ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 21 மார்ச், 2009

கிறிஸ்தவன் பார்வையின் "பைபிள் கூறும் பயங்கரவாதம் (2)" கட்டுரைக்கு பதில்: 2

கிறிஸ்தவன் பார்வையின்


"பைபிள் கூறும் பயங்கரவாதம் (2)" கட்டுரைக்கு பதில்: 2

 
முன்னுரை:


பைபிள் கூறும் பயங்கரவாதம் என்ற பெயரில் "கிறிஸ்தவம் பார்வை" தளம் தொடர் கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கிறது. இவர்களின் முதல் கட்டுரைக்கு நாம் அளித்துள்ள பதிலை இங்கு படிக்கலாம்:

இந்த தற்போதைய கட்டுரையில் அவர்களின் இரண்டாம் பாகத்திற்கு நாம் பதிலை காண்போம்.
 
அபூ அப்திர்ரஹ்மான்

பைபிள் கூறும் பயங்கரவாதம் (2)

பயங்கரவாதம் - வன்முறை மற்றும் பைபிள்!

தாங்கள் செய்த/செய்யும் அக்கிரமச் செயல்களை நியாயப்படுத்த, அன்றைய காலத்தில் தாங்கள் செய்த ஆபாச, அக்கிரமங்கள் அனைத்தும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டன என்று சாயம் பூசியது புரோகித வர்க்கம். இதற்காக இவர்கள் இறைவனால் தூதர்களாக தேர்வு செய்யப்பட்ட தீர்க்கதரிசிகளின் பெயரிலும் கையாடல்கள் செய்வதற்கும்த் தயங்கவில்லை. இதனால் தான் வேதம் என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படும் பைபிள், ஆபாசம் மற்றும் வன்முறைச் சம்பவங்களால் அசிங்கப்பட்டுக் கிடக்கிறது.

 
ஈஸா குர்‍ஆன்

"முஹம்மது செய்த அக்கிரமச் செயல்களை நியாயப்படுத்த, அன்றைய காலத்தில் அவ‌ர் செய்த ஆபாச, அக்கிரமங்கள் அனைத்தும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டன என்று சாயம் பூசியது இஸ்லாமிய புரோகித வர்க்கம். இதனால் தான் வேதம் என்று இஸ்லாமியர்களால் நம்பப்படும் குர்‍ஆன், ஆபாசம் மற்றும் வன்முறைச் சம்பவங்களால் அசிங்கப்பட்டுக் கிடக்கிறது."

மேலே உள்ள வரிகளில் அடிக்கோடிட்ட வரிகளை மட்டுமே நான் எழுதினேன், மற்றவைகள் எல்லாம், அபூ அப்திர்ரஹ்மான் அவர்களின் வரிகளே. இப்போது அந்த வரிகளை படித்தால் எப்படி பொருத்தமாக உள்ளது பாருங்கள். அதற்காகத் தான் சொல்கிறேன், இஸ்லாமியர்களே, கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். விவாதம் என்றால் வசனங்களை முன்வைக்கவேண்டும், அதற்கு பொருள் கூறவேண்டும், அதை விட்டுவிட்டு, சொந்தமாக வரிகளை அள்ளிவீசினால், இப்படித்தான் பொருள் விபரீதமாக மாறும்.

நீங்கள் பைபிள் பற்றி என்ன எழுதினாலும், கிறிஸ்தவர்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்கள் என்ற காலம் சென்றுவிட்டது, இனி எல்லாருக்கும் இஸ்லாம் பற்றியும், உங்கள் யுக்திகள் பற்றியும் தெரிந்துவிட்டது, எனவே சிறிது சிந்தித்து எழுதுங்கள்.
 
அபூ அப்திர்ரஹ்மான்

ஒருபுறம் தங்களை அமைதிப் புறாக்களாகக் காட்டும் கிறிஸ்தவர்கள், திரைமறைவில் செய்து வரும் வேலைகளைக் குறித்து பலரும் அலட்சியமாகவே இருக்கின்றனர்.
 
ஈஸா குர்‍ஆன்

ஆனால், உங்கள் மதம் "அமைதி மதம்" என்ற மிகப்பெரிய பொய்யை அதிக‌ சத்தத்தோடு சொல்லும் இஸ்லாமியர்களின் வேலைகளைக் குறித்து உலக மக்கள் அலட்சியமாக இல்லை என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளவும்.

மற்ற நாடுகளில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்தார்கள் என்ற செய்தியை இந்திய மக்கள் தொலைக்காட்சியில் காணும் போது, ஏதோ ஓரளவிற்கு வேதனை அடைந்தனர், ஆனால், நம் நாட்டிலேயே, மும்பையில் நடைப்பெற்ற தீவிரவாத செயல்களை, ஹாலிவுட் பிரமாண்ட தயாரிப்பில் கூட பார்க்காத அளவிற்கு நேரடி ஒளிபரப்பில் கண்டு, மக்கள் பிரத்துவிட்டார்கள்.

எனவே, திரைமறைவில் யார் என்ன செய்கிறார்கள் என்பதை எல்லாரும் நன்றாக அறிவோம்.
 
அபூ அப்திர்ரஹ்மான்

மிஷினரிகளுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது என்பதை அவர்களின் செயல்களை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் அறிந்து கொள்வர்.
 
ஈஸா குர்‍ஆன்

இன்றைக்கு இஸ்லாமின் உண்மை முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு தெரிந்துவிடுகிறது என்பதால் தானே அதிக ஆவேசத்தோடும், கோபத்தோடும் திட்டுகிறீர்கள்.

இஸ்லாமுக்கு இரண்டு முகங்கள் உண்டு.

முதலாவது முகம் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் காட்டப்படும் முகம், இஸ்லாம் அனைவரையும் ஒரே விதத்தில் பார்க்கிறது, பேதங்கள் பார்ப்பதில்லை என்று நமக்கு இஸ்லாமியர்கள் கூட்டங்கள் போட்டு, பல நிகழ்ச்சிகள் நடத்தி விவரிப்பார்கள்.

இரண்டாவது முகம், இஸ்லாமிய நாடுகளில் காட்டப்படும் முகம் ஆகும். சரியாகச் சொல்லவேண்டுமானால், நம் நாட்டில் காட்டப்படும் முகத்தை "உண்மை இஸ்லாம்" என்றுச் சொல்லமுடியாது. இஸ்லாமிய நாடுகளாகிய சௌதி அரேபியா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில், ஷரியா சட்டம் அமுலில் இருக்கும் நாடுகளில் வெளிப்படும் இஸ்லாமே உண்மையான இஸ்லாமாகும். அதிகாரம், ஆட்சி கையில் இல்லாத போது ஒரு வகையான இஸ்லாம், ஆட்சி அதிகாரம் கையில் வந்தவுடன் வேறுவகையான இஸ்லாம். இதனை தினசரி செய்தித்தாள்களை வாசிப்பவர்கள் கண்டுக்கொள்வர்.
 
அபூ அப்திர்ரஹ்மான்

ஆபாசம், வன்முறை, முன்னுக்குப் பின் முரணான தகவல்கள், பொய்கள் என அசிங்கக் குப்பைகள் நிறைந்துக் கிடக்கும் பைபிளில், புரோகிதர்களின் கைகளிலிருந்துத் தப்பி இன்னமும் கையாடல் செய்யப்படாமல் ஆங்காங்கே வெளிப்படும் இறைவனின் கட்டளைகளைக் கூட அதனை வேதமாகக் கருதும் கிறிஸ்தவர்களே பின்பற்றுவதில்லை என்பது முரண்பாட்டின் உச்சகட்டம்!
 
ஈஸா குர்‍ஆன்

பாவம் உங்கள் அல்லாஹ், மனிதர்கள் தன் வேதங்களில் கையாடல்கள் செய்யும் போது என்ன செய்துக்கொண்டு இருந்தார்?

ஏதாவ‌து விடுமுறைக்கு சென்று இருந்தாரோ?

அல்ல‌து

உல‌க‌த்திலிருந்து த‌ன்னிட‌ம் வ‌ரும் ஆண்க‌ளுக்கு பெண்க‌ளை த‌யார் ப‌டுத்தும் வேலையில் அன்றிலிருந்தே ரொம்ப‌ பிஸீயாக‌ இருந்தாரோ?

அல்லாஹ் இற‌க்கிய‌ வேத‌த்தை ம‌னித‌ர்க‌ள் மாற்றிவிட்டார்க‌ள் என்றுச் சொல்ல‌ உங்க‌ளுக்கு நெருட‌லாக‌ தெரிய‌வில்லை? அப்ப‌டிச் சொல்வ‌து அல்லாஹ்விற்கு அவ‌மான‌த்தை கொண்டு வ‌ரும் என்ப‌தை நீங்க‌ள் சிந்திப்ப‌தில்லையா?

என் வேதத்தை யாரும் மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டு, இப்போது மாற்றிவிட்டார்கள் என்றுச் சொல்வது கேவலமாக தெரியவில்லையா? இதைக்குறித்த அப்துல்லாவும் அப்ரஹாமும் - உரையாடல் கட்டுரையை இங்கு படிக்கலாம்:

இஸ்லாமியர்களின் லாஜிக்:


இஸ்லாமியர்களுக்கென்று ஒரு தனி லாஜிக் உள்ளது. கீழ் கண்ட விவரங்களை பாருங்கள். இன்னும் பைபிளில் சில வசனங்கள் "கலப்படம் செய்யப்படாமல்" அப்படியே சுத்தமாக இருக்கிறது என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

//புரோகிதர்களின் கைகளிலிருந்துத் தப்பி இன்னமும் கையாடல் செய்யப்படாமல் ஆங்காங்கே வெளிப்படும் இறைவனின் கட்டளைகளைக் கூட//

ஏன் இஸ்லாமியர்கள் இப்படி சொல்கிறார்கள்? பைபிள் கலப்படம் செய்யப்பட்டது என்றுச் சொல்லும் அதே இஸ்லாமியர்கள், ஒரு சில வசனங்கள் மட்டும் ஏன் மாற்றமடையாமல் இருக்கிறது என்றுச் சொல்கிறார்கள்? இதற்கு பதில் சொல்வது மிகவும் சுலபம்.

இது இஸ்லாமியர்களின் வஞ்சகத்தன்மையை மாய்மால குணத்தைக் காட்டுகிறது. அதாவது, இஸ்லாமியர்களை பொருத்த வரை, அவர்களின் லாஜிக் கீழ்கண்ட விதமாக உள்ளது.

1) பைபிளில் இருக்கும் விவரங்கள் (நிகழ்ச்சிகள்) குர்‍ஆனிலும் அதே போல இருந்தால், அந்த வசனங்களை மனிதர்கள் திருத்தவில்லை, காரணம் என்ன? அதே நிகழ்ச்சி அப்படியே மாற்றமில்லாமல் குர்‍ஆனில் இருக்கிறதே, அதனால், அவ்வசனங்கள் கலப்படம் செய்யப்படாதவைகள்.

2) பைபிளில் இருக்கும் விவரங்கள், குர்‍ஆனில், ஹதீஸ்களில் இல்லாமல் இருந்தால், பைபிளில் இருக்கும் அந்நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட வசனங்கள் மனிதர்களால் திருத்தப்பட்டவைகளாகும். ஏன் இப்படி என்று கேட்டால், அந்நிகழ்ச்சி குர்‍ஆனில் இல்லை அதனால் தான்.

3) பைபிளில் ஒரு நிகழ்ச்சி பற்றி ஒன்றுமே குறிப்பிடாமல் இருக்கும் பட்சத்தில், ஒரு புதிய நிகழ்ச்சி பற்றி குர்‍ஆன் சொல்லியிருந்தால், அந்நிகழ்ச்சி பற்றிய விவரங்களை மனிதர்கள் பைபிளிலிருந்து நீக்கிவிட்டார்கள். ஏன் இப்படி என்று கேட்டால், குர்‍ஆனில் இருக்கிறதல்லவா? அதனால் தான்.

எது எப்படியானாலும் சரி, குர்‍ஆன் சொல்வது தான் சரியானது, அதற்கு எதிராக ஒரு நிகழ்ச்சி பைபிளில் சொல்லப்பட்டு இருந்தால், அது முக்கியமாக குர்‍ஆனின் நம்பகத்தன்மையை பாதிப்பதாக இருந்தால், முஹம்மது பற்றி இவர்கள் சொல்லிவரும் பொய்களை தோல் உரிப்பதாக இருந்தால், உடனே, கிறிஸ்தவர்கள், யூதர்கள் அதனை மாற்றிவிட்டார்கள், அது முரண்பாடு என்றுச் சொல்லிவிடுவார்கள்.

இப்போது அப்திர் ரஹ்மான் அவர்கள் எழுதியதை இன்னொரு முறை படியுங்கள், அவர்களின் மாய்மால லாஜிக் புரியும்

//புரோகிதர்களின் கைகளிலிருந்துத் தப்பி இன்னமும் கையாடல் செய்யப்படாமல் ஆங்காங்கே வெளிப்படும் இறைவனின் கட்டளைகளைக் கூட//

ஏன் புரோகிதர்களின் கையிலிருந்து தப்பியது?
இன்னும் ஏன் கையாடல் செய்யப்படாத வசனங்கள் பைபிளில் இருக்கின்றன?

போன்ற கேள்விகளை நாம் கேட்டால், மேலே உள்ள இஸ்லாமிய லாஜிக்கில் நமக்கு பதில் கிடைக்கும். அதாவது பைபிளில் உள்ள அதே கட்டளைகள் குர்‍ஆனிலும் இருப்பதால், அவ்வசனங்கள் கையாடல் செய்யப்படவில்லை. என்னே லாஜிக் பார்த்தீர்களா?

 
அபூ அப்திர்ரஹ்மான்

"பன்றி மாமிசம் உண்ணக் கூடாது" என்று பைபிள் தடை விதித்தாலும் இறைவன் மனிதனுக்காகத் தான் எல்லாவற்றையும் படைத்தான் என்றும் பூமியில் படைக்கப் பட்டவையெல்லாம் அனுபவிக்கலாம் என்ற புரோகிதர்களின் சித்தாந்தத்தாலும் குழப்பம் ஏற்பட்டு இது குறித்து சரியான வழிகாட்டுதலைக் கொடுக்க பைபிள் தவறிய காரணத்தால் தீமை விளைவிக்கக் கூடியது என்பது தெரிந்த போதிலும் இன்று பன்றியை உண்பதில் கிறிஸ்தவர்களே முன்னணியில் நிற்கின்றனர்!
 
ஈஸா குர்‍ஆன்

வன்முறைக்கு ஆரம்பமாக பன்றியை முதலீடாக வைக்கிறார் அபூ அப்திர்ரஹ்மான் அவர்கள்:


 
பயங்கரவாதம் பற்றி எழுதுகிறேன் என்றுச் சொல்லிவிட்டு, பன்றி என்றும், மதுபானம் என்றும் ஆரம்பித்து, கடைசியாக ஜார்ஜ் புஷ்வரை எழுதியுள்ளார் சகோதரர் அப்திர் ரஹ்மான் அவர்கள்.

பழைய ஏற்பாட்டில் தேவன் மோசேயின் மூலமாக பன்றி மாமிசம் உண்ணவேண்டாம் என்றுச் சொல்லியுள்ளார், ஆனால், தேவன் கொடுத்த கட்டளையை கிறிஸ்தவர்கள் கடைபிடிப்பதில்லை என்று அதிகமாக இஸ்லாமியர்கள் வேதனைப்படுகிறார்கள். மோசேயின் கட்டளையை கிறிஸ்தவர்கள் மீறக்கூடாது என்றுச் சொல்கிறார்கள். நியாயமான கேள்வி தான், ஆனால், முதலில் கீழ் கண்ட விவரங்களை படித்து ஒரு முடிவிற்கு வாருங்கள்.

 
• மோசே கொடுத்த கட்டளையை கிறிஸ்தவர்கள் மீறுவது சரியில்லை என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், அதே மோசே மூலமாக அதே தேவன் கொடுத்த கட்டளையை முஹம்மது ஏன் மீறினார் என்று கேட்பார்களா?

• இஸ்லாமியர்கள் கடந்த 14 நூற்றாண்டுகளாக மோசேயின் கட்டளையை மீறி நடக்க‌ முஹம்மது காரணமாக இருக்கிறார் என்பதை இஸ்லாமியர்கள் அறிவார்களா?

• மோசேயின் கட்டளையை பவுல் மீறினார் என்று அவர் மீது குற்றம் சுமத்தும் இஸ்லாமியர்கள் இனி, அதே குற்றச்சாட்டை முஹம்மது மீதும் சுமத்தவேண்டும், செய்வார்களா?
 
மோசேயின் மூலமாக தேவன் கொடுத்த எந்தெந்த கட்டளைகளை முஹம்மது மீறியிருக்கிறார், அந்த கட்டளைகளுக்கு எதிராக‌ என்ன கட்டளைகளை சொல்லியுள்ளார் என்பதை கீழே படிக்கவும்.

 

1) பன்றியின் மாமிசம் மட்டுமல்ல, ஒட்டகத்தின் மாமிசத்தையும் உண்ணக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டுள்ளார், ஆனால், முஹம்மது மோசேயின் மூலமாக தேவன் கொடுத்த கட்டளைக்கு எதிராக ஒட்டக மாமிசம் உண்பதற்கு அனுமதி கொடுத்ததோடு மட்டுமில்லாமல், ஒட்டகங்களை அல்லாஹ்விற்கு பலியிடவும் அனுமதி கொடுத்துள்ளார். கிறிஸ்தவம் மீது சுமத்தும் அதே குற்றம் இப்போது இஸ்லாம் மீதும் உள்ளது, முஹம்மது செய்தது மோசேயின் கட்டளைக்கு எதிரானது இல்லையா? இஸ்லாமியர்கள் சிந்திப்பார்களா?

2) ஒரு பெண்ணை விவாகரத்து செய்த பின்னர், அப்பெண் வேறு கணவனை திருமணம் செய்துக்கொண்டு, பிறகு அந்த கணவனும் விவாகரத்து செய்துவிட்டால், முதல் கணவன் அப்பெண்ணை மறுபடியும் திருமணம் செய்யக்கூடாது, இது அருவருப்பானது என்று தேவன் சொல்லியிருக்கும் போது, அதற்கு நேர் மாறாக, முஹம்மது, அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்றுச் சொல்லியுள்ளாரே, இது மோசேயின் கட்டளைக்கு எதிராக இல்லையா?

3) மோசேயின் மூலமாக சப்பாத் (Sabbath) என்றுச் சொல்லும் ஓய்வு நாளை (சனிக்கிழமை) கடைபிடிக்கவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கும் போது, அதை மீறிவிட்டு, அந்த நாளை வெள்ளிக் கிழமையாக மாற்றிவிட்டு, நான் மோசேயைப் போல வந்த நபி என்று உங்கள் முஹம்மது சொல்லியிருக்கிறாரே? இது மீறுதல் இல்லையா? 14 நூற்றாண்டுகளாக ஓய்வு நாளைப்பற்றிய மோசேயின் கட்டளை மீறப்பட்டுக்கொண்டு இருக்கிறதே, இது தான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, தாவீது, இயேசு வழியில் வந்த ஒரு நபியின் நல்வழிக்காட்டுதலா?

4) மோசேயின் தேவன், போரில் பிடிப்பட்ட பெண்களை திருமணம் செய்துக் கொள்ளாமல், அவளோடு உடலுறவு கொள்ளக்கூடாது என்றுச் சொல்லியிருக்கும் போது, முஹம்மது போரில் பிடிப்பட்ட பெண்களை அடிமைகளை கற்பழிக்கவும், மறுபடியும் விற்கவும் கட்டளையிட்டுள்ளாரே, இது மீறுதல் இல்லையா? திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொள்ள அதாவது விபச்சாரம் செய்ய அனுமதி அளித்துள்ளாரே, இது மீறுதல் இல்லையா? இஸ்லாமியர்களா மோசேயின் கட்டளைகளைப் பற்றி அதிகம் கவலைப்படுவது?

 

இப்படி அனேக கட்டளைகளை முஹம்மது மீறியிருக்கிறார், மாற்றியிருக்கிறார் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

மேலே கண்ட அனைத்து விவரங்கள் குறித்த தமிழ் கட்டுரைகளை வசன ஆதாரங்களோடு இங்கு படிக்கவும்:

1) இஸ்லாமியர்களின் கேள்விக்கு பதில்: பன்றி மாமிசம் சாப்பிடுவதைப் பற்றிய விவாதம் (The Issue of Eating Pork)

2) பன்றி மீது ஷப்பீர் அலி அவர்களின் அதீத விருப்பம் பற்றிய ஆய்வு -"ப‌ன்றி மாமிசம் உண்ணுத‌ல்" க‌ட்டுரைக்கு கிறிஸ்த‌வ‌ ப‌தில் (An Examination of Shabir Ally's Fascination with Pigs -Being a Christian Response to his "Eating Pork" Article) பாகம் 1

3) இஸ்லாத்திற்கு மாறும் யூத மற்றும் கிறிஸ்தவர்கள்‌ - இஸ்லாமியர்களை சிந்திக்கத்தூண்டும் சில கேள்விகள் (Jewish and Christian Converts to Islam - Some Questions for Muslims to Ponder)

இதே தலைப்பைப் பற்றிய இதர ஆங்கில கட்டுரைகள்:

1) Muhammad and the Mosaic Law

2) Who Broke the Covenant: Paul or Muhammad?

3) An Examination of Shabir Ally's Fascination with Pigs (Being a Christian Response to his "Eating Pork" Article) Part 1, Part 2, Part 3

4) Do Muslims Truly Obey God's Everlasting Command, Or is Meherally Simply Trying to Pull A Fast One? - Circumcision

5) What is the day of congregation?

6) Sam Shamoun's answer to Bassam Zawadi's response

 

அபூ அப்திர்ரஹ்மான்

"மதுபானம் அருந்தாதீர்கள்" என்று பைபிள் உபதேசம் செய்தாலும் அந்தத் தீமையை தீர்க்கதரிசிகளே செய்து வந்தார்கள் என்றும் இயேசு கிறிஸ்து கூட கல்யாண விருந்தில் அதை பரிமாறியிருக்கிறார் என்று புரோகிதர்கள் எழுதி வைத்துள்ளதால் இது குறித்தும் தார்மீக வழிகாட்டுதல் இல்லாமல் பாஸ்டர் கூட மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதும் கிறிஸ்தவத்திலேயே நடக்கின்றன.

 

ஈஸா குர்‍ஆன்

இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றிய அற்புதம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு கீழ் கண்ட பதிலை நாம் ஏற்கனவே கொடுத்துள்ளோம்.

Answering Islamkalvi : இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்

அல்லாஹ் கொஞ்சம் கொஞ்சமாக மதுபானத்தை தடை செய்தார், அதுவரையில் இஸ்லாமியர்கள் குடித்தார்கள் என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள். திடீரென்று குடிப்பழக்கத்தை நிறுத்தமுடியாது, அதற்காக மனிதனின் மனநிலையை புரிந்துக்கொண்டு தான் அல்லாஹ் இப்படி அழகாக செய்தார் என்றுச் சொல்வார்கள். இஸ்லாமியர்களின் இப்படிப்பட்ட பலவீனமான வாதங்கள் அனைத்தும் ஒன்றுக்கும் உதவாத வாதங்களாக மாறிவிடுகின்றன, எப்படி என்பதை கீழ் கண்ட கட்டுரைகளை படித்துப்பார்க்கவும்.

Islam And Wine Consumption - Examining Muslim Arguments against The Bible in light of Islam's Gradual Prohibition of Wine Consumption

Muhammad, the Quran, and Prohibition: Islam's punishments for drinking and gambling

WINE IN ISLAM

குடித்தபோதையில் ஒட்டக எலும்பால் அடித்துக்கொண்டு காயப்பட்ட இஸ்லாமிய ஆரம்பகால மாமனிதர்கள்:

இஸ்லாமிய அறிஞரான இபின் கதிர், ஏன், எப்போது அல்லாஹ் வசனங்களை இறக்கினார் என்பதை குறிப்பிடுகிறார். குடித்த போதையில் ஒருவர் ஒரு ஒட்டகத்தின் எலும்பை எடுத்து, போட்டார் ஒரு போடு, மூக்கில் காயம், இறங்கியது வசனம்.

 

Causes of Its Revelation

Ibn Abi Hatim has recorded some reports about the incident of its revelation: Sa`d said, "Four Ayat were revealed concerning me. A man from the Ansar once made some food and invited some Muhajirin and Ansar men to it, and we ate and drank until we became intoxicated. We then boasted about our status.'' Then a man held a camel's bone and injured Sa`d's nose, which was scarred ever since. This occurred before Al-Khamr was prohibited, and Allah later revealed,

(O you who believe! Approach not As-Salat (the prayer) when you are in a drunken state). Muslim recorded this Hadith, and the collectors of the Sunan recorded it, with the exception of Ibn Majah.

Source: http://tafsir.com/default.asp?sid=4&tid=11257 - Tafsir Ibn Kathir

 

குடித்துவிட்டு, போதையில் தொழுகை செய்யும் போது வாய் குழம்பிய பே(போ)தையர்:

ஒரு இஸ்லாமியர் குடித்தார், போதை ஏறியது (சென்னைத் தமிழில் அழகாக மப்பு என்பார்கள்), குடித்த மயக்கத்திலேயே தொழுகை செய்ய ஆரம்பித்தார். மற்றவர்களை தொழுகையில் நடத்தும்படி, முன்னின்று தொழுகை செய்ய ஆரம்பித்தார்.

அவர் கீழ் கண்டவாறு குர்‍ஆன் சூராவை ஓதினார்:

"காஃபிர்களே! நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்,

ஆனால், நீங்கள் வணங்குபவற்றை நாங்கள் வணங்குவோம்"

இதற்காகவே இற‌ங்கிய‌து இன்னொரு வ‌ச‌ன‌ம்,

 

Another Reason Ibn Abi Hatim narrated that `Ali bin Abi Talib said, "Abdur-Rahman bin `Awf made some food to which he invited us and served some alcohol to drink. When we became intoxicated, and the time for prayer came, they asked someone to lead us in prayer. He recited `Say, `O disbelievers! I do not worship that which you worship, but we worship that which you worship [refer to the correct wording of the Surah: 109].''' Allah then revealed,

(O you who believe! Do not approach Salah when you are in a drunken state until you know what you are saying). '' This is the narration collected by Ibn Abi Hatim and At-Tirmidhi, who said "Hasan [Gharib] Sahih.'' Allah's statement,

Source: http://tafsir.com/default.asp?sid=4&tid=11257 - Tafsir Ibn Kathir

 

மேலே உள்ள விவரங்கள் இஸ்லாமிய ஆதாரங்களாகும், அதாவது குர்‍ஆன் விரிவுரைகளாகும், எனவே, எங்கள் மீது யாரும் கோபம் கொள்ளவேண்டாம்.

ஆக, இந்த வேலையை அந்த இஸ்லாமிய குடிமகன்கள் பல ஆண்டுகளுக்கு பின்பாக செய்ததால், தடை சிறிது சிறிதாக வந்தது என்று பெருமையாக இஸ்லாமியர்கள் இப்போது சொல்லிக்கொள்கிறார்கள், ஆனால், அவர்கள் அந்த வேலையை ஆரம்பத்திலேயே செய்திருந்தால், தடை ஆரம்பத்திலேயே வந்திருக்கும். மேலும் விவரங்களுக்கு மேலே தரப்பட்ட கட்டுரைகளை படிக்கவும்.

அபூ அப்திர் ரஹ்மான் அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்விகள்:

• பைபிளில் மதுபானம் தடைசெய்யப்பட்டு இருந்தால், ஏன் கிறிஸ்தவத்திற்கு பிறகு 600 ஆண்டுகளுக்கு பின்பு வந்த இஸ்லாமில் அந்த தடை ஆரம்பத்திலிருந்தே இல்லாமல் இருந்தது?

• பழைய ஏற்பாட்டில் பன்றி மாமிசம் கூடாது என்று மோசேயின் மூலமாக தேவன் (அல்லாஹ் - உங்கள் நம்பிக்கைப்படி) தடை செய்திருக்கும் போது, 2000 ஆண்டுகளுக்கு பின்பும் அது இஸ்லாமில் அமுலில் இருக்குமானால், அதே தேவன் கொடுத்த மதுபான தடை ஏன் இஸ்லாமில் ஆரம்பத்திலிருந்தே சொல்லுபடியாகாது?

• இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னுக்குச் சென்று, ஆபிரகாமுக்கு தேவன் கட்டளையிட்ட விருத்தசேதனம் என்பது, கி.பி. 600க்கு அடுத்து செல்லுபடியாகுமானால், அதே தேவன் விதித்த மதுபான தடை ஏன் செல்லுபடியாகாது?

 

அபூ அப்திர்ரஹ்மான்

"நீ திருமணம் முடிக்காதவனாக இருந்தால் (திருமணம் முடிக்க) பெண்ணைத் தேடாதே! திருமணம் முடித்திருந்தால் உன் மனைவியை விட்டுவிடாதே" என்று திருமணம் முடித்தல் பாவமா? நன்மையா? என்ற தெளிவான வழிகாட்டுதலை வழங்க பைபிள் தவறியதால் திருமணம் செய்யாமல் உணர்வுகளையும் அடக்க இயலாமல் சன்னியாசம் சென்று பாதி வழியில் வழிதவறி வருபவர்களும் கிறிஸ்தவர்களே!

 

ஈஸா குர்‍ஆன்

அந்த சன்னியாசம் எடுத்துக்கொண்டு, மறுபடியும் வழி தவறியவரிடம் சென்று:

 

• அய்யா கிறிஸ்தவ சன்னியாசியே, உங்கள் பைபிள் திருமணம் பற்றி, சரியாகச் சொல்லவில்லை, ஆனால், எங்கள் குர்‍ஆன் திருமணம் பற்றி மிகவும் சரியாகச் சொல்கிறது,

• எனவே, இஸ்லாமுக்கு மாறிவிடுங்கள், மட்டுமல்ல, நான்கு மனைவிகளை திருமணம் செய்துக்கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்,

• போதாக்குறைக்கு அடிமைப்பெண்கள் இருந்தால், அவர்களை திருமணம் செய்துக்கொள்ளாமலேயே அவர்களிடம் உடலுறவு கொள்ளலாம் (திருமணமில்லாமல் உடலுறவு கொள்வதை பொதுவாக எல்லாரும் விபச்சாரம்/வேசித்தனம்/கற்பழிப்பு என்றுச் சொல்வார்கள்),

• நீங்கள் உங்கள் உணர்வுகளை அடக்கவேண்டிய அவசியம் இஸ்லாமில் இல்லை, பணம், வசதி இருந்தால், எந்த வயதிலும் திருமணம் செய்துக்கொள்ளலாம்.

• நான்கு மனைவிகள் என்றால், நான்கு மட்டுமல்ல, நான்கில் ஒரு மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு புதிய பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒருவருக்கு நான்கு மனைவிகள் இருக்கலாம், இது தான் கணக்கு.

• கடைசியாக, மரித்துவிட்டாலும் சரி, அங்கேயும் எப்போதும் கன்னித்தன்மையாக இருக்கும் அழகான பெண்கள் கிடைப்பார்கள்" என்றுச் சொல்லி இஸ்லாமியராக மாற்றிக்கொள்ளுங்கள்.

 

திருமணம் கூடாது என்று தேவன் நினைத்து இருந்தால், ஏன் ஆதாமுக்காக ஏவாளை படைக்கப்போகிறார்? மனிதன் தனிமையாக இருப்பது நல்லது இல்லை என்றுச் சொல்லி, மனிதனின் தனிமையை போக்க, ஏன் ஒரு ஆணை படைக்கவில்லை?

ஆக, யார் யாரேல்லாம் திருமணம் பற்றி தெளிவான வழிகாட்டுதல் பைபிள் கொடுக்கவில்லை என்றுச் சொல்கிறார்களோ, அப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் தாராளமாக "திருமணம் பற்றி!" சரியான வழிகாட்டுதல் கொடுக்கும் இஸ்லாமுக்கு மாறிவிடலாம். (இக்கட்டுரையை படிக்கவும்: திருமண உறவிற்கு முன்பு உடலுறவா (விபச்சாரமா) செய்யுங்கள், செய்யுங்கள், செய்யுங்கள் என்றுச் சொல்கிறார் ஒரு மஹான்: Adultery: Do it! Do it! Do it!)

அருமை அப்திர் ரஹ்மான் அவர்களே, ஏதோ ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு மற்ற வசனங்களோடு ஒப்பிட்டுப்பார்க்காமல், ஏதோ நாமும் எழுதினோம் என்றுச் சொல்லி எழுதுவது எப்படி சரியாகும்?

 

அபூ அப்திர்ரஹ்மான்

தலைகுனிந்து ஆசீர்வதித்து அமைதிப்புறாவாக மக்களிடம் காட்சியளித்த அன்றைய போப்பும் கிறிஸ்தவ புரோகிதர்களும் தான் சிலுவை யுத்தம் இறையாட்சியை பூமியில் உருவாக்கும் புனிதப் போர் என்று சிலுவை யுத்தங்களுக்கு அழைப்பு விடுத்து இலட்சகணக்கில் மனிதர்களைக் கொன்றொழித்த மாபாதச்செயலைச் செய்தன.

 

ஈஸா குர்‍ஆன்

சபாஷ், கொலைப் பற்றி, மக்களை கொல்வதைப் பற்றி ஒரு இஸ்லாமியர் வேதனை அடைவதைக் கண்டால், மிகவும் மனதிற்கு இதமாக உள்ளது. (ஆனால், அப்படி மரித்தவர்கள் இஸ்லாமியர்கள் என்பது வேறு விஷயம்)

இஸ்லாமியர்கள் இறையரசை பூமியில் நிறுவ எடுத்துக்கொண்டு வரும் நல்ல செயல்களை உலகம் பார்த்துக்கொண்டு, படித்துக்கொண்டு, அனுபவித்துக்கொன்டு, வேதனை அடைந்துக்கொண்டு, பல்லை கடித்துக்கொண்டு இருக்கிறது நண்பரே.

கடந்த 14 நூற்றாண்டுகளாக மக்களை கொன்றுக்கொண்டு இருப்பது, அந்த போப்பை தலைவராக கொண்டுள்ள கிறிஸ்தவர்களா? இல்லையே! முஹம்மதுவை தலைவராக கருதும் இஸ்லாமியர்கள் தானே!


இஸ்லாமிய நாடுகளில் மற்ற மார்க்கத்தவர்களை கொடுமைப்படுத்துவது யார்?

பள்ளிக்கூடங்களிலும், சாலைகளிலும், உணவுவிடுதிகளிலும், ஏன் விளையாட்டு வீரர்கள் மிதும் குண்டு மழை பொழிந்துக்கொண்டு இருப்பவர்கள் யார்? போப்பை தலைவராக கருதிக்கொண்டு இருப்பவர்களோ!

போதும் சகோதரரே போதும், அந்த சிலுவைப் போர்கள் இன்றும் தொடர்ந்து நடக்குமானால், நீங்களும் நாங்களும், ஏன் உலக மக்களும் ஒருவரை ஒருவர் கொன்றுக்கொண்டு மாண்டுப்போய் இருப்போம். அவர்கள் நிறுத்திவிட்டார்கள். ஆனால், சிலுவைப் போருக்கு முன்பே மக்களை கொல்லும் அமைதி மார்க்கமாக வந்தவர்கள் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறார்கள், இவர்கள் எப்போது நிறுத்துவார்கள்?

 

அபூ அப்திர்ரஹ்மான்

பைபிளின் மீது கைவைத்து சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஜார்ஜ் புஷ் என்ற கிறிஸ்தவர் தான், ஈராக்குக்கு எதிராக யுத்தம் செய்யுமாறு கடவுள் தன்னிடம் கூறியதாக அறிக்கை விட்டார். ஈராக்கில் நசுக்கப்பட்ட இலட்சகணக்கான பிஞ்சுக் குழுந்தைகளும் பலவீனமான பெண்களும் முதியவர்களும் புஷ்ஷின் பார்வையில் இறைவனுக்காக பலியிடப்பட்டவர்கள்!

 

ஈஸா குர்‍ஆன்

என்னடா இது, அமெரிக்காவை இழுக்காமல், ஜார்ஜ் புஷ்ஷை இழுக்காமல் ஒரு இஸ்லாமியர் வன்முறையைப் பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறாரே என்று நினைத்தேன். எழுத்திட்டாரே எழுதிட்டாரே!

புஷ்ஷைப் போலவே ஒரு நபி கடந்த காலத்தில் வந்தார், என்னன்னவோ சொன்னார், செய்தார், இதோ இன்று ஈராக் அனுபவிக்கும் வேதனையை, இன்று அந்த நபியால் உலகம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.

கடவுள் என்னிடம் கூறினார் என்று ஒரு அரசியல் வாதி சொன்னால் கூடவா நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது. ஏனென்றால், அப்படி புஷ் சொன்னபோது, கடவுளே அதிர்ந்துபோய் இருப்பார், "அட, எனக்கே தெரியாமல் நான் எப்படி சொல்லியிருப்பேன்?" என்று கடவுள் தன்னையே கேள்வி கேட்டிருப்பார், பாவம் கடவுள்.

ஜார்ஜ் புஷ் தவறு செய்துவிட்டார், அவர் செய்த காரியத்திற்கு அவர் குர்‍ஆன் மீது தானே பிரமாணம் எடுத்துயிருக்கவேண்டும்?

 

அபூ அப்திர்ரஹ்மான்

பைபிள் உண்மையில் அகிம்சையையும் அன்பையும் தான் போதிக்கிறதா என்று ஆராய்ந்தால் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் நிறைந்த தகவல்கள் கிடைக்கின்றன. எதை கிறிஸ்தவர்கள் பயங்கரவாதம் என்று சொல்கிறார்களோ அதை விட பயங்கரமான செயல்களையெல்லாம் செய்யவேண்டியது இறைகட்டளையாகவே பைபிளில் உள்ளன என்று கூறினால் பலருக்கும் ஆச்சர்யம் ஏற்படுவது இயல்புதான். எனினும் அதுவே உண்மை.

பயங்கரவாதத்தின் ஆணிவேர்கள் தோண்டப்படும்!

 

ஈஸா குர்‍ஆன்

கடைசியாக நீங்கள் எழுதிய வரிகள் தான் எனக்கு மிகவும் பிடித்தமான வரிகள், அது என்னவென்றால்:

//"எதை கிறிஸ்தவர்கள் பயங்கரவாதம் என்று சொல்கிறார்களோ அதை விட"//

அப்படியானால், இஸ்லாம் ஒரு பயங்கரவாத மார்க்கம் என்பதை நீங்களே அங்கீகரிப்பதாக உள்ளது?

நீங்கள் சொல்லவந்த செய்தியை மூன்றாம் பாகம் வரைக்கும் தள்ளிப்போட்டு, இரண்டு பாகத்தை முன்னுரையாகவே நிரப்பியுள்ளீர்களே? ரொம்ப நல்லாயிருக்கு!

பயங்கரவாதத்தை பன்றியாக மாற்றி, அதற்கு மதுவை குடிக்கக்கொடுத்து, பிறகு சன்னியாசத்தை தொட்டு, திருமணம் வரை வந்து, உடனே சிலுவைப் போருக்குச் சென்று, பிறகு அமெரிக்காவிற்கு வந்து ஜார்ஜ் புஷ்வரை வந்துள்ளீர்கள்.

பயங்கரவாதத்தின் ஆணிவேரை நீங்க தோண்டனும், ஆனால், இஸ்லாமின் ஆணிவேர் கிளைகளாக பூமிக்கு மேலே தெரிந்துக்கொண்டிருக்கிறது....

உங்களை மூன்றாம் பாகத்தில் சந்திக்கும் வரை...




 

 

இஸ்லாத்திற்கு மாறும் யூத மற்றும் கிறிஸ்தவர்கள்‌ : இஸ்லாமியர்களை சிந்திக்கத்தூண்டும் சில கேள்விகள்:

இஸ்லாத்திற்கு மாறும் யூத மற்றும் கிறிஸ்தவர்கள்‌

 
இஸ்லாமியர்களை சிந்திக்கத்தூண்டும் சில கேள்விகள்

 

Jewish and Christian Converts to Islam



Some Questions for Muslims to Ponder

 
சாம் ஷமான்


 
இயேசுக் கிறிஸ்து மோசேயின் நியாயப்பிரமான சட்டத்தையும் தீர்க்கதரிசனங்களையும் அழிக்க அல்ல‌ நிறைவேற்றுவதற்கு வந்தேன் (மத்தேயு 5: 17-20) என்றுச் சொல்லியிருக்கும் போது, கிறிஸ்தவர்கள் ஏன் குறிப்பிட்ட சில பழைய ஏற்பாட்டு கட்டளைகளை பின்பற்றுவதில்லை? என்று அடிக்கடி கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், பழைய ஏற்பாட்டு சட்டம், பன்றிகளின் கறியை சாப்பிடக்கூடாது என்றும், எல்லா ஆண் குழந்தைகளும் எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும் என்றும் சொல்கிறது. ஆனால், இந்த கட்டளையை மற்ற மார்க்கத்திலிருந்து வரும் (யூதரல்லாத‌) விசுவாசிகள் கடைபிடிக்கவேண்டியதில்லை என்று பவுல் அப்போஸ்தலர் சொல்லியுள்ளார். இதனை ஆதாரமாக வைத்துக்கொண்டு இஸ்லாமியர்கள், "அப்போஸ்தலர் பவுல் ஒரு பொய் அப்போஸ்தலராவார்" என்றுச் சொல்கிறார்கள். இவரது போதனைகளை கிறிஸ்தவர்கள் நிராகரிக்கவேண்டும் ஏனென்றால், இவரின் இந்த போதனை பழைய ஏற்பாட்டு கட்டளைகளையும், இயேசுவின் வார்த்தைகளையும் மீறுவதாக உள்ளது என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்.
 
 
இப்படிப்பட்ட வாதம் புரிபவர்களில் ஒருவர் தான் ஷப்பீர் அலி என்பவராவார்:
 
பைபிளும் குர்‍ஆனும் பன்றியின் கறி சாப்பிடுவதை தடை செய்துள்ளன. இந்த தடையை இஸ்லாமியர்கள் அறிந்துவைத்துள்ளனர், மற்றும் அதனை தீவிரமாக கடைபிடுத்தும் வருகின்றனர். ஆனால், பைபிளை ப‌டிக்கும் அனேகர், இந்த‌ விவ‌ர‌ம் எங்கே உள்ள‌து என்று கூட‌ தெரிவ‌தில்லை என்றுச் சொல்கிறார்கள்...


இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இயேசு (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) இந்த பன்றியின் கறியை சாப்பிடக்கூடாது என்ற கட்டளையை கடைபிடித்துள்ளார். அவரது சீடர்களும் கடைபிடித்துள்ளார்கள், அது போல அவரை பின் பற்றும் அனைவரும் கடைபிடிக்கவேண்டும். யார் யாரெல்லாம் இதனை கடைபிடிக்கவில்லையோ அவர்களுக்கு இறைவனின் கட்டளை இப்படி உள்ளது என்று நியாபகப்படுத்தவேண்டும். கடைசி நபியாகிய ரசூல் அவர்களை இறைவன் அனுப்பியதின் அனேக காரணங்களில் இதுவும் ஒன்றாகும், அல்லாஹ் சொல்கிறான்:

வேதமுடையவர்களே! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார். வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. (5:15) (The Meaning of the Glorious Qur'an 5:15). (Eating Pork; source)
 
 
கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் செய்யக்கூடாது என்றுச் சொல்லி, பவுல் ஆதியாகமம் 17:14லில் சொல்லப்பட்ட தேவனின் உடன்படிக்கையை மீறியிருக்கிறார் என்று இன்னொரு இஸ்லாமியர் எழுதுகிறார்:
 
விருத்தசேதனத்தை கடைபிடிப்பது என்பது இறைவனின் சட்டத்தை கடைபிடிப்பது என்பதை பவுல் உணராமல், இறைவனின் சட்டத்தை அவர் உடைத்து (மீறி) விட்டார். (Bassam Zawadi, Paul Broke the Covenant of God; source)

 

 

மேலே கண்ட விவரங்கள் அனைத்தும், குறைந்தபட்சம் இஸ்லாமுக்கு மாறும் யூதர்கள் கட்டாயமாக பழைய ஏற்பாட்டு சட்டத்தைக் கைக்கொள்ளவேண்டும் என்றுச் சொல்வதாக உள்ளது, அதாவது பழைய ஏற்பாட்டு கட்டளைகளாகிய‌ "ஓய்வு நாளை" ஆசரிப்பதும், உணவு சம்மந்தப்பட்ட சட்டங்களை பின்பற்றுவதையும் கூறலாம். இஸ்ரவேல் மக்கள் ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்கவேண்டும் என்று பல இடங்களில் தேவன் கட்டளையிட்டுள்ளார்.

 

மேலும், கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும். ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும். ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள். அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார். (யாத்திராகமம் 31:12-17; இதனையும் படிக்கவும்: யாத்திராகமம் 20:8-11)

 

யூதர்கள் ஓய்வு நாளை கடைபிடிக்க கடமைப்பட்டவர்கள் என்று குர்‍ஆன் ஒப்புக்கொள்கிறது, அதே நேரத்தில் அப்படி கடைபிடிக்காத யூதர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்றும் குர்‍ஆன் சொல்கிறது.

 

வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) "அஸ்ஹாபுஸ் ஸப்து" என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப் பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்;. அல்லாஹ்வின் கட்டளை, நிறைவேற்றப்பட்டே தீரும். (4:47)

(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக் குள்ளாக்கினோம். (அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், "அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்); "எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்." அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம். தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, "நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று அவர்களுக்கு நாம் கூறினோம். (கு‍ர்‍ஆன் 7:163-166, இவ்வசனத்தையும் படிக்கவும் 2:65)


மேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம்;. இன்னும் 'இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்' என்று சொன்னோம்;. மேலும் "(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்" என்றும் அவர்களுக்கு கூறினோம்;. இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம். (கு‍ர்‍ஆன் 4:154; இவ்வசனத்தையும் படிக்கவும் 16:124)

 

ஆனால், யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அவமதிப்பதற்காக முஹம்மது வேண்டுமென்றே வெள்ளிக்கிழமையை இஸ்லாமியர்கள் ஒன்று கூடும் நாளாக மாற்றினார். இது மேலே கண்ட வசனத்திற்கு முரண்பட்டதாக தென்படுகிறது.

 

பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3486

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

உலகில் இறுதிச் சமுதாயமான நாம் தாம் மறுமையில் (தகுதியிலும், சிறப்பிலும்) முந்தியவர்கள் ஆவோம். ஆயினும், சமுதாயங்கள் அனைத்தும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டுவிட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப்பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபட்ட நாளாகும். எனவே, நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கும் அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்தவர்களுக்குரியதும் ஆகும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 

இதுமட்டுமல்ல, முஹம்மது திருமணம் செய்துக்கொண்ட போரில் பிடிப்பட்ட ஒரு யூதப்பெண், முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு, சனிக்கிழமை ஓய்வு நாளை கடைபிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டார், அதற்கு அப்பெண் "இல்லை நான் சனிக்கிழமை ஓய்வு நாளை ஆசரிக்கவில்லை" என்று மறுத்துவிட்டார்.

 

இறைத்தூதரின் (ஸல் அல்லாஹு அலைஹிம் வஸல்லம்) மரணத்திற்கு பிறகு அந்த ஸ்திரி அனேக கஷ்டங்களை அனுபவித்தார்கள். அந்த பெண்ணுக்கு சொந்தமான ஒரு அடிமை சிறுமி அமிர் அல் மூமினீன் உமர் அவர்களிடம் சென்று, "அமிர் அல் மூமினீன் அவர்களே! ஷபியா அவர்கள் ஓய்வு நாளை விரும்புகிறார் மற்றும் யூதர்களுடன் நல்லுறவை வைத்துள்ளார்" என்றுச் சொன்னாள். உமர் அவர்கள் ஷபியா அவர்களிடம் வினவியபோது, "நான் ஓய்வு நாளை விரும்பவில்லை, ஏனென்றால் அல்லாஹ் அதற்கு பதிலாக நமக்கு வெள்ளிக்கிழமையை கொடுத்துள்ளார். என் சொந்த பந்தங்களாக‌ இருக்கும் யூதர்களிடம் மட்டுமே நான் நல்லுறவை பேணுகிறேன்" என்று பதில் கூறினார் ஷபியா. பிறகு தன் அடிமை பணிப்பெண்ணிடம், என்னைப் பற்றி இப்படிப்பட்ட பொய்யை உமரிடம் சொல்வதற்கு உன்னை தூண்டியது யார் என்று கேட்டபோது, அந்த பணிப்பெண் "ஷைத்தான்" என்றுச் சொன்னாள். அதற்கு ஷபியா "இப்போது நீ விடுதலை ஆக்கப்பட்டாய், போகலாம்" என்றுச் சொன்னார்கள். (Safiyya bint Huyay [based on a book by Ahmad Thompson]; source; see also here)

 
ப‌ழைய‌ ஏற்பாட்டின் சில‌ க‌ட்ட‌ளைக‌ளை ப‌வுலும் ம‌ற்றும் இத‌ர‌ புதிய‌ ஏற்பாட்டு எழுத்தாள‌ர்க‌ளும் ஒதுக்கிவிட்ட‌து ச‌ரி இல்லை என்று பல இஸ்லாமிய அறிஞர்கள் குற்றம் சாட்டுகிறார்க‌ள். அவ‌ர்க‌ளின் கூற்றுப்ப‌டி இறைத்தூத‌ர்க‌ள், அல்ல‌து ந‌பியாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் இப்ப‌டிப்ப‌ட்ட‌ காரிய‌ங்க‌ளை ஒரு போதும் செய்ய‌மாட்ட‌ர்க‌ள் என்று அடித்துச் சொல்கிறார்கள். இவைகளை ஒருவர் கவனித்தால், யூதர்களின் ஓய்வு நாளை அவர்கள் கடைபிடிக்கவேண்டுமென்று அவர்களை முஹம்மதுவும், குர்‍ஆனும் கட்டாயப்படுத்தியிருக்க வேண்டும் என்று சொல்லத்தோன்றும்.

பழைய ஏற்பாட்டின் உணவு சம்மந்தப்பட்ட சட்டங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? பழைய ஏற்பாடு, வெறும் பன்றியின் மாமிசத்தையும் மட்டுமல்ல, அதோடு கூட "ஒட்டகத்தின் மாமிசத்தையும்" இன்னும் பல வகையான கடல் வாழ் உயிரிணங்களையும் உண்ணவேண்டாம் என்றுச் சொல்கிறது. ஆனால், இதற்கு நேர் எதிராக, இவைகளை உண்ண குர்‍ஆன் அனுமதி அளித்துவிட்டது. (படிக்கவும், லேவி 11ம் அதிகாரம்; உபாகமம் 14ம் அதிகாரம்; குர்‍‍ஆன் சூரா 5:96; சூரா 6:142-146; சூரா 16:14; சூரா 22:36)

கதை முடியவில்லை, இன்னும் இருக்கின்றது. விவாகரத்து செய்யப்பட்ட தன் முந்தையை மனைவியை ஒருவன் மறுபடியும் திருமணம் செய்துக் கொள்ளவேண்டுமென்றால், அந்தப் பெண் இன்னொரு ஆணை திருமணம் செய்துவிட்டு, அந்த புதிய கணவன் மறுபடியும் அவளை விவாகரத்து செய்துவிட்டால் தான் முதல் கணவன் அவளை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்று குர்‍ஆன் சொல்கிறது. இந்த செயலைத் தான் யேகோவா தேவன் "அருவருப்பானது" என்கிறார் மற்றும் இப்படி செய்யக்கூடாது என்று கட்டளையிட்டுள்ளார். (படிக்க உபாகமம் 24:1-4; குர்‍ஆன் சூரா 2:230)

மேற்கண்ட விவரங்களை மனதில் நிறுத்திக் கொண்டவர்களாக, பழைய ஏற்பாட்டின் ஒரு சில கட்டளைகளை பின்பற்றவில்லை என்று புதிய ஏற்பாட்டின் மீது குற்றம் சுமத்தும் இஸ்லாமியர்களிடம் கீழ் கண்ட கேள்விகளை கேட்கவிரும்புகிறோம்:
 
  • இஸ்லாமியர்களின் கருத்துப்படி, யூதர்களும், கிறிஸ்தவர்களும் பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை கீழ்படியவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். இப்படி இருக்கும் போது, ஒரு யூதனோ அல்லது கிறிஸ்தவனோ இஸ்லாமுக்கு மாறும் போது, மோசேயின் கட்டளைகளை முழுவதுமாக எப்படி பின்பற்றமுடியும்? ஏனென்றால், குர்‍ஆன் அதே மோசேயின் பல கட்டளைகளை மீறச் சொல்கிறதே? இது எப்படி சாத்தியமாகும்?
  • இஸ்லாமுக்கு மாறும் யூதர்களோ (அ) கிறிஸ்தவர்களோ இன்னும் பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை கடைபிடிப்பதற்காக‌, முஹம்மதுவின் சில கட்டளைகளை மீறினாலோ அல்லது பின் பற்றாமல் விட்டுவிட்டாலோ ஒன்றும் பிரச்சனையில்லையா? முஹம்மதுவின் ஒருசில கட்டளைகளை பின்பற்றாமல் இருக்கலாமா?
  • அல்லது, முஹம்மதுவின் கட்டளைகளை பின்பற்றுவதற்காக, இஸ்லாமுக்கு மாறிய யூதர்கள்/கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை பின்பற்றாமல் இருந்தாலும் பரவாயில்லையா? வேதம் அருளப்பெற்றவர்கள், முக்கியமாக கிறிஸ்தவர்கள் இன்னும் பழைய ஏற்பாட்டு கட்டளைகளை விடாமல் கடைபிடிக்கவேண்டும் என்று முஸ்லீம்கள் சொல்வது எப்படி சரியானதாக இருக்கும்?
  • உண்மையில், எபிரேய பைபிளில் உள்ள தேவனின் கட்டளைகளை ஒருவன் பின்பற்றிக்கொண்டு, அதே நேரத்தில் அவன் இஸ்லாமியனாக மாறினால், அவனை "முஸ்லீம்" என்று இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
  • க‌டைசியாக‌, சில‌ குறிப்பிட்ட‌ ப‌ழைய‌ ஏற்பாட்டு க‌ட்ட‌ளைக‌ளை ப‌க்க‌த்தில் வைத்துவிட்டார் என்றுச் சொல்லி, ப‌வுல் மீது குற்றம் சும‌த்தும் அதே இஸ்லாமிய‌ர்க‌ள் இப்போது என்ன‌ செய்ய‌வேண்டுமென்றால், அதே குற்றம் புரிந்த‌ முஹ‌ம்ம‌து மீது குற்ற‌ம் சும‌த்த‌ வேண்டும்? அப்படி இஸ்லாமிய‌ர்க‌ள் செய்வார்க‌ளா?
 
இந்த தலைப்பு பற்றிய இதர கட்டுரைகள்:

 

1) Muhammad and the Mosaic Law

2) Who Broke the Covenant: Paul or Muhammad?

3) An Examination of Shabir Ally's Fascination with Pigs (Being a Christian Response to his "Eating Pork" Article)

4) Do Muslims Truly Obey God's Everlasting Command, Or is Meherally Simply Trying to Pull A Fast One? - Circumcision

5) What is the day of congregation?

6) Sam Shamoun's answer to Bassam Zawadi's response


 

Source: Jewish and Christian Converts to Islam - Some Questions for Muslims to Ponder

 

 

பன்றி மாமிசம் சாப்பிடுவதைப் பற்றிய விவாதம் - The Issue of Eating Pork

பன்றி மாமிசம் சாப்பிடுவதைப் பற்றிய விவாதம்

 

The Issue of Eating Pork

 

கிறிஸ்தவர்கள் பன்றி மாமிசம் சாப்பிடுவதைக் கண்டு அனேக இஸ்லாமியர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். மோசே சட்டத்தின் கீழ் வாழும் இஸ்ரவேல் மக்கள் எப்படி பன்றியைக் கண்டவுடன் தூரமாக ஒதுங்குகிறார்களோ, அது போல, இஸ்லாமியர்களும் பன்றியைக் கண்டதும் ஒதுங்குகிறார்கள். இன்று உலகில் வாழும் பல இலட்ச யூதர்கள் மோசேயின் கட்டளைகளை பின் பற்றுகிறார்கள். உண்மையாகவே, பழைய ஏற்பாட்டில் பன்றி தடை செய்யப்பட்டுள்ளது.

 
பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாக பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. (லேவியராகமம் 11:7-8)
 
இதே போல தடை குர்‍ஆனிலும் உண்டு:
 
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்;... (குர்‍ஆன் 2:173)
 
பன்றி மாமிசம் சாப்பிடக்கூடாது என்று இஸ்லாமில் உறுதியாக கட்டளையிடப்பட்டுள்ளதால், பன்றி மாமிசம் சாப்பிடுவது என்பது ஒரு "பரிசுத்தமில்லாத செயல்" அதாவது இறைவனுக்கு முன்பாக தகாத செயல் என்று இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். இந்த காரணத்திற்காகத் தான், பரிசுத்த நபியாகிய இயேசுவைப் பின்பற்றுகிறோம் என்றுச் சொல்லி கொள்பவர்கள், பன்றி மாமிசம் சாப்பிடுவதை மிகப்பெரிய குற்றமாக இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள்.

மோசேயின் சட்டங்களை புரிந்துக்கொள்வதும், அந்த சட்டங்கள் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கப்பட்ட நோக்கத்தை புரிந்துக்கொள்வதும் மிகவும் முக்கியமானதாகும், பழைய ஏற்பாட்டின் சட்டங்கள் இரண்டு வகையாக உள்ளன, அவைகள்:

அறநெறி சட்டங்கள் (Moral Law)

மற்றும்

அரசாங்க, ஆரோக்கிய மத‌ சட்டங்களாகும் (Civil Law)

வாழ்க்கையின் முக்கியமான நன்னடத்தை சம்மந்தப்பட்ட விவரங்கள் அறநெறி சட்டத்தின் கீழ் வருகின்றன. இந்த அறநெறி சட்டத்தின் முக்கிய நோக்கம், தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் மக்கள் தங்கள் உள்ளான பரிசுத்தத்தினால் மற்ற மக்களைவிட வேறுபட்டவர்களாக காணப்படவும், மற்றும் மனிதர்களுக்கும் தேவனுக்கும் முன்பாக பரிசுத்தமாக வாழுவதற்கும் கொடுக்கப்பட்டது. இந்த உயர்ந்த அறநெறி சட்டங்கள் இஸ்ரவேல் மக்களின் தரத்தை உயர்த்தவும், அவர்கள் தங்கள் பரிசுத்தத்தில் மற்ற மக்களுக்கு, வம்சங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழவும் கொடுக்கப்பட்டது. உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், "பத்து கட்டளைகளைச்" சொல்லலாம். ஒரு மனிதன் தன் சக மனிதனுக்கும் அதே நேரத்தில் தேவனுக்கும் ஆற்றவேண்டிய கடமைகளை இந்த பத்து கட்டளைகள் சொல்கின்றன. இந்த சட்டங்கள் சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் மாற்றமடையாத நிலையான சட்டங்களாகும்.

சிவில் சட்டங்கள் என்றுச் சொல்லக்கூடிய "அரசாங்க, ஆரோக்கிய மத" சட்டங்கள் வித்தியாசமானவைகள். இந்த சட்டங்கள் ஒவ்வொரு நாளும் நாம் வாழும் சமுதாயத்தில் பின் பற்றவேண்டிய சட்டங்களாகும். இந்த சட்டங்கள் சூழ்நிலைகள் மாறும் போதும், நம் அருகிலுள்ள சமுதாயத்திற்கு ஏற்ற விதமாக பழக்கவழக்கங்களினால் மாறக்கூடியதாக உள்ளது. இந்த‌ ச‌ட்ட‌ங்க‌ள் வெளிப்புற சுத்தம் பற்றியும், ஆரோக்கிய‌ம் ப‌ற்றியும், உண‌வுக‌ளைப் ப‌ற்றியும், உடைக‌ளைப் ப‌ற்றியும் ம‌ற்றும் ம‌த‌ ச‌ட‌ங்குக‌ளைப் ப‌ற்றியும் சொல்கின்ற‌ன‌. இந்த‌ ச‌ட்ட‌ங்க‌ளின் முக்கிய‌ நோக்க‌ம், இஸ்ர‌வேல் ம‌க்க‌ள் வெளிப்புற‌ ப‌ரிசுத்த‌த்தின் அடிப்ப‌டையில் ம‌ற்ற‌ ச‌முதாய‌ங்க‌ளை விட‌ எப்ப‌டி வேறு பிரிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாக‌ இருக்கிறார்க‌ள் என்ப‌தைக் காட்ட‌வேயாகும். இந்த‌ இஸ்ர‌வேல் ம‌க்க‌ள் தனித்தன்மை வாய்ந்தவர்களாக, ஒரே மெய்யான தேவனை அவர்கள் தொழுதுக்கொள்வதால் உலகத்திலுள்ள மற்றவர்க‌ளின் பார்வையில் வித்தியாசமானவர்களாக காணப்படும்படி வாழவேண்டும். அதே நேரத்தில் தங்களைச் சுற்றியுள்ள மற்ற சமுதாயத்தின் மூட பழக்கவழக்கங்களையும், விக்கிர ஆராதனையையும் பின் பற்றாதவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக இச்சட்டங்கள் கொடுக்கப்பட்டன.

இந்த‌ சிவில் சட்டங்களில் ஒன்று தான் "ப‌ன்றி மாமிசம் உண்ணக்கூடாது" என்ற‌ த‌டை க‌ட்டளையாகும். இஸ்ரவேலை சுற்றியிருந்த ப‌ழ‌ங்குடியினர் த‌ங்க‌ள் விக்கிரகங்களுக்கு ப‌ன்றியை ப‌லியிடுவ‌து அவர்களுக்கு ஆராதனை வழக்கமாக இருந்த‌து. இன்னும் அந்த‌ கால‌த்தில் அந்த‌ இட‌ங்க‌ளில் வாழும் ப‌ன்றிக‌ள், குப்பை கூள‌ங்க‌ளையும் இத‌ர‌ கழிவுக‌ளையும் திண்ப‌வைக‌ளாக‌ இருந்த‌ன‌. இத‌னால், ப‌ன்றியின் மாமிசத்தை உட்கொள்ளுதல், அனேக கொடுமையான வியாதிகளைக் கொண்டுவந்து மொத்த சமுதாயத்தையும் தாக்குவதாக இருந்தது.

இஸ்ரவேல் மக்கள் இப்படிப்பட்ட பழங்குடி மற்றும் அவர்களின் இந்த பழக்கவழக்கங்களிலிருந்து தங்களை காத்துக்கொண்டு தூரமாக இருக்கவேண்டும்.

இஸ்ரவேல் மக்கள் தனக்கு பரிசுத்த ஜனங்கள் என்று தேவன் அவர்களை பிரித்தெடுத்து, மெய்யான ஒரே தேவனாகிய தன்னை தொழுதுக்கொள்ளவேண்டுமென்று, ஆபிரகாமின், ஈசாக்கின் மற்றும் யாக்கோபின் தேவன் விரும்பினார். இஸ்ரவேல் மக்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பிரித்தெடுக்கப்பட்டார்கள், இதனை அவர்கள் தொடர்ந்து நியாபகத்தில் வைத்திருக்கவேண்டும். இதனை குர்‍ஆன் இவ்விதமாக கூறுகிறது:
 
(நபியே! ஆத்மீக) ஆற்றலும், அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்றாஹீம், இஸ்ஹாஃக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக, நாம் இவர்களை (மறுமை) வீட்டை நினைவூட்டுவதற்காகவே பூரண பரிசுத்தமானவர்களாக(த் தேர்ந்தெடுத்தோம்). (குர்‍ஆன் 38:45- 46)

இஸ்ராயீலின் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள். (குர்‍ஆன் 2:47)
 
ஏன் இஸ்ரவேல் மக்கள் விசேஷித்தவர்கள்? எந்த நோக்கத்திற்காக தேவன் அவர்களை தெரிந்தெடுத்துக் கொண்டார்? இந்த தெரிந்தெடுத்த சமுதாயத்திலிருந்து தான் உலக இரட்சகர் மேசியாவாகிய‌ இயேசு வரவேண்டும், இவர் மனித இனத்தை காப்பாற்ற தன்னையே ஒப்புக்கொடுக்க தேவனிடமிருந்து வந்தவர். தேவனின் வார்த்தை மனிதனாக வந்தார், கன்னி மரியாளுக்கு மகனாக இயேசுவாக வந்தார். இந்த பரிசுத்தர் ஆபிரகாமின், ஈசாக்கின் மற்றும் யாக்கோபின் வம்சமாகிய இஸ்ரவேல் வம்சத்தில் பிறக்கவேண்டும். இஸ்ரவேல் மக்கள் மற்றவர்களைவிட தனித்தன்மை வாய்ந்தவர்க்ளாக தனக்கு பரிசுத்த ஜனம் என்று தேவன் அழைத்து அவர்களை தெரிந்தெடுத்தது ஒன்றும் ஆச்சரியமில்லையே.

இயேசு இந்த‌ உல‌கில் ஊழிய‌ம் செய்த‌ கால‌த்தில், துர‌திஷ்ட‌வ‌ச‌மாக‌, இஸ்ர‌வேல் ம‌க்க‌ளில் அனேக‌ர் கட்டளைகளின் நோக்க‌த்தை ம‌ற‌ந்த‌வ‌ர்களாக‌ வாழ்ந்துக்கொண்டு இருந்தார்க‌ள். இத‌ய‌த்தை சுத்த‌மாக‌ வைத்திருப்ப‌தைக் காட்டிலும், த‌ங்க‌ள் கைக‌ளை சுத்தமாக வைத்திருப்பதற்கே அதிக‌ முக்கிய‌த்தும் கொடுத்து வ‌ந்தார்க‌ள். அவர்கள் ந‌ன்னெறி ச‌ட்ட‌ங்க‌ளுக்கு அதிக முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌தைக் காட்டிலும், சிவில் ச‌ட்ட‌ங்களுக்கு அதிக முக்கிய‌த்துவ‌ம் கொடுத்தார்க‌ள். முக்கிய‌மாக‌ ம‌த‌த் த‌லைவ‌ர்க‌ள் இத‌ய‌த்தை பரிசுத்த‌மாக‌ வைத்திருப்ப‌த‌ற்கு ப‌திலாக‌, அனேக‌ சுத்திக‌ரிப்பு க‌ட்ட‌ளைக‌ளை உருவாக்கி அவைக‌ளை க‌டைபிடித்த‌ன‌ர், ம‌ற்றும் இவைக‌ளே முக்கிய‌மான‌வைக‌ள் என்றும் சொல்லிவ‌ந்த‌ன‌ர். இத‌ய‌த்தை ப‌ரிசுத்த‌மாக‌ வைத்திருப்ப‌து கொஞ்ச‌ம் க‌டினமே. இதனால், உண்மையான மார்க்கத்தை பின் பற்றுகிறவர்களின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மத சடங்குகளாலும், மாய்மாலத்திலும் நிறைந்திருந்தது. மதத் தலைவர்களை வெளிப்புறமாக கண்டால், அவர்கள் தங்கள் ஜெபங்களை அடிக்கடி செய்கிறவர்களாகவும், தங்கள் கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பவர்களாகவும், மற்றும் அனுமதிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்கிறவர்களாகவும் காணப்பட்டார்கள். ஆனால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கண்டால், வெறுப்பிலும், பேராசையிலும், பொறாமையிலும் காமத்தால் நிறைந்ததாயும் இருந்தது. தன் பரிசுத்தம் பற்றி தானே புகழ்ந்துப் பேசி மனிதன் தேவனின் கட்டளைகளை அவமதித்தான்.

இந்த சிவில் சட்டத்தை மனிதன் தவறாக மாற்றியதால், தேவன் கொடுத்த தனக்கிருந்த அதிகாரத்தினால் இயேசு காரியத்தில் இறங்கினார். அந்த மக்களின் மாய்மால வாழ்க்கையை நீக்குவதற்காக எல்லா உணவுகளும் சுத்தமானவைகள் என்று அறிவித்தார், இதன் மூலம், உண்மையான பரிசுத்தம் என்பது உண்ணும் உணவினால் அல்ல, மனதில் ஏற்பட்டிருக்கும் பரிசுத்தமே உண்மையான பரிசுத்தம் என்பதை காட்டினார். இதன் காரணமாக, இயேசுவை பின்பற்றுகிறவர்களுக்கு எல்லா உணவுகளும் நல்ல உணவுகளே, அனுமதிக்கப்பட்டதே. இயேசு சொன்னதாக குர்‍ஆன் இவ்விதமாகச் சொல்கிறது:
 
"எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; …." (குர்‍ஆன் 3:50)
 
பரிசுத்தம் பற்றி இயேசுவின் போதனையை புதிய ஏற்பாடு இவ்விதமாகச் சொல்கிறது:
 
அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப் போகும். மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். (மாற்கு 7:18-23)
 
இந்த இடத்தில் ஒரு விவரத்தை குறிப்பிடவேண்டும், அதாவது இயேசு இந்த உலகத்தில் வந்துவிட்டதினால், இஸ்ரவேல் மக்கள் ஒரு பிரித்தெடுக்கப்பட்ட ஜனமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. உண்மையில், இயேசு உலகத்தில் உள்ள‌ எல்லா நாடுகளையும், மக்களையும் தேவனுக்குள் ஒன்றாக்கியுள்ளார். எல்லா நாட்டு மக்களும் இனி தேவனின் நன்னெறி சட்டங்களை (Moral Laws) பின்பற்றி வாழ்ந்து தேவனுக்கு முன்பாக பரிசுத்தவான்களாக வாழமுடியும். இயேசுவின் மக்களாகிய கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் பரவியிருப்பதாலும், அவர்கள் அதிகமதிகமாய் பெருகுவதாலும் இனி எல்லா நாட்டு மக்களுக்கும், கலாச்சாரத்திற்கு ஏற்ற ஒரு பொதுவான சிவில் சட்டம் இனி தேவையில்லை. ஏனென்றால், உலக மக்களின் சூழ்நிலைகள் வேறு, கலாச்சாரங்கள் வேறு, வாழும் இடமும், சீதோஷ்ண நிலையும் வேறு. எனினும், எல்லாருக்கும் பொருந்தக்கூடிய இயேசுவின் நன்னெறி போதனைகள் மாறாமல் அப்படியே உள்ளது. அது என்னவென்றால், நாம் உணவை தவிர்ப்பதினால் சர்வ வல்லவருக்கு மகிமை உண்டாக்கப்போவதில்லை, ஆனால், தேவனுக்காகவும், தன் சக மனிதனுக்காகவும் இருதயத்தில் உண்டாகும் உண்மையான அன்பே, அதிக முக்கியமானது. இந்த சட்டமானது, எந்த நாட்டில் வாழ்பவனாக இருந்தாலும், உலகில் யாராக இருந்தாலும் சரி, அது அவனுக்கு பொருந்தக்கூடியதாக இருக்கிறது.

இங்கு ஒன்றை நாம் குறிப்பிட‌வேண்டும், மோசேயின் சிவில் ச‌ட்ட‌ங்க‌ள் இஸ்ர‌வேல் வ‌ம்ச‌த்தாருக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. இன்றுள்ள‌ கிறிஸ்த‌வர்க‌ளில் அனேக‌ர் இஸ்ர‌வேல் வ‌ம்ச‌த்தில் பிற‌ந்த‌வ‌ர்க‌ள் அல்ல‌. இத‌னால், இஸ்ரவேல் ச‌முதாய‌ "சிவில் ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ளுக்கு" கிறிஸ்தவர்கள் அப்பாற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ஆவார்கள்.

சில நேரங்களில் கிறிஸ்தவர்கள் பன்றி மாமிசம் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அதாவது, தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள பன்றிகள் கழிவுகளையும், இதர குப்பை கூளங்களையும் சாப்பிட்டு வளவதாக‌ கிறிஸ்தவர்கள் அறிய வந்தால், உடல் ஆரோக்கியத்தை மனதில் கொண்டவர்களாக‌, பன்றியின் மாமிசம் சாப்பிடாமல் இருக்கவேண்டும். நாம் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் கூட‌ தேவனுக்கு பிரியமான செயலாக இருக்கிறது.

இஸ்ரவேல் அல்லாத அந்நிய ஜனங்களுக்கும் கட்டாயமாக‌ சுவிசேஷம் சொல்லவேண்டும் என்பதை அப்போஸ்தலர் பேதுரு உணரவேண்டும் என்பதற்காக "குறிப்பிட்ட மிருக மாமிசத்தை உண்ணுங்கள்" என்ற பழைய ஏற்பாட்டின் கட்டளையை குறிப்பிட்டு, இயேசு ஒரு தரிசனத்தை பேதுருவிற்கு கொடுத்து அவரை அந்நிய ஜனங்களுக்கும் சுவிசேஷம் சொல்லும் படி தயார்படுத்தினார். அப்போஸ்தலர் நடபடிகள் 10ம் அதிகாரத்தில் இந்த நிகழ்ச்சி விவரமாக சொல்லப்பட்டுள்ளது. அந்த தரிசனத்தின் மூலமாக பேதுரு தெரிந்துக்கொண்ட ஒரு தீர்மானத்தை 28ம் வசனத்தில் நாம் காணலாம்.
 
அப்போஸ்தலர் நடபடிகள் அதிகாரம் 10

11 வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும்,

12 அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான்.

13 அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று.

14 அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.

15 அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.

28 அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.
 
அப்போஸ்தலர் நடபடிகள் 10ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சியின் முக்கியத்துவம் "அந்நிய ஜனங்கள் (யூதரல்லாதவர்கள்) அசுத்தமானவர்கள் என்று இனி கருதவேண்டாம்" என்பதைச் சொல்வதற்காகவே ஆகும். இதன் படி "சுத்திகரிப்பு சடங்குகள் சம்மந்தப்பட்ட சட்டங்கள்" இனி அமுலில் இல்லை என்பதை காட்டவேயாகும். ஏனென்றால், பழைய ஏற்பாட்டில் யார் யாரெல்லாம் "அசுத்தமான தடை செய்யப்பட்ட உணவை உட்கொள்கிறாரோ" அவர் யூதர்களுக்கு அசுத்தமாக இருப்பார் என்ற கட்டளை இனி செல்லாது என்பதை தெரிவிக்கவேயாகும். ஆக, யூதர்களையும், யூதரல்லாதவர்களாகிய அந்நிய ஜனங்களையும் பிரித்துக்காட்டும் உணவு சம்மந்தப்பட்ட சட்டங்கள் இனி அமுலில் இருக்காது அல்லது செல்லுபடியாகாது, என்று தெரிவிக்க போதுருவிற்கு இயேசு தரிசனத்தைக் கொடுத்தார்.

இதன்படி, அப்போஸ்தலர் நடபடிகள் 15ம் அதிகாரத்தில், பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் படி, அப்போஸ்தலர்கள், அந்நிய ஜனங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டவர்களை "யூதர்களின் உணவு பற்றிய சட்டத்திட்டங்களிலிருந்து" விடுதலைக் கொடுத்தார்கள். இதே போல, 1 கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில், எல்லா உணவுகளையும் நாம் உண்ணலாம், ஆனால், பலவீனமான சகோதரரின் விசுவாசத்தையும், மனசாட்சியையும் கருத்தில்கொண்டு செய்யுங்கள் என்று அறிவுரை கூறப்பட்டுள்ளது.

ஆங்கில மூலம்: The Issue of Eating Pork



 

 

பன்றி மீது ஷப்பீர் அலி அவர்களின் அதீத விருப்பம் பற்றிய ஆய்வு - Part 1

பன்றி மீது ஷப்பீர் அலி அவர்களின் அதீத விருப்பம் பற்றிய ஆய்வு

 
"ப‌ன்றி க‌றியை உண்ணுத‌ல்" க‌ட்டுரைக்கு கிறிஸ்த‌வ‌ ப‌தில்
 

An Examination of Shabir Ally's Fascination with Pigs

 

Being a Christian Response to his "Eating Pork" Article

 
[பாகம் 1]
 

கிறிஸ்தவர்கள் பன்றியின் மாமிசம் உண்ணக்கூடாது என்பதை நிருபிப்பதற்காக ஷப்பீர் அலி அவர்கள் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்கள். தன் வாதத்தை நிருபிப்பதற்காக அவருக்கு பல விவரங்களை மறைக்கவேண்டி வந்துள்ளது, மற்றும் வசனங்கள் சொல்லப்பட்ட சூழ்நிலைக்கு வெளியே கொண்டு வந்து பொருள் கூறவேண்டி வந்துள்ளது. ஷப்பீர் அலி அவர்களின் தவறான வழிமுறையினாலும் மற்றும் தவறான ஆய்வினாலும், அவர் கொடுத்த முடிவுரையைக் கண்டு, பைபிளின் வசனங்களுக்கு தவறான பொருளை அவர் கொடுத்ததைக் கண்டு நாம் வியப்படையத் தேவையில்லை.

 
ஷப்பீர் எழுதுகிறார்:

பைபிளும் குர்‍ஆனும் பன்றியின் மாமிசம் சாப்பிடுவதை தடை செய்துள்ளன. இந்த தடையை இஸ்லாமியர்கள் அறிந்துவைத்துள்ளனர், மற்றும் அதனை தீவிரமாக கடைபிடுத்தும் வருகின்றனர். ஆனால், பைபிளை ப‌டிக்கும் அனேகர், இந்த‌ விவ‌ர‌ம் எங்கே உள்ள‌து என்று கூட‌ தெரிவ‌தில்லை என்றுச் சொல்கிறார்கள்.
 
பதில்:

பைபிள் "பன்றியின் மாமிசம்" உண்பதை தடை செய்த விவரத்தை ஷப்பீர் அலி அவர்கள் பொதுவாக எல்லாருக்கும் எல்லா காலத்திற்கும் பைபிள் சொன்னதாக கூறியுள்ளார். பைபிளில் உள்ள அனேக புத்தகங்களில் ஒரு புத்தகத்தை நாம் குறிப்பிடுவதற்கு அல்லது ஒரு பகுதியை குறிப்பிடுவதற்கு பொதுவாக "பைபிள்" என்று நாம் சொல்கிறோம். ஆனால், பன்றியின் மாமிசம் உண்பதைப் பற்றிய இந்த விவரமானது, பைபிளில் ஒரு பகுதியில் சொல்லப்பட்ட விவரமாகும். இதன் பொருள் என்னவென்றால், நாம் எழுதும் போது சரியான வார்த்தைகளை சரியான இடத்தில் பயன்படுத்தவேண்டும். நாம் எச்சரிக்கையாக இல்லாத பட்சத்தில், மக்கள் தவறாக புரிந்துக்கொள்ள வாய்ப்பு உண்டாகும். அதாவது பைபிள் ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட மக்களுக்குச் சொன்ன கட்டளைகளை பைபிள் முழுவதும் சொல்லப்பட்டுள்ளது என்று மக்கள் தவறாக புரிந்துக்கொள்ளக்கூடும்.

நாம் முழூ பைபிளையும் சரியாக படித்தால், இந்த தடையானது ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக கொடுக்கப்பட்டது என்பதைக் காணலாம். இந்த தடையானது "எல்லா மக்களுக்கும், எல்லா காலத்தில் வாழ்பவர்களுக்கும்" விதிக்கப்பட்டதல்ல. இந்த விவரம் பற்றிய அதிகபடியான விவரங்களை கீழே காணலாம்.

பன்றி தடைப் பற்றிய வசனம் பைபிளில் எங்குள்ளது என்பதுப் பற்றி, பைபிளைப் படிக்கும் அனேகருக்கு தெரியாமல் இருக்கிறது என்று ஷப்பீர் அலி சொல்கிறார், மற்றும் இதனை எந்த காரணத்திற்காக குறிப்பிடுகிறார் என்பது நமக்கு தெரியாது. ஆனால், இதே போல, பெரும்பான்மையான இஸ்லாமியர்களுக்கு "இஸ்லாமின் கட்டளைகளாகிய" சுன்னத்து செய்தல் (விருத்தசேதனம்) மற்றும் தினமும் ஐந்து வேளை நமாஜ் (தொழுகை) செய்தல் போன்ற கட்டளைகள் எங்கு உள்ளது என்பதும் தெரியாமல் இருக்கிறது என்பதை இங்கு குறிப்பிடவேண்டும். இஸ்லாமியர்களில் அனேகருக்கு சுன்னத்துப் பற்றி மற்றும் ஐந்து வேளை தொழுகை பற்றி குர்‍ஆன் எந்த வசனத்தில் சொல்கிறது என்று தெரியாது. இந்த இரண்டு விவரங்கள் பற்றிய அறியாமையில் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் என்று நாங்கள் அவர்கள் மீது குற்றம் சுமத்தவில்லை, ஏனென்றால், இந்த இரண்டு கட்டளைகளும் குர்‍ஆனில் இல்லை என்பது தான் உண்மை.
 
ஷப்பீர் எழுதுகிறார்:

லேவியராகமம் என்ற புத்தகத்தில், 11ம் அதிகாரத்தில் 7ம் வசனத்தில் "நம்பிக்கையாளர்களுக்கு பன்றி ஒரு சுத்தமில்லாத மிருகம்" என்று தேவன் கூறியுள்ளார். மறுபடியும், 8ம் வசனத்தில், தேவன் கூறுகிறார்: "இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது". இதே கட்டளை மறுபடியும் உபாகமம் 14: 7-8ம் வசனத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. பிறகு, ஏசாயா 65:2-4, 66:17ம் வசனத்திலும் பன்றியின் மாமிசம் உண்பவர்களைப் பற்றி மிகவும் கடுமையான எச்சரிக்கையை தேவன் கொடுத்துள்ளார்.
 
பதில்:

ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், ஷப்பீர் அவர்கள் பன்றியைப் பற்றிய தடையைப் பற்றிய விவரங்களிலேயே நிலைக் கொண்டுவிட்டார், ஆனால், அந்த தடைக்குப் பிறகு லேவியராகமம் 11ம் அதிகாரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்பதைக் காண தவறிவிட்டார்.
 
கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்ககத்தக்க ஜீவ ஜந்துக்கள் யாதெனில்: மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம். ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். லேவியராகமம் 11:1-4
 
ஷப்பீர் அலி அவர்கள் உபாகமத்திலிருந்து வசனத்தை மேற்கோளாக காட்டினாலும், அந்த வசனத்திற்கு பிறகு என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை காட்ட தவறிவிட்டார்.
 
அருவருப்பானதொன்றையும் புசிக்க வேண்டாம். நீங்கள் புசிக்கத்தகும் மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும், மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், புல்வாயுமே. மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்; அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக. (உபாகமம் 14:3-7)
 
நம்முடைய தற்போதைய விவாதத்திற்கும், ஒட்டகத்தின் மாமிசம் உண்ணக்கூடாது என்ற தடைக்கும் சம்மந்தமென்ன என்று இக்கட்டுரையை படிக்கும் வாசகர்கள் வியக்கலாம். இதற்கு பதில், ஒட்டக மாமிசம் உண்ணலாம் என்றும், ஒட்டகங்களை அல்லாஹ்விற்கு பலி இடலாம் என்றுச் சொல்லி, அனுமதி அளிக்கும் கீழ்கண்ட வசனங்கள் தான் காரணம்.
 
இன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன. அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள் - நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (நபியே! அம்மக்களிடம்) "கால்நடைகளில் எட்டு வகைகள் உள்ளன - செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரு வகை, வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை, அவன் (அல்லாஹ்) ஆண் இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது பெட்டை இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது அவ்விரு வகைகளிலுமுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (அவன் தடுத்திருக்கிறான்?) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால், (இதனை) ஆதாரத்துடன் எனக்கு அறிவியுங்கள்" என்று கேட்பீராக. இன்னும், "ஒட்டகையில் (ஆண், பெண்) இரு வகை, மாட்டிலும் (பசு, காளை) இரு வகையுண்டு - இவ்விரு வகைகளிலுள்ள ஆண்களையா அல்லது பெட்டைகளையா அல்லது இவ்விரு வகையிலுள்ள பெட்டைகளின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கிறான். இவ்வாறு அல்லாஹ் கட்டளையிட்ட(தாகக் கூறுகிறீர்களே, அச்)சமயம் நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா?" என்றும் (நபியே!) நீர் கேளும் - மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக்காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான். (நபியே!) நீர் கூறும்; "தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை" - ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) - ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் - (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான். நகத்தையுடைய அனைத்தையும் யூதர்களுக்கு நாம் ஹராமாக்கியிருந்தோம்; ஆடு, மாடு ஆகியவற்றில் - அவற்றின் முதுகுகளிலோ அல்லது வயிறுகளிலோ அல்லது எலும்புகளுடன் கலந்தோ இருக்கும் கொழுப்பைத் தவிர மற்ற அவற்றின் கொழுப்பையும் ஹராமாக்கினோம் - அவர்கள் அக்கிரமம் செய்த காரணத்தினால் அவர்களுக்கு இதனை நாம் கூலியாக கொடுத்தோம் - நிச்சயமாக நாம் உண்மையே கூறுகிறோம். நபியே!) இவர்கள் உம்மைப் பொய்ப்பிப்பார்களானால், "உங்களுடைய இறைவன் விசாலமான கருணையுடையவன்தான்; (எனினும்) குற்றம் செய்த கூட்டத்தாரைவிட்டு அவன் தண்டனை தடுக்கப்படமாட்டாது. (6:142-147)

இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக் பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த வின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். (22:36)
 
ஹதீஸ்கள் கீழ் கண்டவிதமாக சொல்கின்றன:
 
பாகம் 2, அத்தியாயம் 25, எண் 1551

அனஸ்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு இருந்தோம். அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள். துல் ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள். பிறகு விடியும் வரை அங்கேயே தங்கிவிட்டு மீண்டும் வாகனத்தின் மீதமர்ந்து பைதா எனுமிடத்தில் வாகனம் நிலைக்கு வந்தபோது 'அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர்' எனக் கூறினார்கள். பிறகு ஹஜ், உம்ரா இரண்டிற்காகவும் இஹ்ராம் அணிந்து, தல்பியா கூறினார். நாங்கள் மக்கா வந்து (உம்ராவை முடித்த போது) இஹ்ராமிலிருந்து விடுபடும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மக்கள் துல்ஹஜ் பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் அணிந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஒட்டகங்களை நிற்கவைத்துத் தம் கைகளாலேயே அறுத்தார்கள். இன்னும் நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் பெருநாளில் இரண்டு கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகளை அறுத்தார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 25, எண் 1716

அலீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (குர்பானி ஒட்டகங்களை பலியிடுவதற்கு) என்னை நியமித்தார்கள். பிறகு அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்தேன். அவற்றின் சேணங்களையும் தோல்களையும் பங்கிட்டுவிடுமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்தேன்.

இன்னொரு அறிவிப்பில் 'பலிப் பிராணிகளை கவனித்துக் கொள்ளுமாறும் அவற்றை அறுப்பதற்குக் கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக்கூடாது என்றும் எனக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என அலீ(ரலி) கூறினார் என உள்ளது.
 
யேகோவா தேவன் ஒட்டக மாமிசம் தடை செய்தார், ஆனால், அல்லாஹ் அதனை சாப்பிட அனுமதியும் அளித்து, தனக்காக ஒட்டகங்களை பலியிடவும் அனுமதியளித்தார்.

இன்னும் தண்ணீரில் வசிக்கும் குறிப்பிட்ட உயிரிணங்களை சாப்பிடுவதை தவ்ராத் (ஐந்தாகமங்கள் - Torah) தடை செய்துள்ளது, அதாவது சிறகும் செதிள்களும் இல்லாதவைகளை உண்ணக்கூடாது என்றுச் சொல்கிறது (லேவியராகமம் 11:9-12; உபாகமம் 14:9-10). ஆனால், இஸ்லாமில் எல்லா நீர் வாழும் உயிரிணங்களை உண்ண அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
 
உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக - ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். (குர்‍ஆன் 5:96)

நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். (குர்‍ஆன் 16:14)
 
இமாம் மாலிக் கீழ்கண்ட விதமாக பதிவு செய்துள்ளார்:
 
Yahya related to me from Malik from Safwan ibn Sulaym from Said ibn Salama of the Bani Azraq from al-Mughira ibn Abi Burda of the tribe of Bani Abd ad-Dar that he had heard Abu Hurayra speak about a man who came to the Messenger of Allah, may Allah bless him and grant him peace, and said, "Messenger of Allah! We travel by sea and we do not carry much fresh water with us so if we do wudu with it we go thirsty. Can we do wudu with seawater?" The Messenger of Allah, may Allah bless him and grant him peace, replied, "Its water is pure, and its dead creatures are halal." (Malik's Muwatta, Book 2, Number 2.3.12)

Yahya related to me from Malik from Nafi that Abd ar-Rahman ibn Abi Hurayra asked Abdullah ibn Umar about eating what was cast up by the sea and he forbade him to eat it. Then Abdullah turned and asked for a Qur'an, and read, "The game of the sea and its flesh are halal for you." Nafi added, "Abdullah ibn Umar sent me to Abdar-Rahman Ibn Abi Hurayra to say that there was no harm in eating it." (Malik's Muwatta, Book 25, Number 25.3.9)

Yahya related to me from Malik from Abu'z-Zinad from Abu Salama ibn Abd ar-Rahman that some people from al-Jar came to Marwan ibn al-Hakam and asked him about eating what was cast up by the sea. He said, "There is no harm in eating it." Marwan said, "Go to Zayd ibn Thabit and Abu Hurayra and ask them about it, then come to me and tell me what they say." They went to them and asked them, and they both said, "There is no harm in eating it " They returned to Marwan and told him. Marwan said, "I told you."

Malik said that there was no harm in eating fish caught by magians, because the Messenger of Allah, may Allah bless him and grant him peace, said, "In the sea's water is purity, and that which is dead in it is halal. "

Malik said, "If it is eaten when it is dead, there is no harm in who catches it." (Malik's Muwatta, Book 25, Number 25.3.12)
 
கடைசியாக, ஷப்பீர் அவர்கள் ஏசாயாவிலிருந்து பன்றி மாமிசம் பற்றி ஒருமேற்கோளை காட்டினாரே தவிர, அந்த ஏசாயா புத்தகத்தில் அவ்வசனத்தைச் சுற்றியுள்ள இதர விவரங்களை படிக்க தவறிவிட்டார். ஏசாயாவில் கீழ்கண்ட விதமாக உள்ளது:
 
கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது. இப்படிச் செய்கிற மனுஷனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான். கர்த்தரைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: கர்த்தர் என்னைத் தம்முடைய ஜனத்தைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவாரென்று சொல்லானாக, அண்ணகனும்: இதோ, நான் பட்டமரமென்று சொல்லானாக. என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப்பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன். கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நியபுத்திரர் அனைவரையும், நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும். இஸ்ரவேலில் தள்ளுண்டவர்களைச் சேர்க்கிற கர்த்தராகிய ஆண்டவர்: அவனிடத்தில் சேர்க்கப்பட்டவர்களையல்லாமல் இன்னும் அவனிடத்தில் சேர்ப்பேன் என்கிறார். (ஏசாயா 56:1-8)

என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று. (ஏசாயா 58:13-14)
 
ஓய்வு நாளை கடைபிடிக்கும் அனைவரையும் தேவன் ஆசீர்வதிப்பதாக கூறுகிறார். தவ்ராத்தின் (ஐந்தாகமங்கள் - Torah) கட்டளையை மறுபடியும் நியாபகப்படுத்துகிறார் ஏசாயா.
 
ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஒய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். (யாத்திராகமம் 20: 8-11)

மேலும், கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும். ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும். ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள். அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார். (யாத்திராகமம் 31:12-17)

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக. ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக. ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் எருதானாலும், உன் கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்; நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வுநாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார். (உபாகமம் 5: 12-15)
 
ஓய்வு நாளை கடைபிடிப்பது எவ்வளவு முக்கியமென்றால், யாராவது வேண்டுமென்றே தெரிந்தே ஓய்வு நாளை கடைபிடிக்கவில்லையானால், அவர்கள் கொல்லப்படவேண்டும் என்று கட்டளையும் உள்ளது.
 
அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும், எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செயதால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும். அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும், அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார். இஸ்ரலே புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள். விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள். அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள். கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார். அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான். (எண்ணாகமம் 15:30-36)
 
இப்போது கீழ்கண்ட கேள்விகள் எழும்புகின்றன:

யேகோவாவின் ஓய்வு நாளை கட்டாயமாக கடைபிடிப்பதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளதா?

ஒரு முஸ்லீம் தவ்ராத்திலும், ஏசாயாவிலும் கட்டளையிடப்பட்ட ஓய்வு நாளை கட்டாய கடமையாக கடைபிடிக்கவேண்டுமா?

இந்த கேள்விகளுக்கு பதில் "இல்லை" என்றுச் சொல்வார்கள் இஸ்லாமியர்கள்.

இது மட்டுமல்ல, இன்னொரு உதாரணத்தையும் கூறலாம், எப்படி உண்மையான தேவனின் வார்த்தைக்கு குர்‍ஆன் முரண்படுகிறது என்பதை எடுத்துக்காட்ட கீழ்கண்ட விவரங்களை படிக்கவும், தவ்ராத் சொல்கிற‌து:
 
ஒருவன் ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணிக்கொண்டபின்பு, அவளிடத்தில் இலச்சையான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம். அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம். அந்த இரண்டாம் புருஷனும் அவளை வெறுத்து, தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளை விவாகம்பண்ணின அந்த இரண்டாம் புருஷன் இறந்துபோனாலும், அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளைத் தள்ளிவிட்ட அவளுடைய முந்தின புருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக்கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவம் வரப்பண்ணாயாக. (உபாகமம் 24:1-4)
 
இப்போது கீழ் கண்ட குர்‍ஆன் விவரங்களை இதனோடு ஒப்பிட்டுப்பார்க்கவும்:
 
(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள்)முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;;. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர. நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்;. ஆகையால் அவற்றை மீறாதீர்கள்;. எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள். மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தல?ாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். (குர்‍ஆன் 2:229-230)
 
எதை யேகோவா தேவன் "கேவலம் என்றும் அருவருப்பு" என்றும் அழைக்கிறாரோ, அதனை அல்லாஹ் "அனுமதிக்கப்பட்டது" என்று அழைக்கிறார்!

இதுவரை நாம் கண்ட விவரங்களிலிருந்து, ஏன் ஷப்பீர் அலி அவர்கள் குர்‍ஆன் மற்றும் தவ்ராத்திற்கு இடையே உள்ள ஒரு குறிப்பிட்ட விவரம் பற்றி மட்டும் குறிப்பிட்டுவிட்டு, இவ்விரண்டு புத்தகங்களுக்கும் இடையே உள்ள மற்ற மிகப்பெரிய வித்தியாசங்களை, முரண்பாடுகளை பார்க்க தவறிவிட்டார் என்பதை கண்டுக்கொள்ளலாம். இப்போது, மோசேயின் கட்டளைகளுக்கு முரண்பட்டதாக குர்‍ஆன் இருக்கிறது என்பதை உணர்ந்தவராக, ஷப்பீர் அலி அவர்கள் முஹம்மது தேவனின் சட்டங்களை மீறிவிட்டார் என்பதை கண்டு, முஹம்மதுவை மறுதலிப்பாரா? அல்லது மோசேயின் கட்டளைகள் அந்த குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கொடுக்கப்பட்டது, தற்கால விசுவாசிகளுக்கு / நம்பிக்கையாளர்களுக்கு அவைகள் பொருந்தாது என்றுச் சொல்வாரா? இந்த‌ இர‌ண்டாம் தெரிவை ஷ‌ப்பீர் அலி எடுப்பாரானால், கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கும் ப‌வுலுக்கும் எதிராக‌ ப‌ன்றியின் க‌றியைப் ப‌ற்றி அவர் முன்வைக்கும் குற்ற‌ச்சாட்டான‌து அவ‌ர‌து காலுக்கு கீழேயே ந‌சுங்கிவிடும். ஷ‌ப்பீர் அலி அவ‌ர்க‌ளின் வாத‌ங்க‌ளை நாம் கூர்மையாக‌ அல‌சுவோம் என்றால், அவ‌ருடைய‌ வாத‌ங்க‌ளுக்கு நிற்க‌ இட‌மில்லாம‌ல், த‌டுமாறுவ‌தைக் காண‌லாம்.

முதல் பாகம் இதோடு முடிகிறது, இரண்டாம் பாகத்தை இங்கு படிக்கவும்: An Examination of Shabir Ally's Fascination with Pigs - Part 2




 

 

புதன், 11 மார்ச், 2009

கிறிஸ்தவன் பார்வையின் "பைபிள் கூறும் பயங்கரவாதம் (1)" கட்டுரைக்கு பதில் 1

கிறிஸ்தவன் பார்வையின்:

பைபிள் கூறும் பயங்கரவாதம் (1) கட்டுரைக்கு பதில் 1

முன்னுரை: அபூ அப்திர்ரஹ்மான் என்ற இஸ்லாமிய சகோதரர் எனக்கு பைபிள் கூறும் பயங்கரவாதம் என்ற தொடர் கட்டுரைகளை அனுப்புகிறார். அவர் அனுப்பிய தொடர் கட்டுரைகளுக்கு பதிலை நாம் தொடர் கட்டுரைகளாக காணலாம்.

அவர் அனுப்பிய கட்டுரை "பைபிள் கூறும் பயங்கரவாதம்" என்ற தலைப்புள்ளதால், அவர் முன்வைக்கும் வசனங்களுக்கு விளக்கமளிப்பது நம் கடமையாக இருக்கிறது, அதே நேரத்தில், பயங்கரவாதம் பற்றி அவருக்கும் (இஸ்லாமுக்கும்) சில கேள்விகளும் முன்வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அபூ அப்திர்ரஹ்மான்

பைபிள் கூறும் பயங்கரவாதம் (1)

கிறிஸ்தவர்களில் சிலர், முகம்மது (ஸல்) அவர்கள் வன்முறையைப் போதித்ததாகவும் இயேசு அகிம்சையையும் அன்பையும் போதித்ததாகவும் ஒப்பீட்டுப் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.

Source: http://christianpaarvai.blogspot.com/2009/02/1.html
emphasis mine

ஈஸா குர்‍ஆன்:

உண்மை தானே. முஹம்மது பற்றி அறியவேண்டுமானால், குர்‍ஆனை, ஹதீஸ்களை படித்துப் பாருங்கள். இயேசுவின் போதனைகளை அறிய பைபிளை படியுங்கள். இருவரின் வாழ்க்கை சரித்திரம் மட்டுமே அவர்கள் என்ன சொன்னார்கள், செய்தார்கள் என்பதை அறிந்துக்கொள்வதற்கு உதவும்.

அபூ அப்திர்ரஹ்மான்

முஸ்லிம்களைப் பொறுத்தவரை இதற்கு மாறாக இயேசுதான் வன்முறையைப் போதித்தார் என்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்; சொல்லவும் முடியாது. ஏனென்றால் அது அவர்களின் நம்பிக்கைக்கு எதிரானதாகும்.

ஈஸா குர்‍ஆன்:

இயேசு வன்முறையை போதித்தார் என்று உங்களால் எப்படி சொல்லமுடியும்? அதற்கு உங்களுக்கு ஆதாரங்கள் வேண்டுமல்லவா?

ஆனால், முஹம்மதுவின் முழு வாழ்க்கையும் செயல்களும் வெட்ட வெளிச்சமாக குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும், அவரது வாழ்க்கை சரித்திரங்களிலும், அதே நேரத்தில் தற்காலத்தில் நம் முன் வாழும் சில இஸ்லாமியர்களின் வாழ்க்கையிலும் தெளிவாக தெரிவதால், அதைப் பற்றி கேள்வி எழுப்புகிறார்கள், உலக மக்கள் அல்லது கிறிஸ்தவர்கள்.

அபூ அப்திர்ரஹ்மான்

முஸ்லிம்களைப் பொறுத்தவரை இயேசுவும் முஹம்மதுவும் (அவர்கள் மீது இறையருள் உண்டாகட்டும்) தார்மீக வழிகாட்டுதல்களுடன் அனுப்பப்பட்ட இறைவனின் அடியார்களும் தூதர்களும் ஆவார்கள். அவர்கள் இருவரிடையே வேற்றுமை பாராட்டுவது இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரான செயல்பாடாகும்.

ஈஸா குர்‍ஆன்:

இஸ்லாமிய நம்பிக்கையின் படி எப்படி "இயேசுவை ஒரு நபி" என்று நீங்கள் நம்புகிறீர்களோ, அதே போல, பைபிளின் நம்பிக்கையின் படி "முஹம்மது ஒரு நபி இல்லை" அதாவது, பைபிள் படி வந்த நபி அல்ல என்று நம்புகிறோம்.

உங்களின் நம்பிக்கையின் படி, இயேசு ஒரு நபி, எங்களின் நம்பிக்கையின் படி, முஹம்மது ஒரு நபி அல்ல அவ்வளவே.

உங்களுக்கு வேண்டுமானால், இவ்விருவருக்கும் இடையில் வேற்றுமை பாராட்டுவது இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிராக இருக்கலாம். ஆனால், எங்கள் நம்பிக்கையின் படி, "இவ்விருவரும் இறைத்தூதர்கள் மட்டுமே" என்றுச் சொல்வது இறைக் குற்றமாகும். அதாவது, யேகோவா தேவன் அனுப்பாத ஒரு தூதரை அவர் அனுப்பியதாக கிறிஸ்தவர்கள் நம்பினால் அது தவறாகும். அதே போல, இயேசு தெய்வமாக இருக்கும் போது, அவர் ஒரு மனிதர், தூதர் மட்டுமே என்றுச் சொல்வது தவறானதாகும்.

உங்களுக்கு உங்கள் நம்பிக்கைத் தான் சரி, எங்களுக்கு எங்கள் நம்பிக்கைத் தான் சரி. ஆனால், இயேசு இறைவனாக இருக்கிறாரா? என்ற கேள்வியும், அதே நேரத்தில் முஹம்மது ஒரு தீர்க்கதரிசியாக (நபியாக) இருந்தாரா? அல்லது ஒரு நபிக்கான தகுதி அவருக்குள்ளதா? போன்ற கேள்விகளும் எழும்பும். இக்கேள்விகளுக்கு பதில்கள், பைபிளும், குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும் கிடைக்கும்.

ஆக, இயேசுவோடு முஹம்மதுவை ஒப்பிட்டு, நாங்கள் வேற்றுமை பாராட்டமாட்டோம் என்றுச் சொல்வது உங்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், இறைவனோடு ஒரு சாதாரண மனிதரை ஒப்பிடுவது கிறிஸ்தவத்திற்கு ஏற்றதல்ல.

அபூ அப்திர்ரஹ்மான்

இஸ்லாம் பயங்கரவாதத்தைப் போதிக்கும் பொய் மார்க்கம் என்றும் கிறிஸ்தவம் தான் படைத்தவனின் உண்மையான வழிகாட்டுதல் - மார்க்கம் என்றும் நிறுவதற்காகவே இத்தகைய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன எனில், அவற்றிற்குச் சரியான பதிலளிப்பதும் உண்மை என்ன என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதும் முஸ்லிம்களின் மீது கடமையாகிறது!

ஈஸா குர்‍ஆன்:

நீங்கள் சொல்வது போல, இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்றுச் சொல்லி, கிறிஸ்தவத்திற்கும், பைபிளுக்கும் எதிராக இஸ்லாமியர்களால முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில்கள் சொல்வதும், ஆதாரங்களை முன்வைப்பதும் எங்களுக்கும் கடமையாக உள்ளது.

உங்கள் கடமையை நீங்கள் செய்யும் போது, நாங்கள் அமைதியாக பதில் தருவது போல, குறைந்த பட்சமாக, நீங்களும் எங்கள் கடமையை நாங்கள் செய்ய எங்களை அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

அபூ அப்திர்ரஹ்மான்

இஸ்லாம் வன்முறை - பயங்கரவாத மதம் என சாதாரண மக்களை ஏமாற்ற முயலும் இத்தகையவர்கள், தாங்கள் வேதமாக நம்பியிருக்கும் "மனித கரங்களால் கையாடல் செய்யப்பட்டுள்ள பைபிள்" உண்மையில் அகிம்சையையும் அன்பையும் தான் போதிக்கிறதா? என்பதை முழுமையாக விளக்க முற்படுவதில்லை.

மாறாக இயேசுவின் உபதேசங்களாகக் குறிப்பிடப்பட்ட சிலக் கருத்துக்களை மட்டும் பொறுக்கி எடுத்து முஹம்மது (ஸல்) அதற்கு எதிரானவர் என்று ஒப்பீட்டுப் பிரச்சாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈஸா குர்‍ஆன்:

"இஸ்லாம் வன்முறை பயங்கரவாத மார்க்கம்" என்று ஏன் நாங்கள் சாதாரண மக்களை ஏமாற்றப் போகிறோம்? உங்கள் குர்‍ஆனின் வசனங்கள், ஹதீஸ்கள் இப்படி சொல்கின்றன என்றுச் சொல்கிறோம், அதைப் படிப்பவர்கள் இஸ்லாமின் உண்மை முகம் என்ன என்று அவர்களாகவே, அவ்வசனங்களை பார்த்து தெரிந்துக்கொள்வார்கள்.

நாங்கள் காட்டும் வசனங்கள் உங்கள் குர்‍ஆனில் இல்லையா?

நாங்கள் முன்வைக்கும் ஹதீஸ்கள் இஸ்லாமிய உண்மை ஹதீஸ்கள் இல்லையா?

எங்கள் கட்டுரையை படிப்பவர்களுக்கு, உங்கள் கட்டுரைகளையும் படிக்க வசதி கிடைக்கும் விதமாக, உங்கள் கட்டுரைகளின் தொடுப்புக்களையும் நாங்கள் தருவதில்லையா?

சாதாரண மக்களாகிய இஸ்லாமியர்களை ஏமாற்றுவது நீங்கள் தானே?

கீழ் கண்ட விவரங்களை சிந்தித்துப் பாருங்கள்.

1) அல்லாஹ் உங்களுக்காக இறக்கிய குர்‍ஆனை ஏன் தாய் மொழியில் படிக்க உற்சாகப்படுத்துவதில்லை?

2) இமாம்கள், இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதைத் தான் சாதாரண இஸ்லாமியர்கள் நம்பவேண்டுமா? அவர்களாகவே அல்லாஹ்வின் வார்த்தையாகிய குர்‍ஆனை புரியும் மொழியில் படிக்கக்கூடாதா?

3) எங்கள் கட்டுரைகளை படிக்க இஸ்லாமியர்களுக்கு ஏன் வாய்ப்பு தருவதில்லை, அதாவது, எங்களுக்கு பதில்கள் என்று எழுதிவிட்டு, எங்கள் தொடுப்புக்களையும் தருவதில்லையே ஏன்?

இப்பொழுது, "புரியும் மொழியில் குர்‍ஆனை படிக்காமலா நாங்கள் கட்டுரைகள் எழுதுகிறோம்?" என்று நீங்கள் கேட்கக்கூடும். நாங்கள் கேட்கும் கேள்வி, எத்தனை பேர் கட்டுரைகளை எழுதுகிறீர்கள்? எத்தனை பேர் பதில்களை எழுதுகிறீர்கள்? இங்கு கேள்வி, ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களின் குர்‍ஆன் அறிவைப் பற்றியது.

இஸ்லாமிய ஜனத்தொகையில் படிக்கத் தெரிந்தவர்களில் 10% பேராவது குர்‍ஆனை தங்கள் தாய் மொழியில் படிக்கிறார்களா? இந்த எண்ணிக்கையை 20%ஆக உயர்த்தலாமா? 30%, 40% அல்லது 50% ஆக உயர்த்தலாமா?

ஒரு பேச்சுக்காக 50% என்றே வைத்துக்கொண்டாலும், மீதமுள்ள 50% சதவிகிதம் பேர், உங்களைப் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதைத் தானே இஸ்லாம் என்று நம்பவேண்டிய நிர்பந்தத்தில் பரிதாப‌ நிலையில் இருக்கிறார்கள்? கிறிஸ்தவம் பற்றி பைபிள் பற்றி நீங்கள் சொல்லும் பொய்யும் புரட்டும் தானே "கிறிஸ்தவம் என்று அவர்கள்" நம்பவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்?

ஆகையால், சாதாரண மக்களை ஏமாற்றுவது நாங்கள் அல்ல, நீங்களும் உங்கள் இஸ்லாமும் தான்.

இறைவன் "எல்லாருக்காக" இறக்கிய வேதம் என்று ஒரு புறம் சொல்லிக்கொண்டு, இன்னொரு புறம் அவர்களை அரபியில் மட்டுமே படிக்க உற்சாகப்படுத்துகிறீர்களே, இதை என்னவென்றுச் சொல்லலாம். குறைந்த பட்சம், அரபியில் குர்‍ஆனை படிக்கும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக தமிழிலும் படிக்கவேண்டும் என்று தமிழ் நாட்டு எல்லா இஸ்லாமியர்களுக்கும் அதிகார பூர்வமாக அறிவுரை சொல்லமுடியுமா? அப்படி சொல்லிவிட்டு, அதன்படி தாய் மொழியில் படிக்கிறார்களா என்று தொடர்ந்து உற்சாகப்படுத்த முடியுமா?

இப்படி செய்யாத பட்சத்தில், சாதாரண இஸ்லாமியர்களின் இஸ்லாமிய ஞானம் வெறும் கேள்வி ஞானம் தானே!

யார் யாரை ஏமாற்றுகிறார்கள்? என்று இப்பொழுது சிந்தித்துப்பாருங்கள்.

//தாங்கள் வேதமாக நம்பியிருக்கும் "மனித கரங்களால் கையாடல் செய்யப்பட்டுள்ள பைபிள்" உண்மையில் அகிம்சையையும் அன்பையும் தான் போதிக்கிறதா? என்பதை முழுமையாக விளக்க முற்படுவதில்லை.//

குர்‍ஆன் மனிதனின் கற்பனையா அல்லது அல்லாஹ் இறக்கினானா என்பதை நாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதே நேரத்தில் பைபிளை ஒருவர் படித்தால், புரிந்துக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதற்கு பைபிள் ஒன்றும் குர்‍ஆன் போல அமைப்பு உள்ளதல்ல.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் சம்மந்தப்பட்ட சூழ்நிலை என்ன என்பதை பைபிள் தன்னகத்தே கொண்டுள்ளது, மற்றும் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாங்கள் விளக்கங்கள் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம்.

கிறிஸ்தவத்தின் போதனை அன்பா, அஹிம்சையா என்பதை பைபிளை படித்தால் புரியும், அதே போல, குர்‍ஆனை படித்தால், ஹதீஸ்களை படித்தால், இஸ்லாம் என்றால் வன்முறை என்பது விளங்கும், அதை விளங்கிக்கொண்டு தானே இப்போது உலகில் எல்லா தீவிரவாத செயல்கள் நடைபெறுகின்றன.

//மாறாக இயேசுவின் உபதேசங்களாகக் குறிப்பிடப்பட்ட சிலக் கருத்துக்களை மட்டும் பொறுக்கி எடுத்து முஹம்மது (ஸல்) அதற்கு எதிரானவர் என்று ஒப்பீட்டுப் பிரச்சாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.//

யார் இயேசுவின் ஒரு சில வசனங்களை எடுத்து விளக்கமளிக்கிறார்கள் என்பதை இந்த தொடர் கட்டுரைகளில் பார்க்கத் தான் போகிறோம்.

அமைதியை போதித்த இயேசு எங்கே, வன்முறையை தன் ஆயுதமாகக் கொண்ட முஹம்மது எங்கே, நம் பதில்களில் நாம் காண்போம்.

அபூ அப்திர்ரஹ்மான்

அத்துடன் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் தம் உயிரைவிட மேலாக மதிக்கக் கூடிய, ஒரு சமுதாயத்தின் நம்பிக்கைக்கு உட்பட்ட ஆன்மீகத் தலைவரை ஒற்றை வார்த்தையில் பொய்யான குற்றச்சாட்டுகளுடன் கேவல விமர்சனம் செய்வதன் மூலம் தம்மை விட மதவெறி பிடித்தவர்கள் வேறுயாரும் இல்லை என்பதையும் வெளிக்காட்டியுள்ளனர்.

ஈஸா குர்‍ஆன்:

இதே போல, கோடிக்கணக்கான மக்கள் இறைவன் என்று நம்பும் இயேசுவை "அவர் ஒரு நபி என்றுச் சொல்லி அவமானப்படுத்துவதும், இயேசுவை முஹம்மதுவோடு ஒப்பிட்டு அவர் வெறும் நபி என்று இஸ்லாமியர்கள் சொல்வதும்" மதவெறி இல்லையா?

உங்கள் சமுதாயத்திற்கு அவர் வழிகாட்டி என்பதால், மற்ற மார்க்கங்கள் பற்றி அவர் எது சொன்னாலும் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமா என்ன? அப்படி ஒன்றும் கட்டாயமில்லையே. அவர் மற்ற மார்க்கங்களை விமர்சித்தால், அதைக் கேட்டுக்கொண்டு, சும்மா இருப்பதற்கு யாரும் காதில் பூவைத்துக் கொண்டு இல்லையே!

நாளைக்கு ஒருவர் தன்னை முஹம்மதுவிற்கு பின்பு வந்த நபி என்றுச் சொல்லி, இஸ்லாம் தவறு, அதன் புனிதத்தன்மை மாற்றப்பட்டுவிட்டது, அதை சரிபடுத்த என்னை அல்லாஹ் அனுப்பினார் என்று சொன்னால், அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பீர்களா? அவருக்கு பதில் சொல்லமாட்டீர்களா, விமர்சிக்கமாட்டீர்களா, அவர் ஒரு பொய் நபி என்றுச் சொல்லமாட்டீர்களா? அதே போலத்தான் முஹம்மதுவும் கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில், "ஒரு பொய் நபி" ஆவார்.

யாருக்கு மதவெறி உள்ளது என்பதை இஸ்லாமிய நாட்டில், ஷரியா சட்டமுள்ள நாட்டில் சென்று பார்த்தால் தெரியும்?

அபூ அப்திர்ரஹ்மான்

பைபிள் என்றவுடனே பெரும்பாலானவர்களுக்கு நினைவில் வருவது "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு" என்பது மட்டும் தான். சுருங்கக் கூறினால், இந்த ஒரு சொல்லை மட்டும் பரவலாக எடுத்து வைத்து, மனிதர்களால் கலப்படம் செய்யப்பட்ட பைபிளின் உண்மையான பக்கங்களுக்குள் பாமர மக்களைச் செல்ல விடாமல், காசுக்கு மாரடிக்கும் மிஷனரிகள் கட்டி வைத்துள்ளன.

தொடரும்...

ஈஸா குர்‍ஆன்:

இஸ்லாம் என்றுச் சொன்னால், இஸ்லாமியரல்லாத உலக மக்களுக்கு என்ன நியாபகம் வரும் என்று உங்களுக்குத் தெரியுமா?

"தீ வி ர வா த ம்" என்ற வார்த்தை தான் நியாபகம் வரும்.

இதற்கு எங்களைப் போல, விரல் விட்டு எண்ணக்கூடிய வாசகர்கள் படிக்கும் கட்டுரைகள் எழுதுபவர்கள் காரணமல்ல. இதற்கு காரணம்,

தங்களை இஸ்லாமியர்கள் என்று அடையாளம் காட்டிக்கொள்ளும் தீவிரவாதிகளும்,

தங்கள் கைகளில் துப்பாக்கியுடனும், குர்‍ஆனுடனும் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் தீவிரவாதிகளும் தான் கார‌ண‌ம்.

மட்டுமல்ல, உங்கள் குர்‍ஆனின் போதனைகளும், உங்கள் அன்பான நபியின் செயல்களும் தான் படித்தவர்களின் மத்தியில் இப்படிப்பட்ட எண்ணத்தை உண்டாக்குகிறது.

இன்னும் பல ஆண்டுகள் சென்றால், இஸ்லாம் என்றால் என்ன பொருள் என்று கேட்டால், மக்கள் "வன்முறை அல்லது தீவிரவாதம்" என்று பொருள் கூறும் நாட்கள் வந்துவிடும் போல் இருக்கிறது. அதற்கான அடிப்படையை "ஒரு சில இஸ்லாமியர்கள்" இப்போதே அமைத்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் நடமாடும் சாலைகள், கடைகள், பேருந்துகள், போதாகுறைக்கு உணவு விடுதிகளையும் விட்டு வைக்காமல் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் இப்போது, கிரிக்கெட்டையும் விட்டுவைக்கவில்லை.

உலகத்தில் அன்று, "இலங்கை" என்றுச் சொன்னால், அங்கு நடக்கும் உள்நாட்டுச் சண்டை, மற்றும் விளையாட்டு என்றால், பந்து வீச்சாளர் முரளிதரன் போன்றவர்கள் நியாபகத்துக்கு வருவார்கள். ஆனால், இப்போது "என்ன நியாபகம் வரும் தெரியுமா? பாகிஸ்தான், லாஹூர், மற்றும் தீவிரவாதம் கடைசியாக இஸ்லாம்".

எனவே, நாங்கள் அல்ல, உங்கள் இஸ்லாமியர்களே இஸ்லாமுக்கு அதிக பாதிப்பை உண்டாக்குகிறார்கள்.

எனவே, முதலில் இஸ்லாம் வன்முறையை செய்யும் படி சொல்வதில்லை என்று உங்கள் "இஸ்லாமியர்களுக்கு" போதியுங்கள், குர்‍ஆன் அப்படி போதிக்கவில்லை என்று நீங்கள் கருதினால்.

// மனிதர்களால் கலப்படம் செய்யப்பட்ட பைபிளின் உண்மையான பக்கங்களுக்குள் பாமர மக்களைச் செல்ல விடாமல், காசுக்கு மாரடிக்கும் மிஷனரிகள் கட்டி வைத்துள்ளன.//

பாமர மக்கள் பைபிளை தங்கள் மொழியில் படித்து தெரிந்துக் கொள்கிறார்கள், கிறிஸ்தவர்களிடம் "யாரும் தங்கள் கைவரிசையை" காட்டமுடியாது. பாமர மக்கள் இஸ்லாமின் உண்மை முகத்தை தெரிந்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகத் தானே, அரபியில் படித்தால் தான் அதிக நன்மைகள் என்று அவர்களை ஏமாற்றிக்கொண்டு வருகிறீர்கள்? முதலில், அரபியை விட்டு வெளியே வாருங்கள், புரியும் மொழியில் படியுங்கள், அப்போது புரியும் உண்மை எது பொய் எது என்று.

யார் இஸ்லாமை விமர்சித்தாலும் போதும், உடனே "காசுக்காக மாரடிக்கிறவர்கள்" என்று பட்டம் கொடுத்துவிடுவார்கள் இஸ்லாமியர்கள்.

நான் என் சொந்த வேலை செய்கிறேன், வருமானத்தை சம்பாதிக்கிறேன், எனக்கு யாருடைய காசும் தேவையும் இல்லை. சரி ஒரு கேள்வியை கேட்கிறேன், "இஸ்லாமை ஒருவர் கேள்வி கேட்டால், அவர் காசுக்காக மாரடிப்பதாக அர்த்தம் அப்படித்தானே, அதே நீங்கள் இஸ்லாமுக்கு வக்காளத்து வாங்கினால், உங்களுக்கு சொர்க்கத்தில் "அனேக பெண்கள்" கிடைப்பார்கள் என்ற நப்பாசையாலா?"

முடிவுரை:

அருமை அப்திர்ரஹ்மான் அவர்களே, பயங்கரவாதம், தீவிரவாதம் என்பதைப் பற்றி இஸ்லாமியர்கள் எழுதவேண்டுமென்றால், ஒரு முறைக்கு நூறு முறை சிந்திக்கவேண்டும், அப்படி சிந்திக்காத பட்சத்தில் அனேக கேள்விகளுக்கு பதில் அளிக்கும் கட்டாயத்தில் தள்ளப்படுவீர்கள். உங்களின் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

இஸ்லாம் மற்றும் பயங்கரவாதம் பற்றிய தமிழ் கட்டுரைகள்

இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை என்பதற்கு பத்து முக்கிய காரணங்க‌ள் (முஹம்மதுவின் வாழ்க்கையிலும் குர்‍ஆனிலும் வன்முறை) Top ten reasons why Islam is NOT the religion of peace (Violence in Muhammad's life and the Quran)

அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு (To Kill and To Die In The Name of Allah)

முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும் (MUHAMMAD AND THE MURDER OF ABU AFAK)

முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை) MUHAMMAD'S ASSASSINS AND INTIMIDATION IN ISLAM (The Murder of Theo Van Gogh)

முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் (MUHAMMAD'S USE OF TORTURE)

இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)




Isa Koran Home Page Back - Abu AbdirRahmaan/AbuNoora/UlaralPage Rebuttals Index