ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 16 ஜனவரி, 2012

Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு – 3

          

Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு – 3

(இயேசு எழுதியதையும், இயேசுவிற்கு கர்த்தரிடத்திலிருந்து வந்ததும் குர்‍ஆனிடமோ, பீஜே அவர்களிடமோ உண்டா?)

பீ ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு நாம் இதுவரை கொடுத்துள்ள இரண்டு பதில்களை இங்கு படிக்கலாம்:

Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு - 1

Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு – 2 (அப்போஸ்தலர்கள் இயேசுவிற்கு பிறகு வந்தவர்களா?)

இரண்டாம் பாகத்தில் நாம் "பைபிள் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பின் கீழ் பீஜே அவர்கள் எழுதிய சில வரிகளுக்கு பதிலைக் கண்டோம். இப்போது, இந்த மூன்றாம் பாகத்தில் அதே தலைப்பின் கீழ் அவர் எழுதிய மீதமுள்ள வரிகளுக்கு பதிலைக் காண்போம் (பக்கம் 5).

பீஜே அவர்கள் எழுதியது:

பைபிள் ஓர் அறிமுகம்

[...]

சுருங்கச் சொல்வதனால் பழைய ஏற்பாட்டை கி.மு என்றும் புதிய ஏற்பாட்டை கி.பி என்றும் கூறலாம். இயேசுவுக்கு முன்னர் எழுதப்பட்டவைகளையும், இயேசுவுக்குப் பின்னர் எழுதப்பட்டவைகளையும் பாதுகாத்து வைத்திருப்பதாகக் கூறும் கிறித்தவ உலகம் இயேசு எழுதியதையும் இயேசுவுக்கு கர்த்தரிடமிருந்து வந்ததையும் மட்டும் ஏன் பாதுகாக்கவில்லை என்பது கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம். (பக்கம் 5)

கிறிஸ்தவன் எழுதியது:

அருமை இஸ்லாமிய அறிஞர் மற்றும் அனுபவம் வாய்ந்தவராகிய பீஜே அவர்கள் தமக்கு வாய்க்கு வந்தபடி பேசுவதும், தம் மனதுக்கு வந்தபடி எழுதுவதும் வழக்கமாக கொண்டுள்ளார். ஒரு அறிஞர் இவ்வளவு அலட்சியமாக எழுதுவார் என்பதற்கு இவரை விட்டால் எனக்கு தெரிந்தவரை யாரும் இருக்கமாட்டார்கள் நம் தமிழ் நாட்டிலே.

இஸ்லாமியர்களின் தனி உலகம்: இஸ்லாமியர்களுக்கு என்று ஒரு தனி உலகம் உண்டு, இந்த உலகத்தில் அவர்கள் தங்களை பெரிய சக்கரவர்த்திகளாக எண்ணிக்கொள்வார்கள், அவர்களே சுயமாக சட்டங்களை இயற்றுவார்கள், கோட்பாடுகளை உருவாக்குவார்கள். கடைசியாக, அவர்கள் உருவாக்கிய அந்த கோட்பாடுகளுக்கு தகுந்த படி "உலகம் வாழவில்லை" என்று மற்றவர்கள் மீது குற்றம்சுமத்தி மற்றவர்களை தண்டிப்பார்கள். இஸ்லாமியர்களுக்கு உலக அறிவியல் தேவையில்லை, உலக சரித்திரம் தேவையில்லை, உலக சரித்திரம் என்ன சொல்கிறது என்பதை அவர்கள் காதுகொடுத்து கூட கேட்கமாட்டார்கள். தங்கள் இஸ்லாமிய அறிவியல் மற்றும் இஸ்லாமிய சரித்திரத்தை வைத்துக்கொண்டு, உலகத்தை ஜெயித்துவிடலாம் என்று கனவு காண்பார்கள். அவர்களாகவே சுயமாக சிலவற்றை உருவாக்கிக்கொண்டு, கற்பனை செய்துக்கொண்டு, மற்றவர்களிடம் வந்து, "நீங்கள் ஏன் இப்படி இஸ்லாமிய சட்டத்திற்கு/கோட்பாடுகளுக்கு எதிராக நடந்துக்கொள்கிறீர்கள்? உண்மையை விட்டு ஏன் விலகிவிடுகின்றீர்கள்?" என்று ஒன்றுமே தெரியாதவர்கள் போல கேட்பார்கள்.

இவர்களின் பேச்சை கேட்பவர்கள், ஏதோ ஏற்கனவே இவர்களின் அல்லாஹ்வை நம்புவதாகவும், இவர்களின் குர்‍ஆனை எல்லாரும் ஏற்றுக்கொண்டதாகவும் இவர்களாகவே கற்பனை செய்துக்கொண்டு பேசிக்கொண்டு இருப்பார்கள். இவர்களின் பேச்சை கேட்கும் மற்றும் இவர்களின் புத்தகங்களை படிக்கும் வாசகர்களில் பாதிக்கு மேல் குழப்பமடைந்து "அப்படியா!" என்று ஆச்சரியத்தோடு கேட்பார்கள்.

ஆனால், ஒரு சில வாசகர்கள் இவர்களின் பேச்சைக் கேட்டு, இவர்களின் புத்தகங்களை படித்து விட்டு, தனிமையில் சிந்தித்துப் பார்த்தால், உண்மை தெரியவரும், மற்றும் கீழ்கண்ட கேள்விகளை இவர்களிடம் கேட்கத்தோன்றும்:

1) முதலாவது இவர்களுக்கு நம்மேல் அதிகாரம் கொடுத்தவர் யார்?

2) இவர்களாகவே ஏதோ ஒன்றை கற்பனை செய்துக்கொண்டு, நம்மிடம் வந்து இப்படி கேட்கிறார்களே, நம்மையே குற்றப்படுத்தி கேட்கிறார்களே என்ற கேள்விகள் நமக்கு எழ ஆரம்பிக்கும்.

இதுவரை நான் மேலே சொல்லிய விவரங்களின் சாராம்சம் உங்களுக்கு புரிந்ததா? …..புரியவில்லையா?... இதோ உங்களுக்கு புரியவைக்கிறேன்.

பீஜே அவர்கள் எழுதிய வரிகளை இன்னொரு முறை படிப்போம்:

பீஜே அவர்கள் எழுதியது:

பைபிள் ஓர் அறிமுகம்

[...]

சுருங்கச் சொல்வதனால் பழைய ஏற்பாட்டை கி.மு என்றும் புதிய ஏற்பாட்டை கி.பி என்றும் கூறலாம். இயேசுவுக்கு முன்னர் எழுதப்பட்டவைகளையும், இயேசுவுக்குப் பின்னர் எழுதப்பட்டவைகளையும் பாதுகாத்து வைத்திருப்பதாகக் கூறும் கிறித்தவ உலகம் இயேசு எழுதியதையும் இயேசுவுக்கு கர்த்தரிடமிருந்து வந்ததையும் மட்டும் ஏன் பாதுகாக்கவில்லை என்பது கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம். (பக்கம் 5)

மேற்கண்ட பீஜே அவர்களின் வரிகளில், முதலாவதாக, "2000 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த இயேசு, ஏதோ எழுதியிருக்கிறார்" என்று திரு பீஜே அவர்கள் சுயமாக ஒரு கோட்பாட்டை (Theory) உருவாக்குகிறார்.

இரண்டாவதாக, ஏன் கிறிஸ்தவர்கள் இயேசு எழுதியதையும், கர்த்தரிடமிருந்து வந்ததையும் "பாதுகாக்காமல் விட்டுவிட்டீர்கள்" என்று கேள்வி கேட்கிறார்.

இவரின் வரிகளை படிக்கின்ற ஒவ்வொரு கிறிஸ்தவரும் கேட்கவேண்டிய கேள்விகள் என்னவென்றால்:

1) "பீஜே அவர்களே, இயேசு எழுதியது என்ன என்று முதலாவது உங்களுக்குத் தெரியுமா?" இயேசு எழுதினாரா அல்லது இல்லையா என்று எப்படி உங்களுக்குத் தெரியும்?

2) இயேசு சுயமாக எழுதிய புத்தகம் எது? அல்லது தாம் சொல்லச் சொல்ல சீடர்கள் எழுதிய புத்தகம் எது? இப்படி எழுதப்பட்ட புத்தகம் உண்டா?

3) இயேசு எழுதிய புத்தகம் முதல் நூற்றாண்டில் காணப்படாமல் போய், எந்த ஒரு சீடரின் கண்களிலும் காணப்படாமல், ஏழாம் நூற்றாண்டில் உங்கள் முஹம்மதுவினாலோ அல்லது அல்லாஹ்வினாலோ கண்டுபிடிக்கப்பட்டு, அந்த புத்தகத்தை 20ம் நூற்றாண்டில் அதுவும் தமிழ் நாட்டில் வாழும் பீஜே அவர்களுக்கு வெளிப்படுத்தியது போல எழுதுகிறீர்கள் நீங்கள். இப்படி ஏதாவது வெளிப்பாடு உங்களுக்கு வந்துள்ளதா? அல்லது இயேசு எழுதியது உங்கள் குர்‍ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ளதா?

4) திரு பீஜே அவர்கள் தம்மை "இறைவன் மாதிரி" கற்பனை செய்துக்கொண்டு, எல்லாமே தெரிந்தவர் போல (சர்வ ஞானம் படைத்தவர் போல) கற்பனை செய்துக்கொண்டு, கிறிஸ்தவர்களிடம் வந்து "ஏன் கிறிஸ்தவர்கள் பாதுகாக்கவில்லை?" என்று கேட்கிறார்.

5) "இயேசு எழுதினார்" என்று உங்களுக்கு எப்படி தெரியும்? எந்த சரித்திரத்தில் படித்தீர்கள்? நீங்கள் முதல் நூற்றாண்டில் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்தீர்களா? இயேசுவின் சீடர்களோடு வாழ்ந்தீர்களா? அல்லது இயேசுவின் சீடர்களின் சீடராக இருந்தீர்களா? குறைந்தபட்சம் யூதாஸ் என்ற சீடனின் நண்பனாகவாவது இருந்தீர்களா?

நீங்களாகவே "இயேசு ஒரு புத்தகத்தை எழுதினார்" என்று கற்பனை செய்துக்கொள்வது, அது எங்கே என்று கிறிஸ்தவர்களிடம் கேட்பது, உங்க கற்பனை மிகவும் அருமையாக உள்ளது!

நான் மேலே குறிப்பிட்டது போல, இஸ்லாமியராகிய பீஜே அவர்கள் ஒரு கற்பனையை சுயமாக செய்துக்கொள்கிறார் அதாவது "இயேசு ஏதோ ஒரு புத்தகத்தை எழுதினார்" என்று கற்பனை செய்துக்கொள்கிறார். அதன் பிறகு அந்த புத்தகத்தை ஏன் கிறிஸ்தவர்கள் பாதுகாக்கவில்லை என்று கேட்கிறார். அவரின் முதல் கற்பனையே தவறானது, இதில் இரண்டாவது கேள்வியை வேறு கேட்கிறார் அவர். இதைத் தான் நான் இஸ்லாமியர்களின் தனி உலகம் என்ற தலைப்பில் எழுதினேன்.

நானே இராஜா, நானே மந்திரி, நானே சிப்பாய், எனக்கே எல்லாம் தெரியும், நான் யார் எழுதியதையும் படிக்கமாட்டேன், ஆனால், நான் சொல்வதை உலகம் கேட்கவேண்டும், கேள்வி மட்டும் கேட்கக்கூடாது இது தான் இஸ்லாமிய அறிஞர்களின் தாரக மந்திரம்.

இப்படி சுய கற்பனையை எழுதிவிட்டு, "கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்" என்று வேறு கூறுகிறார்.

சரி போகட்டும், பீஜே அவர்கள் வேதம் என்று நம்பிக்கொண்டு இருக்கும் குர்‍ஆனில் "இயேசு எழுதியது" பதிவு செய்யப்பட்டுள்ளதா? குறைந்த பட்சம் "இயேசு பேசிய" வார்த்தைகளாகவது உண்டா என்று பார்ப்போமா?

கி.பி. முதல் நூற்றாண்டில் இயேசு பேசியதாக குர்‍ஆன் கூறும் இயேசுவின் வார்த்தைகள்

இயேசுவின் வார்த்தைகள் என்று குர்‍ஆன் கூறும் வசனங்கள், இயேசு முதலாம் நூற்றாண்டில் பேசிய வசனங்கள் அல்ல, அவைகள் "இயேசு பேசியதாக ஏழாம் நூற்றாண்டில் அல்லாஹ்வின் பெயரில் கூறப்பட்ட முஹம்மதுவின் கற்பனைகளாகும்".

ஏதோ இயேசு பேசியது தங்களிடம் பத்திரமாக இருப்பதாகவும், தங்களுக்கு மட்டுமே அவைகள் தெரியும் என்பது போலவும், எழுதிய பீஜே அவர்களின் குர்‍ஆனில் "இயேசு என்ன பேசியுள்ளார்?" என்பதை இப்போது கவனிப்போம், இயேசு பேசியவைகள் யாரிடம் உள்ளது என்பது இப்போது புரிந்துவிடும்?

இயேசு பேசியதாக குர்‍ஆன் கூறும் வசனங்களை நான் தொகுத்து கீழே கொடுத்துள்ளேன், இன்னும் ஒரு சில வசனங்கள் என்னால் கண்டுபிடிக்க முடியாமல் விடப்பட்டு இருந்தால், இஸ்லாமியர்கள் அவைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.

3:49. இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) "உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காககளிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குச் சான்று உள்ளது'' (என்றார்)

3:50. "எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்தவும், உங்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து சான்றுடனும் வந்துள்ளேன். எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!'' (என்றும் கூறினார்.)

3:51. "அல்லாஹ்வே எனது இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழியாகும்'' (எனவும் கூறினார்)

3:52. அவர்களிடம் (இறை) மறுப்பை ஈஸா உணர்ந்த போது "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுவோர் யார்?'' என்று கேட்டார். [...]

5:72. [...] "இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' என்றே மஸீஹ் கூறினார்.

5:112. [...], "நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!'' என்று அவர் கூறினார்.

5:114. "அல்லாஹ்வே! எங்கள் இறைவா! வானிலிருந்து எங்களுக்கு உணவுத் தட்டை இறக்குவாயாக! அது எங்களில் முதலாமவருக்கும், எங்களில் கடைசியானவருக்கும் திருநாளாகவும், உன்னிடமிருந்து பெற்ற சான்றாகவும் இருக்கும். எங்களுக்கு உணவளிப்பாயாக! உணவளிப்போரில் நீயே சிறந்தவன்'' என்று மர்யமின் மகன் ஈஸா கூறினார்.

19:30. உடனே அவர் (அக்குழந்தை), "நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான்.

19:31, 32. நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கியசாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை.

19:33. நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும் நாளிலும் என் மீது ஸலாம் இருக்கிறது
'' (என்றார்)

43:63. ஈஸா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது "ஞானத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் முரண்பட்டதில் சிலவற்றை உங்களுக்குத் தெளிவுபடுத்துவேன். எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!'' எனக் கூறினார்.

43:64. "அல்லாஹ்வே என் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேர் வழி'' (என்றும் கூறினார்.)

61:6. "இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர். எனக்கு முன்சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்'' என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! [...]

61:14. நம்பிக்கை கொண்டோரே! "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுபவர் யார்'' என்று மர்யமின் மகன் ஈஸா சீடர்களிடம் கேட்ட போது " [...]
குறிப்பு: குர்‍ஆன் 5:116,117 மற்றும் 118 வசனங்களில் கூட‌ இயேசு பேசியதாக குர்‍ஆன் கூறுகிறது. ஆனால், இந்த வசனங்களை நாம் இப்போது மேலேயுள்ள பட்டியலில் சேர்க்கமுடியாது, ஏனென்றால், இந்த மூன்று வசனங்களையும் "இயேசு மறுமை நாளில் பேசுவார்" என்று குர்‍ஆன் கூறுகிறது. மறுமை நாளில் குர்‍ஆன் சொல்வது போல நடக்காது என்பதை கிறிஸ்தவர்கள் அறிவார்கள், எனவே இவைகளை இயேசுவின் கடந்த கால பேச்சாக நாம் ஒரு எடுத்துக்காட்டுக்காக கூட எடுத்துக் கொள்ளமுடியாது.

இயேசு பேசியவைகளையும், எழுதியவைகளையும் நேரில் கண்டு கேட்டதாகவும், பார்த்ததாகவும் கற்பனை செய்துக்கொண்டு பீஜே அவர்கள் கிறிஸ்தவர்களிடம் கேள்விகளை கேட்கிறார். நாம் மேலே கண்ட வசனங்கள் தான் இயேசு பேசியதாக அவரது வார்த்தைகளாக குர்‍ஆன் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 15 வசனங்களில் இயேசு பேசியதாக குர்‍ஆனில் வருகிறது. அதுவும் இந்த வார்த்தைகள் இயேசு கூறியது அல்ல, இயேசுவின் பெயரில் குர்‍ஆன் ஆக்கியோன் புனைந்த‌ கற்பனை வார்த்தைகளாகும்.

ஆக, நான் பீஜே அவர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், நேர்மையாக எழுதமுடியுமென்றால் எழுதுங்கள், இப்படி கற்பனை குதிரைகளை பறக்கவிட்டு, "இயேசு எழுதியவைகள் எங்கே" என்று அறியாமையில் கேள்விகளை கேட்கவேண்டாமென்று கூறிக்கொள்கிறேன். ஒரு வேளை உங்களிடம் இயேசு எழுதியவைகள் இருக்குமானால், அவைகளை மக்கள் முன்னிலையில் கொண்டு வாருங்கள். அவைகளை நீங்கள் எங்கே கண்டீர்கள், அவைகளின் ஆதாரங்களை போன்றவைகளையும் கொண்டு வாருங்கள்.

நீங்கள் முஹம்மதுவைப் பற்றிய விவரங்களை அறியவேண்டுமென்றால், நீங்கள் குர்‍ஆனையும், ஹதீஸ்களையும், இஸ்லாமிய சரித்திரங்களையும் படிக்கவேண்டும். அதை விட்டுவிட்டு, அம்புலிமாமா, கோகுலம், ஆனந்த விகடன் போன்ற புத்தகங்களில் தேடினால் கிடைக்குமா?

அதே போலத் தான், இயேசுவின் வார்த்தைகளை நாம் அறிந்துக்கொள்ள, அவரை நேரடியாக கண்டு, அவரோடு வாழ்ந்தவர்களாகிய முதல் நூற்றாண்டு சீடர்கள் எழுதியதில் காணமுடியுமே தவிர, இயேசுவிற்கு பிறகு ஏழாம் நூற்றாண்டில் மக்காவில் வாழ்ந்த ஒரு மனிதனிடம் இயேசுவின் வார்த்தைகளை காணமுடியாது.

இயேசுவின் வார்த்தைகளை நாம் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களில் காணலாம். இஸ்லாமியர்களுக்கு புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வாழ்க்கையை படிக்க விருப்பமிருப்பதில்லை, இதனை ஒருவகையான பயம் என்றும் கூறலாம். இயேசுவின் போதனைகள் எங்கே தங்கள் இஸ்லாமியர்களை கவர்ந்துவிடுமோ என்ற பயத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் நற்செய்தி நூல்களை படிக்கவேண்டாம் என்று தடைபோட்டு வைத்துள்ளார்கள்.

இந்த சமயத்தில், "இயேசுவின் வார்த்தைகள்" என்று குர்‍ஆனில் அல்லாஹ் குறிப்பிடும் வசனங்களை மேற்கோள்களாக காட்டினேன். இப்போது, பீஜே அவர்களுக்கு மறுப்பாக கீழ்கண்ட கட்டுரைகளை அவர் முன்வைக்கிறேன். அதாவது இயேசுவின் வார்த்தைகளை பல தலைப்புகள் இட்டு மேற்கோள்களாக காட்டியுள்ளேன்.

1) தூது - The Message

2) இயேசு நமக்கு எவைகளை போதித்தார்?

3) இயேசு தம்மைப் பற்றி என்ன கூறினார்?

4) ஒரு சவால்

முடிவுரை : திரு பீஜே அவர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், உங்கள் வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் வஞ்சகம் ஒவ்வொன்றாக வெளியே வர ஆரம்பித்துள்ளது. எனவே, ஒவ்வொரு வார்த்தையையும் சிந்தித்து எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்.

உங்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்புக்கள் தொடரும் என்பதை தாழ்மையுடன் தெரித்துக்கொள்கிறேன்

இப்படிக்கு

தமிழ் கிறிஸ்தவன்.
 
 

Answering PJ: ஒரு சவால்

பிஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு எழுதிய மூன்றாம் மறுப்பின் துணைக் கட்டுரையாக இந்த தற்போதைய கட்டுரையை பதிக்கிறேன்.

இந்த தற்போதைய கட்டுரையை படிப்பதற்கு முன்பாக, கீழ்கண்ட மறுப்பை படியுங்கள்:

Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு – 3 (இயேசு எழுதியதையும், இயேசுவிற்கு கர்த்தரிடத்திலிருந்து வந்ததும் குர்‍ஆனிடமோ, பீஜே அவர்களிடமோ உண்டா?)
ஒரு சவால்

The Challenge

ஈஸா நபியின் செய்தி மனித சமுதாயத்திற்கு எக்காலத்துக்கும் ஒரு சவாலாக உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவரின் செய்தி ஒரு தனிப்பட்ட சவாலாக உள்ளது. ஒரு தூதுவரிடமிருந்து அவரது தூதை நாம் வேறு படுத்தமுடியாது. எனவே, இந்த முக்கியமான கேள்வியை நாம் கேட்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்: இந்த தூதுவரையும், அவரது தூதையும் நாம் "இறைவனிடமிருந்து வந்த வெளிப்பாடு" என்று ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோமா?

ஆனால், இது அனேக யூதர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பெயரளவு கிறிஸ்தவர்களுக்கு ஒரு பிரச்சனையாகவே உள்ளது. இருந்தபோதிலும், "உண்மை" என்பது சொந்த கருத்துக்கள், பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் போன்றவற்றிக்கு சம்மந்தப்பட்டது அல்ல. உதாரணத்திற்கு கூறவேண்டுமென்றால், ஒரு சாரார் "இயேசு சிலுவையில் அறையப்பட்டார், மற்றும் நம்முடைய பாவங்களுக்காக அவர் கிருபாதார பலியாக மாறினார்" என்று கூறுகின்றனர், இன்னொரு சாரார், இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, கொல்லப்படவில்லை என்று கூறுகின்றனர், ஆனால், இந்த இரு சாராரின் கூற்றுகள் இரண்டும் உண்மையாக இருக்காது. அதாவது, ஒரு கூற்று உண்மையாக இருக்கும்பட்சத்தில், அடுத்த கூற்று தவறானதாக இருக்கும்.

மேற்கண்ட கேள்விக்கான சரியான பதில் நம்முடைய வாழ்வில் நாம் காணும் பிரச்சனைகளை கவனித்தால் புரிந்துவிடும். இது நம்முடைய நித்திய இலக்கை பாதிக்கிறது, ஆகையால், இவ்வுலகில் நாம் எப்படி வாழுகிறோம் என்பதைப் பொருத்து இது அமையும். நாம் வாழும் சமுதாயம் மற்றும் மத கலாச்சாரம் சொல்வதை அப்படியே கண்மூடித்தனமாக நாம் ஏற்கக்கூடாது என்று நமக்கு அறிவுரை தரப்படுகிறது. நம்முடைய ஆசா பாசங்கள், எண்ணக்கள் மற்றும் மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களை அப்படியே நாம் ஏற்கவேண்டியதில்லை.

சான்று

நாம் மேலே கண்ட விவரங்களை சரி பார்த்து அலசுவதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா? மனிதர்களாகிய நாம் உண்மையை கண்டுபிடித்து அதை பின்பற்றவேண்டும் என்று இறைவன் விரும்பினால், அவரைப் போலவே நாமும் "எது உண்மையான வெளிப்பாடு", "எது பொய்யான வெளிப்பாடு" என்பதை பிரித்து அறிவதற்கான வழிமுறைகளையும் இறைவன் கொடுக்கவேண்டும் என்று எதிர்ப்பார்ப்போம்.

நாம் ஒரு சரியான முடிவை எடுக்கவேண்டுமானால், நமக்கு சில அடிப்படை அறிவு தேவைப்படுகிறது, மற்றும் அந்த அடிப்படை அறிவை நேர்மையுடன் ஞானத்துடன் நாம் பயன்படுத்தினால், சரியான முடிவு எடுப்பது சாத்தியமாகும். எது உண்மை எது பொய் என்பதை கண்டறிய "ஏற்கனவே மூளைச்சலவை செய்யப்பட்ட கருத்துக்களை நம் மனதில் கொண்டு இருப்பது" என்பது சரியான கருவியாக இருக்காது.

தேவன் தன்னுடைய உண்மையை மக்கள் கண்டறிய வழி வகுத்து இருப்பதினால், அவருக்கு நான் நன்றியை செலுத்துகிறேன். சத்தியத்தை அறிய மனது உடையவர்கள் அதனை கண்டறியமுடியும். " உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். " (எரேமியா 29:13). இது தான் தேவன் நமக்கு கொடுத்து இருக்கின்ற வாக்குறுதி, இதனை அறைமனதுடன் அல்லாமல் நாம் முழுமனதுடன் தேடினால், நாம் கண்டுக்கொள்ளலாம்.

தேவன் மோசேயுடன் பேசும் போதும் (உபாகமம் 18:21,22), மற்றும் இதர தீர்க்கதரிசிகளுடன் பேசும் போதும் (ஏசாயா 41:21, ஆமோஸ் 3:7, எரேமியா 28:9 ...) எந்த ஒரு மனிதனாலும் செய்யமுடியாத ஒரு ஆதாரத்தை/சான்றை கொடுத்தார்: அதாவது நீண்ட காலத்திற்கு பிறகு நடக்கவிருக்கும் காரியங்களைக் குறித்து முன்னுறைத்தார் மற்றும் அவைகள் எப்படி நிறைவேறும் என்றும் கூறினார். எதிர்கால‌த்தில் யூகிக்க‌முடியாத‌ ச‌ரித்திர‌ நிக‌ழ்வுக‌ளை துள்ளியமாக ஒரு புத்த‌க‌த்தில் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து, அந்த‌ புத்த‌க‌ம் பைபிள் ஆகும். அந்த‌ நிக‌ழ்வுக‌ள் நிகழ்ந்த போது பைபிளின் தெய்வீக‌த்த‌ன்மை நிருபிக்க‌ப்ப‌ட்ட‌து. மோசே, தாவீது, ஏசாயா ம‌ற்றும் இத‌ர‌ தீர்க்க‌த‌ரிசிகளும், இயேசுக் கிறிஸ்துவின் வ‌ருகை, வாழ்வு போன்ற‌வைக‌ள் ப‌ற்றி 750, 1000 ஆண்டுக‌ள் ம‌ற்றும் அவைக‌ளுக்கு அதிக‌மான‌ ஆண்டுக‌ளுக்கு முன்பே மிக‌வும் விவ‌ர‌மாக‌ முன்னுறைத்துள்ளனர். தேவ‌ன் ஒரு அடையாள‌த்தை கொடுத்தார். அந்த‌ அடையாள‌ம் என்ன‌ என்ப‌தை தெரிந்துக்கொள்வ‌தும், தெரிந்துக்கொள்ளாம‌ல் இருப்ப‌தும் ந‌ம்முடைய‌ விருப்ப‌ம்.

அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.

துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார். அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று. என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.

நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள். என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.

இயேசுவில் நிறைவேறிய அனேக தீர்க்கதரிசனங்களில், மேற்கண்டவைகள் ஒரு சில வசனங்களே. பைபிளின் நம்பகத்தன்மையை நிருபிப்பதற்கு இந்த தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல் சான்றாகும். இவைகளில் ஒரு இறைச்செய்தி உள்ளது. இவைகளில் தேவன் தம்மையும், தம்முடைய அன்பையும் நமக்காக வெளிப்படுத்தியுள்ளார். இவைகளுக்கு நாம் ஏதோ ஒருவகையில் பதில் சொல்லவேண்டும். உங்களின் பதில் இவ்வசனங்களுக்கு எதிராகவோ அல்லது அங்கீகரிக்கும் வகையிலோ இருக்கலாம். ஆனால், அன்புடன் நாம் அவர் பக்கம் திரும்ப‌ இயேசுவின் செய்தி உதவும்.

இயேசு கூறியதை நினைவில் வைக்கவும்:

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். (வெளிப்படுத்தின விசேஷம் 3:20)

அவர் உங்கள் உள்ளத்தில் வர நீங்கள் அனுமதிப்பீர்களா?

ஆங்கில மூலம்: The Challenge

"ஒரு தூது" இதர கட்டுரைகள்

 
 

Answering PJ: இயேசு தம்மைப் பற்றி என்ன கூறினார்

பிஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு எழுதிய மூன்றாம் மறுப்பின் துணைக் கட்டுரையாக இந்த தற்போதைய கட்டுரையை பதிக்கிறேன்.
இந்த தற்போதைய கட்டுரையை படிப்பதற்கு முன்பாக, கீழ்கண்ட மறுப்பை படியுங்கள்:

Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு – 3 (இயேசு எழுதியதையும், இயேசுவிற்கு கர்த்தரிடத்திலிருந்து வந்ததும் குர்‍ஆனிடமோ, பீஜே அவர்களிடமோ உண்டா?)
இயேசு தம்மைப் பற்றி என்ன கூறினார்

What Jesus Said About Himself
தம்முடைய செய்தி தேவனிடமிருந்து வந்தது என்றும் மற்றும் அதன் நம்பகத்தன்மையை பரிசோதித்து பார்க்கமுடியும் என்றும் இயேசு கூறினார்:
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். (யோவான் 7:16-17)
இயேசு தம்முடைய செய்தி நித்திய நித்தியமானது என்றும், அது மாறாதது என்றும் கூறினார்:
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. (மத்தேயு 24:35)
இயேசு பரலோகத்திலிருந்து (மேலிருந்து) இந்த உலகில் வந்தார் என்று கூறினார்:
அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். (யோவான் 18:37)
இயேசு பரலோகத்திலிருந்து, தேவனிடமிருந்து இந்த உலகில் வந்தார் என்று கூறினார்:
பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3:13)
தேவன் எப்போதும் இடைவிடாமல் தம்மோடு இருப்பதாக கூறினார்:
என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார். (யோவான் 8:29)
பரலோக பிதாவின் சித்தம் செய்து, அவரை கனப்படுத்துவதே தம்முடைய ஊழியமாக உள்ளது, இது தான் எப்போதும் தம்முடைய மனதில் இருக்கும் ஆர்வம் என்று கூறினார்.
இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. (யோவான் 4:34)
நாம் ஏன் இயேசுவை விசுவாசிக்கவேண்டும் (நம்பவேண்டும்)?
என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. (யோவான் 8:46)
இறைவனின் எல்லா தீர்க்கதரிசிகளும் பாவமற்றவர்கள் என்று இஸ்லாமியர்கள் சிலவேளைகளில் கூறுவார்கள். ஆனால், இது உண்மையல்ல.
  • இயேசு மட்டுமே பாவமில்லாத பரிசுத்தராக இருக்கிறார் (குர்‍ஆன் 19:19).
  • நாம் ஆதாமின் பாவம் பற்றி குர்‍ஆனில் படிக்கிறோம் (குர்‍ஆன் 7:22,23),
  • மோசேயின் பாவம் பற்றி படிக்கிறோம் (குர்‍ஆன் 28:15,16),
  • ஆபிரகாமின் பாவம் பற்றி படிக்கிறோம் (குர்‍ஆன் 26:82),
  • யோனாவின் பாவம் பற்றி படிக்கிறோம் (குர்‍ஆன் 37:141-144),
  • தாவீது செய்த பாவம் பற்றி படிக்கிறோம் (குர்‍ஆன் 38:24,25),
  • கடைசியாக முஹம்மதுவின் பாவங்கள் பற்றியும் அதே குர்‍ஆனில் படிக்கிறோம் (குர்‍ஆன் 40:55, 47:19, 48:1,2).

நாம் இறைவன் சொல்வதின் படி செய்யவேண்டுமென்றால், முதலாவது இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளவேண்டும்
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். (யோவான் 6:29)
நீங்கள் இயேசுவை புறக்கணித்தால், இறைவனை புறக்கணிப்பதற்கு சமம்.
"...என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார்." (லூக்கா 10:16)
இயேசு ஒரு நற்செய்தியை மட்டும் கொண்டுவரவில்லை, அவர் ஒரு "வேலையை" செய்துமுடிக்க வந்தார்.
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். (லூக்கா 19:10)
பாவிகள் மனந்திரும்பவேண்டும் என்று அவர்களை அழைக்க வந்தார். அவர்களை ந‌ரகத்திலிருந்து காப்பாற்ற இயேசு வந்தார். இறைவனின் இடத்திற்கு நான் செல்வதற்கு எனக்கு தேவையான நீதி, பரிசுத்தம் எனக்கு உள்ளது என்று நினைக்கும் மனிதன், தனக்கு இயேசு தேவையில்லை என்று நினைக்கிறான்.
இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். (மாற்கு 2:17)
சோர்ந்துபோய், பாடுபடும் மனிதர்களுக்கு இயேசு ஒரு சகோதரனாவார். கலங்கும் இதயத்திற்கு அமைதியை கொடுக்க இயேசு விரும்புகிறார்.
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். (மத்தேயு 11:28-30)
நாம் உயிர் வாழ தண்ணீர் அவசியம். ஆன்மீக முறையில் சொல்லவேண்டுமென்றால், இயேசு "ஜீவத் தண்ணீரைத் தருகிறார்", இதனால் நம்முடைய தேவை பூர்த்தியாவதோடு மட்டுமல்லாமல், நம்மிலிருந்து ஜீவ ஊற்று புறப்படும், அதனை மற்றவர்கள் பருகி பயனடையவும் அவர் உதவி செய்கிறார்.
". . .ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்". (யோவான் 7:37-38)

நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார். (யோவான் 4:14)
நாம் தேவனை நேசிக்கிறோம் என்பதை இயேசு மீது நம்பிக்கை வைப்பதின் மூலமாக நிருபித்துக் காட்டவேண்டும்.
உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன். நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள். (யோவான் 5:42-43)
(இயேசு வாழ்ந்த காலகட்டத்தின் வழக்கப்படி, தம்மைப் பற்றி கூறும் போது படர்க்கையில் குறிப்பிடுகிறார்). இங்கு இயேசு தம்மைப் பற்றி மிகவும் முக்கியமாக மற்றும் சிறப்பான விவரத்தை கூறுகிறார்
அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிற படியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.

பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார். (யோவான் 3:18-21)

மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். (யோவான் 8:12)

அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான். என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன். (யோவான் 12:44-46)
இயேசு அனேக முறை உவமைகளாக பேசினார். இந்த வசனங்களில் அவர் தன்னை ஒரு "வாசல்" என்றும், தானே "ஒரு மேய்ப்பன்" என்றும் கூறுகிறார், மற்றும் தன்னை பின்பற்றுபவர்கள் "ஆடுகள்" என்றும் கூறுகிறார்
நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோவான் 10:9-10)

நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். (யோவான் 10:11)

நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். (யோவான் 10:14-15)
தம்முடைய சுயசித்தம் மற்றும் அதிகாரத்தின் படி தாம் தம்முடைய உயிரை கொடுக்கிறார் என்பதை இங்கு தெளிவாக இயேசு கூறுகிறார்.
நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். (யோவான் 10:17)
இயேசு "முழு ஜீவனை" அல்லது "பரிபூரண ஜீவனை" தருகிறார், இது இந்த உலகத்திலும், வரப்போகிற உலகிலும் நமக்கு நம்பிக்கையை தருகிறது.
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை. (யோவான் 10:27-28)
ஒரு பெண்ணின் சகோதரன் மரித்து கல்லரையில் வைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டது, அவனை இயேசு உயிரோடு எழுப்பினார். இந்த நேரத்தில் இயேசு கூறியவைகள்:
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (யோவான் 10:25-26)
இயேசு தாம் மட்டுமே நித்திய ஜீவனையும், இரட்சிப்பையும் தரமுடியும் என்று ஆணித்தரமாக கூறுகிறார்.
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:6)
சில ஆன்மீக காரியங்களை விவரிப்பதற்கு இயேசு உவமைகளை பயன்படுத்தினார். இந்த உவமைகளில் ஒரு உவமை மிகவும் ஆழமானது. இந்த உவமையில் இயேசு, தான் எங்கே இருந்து வந்தார் என்பதையும், தாம் வந்ததற்கான காரணம் என்னவென்பதையும் கூறுகிறார்:
வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார். (யோவான் 6:33)

இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். (யோவான் 6:35)

பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. (யோவான் 6:37-39)

ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. (யோவான் 6:63)
இயேசு இங்கு தாம் சொல்லவந்த விஷயத்தை நச்சென்று ஒளிவு மறைவின்றி கூறுகிறார்:
இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். (யோவான் 8:42)

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல. ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார். (யோவான் 6:23-24)
தம்முடைய மரணத்திற்கு முன்பு, தம்முடைய நெருங்கிய சீடர்களிடம் இயேசு கீழ்கண்டவிதமாக கூறுகிறார்:
நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார். (யோவான் 16:28)
தன்னை பின்பற்றுபவர்கள் தன்னுடைய தெய்வீகத்தின் மீது நம்பிக்கை வைக்கும் படி இயேசு கூறுகிறார், மற்றும் அதற்கான ஆதாரத்தையும் அவர் காட்டுகிறார்.
அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?

நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். (யோவான் 14:9-11)
ஒரு குறிப்பிட்ட ஜெபத்தில் இயேசு தம்முடைய பிதாவிடம் தமக்கு இருக்கும் உரிமையை கூறுகிறார், மற்றும் தாம் நித்திய நித்திய காலமாக இருப்பதாக இயேசு கூறுகிறார்.
பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். (யோவான் 17:5)
இவ்வுலகில் இயேசுவிற்கு ஒரு மனித தாய் இருந்ததினால், அவரும் ஒரு மனிதனாகவே காணப்பட்டார். நமக்கு எப்படியோ அப்படியே அவருக்கும், பசி, தாகம், சோர்வு, ஜெபிக்க வேண்டும் என்ற ஆர்வம், வலி வேதனை என்று எல்லாமே இருந்தது. இயேசுவின் பிறப்பில் மனித தந்தையின் அவசியமில்லாததால், அவர் ஒரு தெய்வீகமானவராகவும், சுகப்படுத்துகிறவராகவும், மரித்தவர்களை உயிரோடு எழுப்புகிறவராகவும் இருந்தார், மற்றும் தண்ணீரின் மீது நடப்பவராகவும், பாவங்களை மன்னிக்கின்றவராகவும், காற்றையும் கடலையும் அதட்டி அமைதிபடுத்துகின்றவராகவும், இன்னும் அனேக அற்புதங்கள் செய்கின்றவராகவும் இருந்தார். ஆகவே, இப்படிப்பட்டவர் நட்புறவு கொள்கிறேன் என்று எடுத்த எடுப்பிலேயே நம்மிடம் சொன்னால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.
அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார். (லூக்கா 22:70)
இவர் மூலமாக மட்டுமே நமக்கு பயத்திலிருந்து விடுதலை கிடைக்கும். மட்டுமல்ல, மரண பயத்திலிருந்தும், சாத்தானின் ஆதிக்கத்திலிருந்தும், பாவங்களிலிருந்தும் நமக்கு விடுதலை இவர் மூலமாக மட்டுமே கிடைக்கும்.
ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். (யோவான் 8:36)
ஒருமுறை தம்மைப் பற்றி இயேசு மிகவும் ஆச்சரிப்படும்விதத்தில் கூறினார். அவர் என்ன கூறுகிறார் என்று நம்மால் புரிந்துக்கொள்ள முடியுமா? ஆனால், அன்று அவருடைய கூற்றை கேட்டவர்களுக்கு நிச்சயமாக அவர் சொன்னது புரிந்தது.
அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 8:58)
இங்கு குறிப்பிடவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், எபிரேய மொழியில் "நான் (I am)" என்பது "யேகோவா" விற்கு கொடுக்கப்பட்ட பெயராகும். இது பைபிளின் தேவன் தனக்குள்ள பெயர் என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி இயேசு தன்னை "நான் (I am)" என்று சொன்னதினால், யூதர்கள் அவரை கொலை செய்ய முயற்சி எடுத்தனர். இந்த இடத்தில் இன்னும் ஒரு முக்கியமான விளக்கத்தைக் காண்கிறோம். தேவன் நித்தியமானவராக இருப்பதினால், அவருக்கு "இருந்தார் (was)", "இருப்பார் (will be)" என்றுச் சொல்ல முடியாது. அதற்கு பதிலாக அவர் "இருக்கிறார் (is)" என்றுச் சொல்லவேண்டும். இயேசு முக்கியமாக என்ன கூறினார் என்று பார்த்தால், "ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பாக நான் இருக்கிறேன், அப்படியானால், நான் எப்போதும் வாழ்கின்றவனாக இருக்கிறேன்" என்று அர்த்தம்.

இயேசு மட்டும் பரலோகில் தனிமையாக இருக்க விரும்பவில்லை, உங்களையும் என்னையும் அவர் நேசிக்கிறார். அவரது அன்பிற்கு நாம் என்ன பதில் கொடுக்கப்போகிறோம்? நாம் அவரது அன்பிற்கு பதில் தரவேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
"பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்;. . ." (யோவான் 15:9)
இயேசு நம்மீது வைத்த அன்பு வெறும் வெத்து வார்த்தைகள் அல்ல, அந்த தெய்வீக அன்பை அவர் நிருபித்தும் உள்ளார்.
ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. (யோவான் 15:13)
அனேக முறை இயேசு தம்முடைய மரணம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார், மற்றும் தம்முடைய மரணத்தின் நோக்கம் என்ன என்பதை அவர் எடுத்துரைத்தார்.
அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மத்தேயு 20:28)
தற்காலத்தில் நாம் "பிணைப்பணம்" என்பதை அபூர்வமாக பயன்படுத்துகிறோம். சில நேரங்களில் நாம் செய்திகளில் படிப்பது போல, கடத்தல்காரர்கள் அரசாங்கத்திடம் அல்லது பணக்காரர்களிடம் "பிணைப்பணத்தை" கேட்கிறார்கள். ஒரு பிணைக் கைதியை விடுவிக்க கொடுக்கப்படும் பணம் தான் பிணைப்பணம் எனப்படுகிறது. பாவத்தின் பிடியில் சிக்கிய நம்மை விடுதலைச் செய்ய இயேசு ஒரு விலையை செலுத்தியுள்ளார். இயேசு தம்முடைய நெருங்கிய சீடர்களிடம் தாம் மரிக்கப்போவதாக நான்கு முறை கூறினார். ஆனால், ஆரம்பத்தில் அவர் சொன்னதை சீடர்கள் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை.
இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்.

அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். (மாற்கு 10:33,34)
தம்முடைய மரணத்திற்கு முன்பாக, இயேசு ஜெபத்தில் தரிந்திருந்தார், அந்த சிலுவையில் அறையப்படுத்தலின் வலியை அவர் முன்னதாகவே தாங்கினார்.
அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். (மத்தேயு 26:42)
இயேசுவை கைது செய்தவர்கள், இறை நம்பிக்கையற்ற கூட்டமல்ல. இவர்கள் மார்க்க விஷயங்களில் மிகவும் ஆழமாக கற்றுத்தேர்ந்தவர்கள், அக்காலத்தின் மார்க்க அறிஞர்களாக இருந்தவர்கள், தங்களுடைய மார்க்க அதிகாரம் எங்கே பறிபோய்விடுமோ என்று பயந்து அவர்கள் இயேசுவை கைது செய்தார்கள். இயேசுவை கைது செய்யும் நேரத்தில், இயேசுவின் ஒரு சீடன், கத்தியை எடுத்து அதன் மூலம் சண்டையிடவும், எதிர்க்கவும் முற்பட்டான். ஆனால், இயேசு அவனிடம் இவ்விதமாக கூறினார்:
நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். (மத்தேயு 26:53,54)
"தீர்க்கதரிசனங்கள் நிறைவேற வேண்டியது" என்பதை புரிந்துக் கொள்ளவேண்டுமென்றால், நாம் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள், இயேசுவின் வாழ்வில் நிகழவேண்டிய பல நிகழ்ச்சிகள் பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக முன்னுரைத்தவைகளை நாம் தெரிந்துக்கொள்ளவேண்டும். இயேசுவின் தெய்வீகத்தன்மை, அவர் நித்திய நித்தியமாக இருப்பவர் என்றும், அவரது அற்புதமான கன்னிப் பிறப்பு பற்றியும், அவரது சிலுவை பாடுகள், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றியும் தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தனர். இயேசுவின் வாழ்வில் அந்நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவேறியது.

இன்று அனேக மக்களுக்கு இயேசுவின் செய்திகள் கலங்கப்படுத்துவதுபோல, அக்காலத்தில் யூதர்களையும் அது கலங்கப்படுத்தியது.
அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.

யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். (யோவான் 10:31-33)
தம்முடைய வாழ்வின் மிகவும் பயங்கரமான நேரத்திலும் இயேசு தமக்காக அல்ல, பிறருக்காக சிந்தித்தார்:
கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். (லூக்கா 23:33,34)
இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, தம்முடைய ஒரு சில சீடர்கள் தங்கள் வீட்டிற்குச் சென்றுக்கொண்டு இருக்கும் போது, அவர்களுடன் இவரும் சென்றார். ஆனால், அவர்களோ ஆரம்பத்தில் அவரை அடையாளம் கண்டுக்கொள்ளவில்லை. இயேசு மரித்துவிட்டார் என்பதினால் அவர்கள் அதிக துக்கத்தில் இருந்தார்கள். அவர்களிடம் இயேசு இவ்விதமாக கூறினார்:
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். (லூக்கா 24:25-27)
பழைய ஏற்பாட்டில் தம்மைப் பற்றி கூறிய தீர்க்கதரிசனங்களைப் பற்றி இயேசு குறிப்பிடுகிறார்.

ஒருசிலர் இப்படியாக யூகிக்கிறார்கள், அதாவது இயேசு சிலுவையில் மரிக்கவில்லை, அவர் சுயநினைவு இழந்து இருக்கும் நிலையில், அவரை சிலுவையிலிருந்து இறக்கி, மறுபடியும் அவரது காயங்களை சுகப்படுத்தினார்கள் என்று கற்பனையாக கூறுகிறார்கள். இது நிச்சயமாக முடியாத செயலாகும். ஏனென்றால், போர்ச்சேவகர்கள் அவர் மரித்துவிட்டாரா என்பதை சோதித்துப் பார்த்தார்கள், அவரது விலாவில் குத்தினார்கள், அதன்பிறகு தான் இறக்கினார்கள் (யோவான் 19:33). இதற்கு இயேசு சொல்லும் பதில் என்ன?
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளிப்படுத்தின விசேஷம் 1:17,18)
ஒரு சிலர் கூறுவது போல,இயேசு யூதர்களுக்காக மட்டும் வரவில்லை. அவர் இதைப் பற்றி கூறும் போது:
எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. (லூக்கா 24:46,47)
இயேசு உயிர்த்தெழுந்த பிறகு 39 நாட்கள் கழித்து, அவரது சீடர்களின் கண்கள் காண அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். தம்முடைய சீடர்களிடம் அவர் பேசிய கடைசி வார்த்தைகள் இவைகள்:
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (மத்தேயு 28:18-20)
இதற்காகத் தான் கிறிஸ்தவ விசுவாசிகள் இயேசுவையும், அவரது நற்செய்தியையும் உலகம் அறிய விரும்புகின்றனர். உலகத்தின் முடிவு வரும் போது, இயேசு ஒரு நியாயாதிபதியாக வருவார்.
பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார். அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; (யோவான் 5:21-28)
வேறு எதுவும் நம்மை சிந்திக்க வைக்கவில்லையானாலும், இது நம்மை சிந்திக்க வைக்கும். பல்வேறு வகையான பயத்தினால் அவர் தரும் பரிசை பெற நாம் தாமதிப்போமானால், அது வெறும் மூடத்தனமாகும்.

தம்மீது நம்பிக்கை வைக்கும்படி இயேசு நம்மை உற்சாகப்படுத்துகிறார் மற்றும் நமக்காக அவர் என்ன செய்து இருக்கிறார் என்பதை கண்டாவது நம்பிக்கை வைக்கும் படி உற்சாகப்படுத்துகிறார்.
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். (யோவான் 14:1-3)
இயேசு மறுபடியும் வருவார். இந்த முறை அவர் இரட்சிப்பதற்காக அல்ல, அதற்கு பதிலாக தம்முடைய விலை மதிக்கமுடியாத பரிசாகிய மன்னிப்பை ஏற்றுக்கொள்ளாதவர்களை நியாயந்தீர்க்க வருவார். ஆகையால், அவர் வருவதற்கு முன்பாக நாம் தயாராக இருக்கவேண்டும்:
அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார். (லூக்கா 12:40)
இது எப்படி நடக்கும் என்பதை முன்னமே நமக்கு அவர் கூறியுள்ளார்:
அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். (மாற்கு 14:62)

மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். (மாத்தேயு 24:27)
இயேசு மறுபடியும் இவ்வுலகிற்கு வரப்போகிறார், உலகத்தின் எல்லா நாடுகளின் மக்களை நியாயந்தீர்க்க வரப்போகிறார். ஆனால், அந்த நியாயத்தீர்ப்புக்கு முன்பு நாம் மரிக்க நேரிடலாம், ஒருவேளை நாம் மரித்தால், அந்த நேரத்தில் அவர் நம்மை சந்திப்பார்.

இயேசு தம்மைப் பற்றி கூறும்போது ஏன் "தேவகுமாரன்" என்றுச் சொல்லாமல், அதற்கு பதிலாக "மனுஷ குமாரன்" என்றுச் சொன்னார்? "மனுஷ குமாரன்" என்ற பட்டப்பெயர் கி.மு. 555ல் பழைய ஏற்பாட்டில் முதன் முதலாக பயன்படுத்தப்பட்டது.
இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும். (தானியேல் 7:13-14)
இந்த வசனத்தின் அடிப்படையில் நாம் பார்த்தோமானால், "மனுஷ குமாரன்" மற்றும் "தேவ குமாரன்" போன்றவைகளுக்கு இடையே எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை காணலாம்.

இயேசுவிடமிருந்து மன்னிப்பைப் பெறும் நேரம் இன்னும் முடிந்துவிடவில்லை. இயேசு இன்று கூட காத்துக்கொண்டு இருக்கிறார். நமக்கு கீழ்கண்ட வரவேற்ப்பை கொடுத்துவிட்டு அவர் சென்றுள்ளார்கள்.
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். (வெளிப்படுத்தின விசேஷம் 3:20)
ஆங்கில மூலம்: What Jesus Said About Himself

Answering PJ: இயேசு நமக்கு எவைகளை போதித்தார்

பிஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு எழுதிய மூன்றாம் மறுப்பின் துணைக் கட்டுரையாக இந்த தற்போதைய கட்டுரையை பதிக்கிறேன்.


இந்த தற்போதைய கட்டுரையை படிப்பதற்கு முன்பாக, கீழ்கண்ட மறுப்பை படியுங்கள்:

Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு – 3 (இயேசு எழுதியதையும், இயேசுவிற்கு கர்த்தரிடத்திலிருந்து வந்ததும் குர்‍ஆனிடமோ, பீஜே அவர்களிடமோ உண்டா?)
Answering PJ: இயேசு நமக்கு எவைகளை போதித்தார்

இயேசு மிகவும் ஆழமான இறையியல் அல்லது தீர்க்கமான தத்துவங்களை போதிக்கவில்லை. மக்கள் புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் மிகவும் எளிதான முறையில் பேசினார்.

அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்:

கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.

ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார். (மத்தேயு 13:3-9, 18-23)

கேட்பவர்கள் விருப்பமில்லாமல் இருந்து பதில் தராமல் இருப்பதை தேவன் விமர்சித்தார். ஆகையால், இயேசு கீழ்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார்:

ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.

இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே. (மத்தேயு 13:14-15)

ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; . . . (லூக்கா 8:18)

மேலும் ஒரு உவமையில், இன்னொரு முக்கியமான சத்தியத்தை இயேசு விவரித்தார்:

அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்:

ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.

அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார். (லூக்கா 13:6-9)

இன்னொரு உவமையில் இயேசு கீழ்கண்டவாறு விவரித்தார்:

நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.

என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். (யோவான் 15:1-8)

நம்முடைய சொந்த நீதியினாலும், நேர்மையினாலும், தேவன் விரும்பும் கனிகளை நம்மால் தரமுடியும் என்று நாம் நேர்மையாக சொல்லமுடியாது. பைபிளில் இன்னொரு இடத்தில், அந்த கனி என்பது, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் என்பவைகளாகும் என்று கூறுகிறது (கலாத்தியர் 5:23). இப்படிப்பட்ட கனிகளை கொடுக்க விருப்பமில்லை என்று யார் கூறுவான்?

இதே தலைப்பில் இன்னொரு உவமையை நாம் காணலாம்.

பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான். சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி, அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.

அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி; எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.

என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். (லூக்கா 15:11-24)

நாம் மேற்கண்ட உவமையில் கண்ட இளைய குமாரனைப் போல நம்முடைய தற்போதைய நிலையை நாம் உணரவேண்டும். இதில் அவன் தான் செய்த தவறுகளுக்கு ஒரு பிராயச்சித்தம் தருவதற்கு முயற்சி எடுக்கவில்லை, அவனால் அந்த பிராயச்சித்தம் செய்யவும் முடியாது. மட்டுமல்ல, அந்த தகப்பனும் அதை தன் மகனிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை. அந்த குமாரன் தன் வீட்டிற்குச் செல்ல விரும்பினான், அப்படியே சென்றான். தன் மகனுக்கு அவன் உடுத்திய உயர்ந்த ஆடைகள் என்பது, அந்த தகப்பன் தன் மகனின் தீய செயல்களை மூடுவதைக் காண்பிக்கிறது. அந்த தகப்பன் தன் மகனின் விரல்களில் போடுவித்த மோதிரம் என்பது, அவனை மறுபடியும் தன் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக ஏற்றுக்கொண்டதைக் காட்டுகிறது. அந்த தகப்பன் தன் மகனின் கால்களில் அணிவித்த காலணிகள் மறுபடியும் தன் மகன் ஒரு சுதந்திரமான மனிதன் (அவன் அடிமை அல்ல) என்பதை காண்பிக்கிறது, அக்காலத்தில் பொதுவாக அடிமைகள் காலணிகள் இன்றி நடப்பார்கள். இந்த கதையில் சொல்லப்பட்ட கோட்பாடுகள், இன்னொரு உவமையின் மூலமாகவும் விளக்கப்பட்டது.

அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது. கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார். (லூக்கா 7:41-42)

மன்னிப்பு என்பது எந்த ஒரு மனிதன் தொடர்ந்து அதைத் தேடி, அதை கேட்கின்றானோ அவனுக்கு இறைவனால் தரப்படும் ஒரு பரிசாகும். தேவனுடைய இந்த அன்பை அனேக எடுத்துக்காட்டுகள் மூலமாக பைபிளில் அடிக்கடி காண்பிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:

உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ? கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,

வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?

அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (லூக்கா 15:3-7)

மேற்கண்ட விதமாக நடக்கும் இறைவனை நாம் அனேகமாக பார்த்திருக்கமாட்டோம். அதாவது, நாம் செய்யும் தவறுகளுக்கான செலவை அவர் திரும்ப செலுத்துகிறார் என்பதாகும். ஆனால், அவருக்கு தேவையானது நம்முடைய "இதயமாகும்". மேற்கண்ட உவமையில் பாருங்கள், கடன்பட்ட அந்த இரண்டு நபர்களாலும் தங்கள் கடனை திரும்பச் செலுத்த திராணியில்லை. பாவத்தை ஒரு முறை செய்துவிட்டால், அதை திரும்பப் பெறமுடியாது. பாவம் என்பது தேவனுடைய பரிசுத்தம் நம்மை அடைய முடியாமல் செய்கின்ற மிகப்பெரிய பிளவாக இருக்கிறது. பாவம் என்பது சரி செய்யப்பட முடியாத மிகப்பெரிய பிளவாக உள்ளது. ஆகையால், தேவன் நமக்காக எதனை செய்துள்ளாரோ அதன் மீதே நாம் சார்ந்து இருக்கவேண்டியதாக உள்ளது. கடைசியாக இயேசு கூறிய இன்னொரு உவமையை நாம் படிப்போம், இதைப் பற்றி அவர் என்ன சொல்கிறார் என்பதை காண்போம்.

இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். (லூக்கா 18:10-14)

இயேசு வாழ்ந்த காலத்தில் பரிசேயர்கள் என்பவர்கள், மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த மரியாதைக்குரிய மத தலைவர்களாக இருந்தனர். பரிசேயன் என்பவன், தேவனுடைய ஒரு கட்டளையையும் மீறக்கூடாமல் இருப்பதற்காக, அதை மிகவும் கட்டுப்பாட்டுடனும், தீவிர பக்தியுடனும் கடைபிடிக்க முயற்சி எடுப்பவனாவான். ஆனால், தன் சுயத்தை பார்த்தால், தன்னுடைய இந்த மேற்கண்ட முயற்சியை, தன் உபவாசத்தை, தன் தானதர்மத்தை மெச்சிக்கொள்கின்றவனாக இருக்கிறான். இப்படிப்பட்ட நற்காரியங்களை செய்வதினால் தேவன் நிச்சயமாக தன்னை ஏற்றுக்கொள்வார் என்று எண்ணிக்கொண்டு இருப்பான்.

ஆனால், இயேசு கீழ்கண்ட விதமாக விவரித்தார்:

அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். (லூக்கா 17:10)

நாம் நன்மை செய்வதும், சரியானவற்றை செய்வதும் நமக்கு ஒரு கிரீடத்தை கொடுத்துவிடாது. ஏனென்றால், நன்மை செய்வது நம்முடைய கடமையாகும் என்று இயேசு குறிப்பிட்டார். நன்மை செய்துவிட்டு, பெருமைப்பட்டுக்கொண்டால் அதனால் உபயோகமில்லை. தேவன் சொல்லிய கட்டளைகளே நமக்கு நியமங்கள். ஆகையால், நம்முடைய தோல்விகளுக்கான மன்னிப்பு நம்முடைய தேவனின் கிருபை மீது சார்ந்துள்ளது. கிருபை என்பது தகுதியில்லாத நமக்கு அவர் காட்டும் பரிவு ஆகும்.

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது. (லூக்கா 16:15)

ஒருமுறை இயேசுவிடம், மிகவும் முக்கியமான கட்டளை எதுவென்று கேட்கப்பட்டபோது, அவர் இவ்விதமாக பதில் அளித்தார்:

இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை.

இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். (மத்தேயு 22:37-40)

"கீழ்படிதல்" என்பதை நாம் கட்டாயத்தோடு செய்தால் அது மிகவும் பாரமாகிவிடும், ஆனால், அன்புடன் கட்டாயப்படுத்தப்படாமல் நாம் ஒருவருக்கு கீழ்படியும் போது, அது பாரமாக அல்ல, மிகவும் மென்மையாக மாறிவிடும்.

தேவனுக்கு பயந்து அவரை நேசிப்பது பற்றி இயேசு போதிக்கும் போது, மனிதர்கள் என்ன சொல்லுவார்களோ, அவர்கள் என்ன செய்வார்களோ என்று பயப்படவேண்டாம் என்று கற்றுக்கொடுத்தார்.

ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (மத்தேயு 10:28)

ஒருவரை நாம் மதிக்கிறோம் என்பது, அவர் சொல்வதை நாம் நம்பும் போதும், நாம் அன்புடன் முழு இருதயத்தோடு அவருக்கு சேவை செய்யும் போதும் வெளிப்படும்.

நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார். (யோவான் 16:27)

ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். (யோவான் 12:26)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் என்பது, இயேசு மீது நம்பிக்கை வைப்பது மீது ஆதாரப்பட்டுள்ளது. இவ்விரண்டிற்கும் வித்தியாசமில்லை.

அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான். என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன். (யோவான் 12:44-46)

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். (யோவான் 3:16-17)

குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார். (யோவான் 6:40)

அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார். (யோவான் 6:27)

நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிற்கும் ஒரு பின்விளைவு உண்டு. நாம் இயேசுவை பின்பற்ற எடுக்கும் முடிவிற்கும் சில சோதனைகள், விளைவுகள் உண்டு. இயேசுவை பின்பற்றுவதினால் நாம் கேலி பரியாசம் செய்யப்படுவோம் மற்றும் துன்புறுத்தப்படுவோம்.

என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். (மத்தேயு 10:22)

ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; ….. (யோவான் 15:20)

ஆனால், துன்பம் அனுபவிக்கும் நம்மை இயேசு தேற்றுகிறார்:

என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;

சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. (மத்தேயு 5:11-12)

உலகத்தில் எந்த மனிதனைக் காட்டிலும், பொருளைக் காட்டிலும் அதிகபடியாக நாம் அவரில் அன்பு செலுத்தி, அவரை கனப்படுத்த வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. (மத்தேயு 10:37)

நம் தேவன் நமக்கு தந்தையாக இருக்கிறார், நாம் அவரது பிள்ளைகளாக இருக்கிறோம். ஆகையால், நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துக்கொண்டு, அவரது வழியில் நடக்கவேண்டும். இயேசு கூறுகிறார்:

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். (யோவான் 13:34)

நம்மை நாம் பரிசோதித்துப் பார்த்துக்கொள்ள, இயேசு ஒரு வழிமுறையை கொடுத்துச் சென்றுள்ளார்.

என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். (யோவான் 14:21)

நாம் அவருக்கு கீழ்படிகிறோம், ஏனென்றால் நாம் அவரை நம்புகிறோம் மற்றும் அவரில் அன்பு செலுத்துகிறோம். நாம் மன்னிப்பை பெறுவதற்கும், சொர்க்கத்தில் செல்வதற்கும் கீழ்படிதல் என்பது ஒரு சாதனம் அன்று.

தேவனுடைய இராஜ்ஜியம் என்பது வித்தியாசமான ஒரு இடமாகும், அந்த இடத்தில் ஒருவரின் மேன்மை பல வகைகளில் காணலாம்.

அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.

உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். (மத்தேயு 20:25-27)

அதே போல, வெளி வேஷமாக மத கோட்பாடுகளை இயேசு கடிந்துக்கொண்டு, அவைகளை சரிப்படுத்தினார்:

பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள். மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்.

அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும். மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.

எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். (மாற்கு 7:14-15, 18-23)

இதனால் தான் இயேசு மத தலைவர்களை கடிந்துக்கொண்டார்:

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.

குருடனான பரிசேயனே! போஜன பானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. (மத்தேயு 23:25-26)

மத கோட்பாடுகள் அனைத்தும் பெரும்பான்மையாக வெளிப்புறமாக சுத்தப்படுத்துவது பற்றியும், உணவு சம்மந்தப்பட்ட சுத்தம் பற்றியதாகவே இருக்கும். இதற்கு நேர் எதிராக இயேசு போதித்தார்:

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். (மத்தேயு 5:8)

மக்களின் மத்தியில் இருக்கும் உறவு பற்றியும் இறைவனிடத்தில் நாம் கொண்டு இருக்கும் உறவு பற்றியும் இயேசு அனேக விவரங்களை கூறினார். அவரது வார்த்தைகள் நம்முடைய மனதையும் இதயங்களையும் சிந்திக்கவைக்கின்றன.

நேர்மையைப் பற்றி அவர் கீழ்கண்டவிதமாக கூறினார்.

அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.

உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். (மத்தேயு 5:33-34, 37)

நாம் மற்றவர்களை நேசிப்பது பற்றி சாதாரணமாக நாம் கொண்டு இருக்கும் தரத்தை விட அதிகமான தரத்தை இயேசு சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.

உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.

இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?

உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா? ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். (மத்தேயு 5:43-48)

பரிசுத்தம் பற்றிம் ஜெபம் செய்வது பற்றி இயேசு எச்சரிக்கை செய்துள்ளார்:

மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.

அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார். (மத்தேயு 6:1-15)

மன்னிப்பு பெறுதல் மற்றும் ஜெபம், இவ்விரண்டிற்கு இடையே இருக்கும் ஒற்றுமையை இயேசு குறிப்பிடுகிறார்

நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார். (மத்தேயு 11:25,26)

நாம் எவ்விதம் தேவன் மீது சார்ந்து இருக்கிறோம் என்பது பற்றியும், அதே நேரத்தில் நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் எவ்விதம் பதில் அளிக்கிறார் என்பது பற்றியும் இயேசு கற்றுக்கொடுத்துள்ளார்:

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?

ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத்தேயு 7:7-11)

உபவாசம் (நோம்பு) பற்றி இயேசு எச்சரிக்கை விடுத்துள்ளார்:

நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.

உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். (மத்தேயு 6:16-21)

உலக பொருட்கள் பற்றிய மதிப்பு என்ன? அதைப் பற்றி நம்முடைய நோக்கம் என்ன? மற்றும் நமது பொறுப்பு என்ன என்பதை இயேசு விளக்கியுள்ளார்:

பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். (லூக்கா 12:15)

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான். அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?

வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்? எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார். (லூக்கா 16:10-13)

வாழ்க்கையின் ஒரு பாகமாக சோதனையும், வேதனையும் உள்ளது. இவைகளை எப்படி சமாளிக்கவேண்டும் என்பதை இயேசு கூறியுள்ளார்.

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.

அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். (மத்தேயு 6:25-34)

நம்முடைய வாழ்க்கையில் அனேக வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. அனேக தெரிவுகளை கொண்டதே வாழ்க்கையாகும். இவைகளில் ஒரு முக்கியமான தெரிவு மற்ற எல்லா தெரிவுகளை விட மேன்மையானது என்பதை இயேசு சொல்லியுள்ளார்.

இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். (மத்தேயு 7:13-14)

மதங்களில் மாய்மாலங்களை நாம் காண்கிறோமா? ஆம், மாய்மாலங்கள் மதங்களில் மிதமிஞ்சிய நிலையில் இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆகையால் தான் இயேசு கீழ்கண்ட விதமாக கூறியுள்ளார்.

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். (மத்தேயு 7:21-27)

உலகின் அதிமுக்கியமான பிரச்சனை என்னவென்றால், "துண்டிக்கப்பட்ட நம்முடைய உறவுமுறையாகும்", இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், தேவனுடனான நம்முடைய உறவு துண்டிக்கப்பட்டுள்ளது. தேவனோடு நமக்குள்ள உறவு முறையை மறுபடியும் புதுப்பிப்பதே தாம் வந்ததற்கான பிரதான காரணம் என்று இயேசு தாமே கூறுகிறார். இதுமட்டுமல்ல, மனிதர்களிடையே துண்டிக்கப்பட்ட உறவுமுறைகளையும் சுகமாக்கவும் இயேசு வந்துள்ளார். குறிப்பாக, திருமண பந்த உறவுகளில் காணப்படும் நேர்மையற்ற தன்மையை குறித்து அவர் கூறியுள்ளார்.

விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. (மத்தேயு 5:27-28)

மனித உறவுகளை முறித்துவிடும் பாவங்களின் வீரியத்தை விளக்குவதற்கு, இயேசு ஒரு வித்தியாசமான உவமையை அல்லது எடுத்துக்காட்டை கூறினார்.

உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.

உன் வலதுகை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். (மத்தேயு 5:29-30)

இயேசு விவாகரத்து பற்றி மிகவும் அழுத்தமாக கீழ்கண்டவாறு கூறுகிறார்:

அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். (மத்தேயு 19:4-6)

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். (மத்தேயு 6:31-32)

தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான். (லூக்கா 16:18)

அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயகடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை.

ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத்தேயு 19:8-9)

நாம் அனைவரும் ஒவ்வொருவரை மன்னிக்கவேண்டும் என்று இயேசு விரும்புகிறார். இறைவனிடமிருந்து நாம் நம்முடைய குற்றங்களுக்காக மன்னிப்பைப் பெற, நாம் மற்றவர்களை மன்னிப்பது என்பது அதிமுக்கியமான ஒன்றாக இருக்கிறது. எப்படி ஜெபிக்கவேண்டும் என்று இயேசு கற்றுக்கொடுக்கும் போது, கீழ்கண்டவாறு கூறுகிறார்:

எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். (மத்தேயு 6:12)

மேலும் இயேசு கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார். (லூக்கா 17:3-4)

ஒருமுறை இயேசுவின் சீடர் இயேசுவிடம் வந்து "என் சகோதரன் எனக்கு விரோதமாக குற்றம் செய்தால் அவனை எத்தனை முறை மன்னிக்கவேண்டும்? ஏழு முறையா?" என்று கேட்டபோது, இயேசு பதில் இவ்விதமாக அளித்தார்:

அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 18:22)

இயேசு தம்முடைய வார்த்தைகளை, தம் நடக்கையின் மூலமாக விளக்கினார். இருதயத்தைத் தொடும் ஒரு சிறப்பான உதாரணத்தை இயேசு கூறினார். மன்னிப்பு என்ற அருமையான மலரை நீங்கள் முகர்ந்துக்கொள்ள இயேசு பேசிய வார்த்தைகளை மட்டுமல்ல, அந்த நிகழ்ச்சி முழுவதையும் உங்கள் முன் வைக்கிறோம்.

இயேசு ஒலிவமலைக்குப் போனார். மறுநாள் காலையிலே அவர் திரும்பித் தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார்.

அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.

இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.

அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.

அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.

இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார். (யோவான் 8:1-11)

தேவன் பாவத்தை வெறுக்கிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், இயேசு பாவிகள் மீது எவ்வளவு அன்பு கொண்டுள்ளார், அதிலிருந்து அவர்கள் விடுதலை அடையவேண்டும் என்று இயேசு எவ்வளவு ஆர்வமாக உள்ளார் என்பதை நீங்கள் உணர்ந்துள்ளீர்களா? இதனை நாம் மேற்கண்ட நிகழ்ச்சி மூலமாக அறிந்துக்கொண்டோம். இது ஒரு நிகரற்ற நிகழ்ச்சியாகும். உண்மையாகவே, நாம் அனைவரும் அவரிடம் வந்து மன்னிப்பு கோரவேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் அந்த மன்னிப்பை அவர் மூலமாக பெற்றுக்கொண்டால், அதன் பிறகு அவர் மீது நாம் வைக்கும் அன்பு, பாவங்களை விட்டு நாம் விடுபடுவது சுலபமான ஒன்றாக மாறிவிடும்.

கீழ்படிதலும், அவர் மீது வைத்திருக்கும் மாறாத நம்பிக்கையும், நம்மை ஒரு அடிமைத்தனத்திற்கு கொண்டுச் செல்லாது, அதற்கு பதிலாக உண்மை சுதந்திரத்தில் நம்மை அது வாழவைக்கும்.

இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். (யோவான் 8:31-32)

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 8:34)

இயேசு தம்மை நம்பும் மக்களிடம் இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்கள் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 3:3)

இயேசு தொடர்ந்து கூறும் போது, இந்த மறுபிறப்பு என்ற அனுபவம் இல்லாமல் தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் நுழைவது என்பது கூடாத காரியம் என்று கூறினார். இதன் அர்த்தம் என்னவென்றால், இயற்கையான ஆரம்பம், இயற்கையான பிறப்பில் ஆரம்பிக்கிறது, அதே போல‌ ஆன்மீக ஆரம்பம் ஆன்மீக பிறப்பிலிருந்து ஆரம்பிக்கிறது. இந்த ஆவிக்குரிய (ஆன்மீக) பிறப்பு எப்போது நடைபெறுகிறது என்று கேட்டால், எந்த நாளில் நாம் "விடுதலை ஆகிறோமோ?" அல்லது "மறுபடியும் பிறக்கிறோமோ" அப்போது நடைபெறுகிறது. தேவ‌ன் ந‌ம்முடைய‌ பாவ‌ங்க‌ளை ம‌ன்னிக்கும் போது, அத‌ன் மூல‌மாக‌ ந‌ம் பாவ‌ங்க‌ள் க‌ழுவ‌ப்ப‌டும் போது, நாம் விடுத‌லை பெறுகிறோம். இந்த‌ விடுத‌லை கிட‌த்த‌வுட‌ன், ந‌ம்முடைய‌ அடிமைத் த‌ன‌ம் முறிக்க‌ப்ப‌டும், குற்ற ம‌ன‌சாட்சி ந‌ம்மை விட்டு நீங்கிவிடும், அப்போது "புதிய‌ வாழ்வு" ந‌ம‌க்குள் ஆர‌ம்பிக்கும். புது வாழ்வு என்ப‌து தேவ‌னின் ஆவி ந‌ம்முடைய‌ இருத‌ங்க‌ளில் ந‌ற்கிரியைக‌ளைச் செய்யும், ம‌ட்டும‌ல்ல‌ நம்முடைய‌ இருத‌ய‌ம் புதிய‌தாக‌ மாறும் (ரோம‌ர் 12:2). இந்த‌ நிக‌ழ்ச்சிக‌ள் ந‌ட‌க்கும் போது, நாம் இய‌ற்கையாக‌வே பாவ‌த்தை வெறுப்போம், நீதியையும் நியாய‌த்தையும் நேசிப்போம், ம‌ற்றும் ந‌ம்மை விடுத‌லையாக்கிய மேசியாவாகிய இயேசுவை பின்ப‌ற்ற‌ ஆர‌ம்பிப்போம். இவைக‌ள் அனைத்தும், தேவ‌ன் ந‌ம‌க்குத் த‌ரும் பரிசாக உள்ள மன்னிப்பை நாம் பெற‌ த‌யாராக‌ இருக்கிறோம் என்றுச் சொல்லும் ந‌ம்முடைய‌ முடிவின் மீது சார்ந்திருக்கிற‌து. இத‌ன் விளைவு - தேவ‌னை இன்னும் அதிக‌மாக‌ அறிய‌ ந‌ம‌க்கு ஆர்வ‌ம் உண்டாகும். தேவ‌ன் ந‌ம்மோடு பேச‌வும், அவர‌து வார்த்தைக‌ள் மூல‌மாக‌ பேச‌வும் நாம் தேவ‌னை அனும‌தித்தால், ப‌ர‌லோகில் இருக்கும் அந்த‌ பிதாவோடு நெருங்கிய‌ உற‌வுட‌ன் வாழ‌ நாம் த‌குதியான‌வர்க‌ளாக‌ மாறுவோம்.

ஆங்கில மூலம்: What Jesus Taught Us

"ஒரு தூது" இதர கட்டுரைகள்