீது இராஜாவின் குமாரன் சாலொமோன் கூறிய நீதிமொழிக்கு ஏற்றது போல, உள்ளது மேற்கண்ட இஸ்லாமியர்களின் எச்சரிக்கைகள்: நீதிமொழிகள் 19:11 மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.

கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்த மேற்கண்ட வசனம் சொல்வதை கைக்கொள்ளவேண்டும். மேலும், இஸ்லாமியர்கள் கூட முந்தைய நபிகளுக்கு இறக்கப்பட்டதை நம்புகிறபடியினால், நாம் இப்படிப்பட்ட நல்ல அறிவுரைகளை ஏற்கவேண்டும். குற்றத்தை மன்னிப்பது நமக்கு மகிமையாக இருக்கிறது என்பதை நாம் நம்பினால், முஹம்மதுவும், இயேசுவும் இந்த விஷயத்தில் (கேலி செய்தல் பற்றி) எப்படி நடந்துக்கொண்டார்கள் என்பதை கவனிப்பது சாலச்சிறந்தது. இவ்விருவர் இஸ்லாமையும் மற்றும் கிறிஸ்தவத்தையும் தோற்றுவித்தவர்கள் / மூலைக்கற்கள் ஆவார்கள். எனவே, இவர்கள் எப்படி எதிர் கொண்டார்கள் செய்தார்கள் என்பதை கவனிப்போம்.

கேலி செய்தவரை கொல்வது (முஹம்மது):

சஹீஹ் புகாரி ஹதீஸில் எப்படி ஒருவன் முஹம்மதுவை கேலிசெய்து அவர் மனதை புண்படுத்திவிட்டான் என்பதை வாசிக்கமுடியும். சஹீஹ் புகாரி பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4037

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாரயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று கூறினார்கள்.

உடனே முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி) எழுந்து, 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!" என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்" என்று பதிலளித்தார்கள்.

உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(சரி) சொல்" என்றார்கள். . . .

இந்த ஹதீஸ் மிகவும் நீளமாக இருப்பதினால், வெறும் சுருக்கத்தை இங்கு கொடுத்துள்ளோம். இதன் முடிவுரை என்னவென்றால், கஅப் என்பவர் கொலை செய்யப்பட்டார்( MUHAMMAD AND THE MURDER OF KAB BIN AL-ASHRAF). உண்மையில், இஸ்லாமிய ஆதார நூல்களின் படி, தம்மை கேலிசெய்து எதிர்த்தவர்களை முஹம்மது கொலை செய்தார். துரதிஷ்டவசமாக மேற்கண்ட ஹதீஸ்களை படிக்கும் முஸ்லிம்கள் தங்கள் நபியை கெலிசெய்யும் நபர்களைக் கண்டால், மூர்க்கவெறி கொண்டு கொலை செய்யும் அளவிற்கு முஸ்லிம்கள் சென்றுவிடுகின்றனர். தம்மை கேலி செய்பவர்களிடம் முஹம்மது எப்படி நடந்துக்கொண்டார் என்பதை அறிய இந்த விவரமாக கட்டுரைகளை படிக்கவும் கட்டுரை 1, கட்டுரை 2.

கேலிசெய்பவர்களிடம் பொறுமையுடன் இருந்து மன்னித்தல் (இயேசுக் கிறிஸ்து):

முஹம்மதுவை கேலி செய்து எதிர்த்தது போலவே இயேசுவையும் கேலி செய்து எதிர்த்தனர், ஆனால், இப்படிப்பட்டவர்களை கொல்லும் படி, இயேசு தம் சீடர்களுக்கு கட்டளையிடவில்லை. மக்கள் தன்னை கேலி செய்யவும், அவமானப்படுத்தவும், அவ்வளவு ஏன், தம் முகத்தில் துப்பவும் இயேசு அனுமதித்தார். இயேசுவை சிறைபிடித்து, அவரை சிலுவையில் அறைந்த நிகழ்ச்சியை நீங்கள் கீழ்கண்ட மத்தேயு 27:1-54 வரையுள்ள வசனங்களில் படியுங்கள்:

விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி, அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.

. . . . தேசாதிபதி அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான் .

அதற்கு இயேசு : நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.

பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான். அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்.

அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான். பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து, அவர்கள் கூடியிருக்கையில், அவர்களை நோக்கி: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான்.

அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச்சொன்னாள்.

பரபாசை விட்டுவிடக் கேட்டுக்கொள்ளவும், இயேசுவைக் கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள். தேசாதிபதி ஜனங்களை நோக்கி: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான்.

அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள்.

பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.

அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள்.

தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான்.

அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.

கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.

அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.

அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.

அப்பொழுது, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரமனையிலே கொண்டுபோய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து, அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி, அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள். அவரைப் பரியாசம்பண்ணினபின்பு , அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.

அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.

அப்பொழுது, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள்.

அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரைத் தூஷித்தார்கள்.

அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம்பண்ணி: மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள் .

ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.

நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.

இயேசு அவமானப்பட்டார், நிந்திக்கப்பட்டார் என்பதை காட்ட நான் அதிக வசனங்களை மேற்கோள் காட்டினேன். உண்மையில் அவரை அனேகர் நிந்தித்தார்கள்,

1) ரோம காவலாளர்கள்

2) யூத மத தலைவர்கள்

3) மக்கள் கடைசியாக

4) அவருரோடு சிலுவையில் அறியப்பட்ட கள்ளர்கள் கூட நிந்தித்தார்கள் .

இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், இயேசு தம்மை நிந்தித்தவர்களிடம் எப்படி நடந்துக்கொண்டார்கள் என்பதாகும். முஹம்மதுவின் வாழ்வில் காணப்பட்டது போல, தம்மை நிந்தித்தவர்களை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம், இயேசுவிடம் காணப்பட்டதா? மேலும், சமீப காலத்தில் நாம் செய்தித்தாள்களில் படித்ததுபோல, முஹம்மதுவை கேலி செய்து வெளியான படத்திற்கு எதிராக முஸ்லிம்கள் கொண்ட மூர்க்கவெறி இயேசுவிடம் காணப்பட்டதா?

இயேசு தம்மை அவமானப்படுத்தியவர்களை பழி வாங்கவில்லை என்று வேதம் நமக்கு தெளிவாக கூறுகிறது. அதற்கு பதிலாக, இயேசு பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் காட்டினார். தனக்கு எதிராக செய்த தவறுகளை அவர் மன்னித்தார் (இது நமக்கு நீதிமொழிகள் 19:11ம் வசனத்தை ஞாபகப்படுத்துகிறது). மத்தேயு 26:52-54ல் காண்பதுபோல, அனேக ஜனங்கள் ஆயுதங்களுடன் வரும் போது கிறிஸ்து பொறுமையுடன் சர்வ வல்லவரில் சார்ந்திருந்தார். அந்த மக்கள் அவரை கைது செய்ய வந்தார்கள். வாளை பயன்படுத்திய பேதுவை நோக்கி இயேசு "உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள் என்றார். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்".

மக்கள் இயேசுவிற்கு எதிராக செய்த குற்றங்களை அவர் பொறுமையோடு சந்தித்தது மட்டுமல்ல, அவைகளை அவர் மன்னித்தும் விட்டார். இதனை நாம் லூக்கா 23:34ல் காணலாம், அங்கே அவர் "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார் ".

இயேசு தன்னுடைய எதிர்களிடம் கிருபையையும், அன்பையையும் காட்டினார். இயேசுவின் இந்த செயல் முஹம்மதுவின் செயல்களுக்கும், போதனைக்கும் எதிரானதாகும். உண்மையில் இயேசு, அநீதியை பொறுமையுடன் சகித்துக்கொள்வதைப் பற்றிய ஒரு மாதிரியை மட்டும் காண்பித்துச் செல்லவில்லை. மேலும் தன்னை பின்பற்றும் மக்கள் கீழ்கண்டவைகளை செய்ய போதித்துச் சென்றுள்ளார், " நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள் "(மத்தேயு 5:44)

இயேசுவின் மாதிரியை பின்பற்றுதல்:

இன்று இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் நிந்திக்கப்படுகிறார்கள், பல பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை யாரும் நிராகரிக்கமுடியாது. இயேசுவின் போதனையும் இந்த நிலையை முன்னறிவித்துள்ளது. இயேசு தாம் எப்படி பாடுகள் அனுபவித்தாரோ அதே போல கிறிஸ்தவர்கள் துன்பப்படுத்தப்படுவார்கள் என்று இயேசு எச்சரிக்கை விடுத்துள்ளார் (யோவான் 15:18-20, 1 பேதுரு 2:21-23; 4:12, பிலிப்பியர் 1:28-29). மேலும் தம்மை பின்பற்றுபவர்களை சிலர் இறைவனின் பெயரில் கொலை செய்வார்கள் என்று இயேசு முன்னறிவித்துள்ளார் (யோவான் 16:2).

கிறிஸ்தவர்களை இஸ்லாமியர்கள் கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள் என்பது எல்லாரும் அறிந்த உண்மையாக இருக்கிறது. அதாவது இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களை அதிகமாக முஸ்லிம்கள் கொடுமைப்படுத்துகிறார்கள். முக்கியமாக சலீம் மன்ஸூர் என்ற அரசியல் பாட பேராசிரியர், மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவ சிறும்பான்மையினர் மீது இஸ்லாமியர்களின் வன்முறை என்பது "சகிக்கமுடியாதது, மனிதாபமற்றது" என்று கூறுகிறார்.

இறைவனின் பிள்ளைகளின் வெற்றி:

ஒரு கிறிஸ்தவன் தேவனுக்காக உயிர்த்தியாகம் செய்கிறானோ இல்லையோ, ஆனால் தன்னை எப்போதும் தேவன் கவனித்துக்கொண்டு இருக்கிறார், இந்த தீய உலகத்திலிருந்து தன்னை காப்பார் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது (யோவான் 17:11-15). இதே போல நம்பிக்கையை "1 யோவான் 5:4,5,11,12" தருகிறது:

தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.

ஒரு வெற்றியுள்ள உயிர்த்தியாகம் பற்றி பைபிள் இவ்விதமாக கூறுகிறது: மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 12:11)

வெற்றியும் கௌரவமும்:

மார்க்கத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை கௌரவப்படுத்தி, அவர்கள் தான் உண்மையான வெற்றியாளர்கள் என்று புகழாரம் சூட்டுவது என்பது இஸ்லாமியர்களுக்கு தெரியாத ஒன்றல்ல. இஸ்லாமை பொறுத்தமட்டில், ஒருவர் சொர்க்கத்தை அடையும் நிச்சயமான வழி என்னவென்றால், ஜிஹாதில் தன் உயிரை கொடுத்து மரிப்பதாகும். எனினும், பைபிளை பொறுத்தமட்டில், சாத்தானை வெற்றிக்கொண்டு, தேவனால் சொர்க்கத்தில் அனுமதிக்கப்படுவதற்கு நம்முடைய சொந்த நீதியான காரியங்கள் உதவாது, அதற்கு பதிலாக, ஆட்டுக்குட்டியின் (இயேசுவின்) இரத்தத்தின் மூலமாக கிட்டும் கிருபை அதற்கு உதவும்.

உயிர்த்தியாகம் மற்றும் கௌரவம் என்றால் என்ன என்பதை இயேசுவின் போதனை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தம்மை பின்பற்றுபவர்கள் யார் என்பதையும், உயிர்த்தியாகம் செய்பவர்கள் யார் என்பதையும் இயேசு அடையாளம் காட்டியுள்ளார். அதாவது, தங்கள் உயிரை அதிகம் நேசிக்காதவர்கள், அப்படியானால், மரிப்பதற்கு பயப்படாதவர்கள் யார் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். (யோவான் 12:25,26)

மேற்கண்ட வசனங்களுக்கு (25,26) முன்னான வசனங்களில் , இயேசு தாம் மகிமையில் செல்வதைப் (மரிப்பதைப்) பற்றிய ஒரு உவமையை கூறினார், அதாவது ஒரு கோதுமை மணியானது மரித்தால் மட்டுமே, மிகுந்த அறுவடையை கிடைக்கும் என்பதைக் குறித்து விவரித்தார்.

இந்த தற்போதைய கட்டுரையின் தலைப்பு பற்றிய இதர முக்கியமான கட்டுரைகள்:

1) இயேசுவும் முஹம்மதுவும் நிந்தனையை எப்படி எதிர்க்கொண்டு செயல்பட்டார்கள் என்ற ஒரு ஒப்பிட்டை கட்டுரையாக ஜான் பைபர் மிகவும் அழகாக எழுதியுள்ளார்: நிந்திக்கப்படும் போது: முஹம்மதுவின் செய்ல்பாடுகளில் அல்ல, கிறிஸ்துவின் செயல்பாடுகளில் உள்ள சாராம்சம்.

2) கேலிச்சித்திரத்தினால் உண்டான கலவரங்கள் பற்றிய 2006ம் ஆண்டு நான் எழுதிய கட்டுரை: இஸ்லாமை இழிவுப் படுத்துவது எது? - What Defames Islam?

3) இயேசுவையும் முஹம்மதுவையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட இரண்டு முக்கியமான கட்டுரைகள்: Jesus and Muhammad: Fifteen Major Differences and The Cornerstone: Muhammad or Jesus?

4) கடைசியாக, இந்த ஒரு கட்டுரையை நான் உங்களுக்கு பரிந்துரை செய்வேன், அதாவது சமீபத்தில் வெளியான அந்த வீடியோவை முஹம்மது கண்டிருந்தால், எப்படி செயல்பட்டு இருப்பார் என்பதைப் பற்றிய கட்டுரையாகும்: அந்த வீடியோவை முஹம்மது பார்த்து இருந்திருந்தால், என்ன செய்து இருப்பார்?

ஆங்கில மூலம்: Mockery & Honor: Muhammad and Jesus

ரோலண்ட் கிளார்க் அவர்களின் இதர கட்டுரைகள்

ஸூரா 18:50 & 1 யோவான் 3 - சாத்தானின் பிள்ளைகளுக்கும் இறைவனின் பிள்ளைகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளை அறிதல்

ஸூரா 18:50 & 1 யோவான் 3

சாத்தானின் பிள்ளைகளுக்கும் இறைவனின் பிள்ளைகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளை அறிதல்

ஆசிரியர்: ரோலண்ட கிளார்க்

"பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களைப் போலவே காணப்படுகிறார்கள்" என்று கடந்த காலங்களில் வாழ்ந்த மக்கள் கவனித்துள்ளார்கள். பிள்ளைகள் தங்கள் தோற்றத்தில் மாட்டுமல்ல, குணநலன்களிலும் பெற்றோர்களை பிரதிபலிப்பவர்களாக காணப்படுகிறார்கள். எனவே தான் "தாயைப் போல பிள்ளை" என்ற பழமொழி பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழமொழி ஆன்மீக ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

சாத்தான் பற்றி ஸூரா 18:50 கீழ்கண்டவிதமாக கூறுகிறது:

". . . அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும். "

"சாத்தானின் இனம்" என்பது எதனை குறிப்பிடுகிறது? இதற்கு யூசுப் அலி அவர்கள் தன் குர்-ஆன் மொழியாக்கத்தின் பின் குறிப்பில் கீழ்கண்டவாறு கூறுகிறார்:

2394: சாத்தானின் இனம்: இதனை நாம் நேரடியான பொருளில் எடுத்துக் கொள்ளத்தேவையில்லை. சாத்தானை பின்பற்றும் அனைவரும் அவனது சந்ததியாகவே (இனமாகவே) நாம் கருதவேண்டும்.

தீய செயல்கள் செய்பவர்களை சாத்தானோடு சம்மந்தப்படுத்தி பைபிள் கூறுகிறது :

பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும் ; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந் தானே. (1 யோவான் 3:8-12)

ஆபேலின் கொலைக்கு பின்னால் தூண்டுதலாக இருந்தவன் சாத்தான் என்று இயேசு கூட கூறியுள்ளார். யூத மத தலைவர்கள் தாங்கள் "ஆபிரகாமின் பிள்ளைகள்" என்று தவறாக கூறியதை இயேசு கடிந்துக்கொண்டார். மேலும், அவர்களை நோக்கி இயேசு "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள் ;. . . . அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான்;… (யோவான் 8:44)" என்று கூறினார்.

கொலை செய்வது சாத்தானுடைய ஒரு குணமாக அல்லது செயலாக இருப்பதினால், தற்காலத்தில் நடைப்பெறும் உலக நடப்புகளை சாத்தானின் செயல்களாக நாம் கருதலாம். "இவ்வாண்டு ரமளான் மாதத்தில் நடைப்பெற்ற வன்முறைகளால் மரித்த 3,400 இஸ்லாமியர்களின் மரணத்திற்கு பின்னால், இருட்டு சக்திகளின் (சாத்தானின்) கைவேலை இருக்குமோ?". இந்த வன்முறைகளில் ஈடுபட்ட மனிதர்கள் ஸுரா 18:50 கூறுவது போல, சாத்தானின் சந்ததிகளாக (இனமாக) இருப்பார்களோ?

தொடர்ச்சியாக முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் சண்டையிட்டுக்கொண்டு, இஸ்லாமிய உம்மாவை (நம்பிக்கையை) காயப்படுத்தி, இரத்தம் சிந்த வைக்கும் போது, இதனை காணும் மக்கள் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்கிறார்கள். இதுமட்டுமல்ல, அமைதியை விரும்பும் முஸ்லிகள் இப்படி முஸ்லிம்கள் சண்டையிட்டு இரத்தம் சிந்தி மரிப்பதை காணும் போது. அதிகமாக ஏமாற்றமடைகிறார்கள். இவர்களில் சில தைரியமான முஸ்லிம்கள் கீழ்கண்டவிதமான கேள்விகளை கேட்கிறார்கள்:

"2012ம் ஆண்டு, ரமளான் மாதத்தில் சக முஸ்லிகளால் கொலை செய்யப்பட்டு மரித்த முஸ்லிம்களின் எண்ணிக்கை இதர மாதங்களை விட 66% உயர்ந்துள்ளது, உண்மை இப்படி இருக்கும் போது, ரமளான் மாதத்தில் சாத்தான் விலங்கிடப்படுகிறான் என்று கூறுவது எப்படி சாத்தியமாகும்?" (இந்த கட்டுரையை படிக்கவும்).

சாத்தான் பற்றிய வேறுபல கேள்விகளுக்கான விவரமான ஆய்வை இந்த கட்டுரையில் படிக்கலாம்: "நம்முடைய பொதுவான எதிரி – சாத்தான்".

உவமையாக பேசும் போது சாத்தானுக்கு சந்ததி (பிள்ளைகள்) இருப்பதாக நாம் கூறும் போது, இறைவனின் பிள்ளைகள் என்று ஏன் நாம் விசுவாசிகளை குறிப்பிடக்கூடாது? இதனை படித்தவுடன், இஸ்லாமிய வாசகர்கள்,

"குர்-ஆனோ அல்லது ஹதீஸ்களோ, இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே குடும்ப உறவு போன்ற ஒரு உறவு இருப்பதாக கூறியிருக்கிறதா? அதாவது இறைவன் அப்பாவாகவும், மனிதர்கள் பிள்ளைகளாகவும் எங்கேயாவது கூறியிருக்கிறதா? "

என்று கேள்வி எழுப்புவார்கள்.

முஸ்லிம்கள் இறைவனை "தகப்பனாகவும்", மனிதர்களை "பிள்ளைகளாகவும்" கருதமாட்டார்கள். இது குர்-ஆனின் படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இதனை மேலும் அறிய இந்த கட்டுரையை படிக்கவும்: இஸ்லாமுக்கு பிதா இல்லை.

இறைவன் நமக்கெல்லாம் ஒரு அப்பாவைப் போல இருக்கிறார் என்பதை ஆணித்தரமாக எதிர்க்கும் முஸ்லிம்கள், முந்தைய தீர்க்கதரிசிகள் இறைவனை தகப்பனாகவே குறிப்பிட்டார்கள் என்பதை கற்பனையும் செய்து பார்க்கமாட்டார்கள், இதனை முஸ்லிம்களால் ஜீரணித்துக்கொள்ள முடியாது, ஏனென்றால், இறைவனை தகப்பனாக கருதுவது ஒரு மன்னிக்கமுடியாத பாவமாக முஸ்லிம்கள் கருதுகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், யூத வேதாகமம் சர்வ வல்ல இறைவனை தகப்பன் என்றே குறிப்பிடுகின்றது.

யூத வேதமாகிய "தனக்"கில் நாம் கீழ்கண்டவாறு படிக்கிறோம்:

எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப் பேசினது முதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் என் ஜனமல்ல என்று அவர்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும். நம்மெல்லாருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஒரே தேவன் நம்மைச் சிருஷ்டித்ததில்லையோ? நாம் நம்முடைய பிதாக்களின் உடன்படிக்கையைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவனவன் தன் தன் சகோதரனுக்குத் துரோகம் பண்ணுவானேன்? (எரேமியா 31:20, ஓசியா 1:10,மல்கியா 2:10)

இன்ஜிலில் (நற்செய்தி) இயேசு தம் சீடர்களுக்கு எப்படி ஜெபிக்க கற்றுக்கொடுத்திருக்கிறார் என்பதை காணமுடியும்:

"…. பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக; எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்; எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே; எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும், என்று சொல்லுங்கள் என்றார்." (லூக்கா 11:2-4)

பழைய ஏற்பாட்டில், அனேக இடங்களில் பிதா குமாரன் என்ற உறவு பற்றி கூறும் வசனங்கள் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டிலும் இயேசு இறைவனின் குமாரன் என்பதை காட்டும் அனேக வசனங்கள் உண்டு. இதைப் பற்றிய புதிய ஏற்பாட்டின் ஒரு சில வசனங்களை இங்கு காணலாம்: மத்தேயு 17:5, 26:63-66; மாற்கு 2:1-12, யோவான் 10:24-38.

முடிவுரையாக, இயேசு கூறிய ஒரு உவமையை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இந்த உவமையில் 'மேசியா என்பவர், இறைவனின் குமாரனாக' இருக்கிறார் என்பதை இயேசு கூறுகிறார். இயேசுவின் உவமையை கேட்டுக்கொண்டு இருந்த யூத மத தலைவர்கள், இயேசு எதைச் சொல்கிறார் என்பதை புரிந்துக்கொண்டார்கள். இந்த உவமைப் பற்றி லூக்கா 20:9-19 வசனங்களில் காணலாம்.

ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைத் தோட்டக்காரருக்குக் குத்தகையாக விட்டு, நெடுநாளாகப் புறத்தேசத்துக்குப் போயிருந்தான். அந்தத் தோட்டக்காரர் திராட்சத்தோட்டத்தின் கனிகளில் தன் பாகத்தைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர் அவனை அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள். பின்பு அவன் வேறொரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள். அவன் மூன்றாந்தரமும் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி, துரத்திவிட்டார்கள்.

அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான். தோட்டக்காரர் அவனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும்படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு, அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள்.

இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்னசெய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார்.

அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்.

அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன? அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்றார்.

பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களைக் குறித்துத் தான் இயேசு சொல்கிறார் என்பதை உணர்ந்துக்கொண்டார்கள், அதாவது மேலே சொன்ன உவமையில் வரும் அந்த தீய உழவர்கள் இவர்கள் தான். இதனால் இயேசுவை கைது செய்ய நினைத்தார்கள், ஆனால் மக்களுக்கு பயந்ததினால் அவரை கைது செய்யவில்லை.

இறைவனை குறிப்பிடும் போது அவரை பிதா என்று அழையுங்கள் என்று இயேசு தம் சீடர்களுக்கு கற்றுக்கொடுத்தார். நான் இப்போது ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கிறேன், "நீங்கள் இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் போது அவரை எப்படி அழைக்கிறீர்கள்?", இறைவனை பிதாவாக அழைக்கும் அனுபவம் உங்களுக்கு உண்டா?

இறைவன் நம் பிதாவாக இருக்கிறார் என்பதைப் பற்றி மேலும் அறிய எனக்கு எழுதவும்.

மஸிஹாவின் தெய்வீகத்தன்மையைப் பற்றி மேலும் அறியவேண்டுமென்று விரும்புகிற வாசகர்கள் இந்த கட்டுரைகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம்: 1, 2

1 யோவான் 3:8ம் வசனத்தை படிக்கும் போது எழும் இன்னொரு முக்கியமான கேள்வி: " பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். என்று 1 யோவான் 3:8 சொல்வதின் அர்த்தமென்ன?".

இவைகள் பற்றி அறிய இந்த இரண்டு கட்டுரைகளை படியுங்கள்: 1) Timeless Truth Encrypted in Ancient Wisdom and 2) Wasn't the God of the Bible strong enough to save Jesus from being killed?

ஆங்கில மூலம்: Surah 18:50 & 1 John 3 - Distinguishing God's Children from the Devil's

ரோலண்ட் கிளார்க் அவர்களின் இதர கட்டுரைகள்