ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?

வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்?

ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?

 
இஸ்லாமும் நோவாவும்
 

முன்னுரை: நோவாவின் வெள்ளம் உலகம் முழுவதும் வியாபித்தது என்று பைபிள் கூறுகிறது, இதையே குர்‍ஆனும், ஆரம்ப கால இஸ்லாமியர்களும் கூறினார்கள். ஆனால், தற்கால இஸ்லாமிய அறிஞர்கள் வெள்ளம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே அதாவது நோவாவின் சமூகத்தார்களை மட்டுமே அழித்தது, பைபிள் சொல்வது தவறு என்றுச் சொல்கிறார்கள்.

 
குர்‍ஆன் சொல்வதும் "உலகம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளமே" என்று விளக்கும் கட்டுரையை இங்கு படிக்கவும்:

குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா? (DOES THE QURAN TEACH A LOCAL FLOOD?)
 
இந்த கட்டுரையில் நாம் தற்கால இஸ்லாமியர்கள் சொல்வது போல, வெள்ளமானது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்டது என்பதை ஒரு விவாதத்திற்கு ஏற்றுக்கொண்டு, இதனால், விளையும் பிரச்சனைகள் என்ன? அவைகளை எப்படி இஸ்லாமியர்கள் சரி செய்வார்கள் என்பதை காண்போம்.
 
1) அல்லாஹ்வின் கட்டளை: ஒவ்வொரு வகையிலும் ஆண் பெண் கொண்ட ஒரு ஜோடியை கப்பலில் ஏற்றிக்கொள்

ஒவ்வொரு வகையான மிருகங்களில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்று ஒரு ஜோடியை தன்னிடம் கப்பலில் ஏற்றிக்கொள் என்று அல்லாஹ் நோவாவிற்கு கட்டளையிடுகிறார். அதனை குர்‍ஆன் 11:40 என்ற வசனத்தில் படிக்கலாம்.
 
முஹம்மது ஜான் மொழிபெயர்ப்பு:

இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி;) "உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர் உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்" என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை. (குர்‍ஆன் 11:40)

பி.ஜைனுல் ஆபிதீன் மொழிபெயர்ப்பு:

நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது "ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!" என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர். (குர்‍ஆன் 11:40)
 
குர்‍ஆனும், இஸ்லாமியர்கள் நபி என்று கருதும் முஹம்மதுவும், மற்றும் ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்களாகிய இபின் அப்பாஸ், போன்றோர்களும், மற்றும் இபின் கதீர் போன்ற குர்‍ஆன் விரிவுரையாளர்களும், நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் பூமி அனைத்தும் வியாபித்தது என்றுச் சொல்வதை ஏற்றுக்கொள்ளாமல், பைபிளை குற்றம் பிடிப்பதற்காகவே "வெள்ளம் ஒரு பகுதியில் மட்டும் ஏற்பட்டது" என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களுக்கு கீழ் கண்ட கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட இடம் மட்டுமே அழிக்கபோவதாக இருந்தால், ஏன் மிருகங்களில் ஆண் பெண் என்று ஒரு கோடி பாதுகாக்கப்படவேண்டும் என்று அல்லாஹ் விரும்பினார்/செயல்படுத்தினார்?
 
• அல்லாஹ் அழிக்க நினைத்தது, நோவாவின் சமூகத்தினரை மட்டுமே என்று சொன்னால், ஏன் அவர் மிருகங்களை பாதுகாக்க அதுவும் இனவிருத்தி அடைவதற்கு தேவையான ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மிருகங்களை தன் கப்பலில் சேகரித்துக் கொள் என்று நோவாவிற்கு கட்டளையிடவேண்டும்?

• நோவாவும் அவரது சமூகத்தார்களும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்து இருப்பார்கள், அவர்கள் சில கிலோ மீட்டர் தூரம் வியாபித்து இருக்கலாம், உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், ஒரு சின்ன ஊராக இருக்கலாம், அல்லது ஒரு சிறிய பட்டணமாக இருக்கலாம். ஒரு பேச்சுக்காக சென்னை பட்டணம் அளவிற்கு பெரிய இடத்தில் அவர்கள் வசித்ததாகவே கணக்கெடுத்துக் கொண்டாலும், அந்த இடத்தில் இருக்கும் மிருகங்களில் ஒரு ஆண் பெண் ஜோடியை பாதுகாக்கவேண்டிய அவசியம் என்ன?

• ஒரு இடத்தில் இருக்கும் மிருகங்கள் அடுத்த இடத்தில் இருக்காதோ? நோவாவின் சமூகத்தார்கள் வாழ்ந்த இடத்தில் இருந்த மிருகங்கள் வேறு இடத்தில் இல்லாமல் போகுமா? இஸ்லாமியர்கள் சிந்திக்கவேண்டும்.

• நோவாவின் காலத்தில் அவரது இருப்பிடமுள்ள இடத்தில் மட்டுமே மிருகங்கள் இருந்தனவா? இவ்வளவு பெரிய பூமியில் வேறு எங்குமே மிருகங்கள் இல்லையா?

• நோவாவின் வசிப்பிடத்திலுள்ள மிருகங்களை அப்படியே மனிதர்களோடு சேர்த்து அழித்துவிட்டால், உலகத்தில் அந்த மிருக இனமே இல்லாமல் போகும் என்று அல்லாஹ் சிந்தித்து, ஒரு ஜோடியை பாதுகாக்கவேண்டிய அவசியமென்ன? உதாரணத்திற்கு, நோவா சென்னை பட்டணத்தில் வசித்திருந்தால், அல்லாஹ் சென்னையை மட்டும் அழிக்க திட்டமிட்டிருந்தால், சென்னையில் வசிக்கும் ஒரு ஜோடி ஆடுகளை(ஆண் பெண்) பாதுகாக்க வேண்டிய அவசியமென்ன? சென்னையில் இருக்கும் ஆடுகள், மதுரையில் இருக்காதா? மும்பையில் இருக்காதா? கொல்கத்தாவில் இருக்காதா? அதிகபட்சமாக மற்ற கண்டங்களில், நாடுகளில் இருக்காதா?

• சிலர், ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படும் கங்காரு போன்ற மிருகங்களை பாதுகாக்கும் வண்ணம் அல்லாஹ் இப்படி சொல்லியிருக்கலாம் அல்லவா? என்று சொல்லக்கூடும். நீங்கள் சொல்வது உண்மை தான், ஆனால், நாம் மேலே படித்த குர்‍ஆன் வசனத்தின் படி, அசாதாரணமாக காணப்படும் மிருகங்களை மட்டுமே பாதுகாக்கும் படி அல்லாஹ் சொல்லவில்லை, "ஒவ்வொரு இனத்திலும் ஒரு ஜோடி" என்று பொதுவாகச் சொல்லியுள்ளார். ஆகவே, உங்களின் இந்த வாதம் சரியானது அல்ல.
 
மேற்கண்ட விவரங்களிலிருந்து நாம் காண்பது என்னவென்றால், குர்‍ஆன் சொல்லும் பெரு வெள்ளம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்ட வெள்ளமல்ல, அது உலகம் முழுவதும் பரவிய வெள்ளமே, அப்போது மட்டுமே, ஒவ்வொரு இனத்தையும் பாதுகாக்க ஒரு ஜோடி ஆண் பெண் மிருகங்கள் தேவைப்படும். ஆக, நோவாவின் வெள்ளம் சம்மந்தப்பட்டு நவீன கால இஸ்லாமியர்களின் நவீன எண்ணங்கள் தவறானவைகளாகும்.
 
 
2) பூமி முழுவதும் வெள்ளத்தால் சூழாத போது தப்பிக்க கப்பல் எதற்கு?

முதலாவதாக நாம் மேலே கண்டோம், மிருகங்களை பாதுகாக்க அல்லாஹ் செய்த ஏற்பாடு, அந்த பெரு வெள்ளம் பூமியனைத்திற்கும் பரவியது என்பதை காட்டுகிறது.

இரண்டாவதாக, ஒரு குடும்பத்தை காப்பாற்ற அதுவும் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டுமே வெள்ளத்தில் மூழ்கடிக்க, அந்த குடும்பம் மற்றும் மிருகங்கள் தப்பிக்க கப்பல் எதற்கு? வெள்ளம் சூழாத இடத்திற்கு இடம் பெயர்ந்து இருக்கலாமே?

ஒரு குறிப்பிட்ட இடத்தை வெள்ளத்தால் அழிக்கும் போது, ஒரு கப்பலைக் கொண்டு சமாளித்தது அறிவுடமையாக இருக்குமா சிந்தியுங்கள்.

ஒருவேளை நான் கடவுளாக இருப்பேனானாள், ஒரு இடத்தை மட்டுமே அழிக்க திட்டமிட்டால், நோவா தன் மக்களை எச்சரிக்கை செய்யும் படி சில ஆண்டுகள் அவகாசம் கொடுப்பேன், பிறகு, அவரை இருக்கும் இடத்தை விட்டு, எங்கு வெள்ளம் வராதோ அவ்வளவு தூரம் அவரை கொண்டுச் சென்று அல்லது அவரை பிரயாணம் செய்யச் சொல்லி, பிறகு அழித்து இருப்பேன். ஒரு தனி குடும்பத்திற்கு ஒரு பெரிய கப்பல் கட்ட தேவைப்படும் ஆண்டுகள் அவர்கள் இடம் பெயர்ந்து இருந்தால், அதிக தூரம் சென்று இருப்பார்கள்

சென்னையில் வெள்ளம் கொண்டுவர விரும்பினால், வேறு தூரமான மாவட்டமுள்ள இடத்திற்கு சென்று விடு என்று சொல்லிவிட்டால் முடிந்துவிட்டது கதை, அதே போல மிருகங்களையும் இடம் பெயர்ந்து செல்லச் சொல்லிவிட்டால் முடிந்துவிட்டது கதை. இதை செய்வதை விட்டுவிட்டு, ஒரு இடத்தை வெள்ளத்தால் அழிக்க, ஒரு பெரிய கப்பலை தயார் செய்யச் சொல்லி, அதுவும் எந்த தொழில் நுட்பமும், இல்லாத அந்த காலத்தில் அவ்வளவு பெரிய கப்பலை இந்த சின்ன விஷயத்திற்கு தயார் செய்யச் சொல்வது, அறிவுடமையா?

சிலர் கேட்கலாம், மிருகங்கள் எப்படி இடம்பெயரும் என்று? இதுமிகவும் சுலபம், மிருகங்கள் இயற்கையாகவே வரும் ஆபத்தை கண்டு தானாகவே இடம் பெயரும், ஒரு வேளை அவைகள் இடம் பெயரவில்லையானாலும், இந்த வெள்ளத்தை கொண்டு வருபவர் அல்லாஹ் அதாவது இறைவன் தானே, அவனால் எல்லாம் கூடும், ஒன்றுமில்லாத போது மிருகங்களை உருவாக்கியவர் மிருகங்களை இடம் பெயர வைப்பது அவருக்கு கடினமான வேலையா?

 
ஒரு பகுதியை வெள்ளத்தால் அழிக்க,

• ஒரு பெரிய கப்பலை தயார் படுத்தச் சொல்லி,

• மிருகங்களை ஜோடியாக அதனுள் அனுப்பி,

• வெள்ளத்தை கொண்டு வந்து, பிறகு

• தண்ணீரை பூமியிலிருந்து வடியும் படி செய்து, அதுவரை கப்பலில் பிரயாணம் செய்து

• பிறகு அந்த ஒரு குடும்பத்தையும், மிருகங்களையும் அந்த இடத்தில் வைப்பது என்பது

எல்லாம் அறிந்த இறைவன் செய்தார் என்றுச் சொல்வது அறிவுடமையா?

இதற்கு பதிலாக,

• பல ஆண்டுகள் தன் மக்களை எச்சரிக்கை செய்யச் சொல்லி,

• நோவாவை வேறு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல உதவி செய்து, (ஆபிரகாமை எப்படி தூரமாக இடத்திலிருந்து கொண்டு வந்தார் அது போல)

• அந்த அழியும் பகுதியில் இருக்கும் விசேஷித்த மிருகங்களை (அதாவது கங்காரு போன்ற வேறு எங்கும் இல்லாத மிருகங்களை) மட்டுமே இடம் பெயரச் செய்து

• வெள்ளம் கொண்டு அழித்துவிட்டால், முடிந்தது வேலை.
 
3)   சென்னையில் வெள்ளமும், அரசாங்கத்தின் டைடானிக் கப்பல் அறிவுரையும்:

வெள்ளமானது ஒரு குறிபிட்ட இடத்தில் மட்டுமே வந்தது என்றுச் சொல்பவர்களின் கருத்து எப்படி இருக்கிறது தெரியுமா?

சென்னையில் வெள்ளம் வரும் என்று தெரிந்தவுடன், அரசாங்கம், எல்லா மக்களையும் வேறு இடத்திற்கு அனுப்பாமல், ஒரு டைடானிக் போன்ற ஒரு கப்பலை தயார் செய்து, "சென்னை வாசிகளே, நீங்கள் எல்லாரும் இந்த கப்பலுக்குள் ஏறிக்கொள்ளுங்கள், அதில் எல்லா உணவு, தங்கும் வசதிகள் உண்டு, எத்தனை மாதங்கள் ஆனாலும் சரி, நாம் வெள்ளத்தில் மூழ்காமல், கப்பலிலேயே சுற்றிக்கொண்டு இருப்போம், பல‌ (ஆறு) மாதம் கழித்து தண்ணீர் வழிந்த பிறகு, நாம் மறுபடியும் சென்னையில் வசிக்கலாம்" என்றுச் சொல்வது போல உள்ளது.

அடுத்த மாநிலம, அல்லது மாவட்டம் நன்றாக இருக்கிறதே, அங்கு வெள்ளம் இல்லையே, அங்கே பாதுகாப்பாக நாம் இருப்போம், வெள்ளம் வடிந்த பிறகு சென்னைக்கு வரலாம் என்றுச் சொல்வதை விட்டுவிட்டு, ஒரு கப்பலில் ஆறுமாதம் சென்னையைச் சுற்றியே வலம் வர அறிவுரை கூறுவது அறிவுடமையாக இருக்குமா?

இப்படி இருக்கிறது, நோவாவின் வெள்ளம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே என்றுச் சொல்வது. வெள்ளம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்தது என்றுச் சொல்வதில் தவறில்லை, ஆனால், குர்‍ஆனின் விவரங்கள் அனைத்தும் இதற்கு எதிராக இருக்கிறதே! இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

சென்னையில் வெள்ளம் வந்தால், உலகத்தில் கணக்கிலடங்கா ஆடுகள் பாதுகாப்பாக இருக்கும் போது, சென்னையிலிருந்து ஒரு ஜோடி ஆண் பெண் ஆடுகளை பாதுகாக்க வேண்டிய அவசியமென்ன?

சென்னையில் வெள்ளம் வந்தால், மதுரைக்கு செல்லவேண்டியது தானே? கேரளாவிற்கு செல்லவேண்டியது தானே! அவ்வளவு ஏன் வட இந்தியாவிற்கு செல்லவேண்டியது தானே?

லோத்து வாழ்ந்த இடம் அழிக்கப்படும் போது, அவரை அவ்வூர் விட்டு வெளியேற்றவில்லையா இறைவன்?

சோதோம் கோமோரா அக்கியால் அழியும் என்பதால், லோத்துவிற்கும் அவரது குடும்பத்தார்களுக்கும் ஃபையர் புரூப் (Fire Proof Dress) உடைகளை கொடுத்து, இந்த பட்டணத்திலேயே இருங்கள் என்றுச் சொன்னாரா இறைவன்?
 
 
முடிவுரை: முடிவாகச் சொல்லிக்கொள்கிறேன், நோவாவின் வெள்ளம் பூமியனைத்திலும் ஆக்கிரமித்த
ஒன்றாகும், இதனை குர்‍ஆனும், முஹம்மதுவும் இதர இஸ்லாமிய அறிஞர்களும் அங்கீகரித்துள்ளார்கள் (இக்கட்டுரையை படிக்கவும்: குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா? (DOES THE QURAN TEACH A LOCAL FLOOD?). இல்லை இல்லை, நாங்கள் ஒப்புக்கொள்ளமுடியாது என்றுச் சொன்னால், இந்த கட்டுரையில் நாம் கண்ட பிரச்சனைகளுக்கு பதில் என்ன என்று நீங்கள் தேடிப்பார்க்க வேண்டியவர்களாக இருப்பீர்கள்.

ஒரு சின்ன இடத்தில் வெள்ளம்கொண்டுவர இவ்வளவு பெரிய வேலையை அதுவும் சம்மந்தமில்லாத வேலையை செய்வதற்கு இறைவன் நம்மைப் போல அறிவில் குறைந்தவன் அல்ல என்பதை மட்டும் நான் சொல்லிக்கொள்கிறேன்.


 

 

குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?

குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?

DOES THE QURAN TEACH A LOCAL FLOOD?

 
சாம் ஷமான்
 
பரிசுத்த பைபிளுக்கு எதிராகவும், குர்‍ஆனுக்கு ஆதரவாகவும் வாதம் புரியும் இஸ்லாமியர்கள் முன்வைக்கும் ஒரு விமர்சனம் "நோவாவின் வெள்ளம்" பற்றியதாகும். டாக்டர் மௌரஸ் புகைலி அவர்களின் புத்தகமாகிய "The Bible, the Qur'an & Science" என்ற புத்தகத்தில் அவர் எழுதிய பிறகு, அனேக இஸ்லாமியர்கள், "உலகம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது என்று பைபிள் தவறாக கூறுகிறது" என்று சொல்கிறார்கள். ஆனால், அந்த வெள்ளம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே ஏற்பட்டது, இதனை குர்‍ஆன் சொல்கிறது, இது நவீன விஞ்ஞானத்திற்கும், தொல்பொருள் ஆராய்ச்சிக்கும் பொருந்துகிறது என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். நோவா காலத்தின் வெள்ளப்பிரளயம் அந்த மக்களை மட்டுமே பாதித்தது, அது முழு பூமியையும் பாதிக்கவில்லை என்று குர்‍ஆன் தெளிவாகச் சொல்கிறது என்று இஸ்லாமியர்கள் வாதம் புரிகிறார்கள்.

துரதிஷ்டவசமாக, குர்‍ஆன் பற்றி அதிகம் தெரியாதவர்களும், இஸ்லாமிய ஆரம்பகால நூல்களை, தொகுப்புக்களை அறியாதவர்களும் சந்தேகத்திற்கு இடமின்றி, நோவாவின் கால வெள்ளமானது ஒரு சிறிய பகுதியில் மட்டுமே ஏற்பட்டது என்று குர்‍ஆன் சொல்கிறது என்று தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இஸ்லாமிய வாதம் புரிபவர்களிடம் உள்ள ஒரு பிரச்சனை என்னவென்றால், குர்‍ஆன் வசனம் சொல்லாத ஒன்றை சொன்னதாக இவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள், அல்லது இஸ்லாமிய ஆரம்ப கால நூல்கள் சொல்வதையும், குர்‍ஆன் விரிவுரையாளர்கள் சொல்வதையும் இவர்கள் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள்.

உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், வெள்ளமானது நோவாவோடும் அவர் குடும்பத்தோடு நெருங்கி வாழ்ந்த மக்களை மட்டுமே குறிப்பிட்டு பாதித்தது என்று எங்கும் சொல்வதில்லை. ஆனால், குர்‍ஆன் ஏன் "நோவா சமூகத்தார்" என்றுச் சொல்கிறது என்பதற்கான காரணம், அவர் தன் சமகால மக்களுக்கு மட்டுமே தன் செய்தியைச் சொன்னார் என்பதற்காகவேயாகும். நோவாவின் எச்சரிக்கைச் செய்தியை மற்ற (நாட்டு) மக்கள் கேட்காததால், மற்ற எல்லா மக்களையும் குறிப்பிட்டு குர்‍ஆன் சொல்லவில்லை.

இதுமட்டுமல்லாமல், முழு உலகமும் வெள்ளத்தால் மூழுகியது என்பதை வெளிப்படையாக அல்லாமல் மறைமுகமாகச் சொல்லும் குர்‍ஆன் வசனங்கள் அனேகம் உண்டு. இப்படிப்பட்ட வசனங்களைத் தான் இஸ்லாமிய எழுத்தாளர்களாகிய அல்-டபரி போன்றவர்கள் "வெள்ளம் முழு உலகத்தையும் சூழ்ந்தது" என்பதை விளக்க பயன்படுத்துகிறார்கள். இஸ்லாமிய எழுத்தாளர்களின் கூற்றுக்களை காண்பதற்கு முன்பாக, நோவாவின் கால வெள்ளம் முழு உலகத்தையும் சூழ்ந்தது என்பதைச் சொல்லும் குர்‍ஆனின் வசன சாட்சிகளைக் காண்போம்.
 
முஹம்மது ஜான் மொழிபெயர்ப்பு:

இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி;) "உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர் உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்" என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை. (குர்‍ஆன் 11:40)

பி.ஜைனுல் ஆபிதீன் மொழிபெயர்ப்பு:

நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது "ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!" என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர். (குர்‍ஆன் 11:40)

"At length, behold! There came Our Command, and the fountains of the earth gushed forth! We said: `Embark therein, of each two, male and female, and your family- except those against whom the Word has already gone forth,- and the believers.' But only a few believed with him." S. 11:40

பின்னர்; "பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்" என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது. (குர்‍ஆன் 11:44)

"Then the word went forth: `O earth! Swallow up thy water, and O sky! withhold (thy rain)! And the water abated, and the matter was ended. The Ark rested on Mount Judi, and the word went forth: `Away with those who do wrong!'" S. 11:44
 
இவ்வசனங்கள் தண்ணீர் பொங்கினது(earth gushed forth with water) என்றுச் சொல்கிறது, இதனால், நாம் இந்த வெள்ளம் பூமி முழுவதும் ஆக்கிரமித்தது எனலாம். நோவா இருந்த இடத்திலுள்ள நீரூக்கள் மட்டுமே இப்படி பொங்கின என்று இவ்வசனங்கள் சொல்லவில்லை.
 
அதற்கு, "நீர் நம் கண் முன் நம்முடைய வஹீயறிவிப்பின்படியும் கப்பலைச் செய்வீராக! பிறகு நம்முடைய கட்டளை வந்து, அடுப்புக் கொதிக்கும் போது, ஒவ்வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜதையையும், உம்முடைய குடம்பத்தினரில் எவர் மீது நம் (தண்டனை பற்றிய) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவரைத் தவிர, (மற்றவர்களையும்) அதில் ஏற்றிக் கொள்ளும்; இன்னும் அநியாயம் செய்தார்களே அவர்களைப் பற்றி நீர் என்னிடம் பரிந்து பேச வேண்டாம் - நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்" என்று அவருக்கு நாம் அறிவித்தோம். (குர்‍ஆன் 23:27)
 
இப்போது ஒருவர் இப்படி கேட்கமுடியும், அதாவது "வெள்ளம் ஏற்பட்டது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே என்றுச் சொன்னால், ஏன் மிருகங்களில் ஒவ்வொரு இனத்திற்கு ஆண் பெண் என்று இரண்டு ஜோடிகள் மிருகங்கள் பாதுகாக்கப்படவேண்டும்?". வெள்ளம் ஒரு பகுதியில் மட்டுமே ஏற்பட்டால், பூமியில் இதர பாகங்களில் உள்ள மிருகங்கள் அழியப்போவதில்லையே! இந்த விவரம் கூட நோவாவின் வெள்ளம் பூமியனைத்தையும் சூழ்ந்தது என்பதைக் காட்டுகிறது.
 
ஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம். மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம், இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது. அப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக் கொண்டோம். எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதற்காக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது. (குர்‍ஆன் 54:11-14)

"So We opened the gates of heaven, with water pouring forth. And we caused the earth to gush forth with springs. So the waters met (and rose) to the extent decreed. But We bore him on an (Ark) made of broad planks and caulked with palm-fibre: She floats under Our eyes (and care): a recompense to one who had been rejected (with scorn)!" S. 54:11-14
 
 
மறுபடியும், மேற்கண்ட வசனங்கள் "வானங்களின் வாயில்கள் திறந்து, பூமியில் ஊற்றுக்கள் பொங்கின" என்றுச் சொல்கின்றன. இவைகள் நமக்கு இந்த வெள்ளம் பூமி அனைத்திலும் ஏற்பட்டது என்பதைக் காட்டுகிறது.
 
அப்பால் நூஹ் கூறினார்: "என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே. "நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள். (குர்‍ஆன் 71: 26-27)

"And Noah said: `O my Lord! Leave not of the Unbelievers, a single one on earth! For if Thou dost leave (any of them), they will but mislead Thy devotees, and they will breed none but wicked ungrateful ones.'" S. 71:26-27
 
 
மேற்கண்ட வசனங்களில் உள்ள நோவாவின் விண்ணப்பம் "வெள்ளம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே ஏற்பட்டது" என்ற வாதத்திற்கு எதிராக உள்ளது அதாவது பொருந்துவதாக இல்லை. ஏனென்றால், அவர் "என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே" என்று கூறுகிறார். இது தன் ஊர் மக்களை மட்டுமே குறிப்பதாக இல்லை. ஒருவேளை இஸ்லாமியர்கள் கூறுவது போல, இது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்ட வெள்ளமாக இருந்தால், "வெள்ளம் ஏற்படாத இடங்களில்(நாடுகளில்) உள்ள மக்கள் நிச்சயமாக காஃபிர்களாக இருப்பார்கள் மற்றும் அவர்கள் "பாவிகளையும், காஃபிர்களையும் பெற்றெடுப்பார்கள்". இது நோவாவின் வேண்டுகோளுக்கு எதிரடையாக உள்ளது. எனவே, இந்த வசனங்கள் வெள்ளம் பூமியனைத்திலும் ஏற்பட்டது என்பதை சொல்லும் வண்ணமாக‌ உள்ளது.

இந்த குர்‍ஆன் வசனங்கள் அனைத்தும் நேரடியாக அல்லது வெளிப்படையாக வெள்ளம் பூமியனைத்திலும் ஏற்பட்டது என்றுக் கூறவில்லை, இவ்வசனங்களை நாம் நம் விருப்பப்படி பொருள் கூற வாய்ப்பு உண்டாகும் விதமாக இவைகள் உள்ளன என்று சில இஸ்லாமியர்கள் வாதம் புரியக்கூடும். இப்படி இஸ்லாமியர்கள் கூறுவார்களானால்? இதே போல இவ்வசனங்கள் "வெள்ளமானது ஒரு இடத்தில் மட்டுமே ஏற்பட்டது என்று வெளிப்படையாக கூறவில்லை" என்று விளங்குகிறது அல்லவா? மேலே நாம் கண்ட விவரங்களைக் கண்டு, "வெள்ளமானது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்டது" என்றுச் சொல்வதை முஸ்லீம்கள் நிறுத்தப் போவதில்லை.

இன்னும் மேலதிக விவரங்களாக, சரித்திர ஆசிரியர்களான அல்-டபரி போன்றவர்களின் ஆதாரங்களும் "வெள்ளம் பூமி அனைத்திலும் ஏற்பட்டு, அந்த கப்பலில் இருந்தவர்கள் தவிர, மற்ற அனைத்து உலக மக்களும் அழிக்கப்பட்டார்கள்" என்பதையே சொல்கிறது. கீழ் கண்ட மேற்கோள்கள் " The History of al-Tabari, vol. 1, General Introduction and From the Creation to the Flood, as translated by Franz Rosenthal " என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும்.
 
According to Ibn Humayd- Salamah- Ibn Isahq- al-Hassan b. Dinar- Ali b. Zayd- Yusuf b. Mihran- Ibn Abbas: நாம் [யூசுப் பி. மிஹ்ரனாகிய நான்] இபின் அப்பாஸ் கூற கேட்டது: ... தண்ணீர் மிகவும் அதிகமாக பெருகியது. தோராவின் மக்கள் அந்த தண்ணீர் உயர்ந்த மலை உச்சிக்கு மேலாக 15 அடி உயர்ந்ததாக கருதுகிறார்கள். பூமியிலுள்ள எல்ல உயிரினமும் , உயிர் வாழும் அனைத்தும் அல்லது மரங்களும் தண்ணீரில் மூழுகிப்போயின. நோவாவைத் தவிர மற்றும் அந்த கப்பலில் இருந்தவர்கள் தவிர வேறு யாரும் மிஞ்சவில்லை ( No creature remained except Noah and those with him in the boat, as well as Og b. Anak, as is assumed by the people of the Book.) இறைவன் வெள்ளம் அனுப்பிய காலமுதல், வெள்ளம் பூமியிலிருந்து காயும் வரையுள்ள காலம் ஆறு மாதங்களும் பத்து இரவுகளுமாம். (History of al-Tabari [State University of New York Press; Albany, NY 1989], pp. 360-361)

According to al-Harith- Ibn Sa'd- Hisham- his father- Abu Salih- Ibn Abbas: "இறைவன் நாற்பது பகல்கள் நாற்பது இரவுகள் மழையை அனுப்பினார். காட்டு மிருகங்களும் நாட்டு மிருகங்களும் பறவைகளும் மழையைக் கண்டவுடன் நோவாவிடம் தஞ்சம் புகுந்தன. இறைவனின் கட்டளையின்படியே நோவா ஒவ்வொரு இனத்திலும் ஒரு ஜோடியை கொண்டுவந்தார். இவைகளோடு சேர்த்து, ஆண்களுக்கும் பெண்களுக்கு தடை உண்டாகும் வண்ணமாக நோவா ஆதாமின் சடலத்தில் மீந்திருந்ததை கொண்டு வந்தார். அவர்கள் ரஜ்ஜப் மாதத்தின் 10ம் நாள் அந்த கப்பளுக்குள் நிழைந்தார்கள் மற்றும் முஹர்ரம் மாதம் அஷூரா அன்று(10ம் நாள்) கப்பளிலிருந்து வெளியேறினார்கள். ஆகையால் அவர்கள் அனைவரும் அஷூரா அன்று நோம்பு இருந்தார்கள். தண்ணீர் இரண்டு வகைகளில் வெளிப்பட்டது, இது இறைவனின் கட்டளைப்படி இப்படியாயிற்று: (`And We opened for water munhamirin'- that is, musabbin pouring- `and We fajjarna'- that is, shaqqaqna split- `the earth for springs (to gush forth). The water (from above and below) met for a matter (pre)determined.') தண்ணீர் இரண்டு பிரிவுகளாக வந்தது. ஒரு பங்கு வானத்திலிருந்து வந்தது, ஒரு பங்கு பூமியிலிருந்து வந்தது. பூமியின் மிகப் பெரிய மலையின் உச்சிக்கு மேலாக 15 அடிகள் தண்ணீர் உயர்ந்திருந்தது.

அவர்களோடு கூட அந்தக் கப்பல் பூமிமுழுவதும் ஆறுமாதங்கள் சுற்றியது. பரிசுத்த பூமி (மக்கா மதினா) வரும் வரை அந்த கப்பல் எங்கும் தங்கவில்லை. எனினும், பரிசுத்த பூமிக்குள் (மக்கா மதினாவிற்குள்) நிழையாமல் ஒரு வாரம் அதை சுற்றி சுற்றி வந்தது. ஆதாம் கட்டிய வீடு(காபா) மூழ்காதபடிக்கு மேலே மேலே உயர்த்தப்பட்டது. அந்த வீடு கருங்கல் உள்ள காபாவாகும். பரிசுத்த பூமியை சுற்ற வந்த பிறகு, கப்பலில் இருந்த மக்களோடு, அல் ஜீதி வரும் வரை பூமியின் மீது பிரயாணித்தது. ... அந்த கப்பல் அல் ஜூதியை அடைந்த போது, இப்படியாக கூறப்பட்டது: "பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு!" இதன் பொருள் என்னவென்றால், "உன்னிடமிருந்து வந்த தண்ணீரை பூமியே நீ உறிஞ்சிக்கொள்" என்பதாகும். இதே போல "வானமே! (மழையை) நிறுத்திக்கொள் (Heaven, hold back!)" என்று கூறப்பட்டது, இதன் பொருள் என்னவென்றால்,"வானங்களே உங்களிடமிருந்து வந்த தண்ணீரை எடுத்துக்கொள்" என்பதாகும். பூமியிலிருந்த தண்ணீர் மறைந்துவிட்டது, அதாவது தண்ணீரை பூமி உறிஞ்சிக்கொண்டது. வானத்திலிருந்து வந்த தண்ணீர் நாம் காணும் கடலாக மாறியது... (Ibid., pp. 362-363)
 
மேலே நாம் கண்ட பாரம்பரியமானது, "வெள்ளம் உலகம் முழுவதும் பியாபித்து இருந்தது" என்பதை விளக்குகிறது. அதோடு நின்றுவிடாமல், வெள்ளம் உலகம் முழுவதும் பரவியது என்பதை விளக்க நாம் மேற்கோள் காட்டிய வசனத்தை இந்த பாரம்பரியம் குறிப்பிடுகிறது.
 
அபூ ஜபர் (அல்-டபரி) கூறுகிறார்: நோவாவும் அவர் குடும்பத்தார்களும் முஸ்லீம்களாக இருந்தார்கள். மற்றும் நோவாவிற்கு "இனி இப்படிப்பட்ட ஒரு வெள்ளத்தை பூமியில் வரவழைப்பதில்லை" என்று இறைவன் வெளிப்படுத்தினான்.
 
 
இங்கு குறிப்பிட்ட விவரங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்பட்ட மட்டுமே ஏற்பட்ட வெள்ளமல்ல, ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட இடத்தில்/நாடுகளில் ஏற்படும் வெள்ளங்கள் இன்றும் ஏற்படுகின்றன. ஆனால், இன்று வரை உலகம் முழுவதும் வியாபித்து இருக்கிற வெள்ளம் நோவாவின் காலத்திற்கு பின்பு ஏற்படவில்லை.
 
Ibn Ishaq, in turn, as we are told by Ibn Humayd- Salamah (- Ibn Ishaq), said... "அவர்கள் கூறினார்கள்: அவரோடு கூட கப்பலில் இருந்தவர்கள் அவரை நம்புகிறவர்களாக இருந்தார்கள், மற்றும் அவரை பின்பற்றுகிறவர்களாக இருக்கிறார்கள். எனினும், மற்றவர்கள் அழிந்து ஒழிந்துப்போனார்கள். அவர்களின் சந்ததியும் அழிந்துவிட்டது. இன்று உலகில் வாழும் மக்கள் அனைவரும் நேரடியாக ஆதாமின் வழியில், நோவாவின் வழியாக வந்த சந்ததிகளாவார்கள். ஆதாமின் இதர சந்ததிகள் அழிந்துப்போனார்கள். இறைவன் கூறினான்: "அவரது சந்ததிகளை நம உயிருள்ளவர்களாக வைத்தோம்" (In this world today, the children of Adam are the direct offspring of Noah and of no other descendants of Adam, as God says: `And We made his offspring the survivors.'). (Ibid., p. 368)
 
வெள்ளம் வெறும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்டது என்று நாம் நினைத்துக்கொண்டால், நாம் அனைவரும் நோவாவின் சந்ததிகளாக இருக்கிறோம் என்ற விவரமானது பொய்யாக இருக்கும். உண்மையில் "வெள்ளமானது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஏற்பட்டது என்ற வாதமானது பெர்சிய மேஜியன்களின் (Persian Magians) நம்பிக்கையாகும். இதனையே இஸ்லாமியர்கள் இப்போது கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.
 
"வெள்ளம் பற்றி மேஜியன்களுக்கு (Magians) எந்த அறிவும் இல்லை. அவர்கள் கூறுகிறார்கள், "ஆதாமைப் போல ஜாயுமத் (Jayumart) என்பவரின் கால முதல் நம் ஆட்சி தடையில்லாமல் நடந்துக்கொண்டு இருக்கிறது. பிரோஜ் பி யஜ்ஜர்த் பி ஷஹ்ரியார் வரை ஆட்சியானது ஒருவர் கையிலிருந்து மற்றோருவர் கைக்கு மாறிக்கொண்டு இருக்கிறது". அவர்கள் இதையும் கூறுகிறார்கள், "வெள்ளம் சம்மந்தப்பட்ட கதையானது உண்மையானதாக இருந்தால், மக்களின் வம்ச வளர்ச்சி தடை செய்யப்பட்டு ஆட்சி கலைக்கப்பட்டு இருக்கும். அவர்களில் சிலர் வெள்ளமானது பாபில் என்ற இடத்தின் சுற்றுப்புறங்களில் மட்டுமே ஏற்பட்டது என்று நினைக்கிறார்கள். மற்றும் ஜாயுமத்தின் வம்சத்தினர் கிழக்கு பகுதியில் வாழ்ந்ததால், வெள்ளம் அவர்கள் வரையில் வரவில்லை" என்று நம்புகிறார்கள்.

அபூ ஜபர் (அல்-டபரி) கூறுகிறார்: மேலே சொன்ன அவர்களின் கூற்று இறைவன் சொன்னதற்கு முரண்பட்டதாக உள்ளது. இறைவன் சொன்னது தான் உண்மையாது: "அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம். ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம். மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம்." இதன் படி, இறைவன் சொல்வதிலிருந்து, பூமியில் இருப்பவர்கள் அனைவரும் நோவாவின் சந்ததிகளே தவிர மற்றவர்கள் அல்ல என்பது புரியும். (Ibid., p. 369)
 
மேலும் சில வரிகளை கடந்து படிக்கும் போது:
 
According to Ibn Bashshar- Ibn `Athmah- Sa'id b. Bashir- Qatadah- al-Hasan- Samurah b. Jundub- the Prophet, in connection with commenting on God's word: `And We made his offspring the survivors': Shem, Ham, and Japheth. (Ibid, p. 369)

According to Ibn Bashshar- Ibn `Athmah- Sa'id b. Bashir- Qatadah- al-Hasan- Samurah b. Jundub: இறைவனின் வார்த்தைகள் பற்றி நபி அவர்கள் கூறும் போது: "அவர்களுடைய சந்ததியாரை (பிரயளத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும் படிச் செய்தோம்"- அவரின் சந்ததிகள் "சேம் காம் யாப்பேத்" என்பவர்கள் ஆவார்கள் (Ibid, p. 369).
 
நோவாவும் அவரது குடும்பம் மட்டுமே பிரளயத்திலிருந்து காப்பாற்றப்பட்டு பிழைத்ததாக முஹம்மது நம்புகிறார். முஹம்மதுவின் இப்படிப்பட்ட நம்பிக்கை எப்போது உண்மையானதாக இருக்குமென்றால், "வெள்ளமானது உலகளாவியதாக இருக்கவேண்டும் மற்றும் எல்லா மனிதர்களும் மரித்து இருக்கவேண்டும்" (Muhammad believed that only Noah and his immediate family survived the flood. This could only be so if the flood were indeed universal, wiping out all flesh.)
 
பிஷர் (பி முஅத்) - யாஜித் (பி. ஜுரெ) - சயித் (பி. அபி அருபா) கதாதா இறைவனின் வார்த்தையாகிய "அவர்களுடைய சந்ததியாரை (பிரயளத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும் படிச் செய்தோம்" என்ற வரிகளைப் பற்றி கூறும் போது "எல்லா மனித இன மக்களும் நோவாவின் சந்ததிகள் ஆவார்கள் என்றார்" (Ibid, pp. 369-370)
 
இந்த கடைசி விவரத்தை இஸ்லாமிய விரிவுரையாளர்களில் முக்கியமானவராக கருதப்படும் இபின் அப்பாஸ் கூறியதாகும்:
 
According to Ali b. Dawud- Abu Salih (`Abdallah b. Salih)- Mu'awiyah (b. Salih)- `Ali (b. Abi Talhah) - இறைவனின் வார்த்தையாகிய "அவர்களுடைய சந்ததியாரை (பிரயளத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும் படிச் செய்தோம்" என்ற வரிகளைப் பற்றி இபின் அப்பாஸ் கூறும் போது "நோவாவின் சந்ததியினர் மட்டுமே நிலைத்திருக்கிறார்கள்" என்றார். (Ibid, p. 370 all bold emphasis ours)
 
இபின் கதீர் கீழ்கண்ட விதமாக அங்கீகரிக்கிறார்:
 
நோவாவின் மீது நம்பிக்கைக் கொண்டு அவரோடு கப்பலில் இருந்தவர்களைத் தவிர மற்ற உலக மக்களை அல்லாஹ் வெள்ளத்தில் மூழ்கச் செய்த போது, நோவாவின் சந்ததிகளை மட்டுமே அதன் பிறகு உலகத்தில் வாழ்கிறவர்களாக மாற்றினார். இந்த நிகழ்ச்சி நடந்த பிறகு, இப்போது பூமியில் வாழும் அனைத்து மக்களும் நோவாவின் சந்ததிகளே ஆவார்கள். (Tafsir Ibn Kathir, Abridged Volume 3, Parts 6, 7 & 8, Surat An-Nisa, Verse 148 to the end of Surat Al-An'am, Abridged by a group of scholars under the supervision of Shaykh Safiur-Rahman Al-Mubarakpuri [Darussalam Publishers & Distributors; Riyadh, Houston, New York, Lahore, first edition January 2000], p. 399; bold and capital emphasis ours)
 
கீழ் கண்ட குர்‍ஆன் வசனங்களுக்கு விரிவுரை எழுதும் போது:
 
அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம். ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம். மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம். (குர்‍ஆன் 37:75-77)
 
இபின் கதீர் எழுதுகிறார்:
 
<அவர்களுடைய சந்ததியரை நிலைத்திருக்கும்படி செய்தோம்> 'Ali bin Abi Talhah reported that Ibn 'Abbas, may Allah be pleased with him, "There was no one left apart from the offspring of Nuh, peace be upon him." Sa'id bin Abi 'Arubah said, narrating from Qatadah ...

"All people descended from the offspring of Nuh, peace be upon him." At-Tirmidhi, Ibn Jarir and Ibn Abi Hatim narrated from Samurah, may Allah be pleased with him, that the Prophet ... said concerning the Ayah ...

...

((சேம், காம், யாப்பேத்.))

சமுரா(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்கள் மூலமாக கேட்டு, இமாம் அஹமத் பதிவு செய்தது என்னவென்றால்,

அல்லாஹ்வின் தூதர் சொன்னது என்னவென்றால், சேம் என்பவர் அரேபியர்களின் தந்தையாவார், காம் என்பவர் எத்தியோப்பியர்களின் தந்தையாவார் மற்றும் யாப்பேத் என்பவர் ரோமர்களின் தந்தையாக இருக்கிறார். (Tafsir Ibn Kathir Abridged, Volume 8, Surat Al-Ahzab, Verse 51 to the end of Surat Ad-Dukhan, First edition: September 2000, pp. 262-263; bold emphasis ours)
 
மேலே கண்ட அனைத்து விவரங்களும் இபின் கதீர், இபின் அப்பாஸ் மற்றும் முஹம்மது போன்றவர்கள் சொன்ன விவரங்களிலிருந்து எடுத்தவையாகும். இவர்களின் இந்த விவரங்கள் "குர்‍ஆன் சொல்லும் வெள்ளம் ஒரு குறிப்பிட்ட இடம் சம்மந்தப்பட்டது" என்றுச் சொல்லும் தற்கால இஸ்லாமியர்களின் வாதத்திற்கு எதிராக மறுப்பதாக உள்ளது.
 
இந்த ஆய்வை முடிப்பதற்கு முன்பாக இஸ்லாமியர்களின் கடைசி வாதம் பற்றி சிறிது சிந்திப்போம். அதாவது, "பேழையானது (கப்பல்) இன்று துருக்கி என்று அழைக்கும் நாட்டிலுள்ள அராரத் (Mt. Ararat) என்ற மலையில் தங்கியது என்று பரிசுத்த பைபிள் சொல்வது(ஆதி 8:4) தவறானது, ஆனால், அந்த பேழை ஜூதி (Mt. Judi) என்ற மலையில் தங்கியது(குர்‍ஆன் 11:44) என்று குர்‍ஆன் சரியாகச் சொல்கிறது" என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்.

முதலாவது, பேழை "அராரத் மலையில் (Mt. Ararat)" தங்கியது என்று பைபிள் சொல்லவில்லை, அதற்கு பதிலாக, பேழை "அராரத் மலைகளில் (the mountains of Ararat)" தங்கியது என்று கூறுகிறது. பைபிளில் குறிப்பிட்ட அராரத் என்பது பழமையான " Urartu" மலைப் பகுதிகளை குறிக்கிறது. இரண்டாவதாக, பேழை "ஜூதி" மலையில் தங்கியது என்ற விவரம் இஸ்லாமுக்கு முன்பே எல்லா மக்களுக்கும் தெரிந்திருந்த ஒரு விவரமாகும். இந்த இரண்டு விவரங்களை கிறிஸ்த மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் அங்கீகரித்துள்ளனர்.

என் ஐ வி ஸ்டடி பைபிள் ஆதியாகம் 8:4க்கு கீழ்கண்ட பின்குறிப்பை தருகிறது:
(The NIV Study Bible's note on Genesis 8:4 states,)
 
"mountains. The word is plural and refers to a range of mountains. Ararat. The name is related to Assyrian Urartu, which became an extensive and mountainous kingdom (see Jer 51:27; see also Isa 37:38), including much of the territory north of Mesopotamia and east of modern Turkey. The ark's landfall was probably in southern Urartu." (bold emphasis ours)
 
"ஜூதி" மலையைப் பற்றி முஹம்மது அஸத் தன் புத்தகமாகிய "The Message of the Qur'an" என்ற புத்தகத்தில் கீழ்கண்ட விதமாக விவரிக்கிறார்.
 
"This mountain, known in ancient Syriac as Qardu, is situated in the region of Lake Van, almost twenty-five miles north-east of the town Jazirat Ibn Umar, capital of the modern Syrian district of Al-Jazirah. It `owes its fame to the Mesopotamian tradition which identifies it, and not Mt. Ararat, with the mountains on which Noah's ark rested... This localization of the ark's resting place... is certainly based on Babylonian tradition' (Encyclopedia of Islam I, 1059). We should, however, remember that the designation Ararat (the Assyrian Urartu) at one time included the whole area to the south of Lake Van, in which Jabal Judi is situated: this might explain the Biblical statement that `the ark rested... upon the mountains of Ararat' (Genesis viii, 4)." (Asad, The Message of the Qur'an [Dar al-Andalus Limited; 3 Library Ramp, Gibraltar, 1984], p.320, f. 66 bold emphasis ours)
 
கு‍ர்‍ஆன் சொல்லும் விவரமான "பேழையானது ஜூதி மலையில் தங்கியது" என்ற விவரம், முஹம்மதுவின் காலத்தில் எல்லாருக்கும் தெரிந்திருந்த விவரமேயாகும். அது ஒன்றும் புதிதான விஷயமல்ல. இதனை அங்கீகரித்து, எ. யூசுப் அலி கீழ்கண்ட விதமாக எழுதுகிறார்:
 
"Let us get a little idea of the geography of the place. The letters J, B and K are philologically interchangeable, and Judi, Gudi, Kudi are sounds that can pass into each other. There is no doubt that the name is connected with the name `Kurd', in which the letter r is a later interpolation, for the oldest Sumerian records name a people called Kuti or Gutu as holding the middle Tigris region not later than 2000 B.C. (see E. B., Kurdistan). That region comprises the modern Turkish district of Bohtan, in which Jabal Judi is situated (near the frontiers of modern Turkey, modern Iraq, and modern Syria), and the town of Jazirat ibn `Umar, (on the present Turco-Syrian frontier), and it extends into Iraq and Persia. The great mountain mass of the Ararat plateau dominates this district. The mountain system `is unique in the Old World in containing great sheets of water that are bitter lakes without outlets, Lake Van and Lake Urumiya being chief' (E. B., Asia). Such would be the very region of a stupendous Deluge if the usual scanty rainfall were to be changed into a very heavy downpour. A glacier damming of Lake Van in the Ice Age would produce the same result. The region has many local traditions connected with Noah and the Flood. The Biblical legend of Mount Ararat being the resting place of Noah's Ark is hardly plausible, seeing that the highest peak of Ararat is over 16,000 feet high. If it means one of the lower peaks of the Ararat system, it agrees with Muslim tradition about Mount Judi (or Gudi), and this is in accordance with the oldest and best local traditions. These traditions are accepted by Josephus, by the Nestorian Christians, and indeed by all the Eastern Christians and Jews, and they are the best in touch with local traditions. See (Viscount) J. Bryce, `Transcaucasia and Ararat,' 4th ed., 1896, p. 216." (Ali, The Holy Qur'an, f. 1539, p. 525)
 
பரிசுத்த பைபிள் "அராரத் மலைகளில்" பேழை தங்கியது என்றுச் சொன்னதை தவறாக புரிந்துக்கொண்டு, அராரத் மலையில் தங்கியது என்று நினைத்துக்கொண்டு யூசுப் அலி அவர்கள் பைபிளை குற்றம் பிடித்தாலும், ஜூதி மலைப் பற்றி அவர் கூறிய விவரம் குறிப்பிடத்தக்கது. யூசுப் அலி அவர்கள் இந்த ஜூதி மலையில் பேழை தங்கியது என்ற விவரமானது முஹம்மது பிறப்பதற்கு முன்பாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக, இன்னும் சொல்லப்போனால் இயேசுவின் காலத்திலேயே எல்லாருக்கும் தெரிந்திருந்த விஷயம் என்றுச் சொல்கிறார். ஆக, குர்‍ஆன் ஒன்றும் புதியதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை, குர்‍ஆனின் அனேக கதைகள் எப்படி எல்லா அரபியருக்கு தெரிந்திருக்கும் கதைகளாக இருந்தனவோ, அதுபோல, இந்த ஜூதி மலைப் பற்றிய விவரமும் எல்லாருக்கும் தெரிந்திருக்கின்ற விவரமேயாகும்.
 
 
முடிவுரை


 
நம்முடைய இந்த ஆய்வில், நோவாவின் கால வெள்ளம் முழு உலகத்தையும் வியாபித்தது என்பதை விளக்க சில குர்‍ஆன் வசனங்களை நாம் மேற்கோள் காட்டினோம். இதே போல, இஸ்லாமிய அறிஞர்களாகிய இபின் அப்பாஸ் போன்றவர்களும் மற்றும் முஹம்மதுவும் "வெள்ளமானது உலகமயமானது" என்பதை அங்கீகரித்துள்ளார்கள் என்பதை கவனித்தோம். இந்த விவரங்களை எல்லாம் நாம் கவனத்தில் கொண்டால், இன்றைய இஸ்லாமிய வாதம் புரிபவர்கள் சொல்லும் விவரமானது அதாவது, குர்‍ஆன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தைச் சொல்கிறது என்ற வாதமானது, எல்லா ஆதாரங்களுக்கும் எதிரானது என்பது விளங்கும். இவர்களின் வாதம் குர்‍ஆனில் சொல்லப்பட்ட மற்றும் ஆரம்ப இஸ்லாமிய சரித்திர விவரங்களுக்கு முரண்பட்டதாக இருப்பதை காணலாம்.




 

 

குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)

குர்‍ஆன் முரண்பாடுகள்

நோவாவின் வயது (Noah's Age)

 
பைபிளிலும் ம‌ற்றும் குர்‍ஆனிலும் சொல்ல‌ப்ப‌ட்ட‌ நோவாவின் க‌தையை ஒருவர் ப‌டித்தால், கீழ் க‌ண்ட‌ விவ‌ர‌ங்க‌ளை அவ‌ர் காண வேண்டி வரும்.
 
ஜலப்பிரளத்துக்குப் பின்பு நோவா முந்நூற்று ஐம்பது (350) வருஷம் உயிரோடிருந்தான்.நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது (950) வருஷம்; அவன் மரித்தான். (ஆதியாகமம் 9:28-29)

மேலும்; திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது. (குர்‍ஆன் 29:14 - முஹம்மது ஜான் தமிழாக்கம்)

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக்கொண்டது. (குர்‍ஆன் 29:14 - பிஜே தமிழாக்கம்)
 
நோவாவின் வயது 950 என்று முஹம்மது கேள்விப்பட்டு இருக்கிறார், ஆனால், அதை அவர் சரியாக புரிந்துக்கொள்ளாமல் இருக்கவேண்டும் அல்லது இந்த விவரத்தை குர்‍ஆனில் சேர்க்கும் போது அவரது நியாபக சக்தி குறைந்துவிட்டு இருக்கவேண்டும். வெள்ளம் ஏற்பட்டபோது தான் நோவாவிற்கு இந்த வயது (950) இருந்தது என்று முஹம்மது கருதிவிட்டார்.
 
 
சூரா 29:14ம் வசனம் கீழ் கண்ட விதமாக நிகழ்ச்சிகளை சொல்கிறது
  1. நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்
  2. அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்;
  3. அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது
 
வசனத்தின் இரண்டாம் பாகத்தில் உள்ள "அவர்கள் மத்தியில்" என்ற விவரமானது, வசனத்தின் முதல் பாகத்தில் உள்ள "அவருடைய சமூகத்தாரிடம்" என்பவர்களை குறிக்கிறது. பெரு வெள்ளமானது அம்மக்களை அழித்துவிட்டபின்பு, நோவா அவர்களுடம் வாழவில்லை என்பது திண்ணம். ஆக, 950 வருடங்கள் என்பது பெரு வெள்ளம் வரும்வரையுள்ள காலத்தைக் குறிக்கிறது. இந்த முறையில் தான் அனேக குர்‍ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் இந்த வசனத்தை புரிந்துக்கோண்டு இருக்கிறார்கள்.
 
 
ஷேர் அலி அவர்களின் குர்‍ஆன் மொழியாக்கம்:
 
And WE, certainly, sent Noah to his people, and he remained among them a thousand years, short of fifty years. Then the deluge overtook them, while they were wrongdoers. Sher Ali

 
முஹம்மது சர்வார் அவர்களின் மொழியாக்கம்:
 
We sent Noah to his people and he lived with them for nine hundred and fifty years, then the flood engulfed them for their injustice. Muhammad Sarwar

ரஷித் கலிபா அவர்களின் மொழியாக்கம்:

 
We sent Noah to his people, and he stayed with them one thousand years, less fifty. Subsequently, they incurred the flood because of their transgressions. Rashad Khalifa
 
மாலிக் அவர்களின் குர்‍ஆன் மொழியாக்கம்:
 
We sent Noah to his people and he lived among them a thousand years less fifty. Then because of their wrongdoings the flood overtook them. Malik
 
பிரீ மைன்ட்ஸ் குர்‍ஆன் மொழியாக்கம்:
 
And We had sent Noah to his people, so he stayed with them one thousand years less fifty calendar years. Then the flood took them while they were wicked. Free Minds
 
கரிபுல்லா அவர்களின் குர்‍ஆன் மொழியாக்கம்:
 
Indeed, We sent Noah to his nation, and he lived amongst them for a thousand years, less fifty (but they belied him), then the Flood seized them while they were harmdoers. Qaribullah
 
முஹம்மத் அஸத் அவர்களின் குர்‍ஆன் மொழியாக்கம்:
 
And, indeed, [in times long past] We sent forth Noah unto his people, and he dwelt among them a thousand years bar fifty; and then the floods overwhelmed them while they were still lost in evildoing: Muhammad Asad
 
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், குர்‍ஆனின் இந்த தவறு, பெரு வெள்ளத்திற்குப் பிறகு நோவாவைப் பற்றி குர்‍ஆன் ஒன்றுமே சொல்லவில்லை என்பதிலிருந்து, இன்னும் நிரூபனமாகிறது. கப்பலை விட்டு வெளியேறிவிடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடும் இடத்திலிருந்து நோவாவின் கதை குர்‍ஆனில் முடிந்துவிடுகிறது. ஆதியாகமத்தின் 9ம் அதிகாரத்தின் நிகழ்ச்சியாகிய‌ "நோவாவோடும் மற்றும் மனித வர்க்கத்தோடும் தேவன் செய்த உடன்படிக்கையைப் பற்றி" குர்‍ஆனில் ஒன்றுமே சொல்வதில்லை. குர்‍ஆனை பொருந்த மட்டில், ஆங்காங்கே நோவாவின் சந்ததிகள் என்று சொல்கிறது அதை விடுத்து, குர்‍ஆனில் நோவாவின் கதை பெரு வெள்ளத்தோடு முடிந்துவிடுகிறது.

இந்த குர்‍ஆன் 29:14ம் வசனத்தை இன்னும் கவனித்துப்பார்த்தால், இன்னொரு விவரமும் தெரியவரும். இவ்வசனத்தின்படி 950 வருடங்கள் என்பது நோவாவின் வயதை குறிப்பதாகத் தெரியவில்லை, அதற்கு பதிலாக, அவர் தன் சமுதாய மக்களுக்கு எச்சரித்த கால அளவை குறிப்பதாக உள்ளது, அதாவது இறைவன் அம்மக்களை எச்சரிக்க அவரை அழைத்த கால முதல், பெரு வெள்ளம் வரையுள்ள கால அளவாகும்.
 
 
ஆக, குர்‍ஆனின் காலவரிசை கீழ் கண்ட விதமாக உள்ளது.

            ?ஆண்டுகள்?                950 ஆண்டுகள்                  ?ஆண்டுகள்?
பி-----------------------------அ-------------------------------------வெ----------------------------ம

விளக்கம்:

பி: நோவாவின் பிறப்பு
அ: நோவாவை நபியாக அல்லாஹ்வின் ழைப்பு
வெ: வெள்ளம்
ம: நோவாவின் ரணம்

எது எப்படியாயினும், ஒன்று மட்டும் தெளிவு: முஹம்மது தவறுதலாக நோவாவின் முழு வயதை அவரது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே சம்மந்தப்படுத்தியுள்ளார்.


Source: http://answering-islam.org/Quran/Contra/noahs_age.html

Isa Koran Home Page Back - Koran Index
 
1

நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?

நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?

 
இன்னும்; நூஹின் சமூத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது,

நாம் அவர்களை மூழ்கடித்தோம்;

அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம்; ...  (25:37)
 
நோவாவின் சமுகத்தார்கள் நிராகரித்த இந்த இதர தூதர்கள் யார்?

பைபிள் நோவாவைத் தவிர வேறு யாரைப் பற்றியும் பேசுவதில்லை. குர்‍ஆனும் கூட நோவாவின் காலம் பற்றியும் வெள்ள நிகழ்ச்சிப் பற்றியும் பேசும் போதும், எல்லா வசனங்களிலும் ஒருமையிலேயே குறிப்பிடுகிறது, நோவாவின் சொந்த குடும்பம் மட்டுமே காக்கப்பட்டது என்று குறிப்பிட்டுச் சொல்கிறது.
 
இன்னும், நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது,

அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்;

அவரையும், அவருடைய குடும்பத்தாரையும்

மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம்.  (குர்‍ஆன் 21:76)

மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்)
 
நிலைத்திருக்கும்படி செய்தோம்.  (குர்‍ஆன் 37:77)
 
இந்த இதர தூதர்கள் கூட வெள்ளத்தில் மூழ்கி மரித்திவிட்டார்களா?

நோவாவின் நிகழ்ச்சியில் உள்ள இன்னுமுள்ள பிரச்சனைகள்

 




 

 

புதன், 18 பிப்ரவரி, 2009

நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால். . இவைகளைக் கண்டு வியந்திருப்பேன்.

நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால். . .

If I were a Muslim.....

 
ஆசிரியர்: டல்லஸ் எம் ரோர்க், Ph.D.
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், கீழ்வரும் குர்‍ஆன் வாக்கியங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டு இருப்பேன்.
 

சூரா 5:51 முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்…...."

 
இது உண்மை அல்ல என நிரூபிக்க உதாரணங்கள் உண்டு. ஆப்கானிஸ்தானில் கொடுங்கோன்மை ஆட்சியிலிருந்து விடுதலை அளிக்க ஒரு முஸ்லீமல்லாத நாடே உதவவேண்டி இருந்தது. இவ்வாறே ஈராக்கிலும் நடந்தது, குர்தீஷ் முஸ்லிம்கள் கொடுங்கோன்மை ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்று மகிழ்ந்தனர். கடந்த நூற்றாண்டின் இறுதியில், ஒரு முஸ்லீமல்லாத நாடு மற்றுமொரு முஸ்லீமல்லாத நாட்டுடன் போர் புரிந்து முஸ்லீம்களை விடுவித்தது. அந்த நேரத்தில் யூத மருத்துவர்கள் இந்த குர்‍ஆன் சூராவுக்கு முரணாக "கோசாவார் (Kosovar)" முஸ்லீம்களுக்கு மருத்துவம் செய்தனர்.
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், ப‌ல‌ முஸ்லிம்க‌ளும் இமாம்க‌ளும் எந்த‌ வொரு யூத‌னையோ அல்ல‌து கிறிஸ்த‌வ‌னையோ ச‌ந்தித்திருக்காத‌ ப‌ட்ச‌த்தில் அவ‌ர்க‌ளை வெறுக்கச் சொல்லும் இமாம்க‌ளின் போத‌னையினைப் ப‌ற்றி நான் இருமுறை யோசித்து இருந்திருப்பேன். இது விவ‌ரிக்க‌ முடியாத‌ அளவிற்கு மிகவும் தவறான‌ பாரபட்சமாகும். மேலை நாடுக‌ளுக்கு வ‌ரும் ப‌ல முஸ்லிம்க‌ள், த‌ங்க‌ளுக்குக் கிடைக்கும் அன்பான ‌வ‌ர‌வேற்பினைக் க‌ண்டு ஆச்ச‌ரிய‌ப்ப‌டுகிறார்க‌ள். முஹம்மதுவின் எதிரிக‌ளை நீங்க‌ள் ஏன் உங்க‌ளின் எதிரியாக‌க் க‌ருத‌வேண்டும்? இதில் சுவார‌ஸ்ய‌மான‌ விஷ‌ய‌ம் என்ன‌வெனில், ப‌ல ‌முஸ்லிம்க‌ள் இந்துக்கள் தங்களிடம் பாச‌த்துட‌னும் நேச‌த்துட‌னும் இருப்ப‌தாக‌க் கண்டுள்ளனர். இந்துக்களின் அன்பும் க‌ருணையும் அவ‌ர்க‌ளை விய‌ப்பில் ஆழ்த்துகிற‌து. நான் ஒரு முஸ்லீமாக இருந்திருந்தால் இது குறித்து நான் வியப்படைவேன்.

 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், குர்‍ஆன் என்ன சொல்லுகிறது என அறியும் பொருட்டு அதனை வாசிக்க விரும்புவேன். பல முஸ்லிம்கள் அதனை அரபி மொழியில் மனப்பாடம் செய்திருப்பார்கள், ஆனால் அதன் அர்த்தம் அவர்களுக்கு புரியாது. அவர்கள் படிக்கும் அரபியின் அர்த்தம் புரியாதிருக்கும் போது அரபி மொழியினால் என்ன பயன் அவர்களுக்கு? பல முஸ்லிம்களுக்கு குர்‍ஆன் என்ன சொல்லுகிறது என்றே தெரியாது. அது தெரிய வரும்போது அவர்கள் கேள்விக்குரியதாகக் கருதும் பல கருத்துக்களை குர்‍ஆன் சொல்வதனைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள். நான் ஒரு முஸ்லிமாக இருக்கும் பட்சத்தில் இவைகளை அறிய விரும்புவேன்.

 
ஒருவர் ஏன் அரபி மொழியில் பிரார்த்திக்க (நமாஜ் செய்ய‌) வேண்டும்? இறைவன் (அல்லாஹ்) அனைத்தும் அறிந்தவராயிருப்பின் அவருக்கு அரபி மொழி தவிர வேறு மொழிகள் தெரியாதா?

தமிழாக்க குறிப்பு: இஸ்லாமியர்களில் சிலர் குர்‍ஆனை படிக்காமலேயே, இஸ்லாமை விமர்சிப்பவர்களுக்கு பதில்களை எழுத ஆரம்பித்து விடுகின்றனர், இப்படிப்பட்ட ஒரு உதாரணம் தான் கீழே தரப்பட்டுள்ளது.
 
 
"ஒரு காரியத்தை நான் தெளிவாக்க வேண்டும். FFI (Faith Freedom International) ல் நான் இஸ்லாமைப் பழிப்பவர்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை எழுதிக்கொண்டிருந்த போது, குர்‍ஆனையோ அல்லது ஹதீஸ்களையோ நான் வாசித்தவனல்ல. இஸ்லாம் பற்றிய எனது அறிவு மற்றவர்கள் சொல்ல நான் கேட்ட கேள்வி ஞானம் மட்டுமே." (மூலம்)
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், இந்த‌ உல‌கில் உள்ள மற்றவர்கள் அனைவரும் முஹம்மதுவை ஏன் ஒரு குழந்தைக‌ளின் மீது பாலுண‌ர்வு கொள்ப‌வ‌ர் (pedophile) என கருதுகிறார்கள் என்று ஆராய ஆரம்பிப்பேன்.
 
 
"ஆயிஷாவின் விள‌க்க‌ம்: தாம் ஆறு வயதாயிருக்கும் போது, இறைத் தூத‌ர் அவ‌ரைத் திரும‌ண‌ம் புரிந்தார். மேலும் அவ‌ர் ஒன்ப‌து வ‌ய‌தாகும் போது அத்திரும‌ண‌த்தை உட‌லுற‌வினால் நிறைவு செய்தார். அத‌ன் பின்பு, அவ‌ர் ஒன்ப‌து ஆண்டுக‌ள் அவ‌ருட‌ன் இருந்தார் (அதாவ‌து அவ‌ரின் ம‌ரண‌ம் வ‌ரை)" (Sahih Bukhari Volume 7, Book 62, Number 64)
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், முஹம்மது அவர் விருப்பம் போல ‌பல‌ ம‌னைவிக‌ளை திருமணம் செய்துக்கொள்ளலாம் என அவருக்கு அனுமதி இருக்கும் போது, நான் ம‌ட்டும் ஏன் நான்கு ம‌னைவிக‌ளை ம‌ட்டுமே திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என வ‌ரைமுறைப் ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ளேன் என‌ விய‌ப்பேன்.

 
கீழ் வ‌ரும் முத‌லாவ‌து சூரா முஹம்மதுவைக் குறித்த‌து. இர‌ண்டாவ‌து ஏனைய சாதார‌ண‌ முஸ்லீம்க‌ளைக் குறித்த‌து.
 
 
சூரா 33:50 நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன்.

சூரா 4:3 அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், குர்‍ஆன் அல்லாஹ்வின் வார்த்தையாக இருக்கும் பட்சத்தில், அதில் ஏன் பல தலை முறைகளாகத் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர்கள் குறித்த கற்பனைக் கதை மற்றும் உலகில் ஏனையோர் புனை கதைகள் எனக் கருதும் ஏனைய கதைகள் போன்ற எப்போதுமே நடந்திராத கற்பனைக் கதைகள் குர்‍ஆனில் இடம் பெற வேண்டும் என வியப்பேன்.
 
 
சூரா 18:10 அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் "எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!" என்று கூறினார்கள்.

 
சூரா 18:25 அவர்கள் தங்கள் குகையில் முன்னூறு வருடங்களுடன் மேலும் ஒன்பது அதிகமாக்கி (முன்னூற்றி ஒன்பது வருடங்கள்) தங்கினார்கள்
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், முஹம்மது ஏன் தன்னை விமர்சித்தவர்களை, தன்னை எதிர்த்தவர்களை, தனக்கு எதிராக கேலி செய்யும் கவிதைகளை எழுதியவர்களை மன்னிக்கவில்லை என வியப்பேன். நான் ஒரு முஸ்லீமாக இருந்திருந்தால், இவைகள் மரண தண்டனைக்கு உரிய குற்றங்களா? என வியப்பேன். கேலி செய்தல் மரண தண்டனைக்கு ஏதுவான குற்றமா? என வியப்படைவேன்.

 
முஹம்மது அவரது மாமனாகிய அபூ லஹப்பை தனது செய்தியினை ஏற்றுக் கொள்ளாததினால் சபித்தார். இந்த சாபம் குர்‍ஆனில் பதிக்கப்பட்டுள்ளது.
 
 
சூரா 111:1-5 அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும். அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான். விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், முஹம்மது ஒரு நபி என ஏற்று கொள்ள மறுக்கும் ஒரு சாதாரண காரணத்திற்காகவே எண்ணற்ற மக்களை முஸ்லீம்கள் ஏன் கொலை செய்தார்கள் என வியப்பேன்.
 
 
சூரா 2:191 (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்;. ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், அல்லாஹ்வை நம்பும்படி மக்களை வற்புறுத்துவது இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கம் தானா என வியப்பேன். நான் ஒரு முஸ்லீமாக இருந்திருந்தால், மக்கள் அல்லாஹ்வை நம்புவதா வேண்டாமா என்பதில் அவர்களுக்கு சுதந்திரம் தரப்படவேண்டும் என்று எண்ணுவேன். மக்கள் அல்லாஹ்வை வணங்க மக்கள் வற்புறுத்தப்பட்டால் அது அல்லாஹ்விற்கே அவமானம் என நான் எண்ணுகிறேன். இது பற்றி அவர் அக்கறைக் கொள்வதில்லையா? இது பற்றி அவருக்குத் தெரியுமா? வற்புறுத்தலினால் ஏற்கப்படும் தொழுகை, வணங்குதல் என்பது தொழுகையே அல்ல. நான் ஒரு முஸ்லீமாக இருந்தால் இது குறித்து நான் ஆச்சரியமடைவேன்.

 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், ஒரு இறைத்தூதராக, இயேசு, ஏன் தனது போதனையில் முஹம்மதுவை விட பண்பிலும் நன்னெறியிலும் சிறந்து விளங்குகிறார் என வியப்பேன்.
 
 
சூரா 3:45 மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
 
 
இயேசு கூறியதையும் முஹம்மது கூறியவையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்:

 
இயேசு சொன்னார், "உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப் படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்."(மத்தேயு 5:44)

 
முஹம்மது சொன்னார், "அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது." (சூரா 8:60)

 
இயேசு நேரடியாகப் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் என குர்‍ஆன் சொல்லுகிறது. முஹம்மதுவோ மரித்து அடக்கம் பண்ணப்பட்டார்.
 
 
"இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்" (சூரா 4:157-158)
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், முஹம்மது கொள்ளையடிக்கவும் ஏதுமறியாத மக்களைக் கொல்லும்படி ஏவும் போதும் தாம் அல்லாஹ்வின் வெளிப்பாட்டினால் மனமாற்றமடைந்தேன் எனக் கூறியவைகளை ஏன் அரேபியாவிலுள்ள‌ அரேபிய மக்கள் சிறிதும் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டனர் என வியப்பேன்.
 
 
சூரா 2:217 (நபியே!) புனிதமான (விளக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; "அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்;. ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது. அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்;. உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்;. இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்."
 
 
ஆரம்ப காலத்தில், புனித‌ மாத‌த்தில் முஹம்மது போரிட‌வோ அல்ல‌து அவ்வாறு போரிட்ட கூட்டத்தினரிடமிருந்து கொள்ளைப் பொருளை ஏற்றுக் கொள்வ‌தோ இல்லை. பின்பு அவ‌ர் த‌ம‌து ம‌ன‌தினை மாற்றிக் கொண்டு அத‌னை மேற்க‌ண்ட‌ சூராவின் மூல‌ம் நியாய‌ப்ப‌டுத்திக் கொண்டார்.

 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், ஏன் பெண்கள் தங்களின் உடல் முழுவதையும் மூடிக்கொள்ள வேண்டும் என வியப்பேன். பெண்களுக்கும் ஆண்கள் போன்றே உணர்வுகள் இருக்கும்; அதற்காக ஆண்கள் தங்களின் உடல் முழுவதையும் மூடிக் கொள்ளக் கூடாதா? நான் ஒரு முஸ்லீமாக இருந்தால், முஸ்லீம் ஆண்கள் தங்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத காரணத்தினால், பெண்கள் இத்தகைய ஒரு நடமாடும் சிறைச்சாலையை கொடிய வெப்பக் காலங்களிலும் சுமந்து திரிய வேண்டுமா? என வியப்படைவேன். நான் ஒரு முஸ்லீமாக இருந்தால், பெண்களும் வெயில் காலங்களில் அதற்குரிய வசதியான நாகரீகமான உடைகளை அணியும் கண்ணியத்தினை வழங்கும் பண்பாடு வேண்டும் என விரும்புவேன்.

 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், பெண்களுக்கு ஏன் ஆண்களுடன் சம உரிமை இல்லை என வியப்படைவேன்.

 
பெண்கள் அறிவாற்றல் அற்றவர்கள் என முஹம்மது கருதியதால், ஐம்பது கோடி பெண்கள் முழுமையான மனித உரிமையை இழந்தார்கள். நான் ஒரு முஸ்லீமாக இருந்தால், இந்த ஏற்றத் தாழ்வைக் குறித்து மிகவும் சங்கடப்படுவேன். அனேகம் அற்புதமான காரியங்கள் மேலை நாடுகளில் பெண்களாலும் அவர்களின் உதவியாலும் புதிதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. பெண்கள் அறிவாற்றல் அற்றவர்கள் என்கின்ற கருத்தினால், இஸ்லாமிய உலகிற்கு ஏற்பட்டுள்ள அளவற்ற‌ நஷ்டத்தைக் கண்டு நான் வியப்படைகிறேன்.
 
 
சூரா 4:34, (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள்….
 
 
இத‌ற்கு நேர் எதிரான‌ கிறிஸ்துவ‌ர்க‌ளின் பார்வை கீழ் கண்டவிதமாக‌ உள்ள‌து.
 
 
"யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்."(க‌லாத்திய‌ர் 3:28)

 
"Faith in Christ Jesus is what makes each of you equal with each other, whether you are a Jew or a Greek, a slave or a free person, a man or a woman." (Galatians 3:28)
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், ஸ்வீடன் நாட்டில் முஸ்லீம் ஆண்கள் ஏன் ஸ்வீடன் நாட்டுப் பெண்களைக் கற்பழிப்பதை நியாயப்படுத்துகிறார்கள் என வியப்படைவேன். ஸ்வீடன் நாட்டு ஆண்கள் மத அடிப்படையில் ஒரு பெண்ணைக் கற்பழிப்பதை நியாயப்படுத்துவதில்லையே. யூத அல்லது கிறிஸ்துவ வேதங்கள் பெண்களைக் கற்பழிப்பதை நியாயம் என ஒப்புக்கொள்வதில்லை. நான் ஒரு முஸ்லீமாக இருந்தால், இதை ஒரு நாகரீகமான நன்னெறிக்கு எதிரானதாகக் கருதுவேன்
 
 
ஸ்வீடன் நாட்டு தேசீய குற்றத் தடுப்புக் குழுவின் (Crime Prevention Council, Brå) ஒரு புதிய ஆய்வில், கற்பழிப்புக் குற்றவாளிகள், ஸ்வீடன் நாட்டவ‌ரை விட நான்கு மடங்கு பெரும்பாலும் வேற்று நாட்டினராகவே இருக்கிறார்கள் என அறியப்பட்டுள்ளது. அல்ஜீரியா, லிபியா, மொராக்கோ மற்றும் டுனீசியா போன்ற குடியேறிய நாட்டினரே இத்தகைய கற்பழிப்புக் குற்றங்களில் பெரும்பான்மையாக சந்தேகிக்கப்படுகின்றனர். இந்தப் புள்ளி விவரப்படி, ஏறக்குறைய இத்தகைய குற்றவாளிகளில் பாதிப்பேர் குடியேறியவர்களாகவே இருக்கிறார்கள் (மூலம்).
 
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், முஸ்லீம‌ல்லாதோர் மீது காத‌ல் கொள்ளும் அல்லது அவ்வாறு காதலிப்பதாகக் கருதப்படும் மகள்களை கெள‌ர‌வ‌த்திற்காக‌க் கொலை(Honor Killing) செய்வ‌தைக் க‌ண்டு விய‌ப்ப‌டைவேன். முஸ்லீம் பெண்க‌ளுக்கு அவ‌ர்க‌ள‌து வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்து கொள்ள ‌உரிமை கிடையாதா என‌ விய‌ப்பேன்.
 
 
மார்ச் 15, 2005ம் ஆண்டு WorldNetDaily.com தள செய்தி - பெர்லின் போலீசார், "கவுரவத்திற்காகக் கொலை செய்தல்" என்கின்ற குற்றத்திற்காக, மூன்று முஸ்லிம் சகோதரர்களைக் கைது செய்துள்ளனர். இத்தகைய சம்பவங்களில் இது மிகச் சமீபத்தில் நடந்தது ஆகும். "ஹாடன் சுருகு (Hatun Surucu) என்கின்ற 23 வயது துருக்கி நாட்டுப் பெண் தலையிலும் மார்பிலும் பல குண்டுக்களால் துளைக்கப் பெற்று மரணமடைந்தாள். "கவுரவத்திற்காகக் கொலை செய்தல்" (Honor Killing) என்பதற்கான அனைத்து அடையாளங்களும் இந்தச் சம்பவத்தில் அடங்கியிருந்தது என ஒரு போலீஸ் மனோதத்துவ அதிகாரி கூறியதாக BBC செய்திகள் தெரிவிக்கின்றன. இது இரண்டு லட்சம் பேர்களே அடங்கிய துருக்கியர் சமுதாயத்தில் சமீப மாதங்களில் இத்தகைய ஆறாவது சம்பவமும், கடந்த எட்டு ஆண்டுகளில் நடந்தவைகளில் நாற்பத்து ஐந்தாவது சம்பவமும் ஆகும். ஹாடன் சுருகு (Hatun Surucu) தனது ஐந்து வயது மகனுடன், தான் எட்டு வருடம் ஒழுங்கு செய்யப்பட்ட திருமணத்தின்படி வாழ்ந்த உறவின் முறைப்படியான கணவனிடமிருந்து ஓடிச் சென்று வேறு ஒரு உறவினரோடு திருமணம் செய்துக் கொண்டாள்.
 
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், முஸ்லீம் நாடுக‌ளில் ஏன் போலீசார் இத்த‌கைய‌ "கவுரவத்திற்காகக் கொலை செய்தல்" (Honor Killing) ப‌ற்றி புல‌னாய்வு செய்ய‌க்கூடாது என‌ விய‌ப்பேன். நான் ஒரு முஸ்லீமாக‌ இருந்தால் ஏன் த‌க‌ப்ப‌ன்மார் த‌ங்க‌ள் ம‌க‌ள்க‌ள் ஒரு முஸ்லிம் அல்லாத‌வ‌ரை ம‌ண‌க்கும் போது கொலை செய்யும் அள‌விற்குச் செல்ல‌வேண்டும் என விய‌ப்பேன்.
 
 
"சவுதி அரேபிய இளவரசி மிஷாலுக்கு (Misha'al) வழங்கப்பட்ட மரண தண்டனை இத்தகைய "கவுரவ கொலைக்கு" (Honor Killing) ஒரு உதாரணமாகும். இது இஸ்லாமிய மத நீதிமன்றத்தின் நடைமுறைப் படி நிறைவேற்றப்படவில்லை. ஆனால் அவளது பாட்டனாரால் நேரடியாக உத்தரவிடப்பட்டது. (மூலம்)
 
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், முஹம்மது சொன்னார் என்கின்ற காரணத்திற்காகவே ஏன் நான் ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழ வேண்டும் என வியப்பேன்.
 
 
சூரா 11:114 பகலின் (காலை, மாலை ஆகிய) இரு முனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக - நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும் - (இறைவனை) நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும்
 
 
இப்பொழுது இயேசு சொன்னதை ஒப்பிட்டுப் பாருங்கள்:
 
 
மத்தேயு 6:5-7 ல் "அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.

அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்."
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், நான் தொழுதுக்கொள்ளும் போது, முஹம்மது ஆரம்பத்தில் செய்தது போல எருசலேமை நோக்கியல்லாமல் ஏன் மெக்காவை நோக்கி நின்று தொழுதுக் கொள்ளவேண்டும் என ‌விய‌ப்பேன். இறைவன் எல்லாவிட‌த்திலும் இல்லையா?
 
 
சூரா 2:144 (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்;. ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பித் கொள்ளுங்கள்;. நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், குர்‍ஆனில் இத்தனை வன்முறைக் கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டிருக்கையில், ஏன் "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" எனக் கருதப்பட வேண்டும் என வியப்பேன். ஒரு சில வசனங்களை உதாரணங்களாக‌ இங்கு காண்போம்:
 
 
சூரா 4:89 (முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்;. ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்;. (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்;. (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்

 
சூரா 8:39 (முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகம்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.

 
சூரா 9:5 (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்

சூரா 9:123 நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறன். என்பதை அறிந்து கொள்ளுங்கள்
 
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்தால், சவுதி அரேபியப் பெண்கள் தங்களது அடையாள அட்டையில் தங்களது புகைப் படத்திற்குப் பதிலாக ஏன் தங்க‌ளின் தகப்பனார், சகோதரர் அல்லது பொறுப்பாளர்களின் புகைப் படத்தையே வைத்துக்கொள்ள வேண்டும் என வியப்பேன். முஸ்லிம் பெண்கள் தங்களின் சுய உரிமையில் ஒரு மனிதப் பிறவியாய் ஏற்றுக் கொள்ளப்பட வில்லையா என ஆச்சரியப்படுவேன்.

 
ரியாத், 13 மார்ச் 2005 -"சவுதி அரேபியப் பெண்கள் இனி அடையாளமின்றி இருக்கப் போவதில்லை. 2006 ல் இருந்து ஒவ்வொரு சவுதிப் பெண்மணியும் கட்டாயம் படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம். தற்போதுள்ள குடும்ப அட்டையில் அவர்களது பெயர் மட்டுமே உள்ளது.......அவரது ஆண் பாதுகாவலரின் அனுமதியற்ற சவுதிப் பெண்மணியினுடைய பாஸ்போர்ட் அத்தகைய ஆண் பாதுகாவலர் இல்லாதிருக்கும் பட்சத்தில் போதுமானது." என ஜெத்தா சிவில் இலாகாவின் இயக்குனர், தர்கி முஹம்மது அல் மலஃபெக் தெரிவிக்கிறார் (மூலம்)

 
இதற்கு முன்பு, சவுதிப் பெண்கள் பெயரினால் மட்டுமே தங்களின் தகப்பனார் அல்லது கணவரின் அடையாள அட்டையின் மூலம் அடையாளம் காட்டப்பட்டனர், அவர்களின் புகைப்படங்கள் அடையாள அட்டைகளில் இருப்பதில்லை. எல்லாத் தேசத்துப் பெண்களும் சவுதி அரேபியாவில் வாகனம் ஓட்ட‌ அனுமதிக்கப்படுவதில்லை. இத்தகைய சட்டம் உள்ள ஒரே நாடு உலகிலேயே சவுதி அரேபியா ஒன்றுதான் (மூலம்)

 
ச‌வுதிப் பெண்கள் தனியே செல்லும்போதோ அல்லது தனது கணவனோ அல்லது நெருங்கிய உறவினரோ அல்லாத ஆணுடன் செல்லும் போதோ விபச்சார அல்லது சுய ஒழுங்கின்மைக் குற்றத்திற்கான சந்தேகத்திற்காக கைது செய்யப்படும் அபாயம் உண்டு. (மூலம்)
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், ஏன் இஸ்லாமை விட்டு ஒருவர் வேறு மதத்திற்கு மாறும்போது மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என வியப்படைவேன்.
 
 
மார்ச் 30, 2006 WorldNetDaily.com செய்தி — "41 வயது ஆப்கானியர் அப்துல் ரஹ்மான் என்பவருக்கு அடைக்கலம் வழங்க அமெரிக்க அதிபர் புஷ்ஷிடம் ஒரு கிறிஸ்தவ ஆதரவாளர் குழு வேண்டுகோள் விடுத்தது. இவர் இஸ்லாமிலிருந்து கிறிஸ்துவத்திற்கு மாறியதினால் ஷரியா சட்டத்தின்படி மரண தண்டனை வழங்கப் பெற்றவர்." (கிறிஸ்தவத்திற்கு மாறிய இஸ்லாமியர்கள் என்று வலை தளத்தில் தேடினால் இத்தகைய பல உதாரணங்கள் கிடைக்கும்.)
 
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், இஸ்லாமிய உலகம் ஏன் இந்த உலகத்தின் கொடுமைகளுக்கெல்லாம் யூதர்களையே குற்றம் சொல்கிறது என்றும், ஏன் செப்டம்பர் பதினொன்றில் (9/11) நடந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிக‌ளெல்லாம் முஸ்லிம்கள் தான் என்றும் அவர்களில் பெரும்பான்மையினர் சவுதி அரேபியாவிலிருந்து வந்தவர்கள் தான் எனவும் ஒப்புக்கொள்ள முஸ்லீம்கள் மறுக்கிறார்கள் என‌ வியப்படைவேன்.

 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், ஒரு முஸ்லீமுக்கும் ஒரு முஸ்லீமல்லாதோருக்கும் இடையே ஒரு கருத்து வேறுபாடு, சண்டை ஏற்பட்டால், பிற முஸ்லிம்கள், ஏன் உண்மையைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த முஸ்லீம் பக்கமே சாய்கிறார்கள் என வியப்படைவேன். இத்தகைய கண்ணோட்டத்துடன் இருப்பின் முஸ்லிம் கலாச்சாரத்தில் நீதி எப்படி தழைத்தோங்க முடியும் என நான் சந்தேகப்படுகிறேன்.

 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், ஏன் அல்லாஹ் மரியாளைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவளை பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மோசேயின் சகோதரன் ஆரோனின் சகோதரி எனத் தவறாகக் குறிப்பிடுகிறார் என வியப்பேன். குர்‍ஆன் அல்லாஹ்வினால் எழுதப்பட்ட முழுமையடைந்த சரியான புத்தகம் எனில் அல்லாஹ்விற்கு இந்த வேறுபாடு ஏன் புரியவில்லை என ஆச்சரியப்படுவேன்.
 
 
சூரா 19:27-30 பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!" "ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை" (என்று பழித்துக் கூறினார்கள்). (ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; "நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?" என்று கூறினார்கள். "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், இந்த உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என நம்பும் போது முஸ்லிம்கள் மட்டும் ஏன் அவர் அவ்வாறு அறையப்படவில்லை என நினைக்கிறார்கள் என வியப்பேன்.
 
 
சூரா 4:157 இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், ஏன் முஸ்லிம்கள் தாங்கள் குறிப்பிடும் ஒரு காரியத்தை நிரூபிக்க பைபிளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள் என்றும் அவர்களது வாதம் நிரூபிக்கப்படாத பட்சத்தில் பைபிள் மாற்றப்பட்டுள்ளது என ஏன் வாதிடுகின்றனர் எனவும் வியப்பேன்.

 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், முஸ்லிம் நாடுகளில் முஸ்லிமல்லாத பிற மதங்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் அதே நேரத்தில் ஜனநாயக நாடுகளில் எப்படி பல தரப்பட்ட மதங்கள் அனுமதிக்கப்படுகின்றன எனவும் வியப்பேன். நான் ஒரு முஸ்லீமாக இருக்கும் பட்சத்தில், பலதரப்பட்ட சிந்தனைகள் நிறைந்த‌ இடத்தில் இஸ்லாமிய கோட்பாடுகளால் நிலை நிற்க முடியுமா என நான் வியப்பேன்.
 
 
கிறிஸ்துவ பிராந்தியங்கள் கைப்பற்றப்பட்ட‌ பின்பு, கிறிஸ்துவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர், இஸ்லாமிய ஆளுகையின் கீழ் இரண்டாம் தர மக்களாக அடிமை வாழ்வு வாழ்தல் மற்றும் மரணம் ஆகியவற்றை எதிர்கொண்டனர். "மிருகத்தனமாகக்‌ கீழ்ப்படுத்துதல்" மற்றும் வன்முறை புனித நாட்டில் கிறிஸ்துவர்களுக்கு அன்றாட நிகழ்வாயிற்று. கி.பி. 772 ல், காலிஃபா அல் மன்ஸுர் (Caliph Al-Mansur) என்பவர், கிறிஸ்தவர்களும் யூதர்களும் அடையாளம் காணப்படும் படி கையில் விசேஷித்த முத்திரை இடப்பட வேண்டும் என உத்தரவிட்டார். குறிப்பாக ஒருவர் கிறிஸ்தவத்திற்கு மாறினால் அவர் கடுமையாக நடத்தப்பட்டார். கி.பி.789ல் இஸ்லாமிலிருந்து மாறியதற்காக ஒரு துறவி சிரச்சேதம் பண்ணப்பட்டர். பெத்லகேமிலிருந்த புனித தியோடொசிசஸ் என்ற துறவிகளின் இருப்பிடம்(Monastery of St. Theodosius) சூரையாடப்பட்டதோடு மட்டுமின்றி அங்கிருந்த பல துறவிகள் கொலை செய்யப்பட்டனர். (ஆதாரம்: Robert Spencer, The Politically Incorrect Guide to Islam and the Crusades. -Washington: Regnery Publishing Co, 2005, pp.122-123). இவை போன்ற பல் வேறு சித்திரவதைச் சம்பவங்களை விவரித்துக் கொண்டே போகலாம்.
 
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், முஸ்லீம்கள் ஏன் பர்னபாஸின் நற்செய்தி நூலை (Gospel of Barnabas) ஆதாரமாகக் காட்டி இயேசுவை ஒரு இஸ்லாமியராகச் சித்தரிக்க முயலுகிறார்கள் என வியப்பேன். 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், ஒரு மோசடியானது என்பது அனைவரும் அறிந்ததே அல்லவா? இஸ்லாம் உண்மையானது தான் என்று மக்களை நம்ப வைக்க இத்தகைய‌ மோசடியை உபயோகிக்கும் இமாம்களின் கண்ணியத்தைக் கண்டு நான் வியப்படைகிறேன்.

 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், கிறிஸ்தவ நாடுகளின் மீது ஏழாவது நூற்றாண்டில் இஸ்லாமியர்கள் செய்த ஆக்கிரமிப்புகளை மறந்துவிட்டு, ஏன் சிலுவைப் போர்களின் கடுமையை மட்டும் ஞாபகத்தில் கொள்கின்றனர் என வியப்பேன். இந்தியாவில், சில நாட்களிலேயே மூன்று லட்சம் பேர்களைக் கொன்று குவித்த இஸ்லாமிய‌ படையெடுப்புகள் நிகழ்த்திய பயங்கரமான படுகொலைகள் என்னை வியப்பில் ஆழ்த்தும்.

 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், ஆகமங்களையும் இஞ்ஜிலையும் படிக்கவேண்டும் எனக் குர்‍ஆன் சொல்லும்போது, பின் நாட்களில் ஏன் முஸ்லிம்கள் இந்த நூல்கள் மாற்றப்பட்டுள்ளன எனச் சொல்ல வேண்டும் என நான் வியப்பேன்.
 
 
சூரா 5:46 இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், குர்‍ஆன் முழுவதிலும் கொலை செய்தலும், சண்டையிடுதலும், அடிப்பதும், கல்லெறிதலும் வெறுப்பும் நிறைந்திருக்கையில், எப்படி இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என அறிக்கையிட முடிகிறது என நான் வியப்பேன்? இஸ்லாம் தன்னை விமர்சிக்கும் நபர்களையும், இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர்களையும் கொல்லும் போது, அதனை நான் எப்படி அமைதி மார்க்கம் என்று சொல்லமுடியும்?
 
 
சூரா 7:157 எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும்,(கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், முஹம்மது அற்புதங்கள் ஏதும் நடத்தியிருக்காத போது, இயேசு பல அற்புதங்களைச் செய்ததிருந்தும் ஏன் முஹம்மதுவை இயேசுவைவிட அதிகம் மதிக்க வேண்டும் என நான் வியப்படைவேன். இயேசு தன்னை குற்றப்படுத்தியவர்களைக் கூட மன்னிக்கக் கற்றுக்கொடுத்தாரே!
 
 
சூரா 13:7 இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந் நிராகரிப்போர் "அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகிறார்கள்; நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு.
 
 
நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், இயேசு மெய்யாகவே தேவனின் குமாரன் தானா; அவர் மரித்தவர்களை எழுப்பி, குருடர்களைப் பார்வையடையச் செய்து முடவர்களையும் குஷ்டரோகிகளையும் சுகமாக்கி அற்புதம் செய்தாரே என வியப்படைவேன். முஹம்மது இத்தகைய செயல்கள் ஏதும் செய்யவில்லையே! நான் ஒரு முஸ்லீமாக இருந்தால் உண்மையிலேயே நான் ஆச்சரியப்படுவேன். . . . .
 
 
சூரா 2:87 இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்.

 
சூரா 5:110 அப்பொழுது அல்லாஹ் கூறுவான்; "மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும். பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து, நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்). இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரளையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்). இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்). அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை" என்று கூறியவேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.
 
 
ஆசிரியரோடு தொடர்பு கொள்ளவும்.

மூலம்: If I were a Muslim.....


 
© Answering Islam, 1999 - 2009. All rights reserved.