ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 23 ஜனவரி, 2010

உமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு !?!

உமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு !?!
 
முன்னுரை: 2007ம் ஆண்டின் கடைசியில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு எழுத்து விவாதம் புரிய ஒரு அழைப்பு விடுத்து இருந்தேன். அதற்கு இவ்வாண்டு (2010) பீஜே அவர்கள் "எழுத்துவிவாதம் முடியாது, நேரடி விவாதம் புரிய தயாரா?" என்று கேட்டு இருந்தார், அதற்கு நான் முடியாது, எழுத்துவிவாதம் என்றால் ஒப்புக்கொள்கிறேன் என்று பதில் அளித்தேன், அதனை இங்கு படிக்கவும்: ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும் (http://isakoran.blogspot.com/2010/01/1.html).


இதற்கு பீஜே அவர்கள், "எழுத்து விவாதத்தை நான் ஏற்கமாட்டேன், அப்படி ஏற்கவேண்டுமென்றாலும், விவாதம் புரிபவர் நேரடியாக வரவேண்டும், விலாசம் தரவேண்டும், தந்தையின் பெயரை தரவேண்டும், அதன் பிறகு தான் 'விவாதம் எழுத்தா... நேரடியா' என்று தீர்மானம் எடுக்கப்படும் என்று கூறிவிட்டார்". மட்டுமல்ல, இஸ்லாமிய அறிஞர்களுக்கு அருமையான ஒரு ஆலோசனையையும் பீஜே அவர்கள் கொடுத்துள்ளார்.

ஒரு மூத்த இஸ்லாமிய ஊழியர் எப்படியெல்லாம் வார்த்தைகளை உபயோகப்படுத்தியுள்ளார் என்பதை இப்போது காணலாம்.
 
பீஜே அவர்கள் எழுதியது

இதற்கு நமது பதில்

கடிதம் மூலம் விவாதம் என்றாலும் நேரடி விவாதம் என்றாலும் விவாதிப்பவர் யார் என்பது தெரிய வேண்டும். ஏதோ ஒரு பெயரில் ஒளிந்து கொண்டு எதையாவது எழுதுபவனுடன் விவாதிப்பது நிழலுடன் விவாதிப்பதாகும்.
 
ஈஸா குர்ஆன்

பீஜே அவர்களே நான் "எதையாவது" எழுதுபவன் அல்ல, உண்மை இஸ்லாமை தமிழ் முஸ்லீம்களுக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இஸ்லாம் குறித்து நீங்கள் உங்கள் சொற்பொழிவுகளில் சொல்லாத, சொல்லமுடியாத விஷயங்களை நான் உங்கள் ஆதார நூல்களிலிருந்து எடுத்துச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் (இஸ்லாமியர்கள்) எப்படி விமர்சித்தாலும் மற்றவர்கள் நல்லவர்களாக நடந்துக்கொள்வதால் தைரியமாக நீங்கள் மேடையில் பேசுவீர்கள். ஆனால், எங்கள் நிலை இப்படி இல்லையே.

"எங்கள் உயிரினும் மேலான எங்கள் நபிப் பற்றி அவதூறாக பேசிவிட்டார் என்றுச் சொல்லி, வன்முறையில் ஈடுபட காத்திருக்கும் அமைதி மன்னர்கள் சிலர் இஸ்லாமில் இருப்பதால் தான், முகத்தை மறைத்து எழுதவேண்டியுள்ளது".

இஸ்லாமியர்களின் வெறி எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணத்தை பாருங்கள்.

 
பாங்களாதேஷ் நாட்டில் ஒரு இஸ்லாமியர் ஒரு நகைச்சுவை கார்ட்டூனை வரைந்தார், தான் வேலை செய்யும் பத்திரிக்கையில் பிரசுரித்தார். அதாவது ஒரு சிறுவன் கையில் பூனையை வைத்திருப்பான், அப்போது ஒரு இஸ்லாமியர் அவரிடம் இந்த பூனையின் பெயர் என்ன என்று கேட்டபோது, அந்த சிறுவன் இதன் பெயர் "முஹம்மது பூனை" என்று சொன்னானாம். அதாவது, இஸ்லாமியர்களில் அனேகர் தங்கள் பெயர்களில் "முஹம்மது" என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்வது வழக்கமாக இருப்பதால், அந்த சிறுவன் அப்படிச்சொன்னான்.

நடந்தது என்ன? வன்முறை வெடித்தது. கார்ட்டூன் வரைந்த அந்த வாலிபன் மன்னிப்பு கோரினான், நான் வேண்டுமென்று இப்படிச் செய்யவில்லை, தெரியாமல் நடந்துவிட்டது என்று கூறினான், அந்த செய்தித்தாளும் மன்னிப்பு கோரியது. வன்முறை குறையவில்லை, அதனால் அந்த வாலிபனை காவலர்கள் கைது செய்து பாதுகாப்பு வேண்டி சிறையில் அடைத்தாரகள்.

இந்த கார்ட்டூனை நைஜீரியாவில் சில அமைதி மன்னர்கள் இணையத்தில் கண்டு, நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வேறு கண்டத்தில் வாழும் நைஜீரிய கிறிஸ்தவர்களை தாக்கி கொன்றார்கள்.

புத்தி என்று ஒன்று இருந்தால், ஒரு இஸ்லாமியரால் பாங்களாதேஷ் நாட்டில் தவறுதலாக வரைந்த ஒரு கார்டூனுக்காக நைஜீரியாவில் கொலை செய்வார்களா? வன்முறையில் ஈடுபடுவார்களா?

இந்த ஒரு உதாரணமே போதும் என்று நினைக்கிறேன்.
 
பீஜே அவர்கள் எழுதியது

விவாதத்தில் ஒழுங்காக வாதங்களை எடுத்து வைக்கா விட்டால் அத்னால் கேவலம் வரும் என்ற் அச்ச்ம் தான் ஒருவனை சரியாக விவாதிக்க வைக்கும். உண்மையின் அடிப்படையில் விவாதிக்க வைக்கும். முகமூடி போட்டுக் கொண்டவனுக்கு இந்த நிலை இல்லை.
 
ஈஸா குர்ஆன்

பீஜே அவர்களே! ஒருவன் நேர்மையானவனாக இருந்தால், உண்மையுள்ளவனாக இருந்தால், எழுத்து மூலமாக பொய்களை வீசவேண்டிய அவசியமென்ன? ஆனால், நேர்மையில்லாதவன் தன் பிழைப்பிற்காக பொய்களையும், நீதியை அநீதி என்றும் அநீதியை நீதி என்றும் மேடையிலும் பேசுவான். ஈஸா குர்ஆன் தளம் மூன்று ஆண்டுகளாக செயல்படுகிறது. அனேக கட்டுரைகள் உள்ளன. இதே போல, ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளமும் உள்ளது, இன்றுவரை கிட்டத்தட்ட 100 கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு நான் சவால் விடுகிறேன், உங்களால் முடிந்தால் எங்கள் கட்டுரைகளை பதித்து, அதற்கு பதில் தாருங்கள். அப்போது எனக்கு அவமானம், கேவலம் தானாக வரும். பதில் கொடுக்க தயாரா? எங்கள் தளங்களின் தொடுப்புக்களை கொடுக்க தயாரா?

நான் பதிக்கும் கட்டுரைகளில் சொல்லப்படும் செய்திகள் உண்மையா இல்லையா என்பதை அவைகளை படிப்பவர்களுக்கு புரியும். மற்றும் எங்கள் கட்டுரைகளில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பதை உங்களைப் போன்றவர்கள் தங்கள் தளங்களில் எங்கள் கட்டுரைகளின் தொடுப்புக்களை கொடுக்காமலேயே பதில் எழுதும் நிலையை கவனித்தாலும் தெரிந்துவிடும்.
 
பீஜே அவர்கள் எழுதியது

எனவே ஈஸா நபிக்குத் தான் தந்தை இல்லை என்பதை நம்ப முடியும். அதற்காக இவர்களுக்கும் தந்தை இல்லையா? முகவ்ரி இல்லையா? எழுத்து மூலம் விவாதிப்பது என்றாலும் அதற்காக ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
 
ஈஸா குர்ஆன்

ஒருவரின் முகவரி தெரிந்தால் தான் நீங்கள் நம்புவீர்களோ...

ஒருவரின் முகத்தை பார்த்தால் தான் அவர் பேசுவதில் உண்மை இருக்கும் என்பதை நம்புவீரகளோ?

ஒப்பந்தம் என்றால் கட்டுரைகளிலும், மெயில்களிலும் எழுதி அனுப்பிகொண்டு, அவைகளை தங்கள் தளங்களில் பதித்து அதன் படி நடந்துக்கொண்டால் அது ஒப்பந்தமாகாதோ?

ஒரு மனிதனுக்கு அவன் பேசும் அல்லது எழுதும் வார்த்தைகளே போதும், உண்மையுள்ளவனாக நடந்துக்கொள்வதற்கு. நேர்மை மேடையில் மட்டுமல்ல, எழுத்துக்களிலும் இருக்கவேண்டும்.

நீங்கள் எத்தனை மேடையில் பேசியிருக்கிறீர்கள், எவ்வளவு பொய்யையும் புரட்டையும் பேசியுள்ளீர்கள், நீங்கள் உண்மைக்கும் சத்தியத்திற்கும் பயந்து நெர்மையானவராகவா நடந்துக்கொண்டீர்கள்? வாய்க்கு வந்தபடி பைபிள் வசனங்களுக்கு பொருள் கூறியுள்ளீர்கள். சரியாக ஆராயாமல் உங்கள் உள்ளத்தில் பட்டதெல்லாம் சொல்லியுள்ளீர்கள், கேட்க ஆள் இல்லை என்ற நினைப்பை விட்டுவிடுங்கள். கர்த்தருக்கு சித்தமானால், இனி உங்களின் நேர்மையை சோதிக்கும் பதில்கள் உங்கள் வரிகளிலிருந்தே வெளிக்காட்டுவோம். கிறிஸ்தவம் பற்றியும், இயேசு பற்றியும் நீங்கள் கூறியுள்ள, எழுதியுள்ள அனைத்து விமர்சனங்களுக்கும், பொய்களுக்கும் பதில்கள் சொல்லப்போகிறோம், அப்போது தெரியும், யார் உண்மை பேசுகிறார்கள் யார் பொய்யை பேசுகிறார்கள் என்று.

முஸ்லீம்கள் நேர்மையானவர்களாக இருந்தால், வன்முறையில் ஈடுபடாதவர்களாக இருந்தால் எங்களைப் போன்றவர்கள் ஏன் மறைந்து இருந்து எழுதவேண்டும்?
 
பீஜே அவர்கள் எழுதியது

தன்னை அடையாளம் காட்டி விட்டு விவாதம் பற்றி பேசட்டும். அதன் பின் எழுத்து விவாதமா நேரடி விவாதமா என்பது பற்றி முடிவு செய்யலாம் என்று பதில் கொடுங்கள்.
 
ஈஸா குர்ஆன்

உங்களின் இந்த வரிகள் மூலமாகவே தெரிந்துவிடுகிறது நீங்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள் என்று, விவாதம் புரிய அல்ல, விவகாரம் செய்ய.
 
பீஜே அவர்கள் எழுதியது

இந்த இடத்தில் முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு முக்கிய ஆலோசனை ஒன்றை நாம் சொல்ல வேண்டியுள்ளது.

முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாம் குறித்து விமர்சனம் செய்தால் அவர்களை இரண்டு வகையாக பிரித்து பார்க்க வேண்டும். முகவரியோடு விமர்சித்தால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். நாமும் சில கேள்விகள் கேட்க வேண்டும். முகவரி இல்லாமல் நீங்கள் குறிப்பிடுவது போல் பெட்டையைப் போல் ஒளிந்து கொண்டு எதையாவ்து எழுதினால் எழுத்துவதற்கு பதில் கொடுக்காமல் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்.
 
ஈஸா குர்ஆன்

நல்ல ஆலோசனை.

ஆனால், நாங்கள் அப்படி இல்லை, ஒருவர் விமர்சித்தால் அவர் பெயரைச் சொன்னாலும் பதில் தருவோம், பெயர் குறிப்பிடாமல் இருந்தாலும் பதிலைத் தருவோம், அவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மரித்து மண்ணோடு மண்ணாக மாறி அழிந்துவிட்டவராக இருந்தாலும் பதிலைத் தருவோம்.

ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை என்றுச் சொன்னாளாம். அது போல தான் உங்கள் வாதம் உள்ளது. தவறாக யாராவது விமர்சித்தால் உடனே அதற்கு பதில் கொடுத்து சத்தியத்தை நிலை நாட்டுவதை விட்டுவிட்டு, பெயர் தெரிந்தால் தான் முகம் காட்டினால் தான் நான் பதில் கொடுப்பேன் என்பதிலிருந்து தெரிந்துவிடுகிறது.... இஸ்லாமை எழுத்துக்கள் மூலமாக காப்பாற்ற முயற்சிப்பது மிக மிக கடினம் என்று.
 
பீஜே அவர்கள் எழுதியது

பைபிளீல் உள்ள செக்ஸ் கதைகள், ஒருத்தன் பொண்டாட்டியை ஒருத்தன் எடுத்துக் கொள்வது, இன்னும் சொல்லி முடியாத அசிங்கங்களைக் கேட்டு இதர்கு பதில் சொல் என்று கேடக் வேண்டும். பாதிரியார் லீலைகைள் க்ன்னிகாஸ்திரி லீலைகள் குறித்து ஆதாரப்பூர்வமான் செய்திகளை எழுதி கடுமையாக் விமர்சிக்க வேண்டும்.
 
 
ஈஸா குர்ஆன்

பீஜே அவர்களே... அவ்வளவு என்ன அவசரம் சொல்லுங்கள். எழுதிய நான்கு வரிகளில் ஐந்து எழுத்துபிழைகளா?

நிதானமாக எழுதி, மறுபடியும் ஒரு முறை படித்துப்பார்த்து பதியுங்கள். எழுத்துப் பிழை வருவது சகஜம் தான் ஆனால், குர்ஆனை மொழியாக்கம் செய்த, அனேக புத்தகங்களை எழுதிய, அனேக மேடைகளைக் கண்ட உங்கள் வரிகளிலுமா இவ்வளவு பிழைகள்?

நேற்று முளைத்த காளானைப்போல உள்ள என்னைப் போன்றவன் எழுதுவதில் எழுத்து பிழை இருந்தால், சகித்துக்கொள்ளலாம். உங்கள் வரிகளிலுமா? ஒரு மூத்த இஸ்லாமிய அறிஞரா இப்படி எழுதுகிறார்... ஆச்சரியமாக உள்ளது.

அடுத்ததாக, செக்ஸ் பற்றி, லீலைகள் பற்றி சொல்லியுள்ளீர்கள். முதலில் உங்கள் முஹம்மது பற்றி எல்லாவற்றையும் அறிந்துக்கொண்டு எழுதுங்கள், குர்ஆன் பற்றி தெரிந்துக்கொண்டு எழுதுங்கள். இப்போதைக்கு இதைத்தான் நான் சொல்வேன், ஏனென்றால் குர்ஆனை மொழியாக்கம் செய்த ஒரு பெரிய ஊழியரிடம் நான் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்ற உணர்வு இருப்பதால் நேரம் வரும் போது, தகுந்த இடத்தில் பதிலைத் தருவேன்.

(வாசகர் கவனத்திற்கு: குர்ஆனை மொழியாக்கம் செய்து விளக்கவுரை கொடுத்தவரிடம்... குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்பது அதிகப்பிரசங்கித் தனம் என்று எண்ணாதீர்கள், காரணம் அவரது குர்ஆன் விளக்கவுரையில் அவர் கூறிய விவரங்களுக்கு நான் விளக்கமளித்த பிறகு வாசகர்கள் புரிந்துக்கொள்வீர்கள்).


பிறகு பாதிரிகளைப் பற்றி எழுதியுள்ளீர்கள்... என்ன செய்வது பீஜே அவர்களே, கிறிஸ்தவ பாதிரிகளிலும், கன்னியாஸ்திரிகளிலும் முஹம்மதுவை பின்பற்றி நடப்பவர்கள் சிலர் இருந்துவிடுவதுண்டு... என்ன செய்வது!

அப்படிப்பட்டவர்களைக் கொண்டு கிறிஸ்தவத்தை எடைபோடுவது சரியா...? ஆனால், உங்கள் முஹம்மதுவைக் கொண்டு இஸ்லாமை எல்லாரும் நன்றாக எடைப்போடலாம்...

பீஜே அவர்கள், இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்தவத்தை கடுமையாக விமர்சியுங்கள் என்று உரிமையை கொடுத்துள்ளார். எனவே, இதே உரிமையை கிறிஸ்தவர்களும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, ஆதார பூர்வமான விவரங்களுடன், குர்‍ஆன் ஹதீஸ்களின் துணையுடன் "இஸ்லாமை கடுமையாக விமர்சிக்கலாம்". ஏனென்றால், இஸ்லாம் உரிமைகளை சமமாக எல்லாருக்கும் தரும் மார்க்கம் தானே!?! எங்களுக்கு உரிமையை கொடுத்தமைக்காக பீஜே அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
பீஜே அவர்கள் எழுதியது

எங்கே அடித்தால் வலிக்குமோ அங்கே அடிக்க வேண்டும்.தூண்டி விடும் பாதிரிகள் கூட்டத்துக்கு இவர்கள் யார் என்பது தெரியும். தம்து மத நம்பிக்கையே ஆட்டம் காணும் போது அடங்குவார்கள். விரைவில் இந்தப் பணீயையும் நாம் செய்ய விருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.
 
ஈஸா குர்ஆன்

இப்போது தான் எனக்கு புரிந்துள்ளது, நாங்கள் அடித்துக்கொண்டு இருக்கின்ற இடம் சரியான இடம் தான் என்று.

எங்கள் கட்டுரைகளுக்கு பதிலைத் தராதீர்கள் என்று மற்ற இஸ்லாமியர்களுக்கு எந்த ஆலோசனை கொடுத்தீர்களோ.. அந்த ஆலோசனையை நீங்களே முறித்துவிட்டு, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களின் இதே தளத்தில் பதிலைத் தரும் காலம் மிக சமீபமாக உள்ளது.

உங்களின் ஆலோசனையை மற்றவர்கள் பின்பற்றக்கூடும், ஆனால், நீங்கள் அதனை முறித்துவிடும் காலம் வருகிறது....

கேளுங்கள் பீஜே அவர்களே...

கேள்விகளை கேளுங்கள்...

எதை வேண்டுமானாலும் கேளுங்கள்...

ஆனால், ஜாக்கிரதை.......

நீங்கள் பின்பற்றுவது குர்ஆனை... முஹம்மதுவை... அவர் நடந்துக்கொண்ட விதத்தை...

என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

முடிவுரை:

ஆக, பீஜே அவர்கள் எழுத்து விவாதத்திற்கு வரமாட்டார்கள். எங்கள் இஸ்லாமிய கட்டுரைகளுக்கு பதில்களைத் தராதீரகள் என்று அறிவுரை கூறியுள்ளார்கள். இந்த அறிவுரையை இவர் பின்பற்ற முடியுமா... காலம் தான் பதில் சொல்லும்... இப்போது தான் 2010 ஆண்டு ஆரம்பித்துள்ளது... இன்னும் அனேக நாட்கள் உள்ளது இவ்வாண்டு முடிவதற்குள்...

நான் அடிக்கடி எழுதுவதுண்டு "இஸ்லாமியர்களை பேசவிடுங்கள்... இஸ்லாமை விளக்க விடுங்கள்... அவர்கள் அதிகமாக பேச வேண்டும் எழுதவேண்டும், அப்போது தான் நமக்கு எழுத வாய்ப்பு கிடைக்கும்".

எனவே, பீஜே அவர்கள் செய்வேன் என்றுச் சொன்ன "அந்த பணியை" அவ‌ர் செய்ய வேண்டும்...அப்போது தான் எங்கள் பணியை நாங்கள் செய்யமுடியும். உங்கள் கேள்விகளை எதிர் நோக்கியிருக்கும்.... உங்கள் வாசகன் ஈஸா குர்ஆன் உமர்.

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும் - 1

ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்
 
 
முன்னுரை: என் பெயர் உமர் (புனைப் பெயர்), நான் ஈஸா குர்ஆன் என்ற பிளாக்கரில் இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகளை மறுப்புக்களை எழுதிக்கொண்டு வருகிறேன். 2008ம் ஆண்டிலிருந்து இதர நண்பர்களின் உதவி கொண்டு ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் ஆங்கில கட்டுரைகளை தமிழாக்கம் செய்து பதித்துக்கொண்டு இருக்கிறேன். தமிழ் கிறிஸ்தவர்கள் என்ற தளத்திலும் கட்டுரைகள் பதிக்கப்படுகின்றன. எழுத்து விவாதத்திற்கு இஸ்லாமியர்கள் விரும்பினால், அதற்கு தயார் என்றுச் சொல்லி, 2007ம் ஆண்டில் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் நடந்த ஒரு உரையாடலில் பதித்தேன் (அவ்வுரையாடலை இங்கு காணலாம்).


கடந்த வாரம் (ஜனவரி 7ம் தேதி) அர்ஷத் ரஹ்மான் என்ற பெயரிலிருந்து ஒரு மெயில் வந்தது, அதாவது பீஜே அவர்களுடன் நேரடி விவாதத்திற்கு தயாரா? என்று கேள்வி கேட்டு வந்தது, மற்றும் ஆன்லைன் பீஜே தளத்திலும் இக்கேள்வியைக் கேட்டு பீஜே அவர்கள் அழைப்பு விடுத்து இருந்தார்கள்.

முதலில் எனக்கு மெயில் அனுப்பிய சகோதரருக்கு பதிலை கொடுத்துவிட்டு, பிறகு பீஜே அவர்கள் எழுதியவைகளுக்கு பதிலை தருகிறேன்.

எனக்கு மெயில் அனுப்பிய அர்ஷத் ரஹ்மான் அவர்களுக்கு பதில்:
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

\\ஈசா குரான் உமர் அவர்களுக்கு! உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!//
 
உமர் எழுதியது:

அன்பான சகோதரர் அர்ஷத் ரஹ்மான் அவர்களுக்கு, உங்கள் மீதும் இறைவனின் சாந்தி சமாதானம் உண்டாவதாக.
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

//இஸ்லாத்தை விமர்சனம் செய்யும் நீங்கள் உங்கள் கொள்கையில் உண்மையாளராக இருந்தால் முஸ்லிம்களுடன் நேரடி விவாதத்துக்கு வர வேண்டும்.//
 
உமர் எழுதியது:

இதைத் தான் நானும் கேட்கிறேன், இஸ்லாம் மீதும் அதன் கொள்கைகள் மீதும் உண்மையிலேயே உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், ஏன் நீங்கள் எழுத்து விவாதத்திற்கு வரக்கூடாது?

நேரடி விவாதம் செய்தால் தான், ஒருவரின் நம்பிக்கை உண்மையானது என்று நிருபிக்கப்படும் என்பது சரியான வாதமல்ல, அதற்கு பதிலாக எழுத்து வடிவத்தில் எடுத்துவைக்கும் விவரங்கள் உண்மையானதாகவும், ஆதாரபூர்வமானதாகவும் இருக்கின்றதா என்பதைத் தான் கவனிக்கவேண்டும், இதனை எல்லாரும் ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

//அதை விடுத்து எழுத்து விவாதத்துக்கு மட்டும் தான் நான் வருவேன் என்று நீங்கள் கூறுவது கோழைத்தனமானது.//
 
உமர் எழுதியது:

நேரடி விவாதத்தை மட்டும் தான் நாங்கள் ஒப்புக்கொள்வோம் என்றுச் சொல்வதும் கோழைத்தனம் தானே! உங்கள் மார்க்கம் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையின்மை தானே! வீரர்களுக்கு புல்லும் ஆயுதம் என்ற சொற்றடருக்கு இணங்க, நீங்கள் வீரர்களாக உங்களை கருதிக்கொண்டால், கிறிஸ்தவர்களுடன் எழுத்து விவாதத்தையும் செய்யலாமே!
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

//மக்கள் மத்தியில் விவாதம் செய்வதுதான் அதிக மக்களுக்கு சத்தியத்தை கொண்டு செல்ல உதவும். எழுத்து வடிவ விவாதத்தின் மூலம் பாமர மக்களை சென்றடைய முடியாது.//
 
உமர் எழுதியது:

உங்களின் இந்த வாதத்தை முழுவதுமாக நான் அங்கீகரிக்க முடியாது. நேரடி விவாதத்திற்கும் எழுத்து விவாதத்திற்கும் அதற்குரிய நன்மைகள் உண்டு. ஏனென்றால், ஒரு சமயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடத்தப்படும் விவாதத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ளவர்கள் தான் காணமுடியும், மற்றும் மற்றவர்கள் அந்த நிகழ்ச்சியை மறுபடியும் காணவேண்டுமானால், அதன் வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்க்கவேண்டும், இதற்கு அதிகபடியான நேரம் எடுத்துக்கொள்ளும். அல்லது சீடிக்களை வாங்கி பார்க்கவேண்டும் இதே எழுத்து விவாதமென்றால், இணையத்தில் பதித்தால் அதனை ஒரு சில நிமிடங்களில் டவுன்லோட் செய்து படிக்கமுடியும். ஒரு நபர் ஒரு எழுத்துவிவாத கட்டுரையை பிரிண்ட் எடுத்து அனேகருக்கு தரலாம், அதனை படிக்க சாதாரண மக்களுக்கு கணினியோ, வீடியோ பிளேயரோ தேவையில்லை. பேருந்தில் பிரயாணம் செய்யும் போதும், வீட்டில் மின்சாரம் இல்லாத நேரத்திலும் பகலின் வெளிச்சத்திலும் படித்துக்கொள்ளமுடியும். அதாவது, மனது இருந்தால் மார்க்கமுண்டு. இரண்டு வகையான விவாத முறையிலும் அதற்குரிய பயன்பாடுகள் உண்டு. எனவே, ஒருவகை தான் சரியானது என்பது ஏற்க முடியாது.
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

//கிருஸ்தவ மதமானது அதிக மக்கள் கடைபிடிக்கும் ஓன்று. எனவே எழுத்து விவாதம் என்பது இந்த உலகளாவிய சர்ச்சைக்கு பெரிய தீர்வாக அமையாது.//
 
உமர் எழுதியது:

தீர்வு உங்கள் கையில், என் கையில் இல்லை. இந்தியாவில் எத்தனை சதவிகித கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்? அவர்கள் எத்தனை சதவிகித மக்களுக்கு தமிழ் தெரியும், இவர்களில் எத்தனை சதவிகித மக்கள் நேரடி விவாதத்தை பார்ப்பார்கள்? இவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்ப்பார்கள்? ஆக, அதிக மக்கள் தொகை இருப்பதால் நேரடி விவாதம் தான் சரியானது என்பதும் ஏற்பதற்கில்லை.
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

//பீ.ஜைனுலாபிதீன் அவர்கள் உங்களை போன்று ஒளிந்து கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு தன்னுடைய இணையதளத்தில் பகிரங்க விவாத அழைப்பு விடுத்துள்ளார் (www.onlinepj.com).//
 
 
உமர் எழுதியது:

 
ஒளிந்துக்கொள்ளாமல் பகிரங்கமாக பொய்களையும், தங்கள் சொந்த யூகங்களையும் முன்வைத்து ஆதாரமில்லாமல் கட்டுரைகளை புத்தகங்களை எழுதும் எல்லா இஸ்லாமிய அறிஞர்களுக்கும் 2007ம் ஆண்டே, நானும் எழுத்து விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். விரும்புகிறவர்கள் என் கட்டுரைகளுக்கு பதில்களை எழுதலாம், எழுத்து விவாதத்தில் ஈடுபடலாம். பீஜே அவர்களின் விவாத அழைப்பிற்கு இக்கட்டுரையில் பதிலை நான் கீழே கொடுத்துள்ளேன்.
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

//உங்களுக்கு உண்மையில் உங்கள் கொள்கையில் உறுதி இருந்தால்,கிருஸ்தவத்தின் மீது எள் முனையளவாவது ஈடுபாடு இருந்தால்,சத்தியத்தை நீருபிக்க திராணி இருந்தால் இந்த விவாத அழைப்பை ஏற்று விவாதத்துக்கு வருமாறு உங்களை அழைக்கிறோம்.பிரச்சினை வரும் என்றெல்லாம் போலி சாக்குகளை கூறி நழுவாதீர்கள். காவல்துறையின் பாதுகாப்பை வேண்டுமானாலும் நாடலாம்.\\
 
உமர் எழுதியது:

அப்படியானால், எழுத்து விவாதத்திற்கு வரமாட்டீர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் எழுத்து விவாதத்திற்கு பயப்படுகிறார்கள் என்று மக்கள் கருதலாமா? இஸ்லாமிய அறிஞர்கள் நேரடி விவாதத்திற்கு வீரர்கள், எழுத்து விவாதத்திற்கு கோழைகள் என்று மக்கள் கருதிக்கொள்ளலாமா?

எங்களிடம் உண்மை இருக்கிறது என்பதால் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக, தொடர்ந்து பதில்களை கொடுத்துக்கொண்டு கேள்விகளை தொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.

உங்களுக்கும் இஸ்லாம் மீது அணு அளவாவது நம்பிக்கை இருந்தால், எழுத்து விவாதத்திற்கு வாருங்கள், அப்படி வரவில்லையானாலும் சரி, நான் தொடர்ந்து எழுதுவதை நிறுத்தப் போவதில்லை. காவல் துறைப்பற்றி சொல்லிய விஷயம் பற்றி பீஜே அவர்களின் பதிலில் எழுதுவேன்.

முடிவாக, அர்ஷத் அவர்களே, எழுத்து விவாதம் என்றால் தான் என்னால் வரமுடியும், நேரடி விவாதம் என்றால் முடியாது.

இணையத்தில் எழுதினால் என்ன, ஒளிந்துகொண்டு எழுதினால் என்ன? சொல்லப்படும் செய்தி உண்மையா? ஆதாரமுண்டா? என்று பார்க்கவேண்டுமே தவிர, இவன் (உமர்) நேரடி விவாதத்திற்கு வரமாட்டான் என்பதை தெரிந்துக்கொண்டே "இஸ்லாமிய அறிஞர்கள் விவாதத்திற்கு அழைத்தால், உமர் வரவில்லை" இதனால், இஸ்லாம் தான் உண்மையானது என்ற கிளிப்பிள்ளைப் பேச்சை சொல்வதை நிறுத்திக்கொண்டு, என் கட்டுரைகளுக்கு உங்களால் இயன்ற பதிலை எழுதி, என் கட்டுரையின் தொடுப்பையும் கொடுத்து (உங்களுக்கு பயமில்லையென்றால்) உங்கள் தளத்தில் பதித்தால், படிக்கும் வாசகர்களுக்கு உண்மை புரியும். இது என் தாழ்மையான வேண்டுகோள். இதைச் செய்வீர்களா?

 
 
இப்போது, ஆன்லைன் பீஜே தளத்தில் பீஜே அவர்களின் வரிகளுக்கு என் பதிலைத் தருகிறேன்
(http://onlinepj.com/vimarsanangal/vivathakalam/).
 
பீஜே அவர்கள் எழுதியவை:

//கிறித்தவர்களின் அழைப்பு

இயேசு இறைமகனா? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலவர் பி.ஜைனூல் ஆபிதீன் புத்தகத்திற்கு பதில் 1 தமிழ் உலகின் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவருக்கும் ஈசா குரான் உமர் எழுத்து வடிவ விவாததுக்கு பகிரங்க அழைப்பு

என்று ஈஸா குரான் உமர் என்பவர் அழைப்பு விடுகிறார். இதற்கு என்ன பதில் என்று ஒரு சகோதரர் கேடிருந்தார்.

அதற்கு நாம் அளித்த பதில்

விவாதம் என்றால் நேருக்கு நேராக இருக்க வேண்டும். அது குறித்து ஒப்பந்தம் செய்ய வேண்டும். அப்போது தான் யார் கூறுவது தவறு என்று மக்களுக்குத் தெரியும்.//
 
உமர் எழுதியது

கட்டுரைகளில் அல்லது எழுத்துக்களில் பதில்களைச் சொன்னாலோ அல்லது கேள்விகளை கேட்டாலோ அது விவாதமாக இருக்காதா? ஒப்பந்தம் என்பது இன்ன இன்ன தலைப்புக்களில் எழுதலாம், கேள்விகளை கேட்கலாம் என்று கூட போட்டுக்கொள்ளலாமே.

பீஜே அவர்களே! யார் சொல்வது தவறு என்று மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், சொல்லப்பட்ட விவரத்திற்கு ஆதாரமாக வசனங்களையோ, ஹதீஸ்களையோ கொடுத்தார்களா? என்று மக்கள் கவனித்தால் போதுமே! அதை விட்டுவிட்டு, நேரடி விவாதம் செய்தால் தான் யார் சொன்னது தவறு, சரி என்று மக்கள் தெரிந்துக் கொள்வார்கள் என்பது ஒரு வரட்டு வாதமாகும். உங்களைப் போல நிலையில் இருக்கும் ஒரு பெரிய இஸ்லாமிய அறிஞர் இப்படிப்பட்டவைகளைச் சொல்வது உங்கள் தகுதிக்கு சரியானதல்ல என்பது என் கருத்து.

உதாரணத்திற்கு, உங்களின் ஆன்லைன் பீஜே தளத்தில் வெறும் விவாதம் புரிந்த வீடியோக்களை மட்டுமா நீங்கள் பதிக்கிறீர்கள்? எழுத்து வடிவில் கட்டுரைகள் பதிக்கவில்லையா? எழுத்து வடியில் உங்கள் பதில்கள் இல்லையா? சொல்லப்பட்ட செய்திக்கு ஆதாரமாக விவரங்களை எழுத்துவடிவில் கொடுத்தாலே போதுமே...படிக்கும் வாசகர்கள் அவைகள் சரியானவையா என்பதை சோதித்துப் பார்த்து தெரிந்துக்கொள்வார்கள். அவ்வளவு ஏன், இன்னும் சில முக்கியமான விடியோ விவாதங்கள் அதிகபடியான மக்களை சென்று அடையவேண்டும் என்பதற்காக, மாதாந்திர பத்திரிக்கையில் எழுத்துவடிவில் பதிப்பதில்லையா? அவைகளை எழுத்துவடியில் மாற்றி கட்டுரைகளாக தளங்களில் பதிப்பதில்லையா? எனவே, நேரடி விவாதம் புரிந்தால் தான் மக்களுக்கு சத்தியம் சென்று அடையும் என்பது பொருந்தாத விஷயம். இவைகள் எழுத்து விவாதத்திற்கு ஒப்புக்கொள்ளக்கூடாது என்று பயப்படும் இஸ்லாமிய அறிஞர்களின் வார்த்தைகளாகும். (ஏன் ஒட்டுமொத்த இஸ்லாமிய தமிழ் அறிஞர்கள் அனைவரும் பீஜே உட்பட எழுத்து விவாதத்திற்கு தயங்குகிறார்கள் என்பதை ஒருமுறை குர்‍ஆனையும், ஹதீஸ்களையும் முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தையும் தனக்கு புரியும் மொழியில் படிக்கும் சராசரி மனிதன் புரிந்துகொள்வான்).
 
பீஜே அவர்கள் எழுதியவை:

மேலும் இயேசு இறை மகனா என்ற் தலைப்பில் நாம் எடுத்து வைக்கவுள்ள வாதங்கள் அனைத்தும் நூல் வடிவில் அவர்களிடம் உள்ளது. எனவே நாத்திகர்களுடன் நடந்தது போல், ஜெபமனி என்ற கிறித்தவ பாதிரியாருடன் நடந்தது போல் அவர்கள் விவாதத்துக்கு தயாரா என்று கேட்டு எழுதுங்கள். நான் தயாராக இருக்கிறேன்.
 
உமர் எழுதியது:

எங்களிடம் இயேசு இறைமகனா என்ற உங்களின் புத்தகம் உள்ளது என்பதை தெரிந்து வைத்திருக்கும் நீங்கள், அப்புத்தகத்திற்கு நாங்கள் கொடுத்த ஒரு சில பதில் கட்டுரைகளை படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அக்கட்டுரைகளுக்கு ஏதாவது பதிலை நீங்கள் (பீஜே அவர்கள்) கொடுத்துள்ளீர்களா? மட்டுமல்ல, இவ்வாண்டு முக்கியமாக உங்களின் ஒவ்வொரு கிறிஸ்தவ விமர்சனத்திற்கும் பதிலை தர நான் விரும்புகிறேன்.

நேரடி விவாதத்திற்கு வரமுடியாது, எழுத்துவிவாதத்திற்கு பீஜே அவர்கள் தயார் என்றால் நானும் தயார்.
 
பீஜே அவர்கள் எழுதியவை:

ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் என்று பொருந்தாக் காரணம் சொல்வார்களானால் அதனால் ஏற்படும் எந்த விளைவுக்கும் நான் பொறுப்பு என்று எழுதித் தருகிறேன், தேவைப்பட்டால் காவல் துறை பாதுகாப்பையும் பெறுவோம்.
 
உமர் எழுதியது:

எழுத்து விவாதத்தில் ஈடுபட்டால், இஸ்லாமியர்களுக்கு என்ன அசம்பாவிதம் நடந்துவிடும்? ஏன் நீங்கள் எழுத்து விவாதத்திற்கு வரக்கூடாது?

காவல் துறையின் பாதுகாப்பை நாடலாம் என்று நீங்கள் சொல்வது மிகவும் வேடிக்கையானது. நான் இங்கு காவல் துறையை அவமதிக்கவில்லை, ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறேன். இந்தியாவில் இலட்சக்கணக்கில் பாதுகாவலர்கள் இருக்கிறார்கள், கோடிக்கணக்கான பணம் இராணுவத்திற்கும், புலனாய்வு துறைக்கும் செலவிடப்படுகிறது. இப்படி இருந்தும், இஸ்லாமிய தீவிரவாதிகளின் கைவரிசை தொடர்ந்து காட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது, மும்பை தாக்குதல், இதற்கு ஒரு உதாரணம். மதபாகுபாடு இன்றி திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு என்று அனைத்து வித சமுதாய கேடுகளும் அவ்வப்போது ஆங்காங்கே நடக்கின்றன. பாதுகாப்பு துறையில் நாங்கள் தான் முன்னிலையில் இருக்கிறோம் என்று நம்பிக்கொண்டு இருந்த அமெரிக்காவிலேயே அனேக இஸ்லாமிய தீவிரவாத செயல்கள் நடந்துள்ளன. நான் சொல்ல வருவது என்னவென்றால், கோடிக்கணக்கான மக்கள் உள்ள நாட்டில், பாதுகாவலர்கள் என்ன தான் பாதுகாப்பு அளித்தாலும் எல்லாருக்கும், எல்லா நேரத்திலும் பாதுகாப்பு அளிக்கமுடியுமா? அது முடியாத காரியம். ஏதோ ஒரு நாட்டில் யாரோ ஒருவர் கார்ட்டூன் வரைந்தான் என்பதற்காக, வேறு நாட்டில் வாழும் ஒரு முஸ்லீம் சம்மந்தமே இல்லாத மக்களை கொல்லும் கொடூரம் நடந்துக்கொண்டு இருக்கும் போது, பாதுகாப்பு பற்றி அதுவும் இஸ்லாமியர்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டும் என்பது பற்றி பேசுவது வேடிக்கையானது. எப்போது தனி மனிதன் குற்றம் இழைக்கமாட்டேன் என்று முடிவு எடுத்து வாழ்வானோ அன்று தான் குற்றங்கள் முழுவதுமாக குறையுமே தவிர, இந்தியா போன்ற ஜனத்தொகை உள்ள நாட்டில் பாதுகாலவர்களினால் 100% குற்றங்களை குறைக்கமுடியாது.

நான் பீஜே அவர்களிடம் சொல்ல விரும்புவது, நீங்கள் எழுத்துவிவாதத்திற்கு தயார் என்றால், நானும் தயார்.
 
பீஜே அவர்கள் எழுதியவை:

பொருளாதாரச் செலவு குறித்து அவர்களுக்குத் தயக்கம் என்றால் அதையும் நாம் ஏற்றுக் கொள்வோம் என்று கூறி பகிரங்க விவாதத்துக்கு தொடர்ந்து அழைப்பு கொடுங்கள்.
 
உமர் எழுதியது

பொருளாதார செலவு ஒரு பிரச்சனை இல்லை.
 
பீஜே அவர்கள் எழுதியவை:

இந்த அழைப்பை அனைவருக்கும் தெரியும் வகையில் பரவலாக்குங்கள். அவர்கள் ஒப்புக் கொண்டால் எங்கே தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்தால் நான் சென்று விவாத ஒப்பந்தம் செய்யத் தயார். இதை அவர்களுக்குத் தெரிவித்து வலியுறுத்துங்கள். கிறித்தவ நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் அவர்கள் மூலமாகவும் நெருக்கடியை ஏற்படுத்துங்கள்.
 
உமர் எழுதியது:

2007ம் ஆண்டிலிருந்து என் எழுத்து விவாத அழைப்பு பரவலாக இணையத்தில் இருக்கிறது, உங்களுக்கு எவ்வளவு நெருக்கடியை எங்கள் கட்டுரைகள் உருவாக்கியிருக்கிறது என்பதை என்னால் உணரமுடிகிறது.

நாங்கள் ஒரு குழுவாக ஒரு சில நண்பர்கள் சேர்ந்து இந்த மொழியாக்க வேலையைச் செய்கிறோம். நாங்கள் ஒரு சங்கத்தை ஸ்தாபனத்தை அமைத்து செயல்படவில்லை.

தமிழ் கிற்ஸ்தவர்கள் இஸ்லாமிய அறிஞர்களின் விமர்சனங்களை படித்துள்ளார்கள், அதுபோல கிறிஸ்தவ பதில்களையும் படித்துக்கொண்டு இருக்கிறார்கள், இஸ்லாம் பற்றி ஓரளவிற்கு அவர்களுக்கு புரிந்துவிட்டது, எனவே, யாரும் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கமுடியாது.

எழுத்துவிவாதத்திற்கு வந்தால், நாங்கள் ஒப்புக்கொள்வோம். நேரடி விவாதத்திற்கு மட்டும் வரமுடியாது. இது தான் எங்கள் பதில்.
 
 
நான் நேரடி விவாதத்திற்கு வர மறுத்துவிட்டேன், இனி பீஜே அவர்கள் ஈஸா குர்ஆன் கட்டுரைகள் பற்றி என்ன முடிவு எடுக்கப்போகிறீரக்ள்?

பீஜே அவர்களே, எழுத்து மூலமாகவும் இஸ்லாம் பதிலைத் தரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால், இதுவரை நாங்கள் (ஈஸா குர்ஆன், மற்றும் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்) பதித்த தமிழ் கட்டுரைகளை உங்கள் தளத்தில் குறிப்பிட்டு, அவற்றிற்கு பதிலைக் கொடுப்பீர்களானால், தமிழ் பேசும் மக்கள் இஸ்லாம் பற்றி ஒரு நல்ல முடிவிற்கு வருவார்கள். இப்படி செய்யாமல், வெறும் சொல்லிய விஷயத்தை கிளிப்பிள்ளையைப் போல சொல்லிக்கொண்டு இருந்தால், "இஸ்லாமியர்கள் மேடையில் தான் பேசுவார்கள், எழுத்துக்களில் இவர்களால் பதிலைத் தரமுடியவில்லை" என்று மக்கள் நினைத்துக்கொள்வார்கள்.

நேரடி விவாதத்திற்கு ஒப்புக்கொள்பவர்களிடம் நேரடியாக விவாதம் புரியுங்கள், எழுத்து மூலம் விவாதம் புரிபவர்களிடம் எழுத்து மூலமாக விவாதம் புரியுங்கள்.

நீங்கள் எங்கள் தள தொடுப்புக்களை கொடுப்பீர்களோ இல்லையோ, நாங்கள் மட்டும் உங்கள் விமர்சனங்களை எழுதி அதற்கு பதிலை கொடுத்துக்கொண்டே இருப்போம்.

இன்னும் அனேக இஸ்லாமிய சகோதரர்கள் பீஜே அவர்களின் விவாதத்திற்கு வரமுடியுமா என்று கேட்டு மெயில்களை தொடர்ந்து அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள், அவர்களில் ஒருவர் "ரிமைன்டர் 1" என்று ரிமைன்டரும் அனுப்பிக்கொண்டு இருக்கிறார், அவரிடம் நான் கேட்கிறேன், 2007ம் ஆண்டிலிருந்து எத்தனை ரிமைன்டர்களை நீங்கள் பீஜே அவர்களுக்கு அனுப்பியிருக்கிறீரக்ள்? எழுத்துவிவாதத்திற்கு ஏன் ஒப்புக்கொள்ளும் படி அவருக்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறீர்களா? இனியாவது கொடுங்கள், எழுத்துவிவாதத்திற்கு ஒப்புக்கொள்ளுங்கள் என்று அவருக்கு சொல்லுங்கள்.
 
 
Umar

வெள்ளி, 1 ஜனவரி, 2010

இஸ்லாம் கல்விக்கு பதில் - மோசேயும் சமாரியனும் (ஸாமிரியும்)

இஸ்லாம் கல்விக்கு பதில்

மோசேயும் சமாரியனும் (ஸாமிரியும்)

(குர்‍ஆனின் சரித்திர தவறு)

Moses and the Samaritan

முன்னுரை: இஸ்லாம் கல்வி தளத்தின் வாயிலாக, தேங்கை முனீஃப் என்ற இஸ்லாமியர் "திருக்குர்ஆனில் சரித்திர தவறா? (பகுதி – 2) " என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பதித்தார், அதற்கான பதிலை இரண்டு பகுதிகளாக காண்போம்.

பாகம் 1: குர்ஆனும் சரித்திர தவறும் மோசேயின் காலத்தில் சமாரியனும் (ஸாமிரி)

பாகம் 2: இஸ்லாம் கல்வி தளத்தின் கட்டுரைக்கு மறுப்பு

குர்ஆன் எப்படி மோசேயின் காலத்தில் சமாரியர்களைப் பற்றிச் சொல்லி ஒரு சரித்திர பிழையை செய்துள்ளது என்பதை இந்த முதல் பாகத்தில் காணலாம். இரண்டாம் பாகத்தில் இஸ்லாம் கல்வி தளம் கொடுத்த பதிலைக் குறித்து மறுப்பைக் காணலாம்.

பாகம் 1: குர்ஆனும் சரித்திர தவறும் மோசேயின் காலத்தில் சமாரியனும் (ஸாமிரி)

இஸ்லாம் கல்வி தளம் "கிறிஸ்தவர் விமர்சித்தார்" என்றுச் சொல்லி ஒரு பத்தியை பதித்துள்ளது.

தேங்கை முனீஃப்

கிறிஸ்தவர்களின் விமர்சனம்:

//மோசேயினுடைய காலத்தில் சமாரியர்கள் இருந்ததாக "எந்தவொரு" சரித்திரமும் கூறவில்லை. மாறாக கி. மு 722 ஆண்டுகளில் தான்சமாரியர்களைப்பற்றி சரித்திரம் கூறுகின்றது. அதற்கு முதல் சமாரியர்கள் இருந்தததுமில்லை. மோசேயின் காலம் கி.மு 1400. இப்படியிருக்கையில் குர்-ஆன் சமாரியனைப்பற்றி அறிவில்லாமல் கூறி மீண்டும் சரித்திரத்தில் தவறு செய்துவிட்டது.//

குர்ஆன் மீது இப்படி ஒரு விமர்சனத்தை கிறிஸ்தவர் ஒருவர் தனது இணைய தளத்தில் பதிவு செய்துள்ளார். அதைப் பின்பற்றி சில கிறிஸ்தவர்களும் இதனைப் பரப்பி வருகின்றனர். Source: "திருக்குர்ஆனில் சரித்திர தவறா? (பகுதி – 2)"

ஆனால், இந்த குர்ஆன் சரித்திர தவறு பற்றிய முழு விவரத்தை இப்போது நாம் காண்போம்..

காளைக் கன்றுப் பற்றிய நிகழ்ச்சியை குர்‍ஆனில் கீழ்கண்ட விதமாக நாம் படிக்கிறோம்:

"நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை 'ஸாமிரி' வழிகெடுத்து விட்டான்" என்று (அல்லாஹ்) கூறினான்.

ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து . . .

". . . நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே
ஸாமிரியும் எறிந்தான்" என்று அவர்கள் கூறினார்கள்.

பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் "இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்" என்று சொன்னார்கள்.

...
"ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?" என்று மூஸா அவனிடம் கேட்டார். (குர்‍ஆன் 20:85-88, 20:95)
He [Allah] said, "We have tempted thy people since thou didst leave them. 'The Samaritan has led them into error." Then Moses returned ... ... and we cast them [(gold) ornaments], "as the Samaritan" also threw them, into the fire." (Then he brought out for them a Calf, a mere body that lowed; and they said, "This is your god, and the god of Moses, whom he has forgotten.") ... Moses said, "And thou, 'Samaritan," what was thy business?" ... -- Sura 20:85-88, 95

சமாரியா பட்டணம் உம்ரி இராஜாவினால் கி.மு. 870ல் ஸ்தாபிக்கப்பட்டது (பார்க்க 1 இராஜாக்கள் 16:24), ஆனால்,அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு. 1400 காலக் கட்டத்தில் வாழ்ந்த மோசேயின் காலத்தில் இஸ்ரவேல் மக்களை எப்படி ஒரு சமாரியன் வழிகெடுத்து இருப்பான்? "சமாரியர்கள்" என்ற தனிப்பட்ட பிரிவு வட இஸ்ரவேல் மக்கள் நாடு கடத்தப்பட்ட பிறகு தான் அடையாளம் காணப்பட்டார்கள். அந்த நிலப்பரப்பில் கி.மு. 722ல் சர்கான் II என்ற அரசன் காலத்தில் இவர்கள் இஸ்ரவேலரல்லாதவர்களோடு ஒன்றர கலந்து வாழலானாரகள். இவர்கள் யூத மற்றும் இதர பல மத கோட்பாடுகளை பின்பற்றலானார்கள். ஆக, ஒரு சமாரியன் இஸ்ரவேல் மக்களை மோசேயின் காலத்தில் விக்கிர ஆராதனை என்ற வழிகேட்டுக்கு வழி நடத்தினான் என்பது சரித்திரத்தின் படி நடக்கமுடியாத ஒரு விஷயமாகும். மோசே மற்றும் சமாரியர்களின் கால கட்டம் குறைந்த பட்சம் 500 லிருந்து 700 ஆண்டுகள் கால வித்தியாசம் கொண்டது.

இந்த "சமாரியன்" என்ற வார்த்தையை யூசுப் அலி அவர்கள் தன் குர்ஆன் மொழியாக்கத்தில்
"ஸாமிரி - Samiri" என்று மொழியாக்கம் செய்தார்,

பிக்தால் (Pickthall) தன் மொழியாக்கத்தில்
"அஸ் ஸாமிரீ - As Samirii" என்றும் மொழியாக்கம் செய்துள்ளார்.

ஆர்பெர்ரி (Arberry) ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும் போதும், கஸிமிர்ஸ்கி (Kasimirski) என்பவர் பிரென்சு மொழியில் மொழியாக்கம் செய்யும் போதும் இவ்வார்த்தையை
"ஸமாரியன் - Samaritan" என்று சரியாக மொழியாக்கம் செய்துள்ளார்கள்.

யூசுப் அலி தன் பின் குறிப்பில், இவ்வார்த்தைக்கு பொருள் கூறுகிறார், அதாவது இந்த பெயர்
"ஷெமர் - Shemer" என்பதாகும் இதற்கு "அறிமுகமில்லாதவர்" என்று பொருள், அல்லது "ஷோமெர் - Shomer" என்பதாகும் இதற்கு "காவல் காப்பவர்" என்று பொருள் என்கிறார். இதற்கு நிகரான அரபி வார்த்தை "ஸமரா - Samara" என்பதால் அவர் இப்படி வார்த்தைகளுக்கு பொருள் கூறியுள்ளார். இந்த வார்த்தைக்கு இதர பொருள்களை கொடுக்க யூசுப் அலி அவர்களின் முயற்சிக்கு அரபி மொழி ஒத்துழைக்கவில்லை. ஆர்பெர்ரியும், கஸிமிர்ஸ்கி அவர்களும் மொழியாக்கம் செய்தது போல, அரபி வார்த்தைகளுக்கு நிகரான மொழியாக்கத்தை யூசுப் அலி அவர்கள் செய்திருக்க வேண்டும்.

தாமஸ் பாட்ரிக் ஹக்ஸ் தன் "டிக்ஷ்னரி ஆப் இஸ்லாம் - Dictionary of Islam" , பக்கம் 564ல் "அல் பைதாவி [அஸ் ஸாமிரி குறித்து] கூறும் போது, அவருடைய பெயர் மூஸா இபின் ஜாபர், இவர் சமாரிய குலத்தை சேர்ந்தவர் என்று கூறியுள்ளார்".

இந்த குழப்பம் முஹம்மதுவிற்கு எப்படி வந்தது? பரிசுத்த வேதாகமத்தில் இரண்டு இடத்தில் கன்றுக்குட்டி விக்கிரகம் பற்றிய விவரங்கள் வருகின்றன.

சலொமோன் ஆட்சி காலத்திற்கு பின்பு, இஸ்ரவேல் மக்களின் நாடு இரண்டு பாகங்களாக பிரிந்துப்போனது, அதாவது தென் பகுதி யூதா என்றும் வட பகுதி இஸ்ரேல் என்றும் பிரிந்தது. ஆனால், தேவனை ஆராதனை செய்யக்கூடிய இடம் மட்டும் இன்னும் எருசலேமில் மட்டுமே இருந்தது. தன்னுடைய ஆட்சிக்கு ஒரு ஆதாரமாக இருக்கவேண்டுமென்பதற்காக, முதலாம் யெரோபெயாம், இரண்டு இடங்களை தெரிந்துக்கொண்டு அவைகளில் பொன் கன்றுக்குட்டி விக்கிரகங்களை செய்வித்து வைத்தான்(1 இராஜாக்கள் 12:26-33). ஆனால், இப்படிப்பட்ட அருவருப்பு கூடாது என்று தேவன் தன் தீர்க்கதரிசிகள் மூலமாக திட்டவட்டமாக எச்சரித்துள்ளார். (1 இராஜாக்கள் 12:30, 2 இராஜாக்கள் 10:29; 17:16; 2 நாளாகமம் 13:8). அதன் பிறகு சமாரியா பட்டணம் இந்த வட இஸ்ரேல் பாகத்திற்கு தலை நகரமாக மாறியது.

பொன் கன்றுக்குட்டி வணக்கம் பற்றி இரண்டு நிகழ்ச்சிகளை பைபிள் சொல்கிறது. முதலாவது மோசேயின் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி, இரண்டாவது சமாரியாவை தலை நகரமாக கொண்ட வட இஸ்ரேலில் நடந்த நிகழ்ச்சியாகும். இந்த இரண்டு நிகழ்ச்சிகளை சரியாக புரிந்துக்கொள்ளாமல் தான் முஹம்மது குழம்பியிருக்கவேண்டும். ஓசியா தீர்க்கதரிசன புத்தகத்தில் இதைப் பற்றிய வசனம் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

சமாரியாவே, உன் கன்றுக்குட்டி உன்னை வெறுத்துவிடுகிறது; என் கோபம் அவர்கள்மேல் மூண்டது; எதுவரைக்கும் சுத்தாங்கம் அடையமாட்டாதிருப்பார்கள்? அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; தட்டான் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாய்ப் போகும். (ஓசியா 8:5-6)

.குர்‍ஆன் 20:97ல் அந்த கன்றுக்குட்டியைப் பற்றி தொடர்ந்துச் சொல்கிறது..

"நீ இங்கிருந்து போய் விடு நிச்சயமாக இந்த வாழ்க்கையில் (எவரைக் கண்டாலும், என்னைத்) "தீண்டாதீர்கள்" என்று சொல்(லித் திரி)வது தான் உனக்குள்ளது, (மறுமையில்) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையும் உண்டு அதை விட்டும் நீ தப்பமாட்டாய்; மேலும்; நீ தரிபட்டு ஆராதனை செய்து கொண்டிருந்தாயே அந்த "நாயனைப்" பார்; நிச்சயமாக அதனைச் சுட்டெரித்துப் பின்னர் (சாம்பலாக்கி) அதைக் கடலில் பரத்திவிடுவோம்" என்றார்.

(Moses) said [to the Samaritan]: "Get thee gone! But thy (punishment) will be that thou wilt say, 'Touch me not'; ... Now look at thy god, of whom you hast become a devoted worshipper: We will certainly burn it in blazing fire and scatter it broadcast in the sea!"
இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கு இடையே இருக்கும் தொடர்பைப் பாருங்கள். ஓசியா தீர்க்கதரிசி கூறிய அந்த "சமாரியாவின் கன்றுக்குட்டியைப் பற்றி தான்", குர்ஆன் சொல்லுகின்ற "ஆராதனை செய்துக்கொண்டு இருந்த கன்றுக்குட்டி". இந்த இரண்டு விவரங்களிலும் இறைவன் அதை (கன்றுக்குட்டி விக்கிரகத்தை) அழித்துவிடுவதாக கூறுகிறார். பைபிளில் கூறப்பட்ட சமாரிய வசனத்திற்கும், குர்ஆனில் சொல்லப்பட்ட ஸாமிரி/ஸமாரியன் நிகழ்ச்சிக்கும் இடையே இன்னொரு ஒற்றுமையும் உண்டு. சமாரியர்களுக்கு உண்டாகும் தண்டனை என்னவென்றால், அது "தீண்டத்தகாதவர்கள்" என்பதாகும். தீண்டத்தகாதவர்கள் என்றால் சுத்தமில்லாதவர்கள், அதாவது விக்கிர ஆராதனை செய்ததால் இப்படி கூறப்பட்டார்கள். இது எஸ்றா கால முதல் இன்றுவரையும் யூதர்கள் சமாரியர்களை தீண்டத்தகாதவர்களாக கண்டதும் இந்த விக்கிரத்தை ஆராதத்தினால் தான். இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையானது தெளிவாக தெரிகிறது. அது மட்டுமல்லாமல், மோசேக்கு பிறகு 700 ஆண்டுகள் வரை சமாரியர்கள் என்பவர்கள் இல்லை. முஹம்மது மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிரயாணம் செய்துள்ளார், அங்கு அவர் சமாரியர்கள் பற்றி அறிந்திருப்பார், மட்டுமல்ல, விக்கிர ஆராதனை செய்ததால் தான் யூதர்கள் சமாரியர்களை தீண்டத்தகாதவர்கள் என்று கருதுகிறார்கள் என்பதையும் அவர் அறிந்திருக்கக்கூடும். யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே இருக்கும் இந்த விவரத்தைச் சொல்ல வந்த முஹம்மது அறியாமையால் மோசே காலத்து "பொன் கன்றுக்குட்டியோடு" சம்மந்தப்படுத்தி தவறாக‌ பேசிவிட்டார்.

சிந்திக்கத் தூண்டும் ஒரு கேள்வி என்னவென்றால், "அஸ் ஸாமிரி" என்ற வார்த்தைக்கு பொருள் "ஸமாரியன்" அல்ல என்று இஸ்லாமியர்கள் சொன்னால், "ஸமாரியன்" என்ற வார்த்தையை அரபியில் எப்படி கூறுவீர்கள்? இன்றளவும் ஒரு சிறு பிரிவினராக ஸமாரியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கிறார்கள். இவர்களை அரபியர்கள் அரபியில் எப்படி அழைப்பாரகள்? (மூலம்: http://www.answering-islam.org/tamil/quran/contra/qbhc01.html

முடிவுரை:

பொன் கன்றுக்குட்டிகளை வணங்கிய இரண்டு நிகழ்ச்சிகளைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. முதலாவது மோசேயின் காலத்தில் நடந்தது, இரண்டாவது நிகழ்ச்சி பல நூற்றாண்டுகளுக்கு பிறகு சமாரியர்களின் காலத்தில் நடந்தது. தங்கள் வம்சமாக இருந்தும் இப்படி விக்கிர ஆராதனை செய்ததால், சமாரியர்களை யூதர்கள் தீண்டத்தகாதவர்களாக கருதினார்கள். யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே இருந்த வெறுப்புணர்ச்சியை நாம் புதிய ஏற்பாட்டிலும் காணலாம். இதனை சரியாக புரிந்துக்கொள்ளாமல் சமாரியர்களை மோசேயின் காலத்தில் வாழ்ந்ததாக முஹம்மது கருதி அதனை குர்‍ஆனிலும் சேர்த்துவிட்டார் முஹம்மது.

இக்கட்டுரையின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில், இஸ்லாம் கல்வி தளம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலைக் காண்போம். சமாரியர்கள் மோசேயின் காலத்திற்கு முன்பே அல்லது அந்த காலத்திலிருந்தே சமாரிகள் என்று அழைக்கப்பட்டார்களா? அல்லது இது முஹம்மதுவின் இன்னொரு சரித்திர தவறா என்பதை நாம் அடுத்த பாகத்தில் காணலாம்.

இந்த குர்ஆன் சரித்திர தவறு பற்றி இஸ்லாமிக் அவார்னஸ் தளத்திற்கு கொடுத்த பதிலை இங்கு படிக்கலாம்.