ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 29 செப்டம்பர், 2008

ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை: இஸ்லாம் மற்றும் அமைதி (Islam and Peace)

 
ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை
 


முகமதுவின் கடிதங்களில் உள்ள வன்முறையைப் பற்றிய கட்டுரைகளுக்கு மேலதிக விவரங்களுக்காக இக்கட்டுரை பதிக்க‌ப்படுகிறது.


முந்தைய கட்டுரைகள்
 
 
செமிடிக் மொழிகளில்(Semitic Languages) ஒரு வேர் சொல்லின் இடையில் வித்தியாசமான உயிர் எழுத்துக்களை சொருகுவதால் பல வார்த்தைகளை உருவாக்க முடியும். உதாரணத்திற்கு மூன்று மெய் எழுத்துக்கள் கொண்ட ஒரு வேர்ச்சொல் பற்றி காண்போம். "SLM" என்பது ஒரு வேர்ச்சொல், இதனினின்று உருவானது தான் இந்த இரண்டு சொற்கள் "iSLaM" மற்றும் "SaLaM" என்பதாகும். இப்படி ஒரு வேர்ச்சொல் அல்லது மூல சொல்லிலிருந்து இரண்டு வார்த்தைகள் உருவானதால், இந்த இரண்டு வார்த்தைகளின் பொருளிலும் ஒற்றுமை இருக்குமா?

 
ரோமானிய மற்றும் ஜெர்மனிய மொழிகளில், உயிரெழுத்துக்களை சொருகுவதால் அல்ல, அதற்கு பதிலாக ஒரு வேர் சொல்லின் முன்பும் அதன் பின்பும் (prefix or suffix) சில எழுத்துக்களை சேர்ப்பதால், பல வார்த்தைகள் உருவாகின்றன. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், "Love" என்ற வார்த்தையை ஒரு மூல வார்த்தையாகக் கொண்டால், இந்த வார்த்தை பல உரிச்சொற்களை(Adjective) உருவாக்குகிறது, அதாவது, "Loving" மற்றும் "Loveless" என்ற இரண்டு வார்த்தைகளைச் சொல்லலாம். இந்த இரண்டு சொற்களின் மூலச் சொல் "Love" என்பதாகும், ஆனால், இந்த இரண்டு வார்த்தைகளின் பொருள் "ஒன்றுக்கொன்று எதிர் மறையானது". இதே போல, "type" என்ற மூலச் சொல்லினை பயன்படுத்தி "typical" மற்றும் "atypical" என்ற இரண்டு வார்த்தைகளை உருவாக்கலாம். ஆனால், இந்த இரண்டு சொற்களின் பொருள் மறுபடியும் ஒன்றுக்கொன்று எதிர்மறையானது தான். அரபி மொழியின் விவரங்களை தெரிந்துக் கொள்ள ஆங்கில மொழியை நாம் ஒரு அளவு கோளாக கொள்ள முடியாது. இருந்தாலும், அரபி மொழி தெரியாதவர்களுக்கு கீழே படிக்கப்போகின்ற கட்டுரையை புரிந்துக்கொள்ள மேலே கண்ட இரண்டு ஆங்கில உதாரணங்கள் உதவியாக இருக்கும்.



 
இஸ்லாம் மற்றும் அமைதி

Islam and Peace
 
 
இந்த காலத்தில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் அறிஞர்கள், மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமுக்கு நல்ல பெயர் கொண்டு வருவதற்கு, அசாதாரண முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது, இஸ்லாம் என்பது வன்முறையை வெறுத்து, அமைதியை விரும்பும் மதம் என்று காட்ட முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் புதியதாக விற்கப் பார்க்கும் ஒரு சித்தாந்தம் என்னவென்றால், "இஸ்லாம் (Islam) " என்ற தங்கள் மதத்தின் பெயரின் பொருள் "அமைதி (Peace)" என்றுச் சொல்கிறார்கள். அமைதி என்ற பொருள் தரும் அரபி வார்த்தை "சலாம் (Salam)" என்பதாகும். அவர்கள் தங்கள் புதிய சித்தாந்தத்தை சொல்வதற்கு அடிப்படையாக‌ அரபி மொழியில் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே முல வார்த்தை இருப்பதை காரணம் காட்டுகிறார்கள்.

 
அரபி மொழியை பேசத் தெரியாதவர்களுக்கு, மற்றும் இஸ்லாம் பற்றி தெரியாதவர்களுக்கு வேண்டுமானால், இஸ்லாமிய அறிஞர்கள் இப்படிப்பட்ட புதிய சித்தாந்தங்கள் மூலமாக‌ ஏமாற்ற முடியும். ஆனால், இப்படிப்பட்ட பிரச்சாரத்தின் மூலமாக, அரபி மொழி தெரிந்தவர்களையும், இஸ்லாமின் போதனை என்ன என்று புரிந்துக் கொண்டவர்களையும் ஒரு போதும் அவர்கள் முட்டாள்களாக்க முடியாது. இஸ்லாம் என்ற மதம் வன்முறையினால் ஸ்தாபிக்கப்பட்டது மற்றும், இன்று கூட அதே வன்முறையை நம்பி அதை ஒரு கோட்பாடாகக் கொண்டு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது. முஸ்லீம்கள் தங்களுக்குள் இருக்கும் உறவுமுறை, மற்றும் அவர்களுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையில் இருக்கும் உறவுமுறை எப்போதும் "பயம் அல்லது பீதி" என்பதின் அடிப்படையிலேயே இருந்துள்ளது, இன்னும் அப்படியே இருக்கிறது. "இஸ்லாம்" மற்றும் "சலாம்" என்ற இரண்டு வார்த்தைகள் ஒன்றுக்கு ஒன்று சம்மந்தமில்லாத வார்த்தைகளாகும் மற்றும் இவ்விரண்டு வார்த்தைகள் பெயரிலோ அல்லது பொருளிலோ கூட சம்மந்தப்பட்டவைகள் அல்ல. (While it may be possible to deceive those who do not speak Arabic or those who do not know much about Islam, propaganda like this does not fool someone who knows the Arabic language and the teaching of Islam, a religion that was established by violence and still believes in violence as a principal and as a way of life. The relationships between Muslims themselves and between them and all other nations have always been based on terror and still is. Islam and Salam are two incongruous words that share no common ground either in name or in substance.)

 
அரபி அகராதியில் சில‌ குறிப்பிட்ட வார்த்தைகளின் பொருள் என்ன என்று தெரிந்துக்கொள்ள விரும்பினால், "வேர் (root)" வார்த்தை என்றுச் சொல்லக்கூடிய மூன்று எழுத்து சொல்லை நாம் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் அவசியமாக உள்ளது. பல வார்த்தைகள் அந்த ஒரு மூல வார்த்தையின் மூலமாக உருவாகியிருக்கும், ஆனால், அவ்வார்த்தைகளின் பொருள்களில் கூட ஒற்றுமை இருக்கவேண்டும் என்ற கட்டாயம் ஒன்றுமில்லை.

 
"சலாமா" என்ற வார்த்தையிலிருந்து "இஸ்லாம்" என்ற வார்த்தை உருவாகியது, இஸ்லாம் என்றால் "சரணடைதல்" என்றுப் பொருள்.

 
இதே போல, "சலாம்" என்ற வார்த்தைக்கு "அமைதி" என்றுப் பொருள், இந்த வார்த்தையும் "சலிமா" என்ற வார்த்தையிலிருந்து வந்தது, இதன் பொருள் "காப்பாற்றப்படல் அல்லது ஆபத்திலிருந்து தப்பித்தல்" என்பதாகும்.

 
இந்த "சலாமா" என்ற வார்த்தையிலிருந்து வந்த இன்னொரு பொருள் என்னவென்றால், "பாம்பின் கடி அல்லது பாம்பு கொட்டுதல்" அல்லது "தோல் பதனிடுதல்" என்பதாகும். ஆக, "இஸ்லாம்" என்ற வார்த்தை "சலாம் - அமைதி" என்ற பொருள் தரும் வார்த்தையோடு சம்மந்தம் உண்டு என்று நாம் நிர்ணயித்தால், அதே "இஸ்லாம்" என்ற வார்த்தைக்கு "பாம்பின் கடி" அல்லது "தோலை பதனிடுதல்" என்ற வார்த்தைக்கும் சம்மந்தம் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்ற முடிவிற்கும் நாம் வரலாம்(Hence, if the word Islam has something to do with the word Salam i.e. 'Peace', does that also mean that it must be related to the 'stinging of the snake' or 'tanning the leather'?)

 
முகமது அவர்கள் சுற்றியுள்ள நாடுகளின் அரசர்களுக்கும், தலைவர்களுக்கும் இஸ்லாமையும், தன் அதிகாரத்தையும் ஏற்றுக்கொள்ளும் படியாகவும், தான் அல்லாவின் தூதர் என்பதை நம்பும்படியும் அவர்களுக்கு கடிதம் மூலமாக அழைப்பு விடுத்தார்கள். அவர் தன் கடிதங்களை இப்படி முடிப்பார், "அஸ்லிம் தஸ்லம்! (Asllim Taslam)". இந்த இரண்டு வார்த்தைகளும் "அமைதி" என்ற பொருள் வரும் "சலாமா" என்ற ஒரே வேர்ச்சொல்லிலிருது வந்திருந்தாலும், இந்த இரண்டு வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்காகிலும் "அமைதி" என்ற பொருள் இல்லை. இந்த இரு வார்த்தைகளின் பொருள் "சரணடை மற்றும் நீ பாதுகாப்பாக இருப்பாய்", அல்லது வேறு வார்த்தையில் சொல்லவேண்டுமானால், "சரணடை அல்லது மரணமடை" என்று பொருளாகும். ஆக, தன் மதத்திற்கு சரணடைய மறுக்கும் மக்களை, கொன்று விடுவேன் என்று பயமுறுத்தும் மதத்தில் "அமைதி" என்ற பொருளுக்கு இடமேது? (So where is the meaning of 'Peace' in such a religion that threatens to kill other people if they don't submit to it?)

 
வேறு வகையில் சொல்லவேண்டுமானால், குர்‍ஆன் மற்றும் ஹதீஸ்கள், அல்லது அல்‍-சீரா(முகமதுவின் வாழ்க்கை வரலாறு) என்றுச் சொல்லக்கூடிய இஸ்லாமிய புத்தகங்களில், நிறைய ஆதாரங்கள் காணக்கிடக்கின்றன. அதாவது, இஸ்லாம் அன்று வன்முறையை பின் பற்றாமல் இருந்திருக்குமானால், இஸ்லாம் நிலைத்திருந்திருக்காது அல்லது இன்று இந்த நாள் வரை உயிரோடு இருந்திருக்காது. இதைப் பற்றி ஒரு நல்ல எடுத்துக்காட்டுக்களை சொல்லவேண்டுமானால், "இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு எதிரான போர்" என்ற விவரங்களைச் சொல்லலாம் (The Wars Of Al-Riddah, i.e. 'the wars against the apostates'). அதாவது, இந்த "இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு எதிரான போர்" என்பது முகமது அவர்களின் மரணத்திற்கு பின்பு உடனே ஆரம்பிக்கப்பட்டது. அதிகமாக பயப்படவைத்த தலைவராக இருந்த முகமது அவர்களின் மறைவிற்கு பிறகு, கட்டாயத்தின் பெயரில் இஸ்லாமை தழுவிய அந்த இன(Tribe) மக்கள், நிம்மதி பெருமூச்சு விட்டனர். இஸ்லாமுக்கு எதிராக புரட்சி அல்லது கிளர்ச்சி ஆரம்பமானது, ஒவ்வொரு தலைவராக இஸ்லாமை விட்டு வெளியேற‌ ஆரம்பித்தனர், மற்றும் முகமதுவின் அரசாங்கம் விதித்த வரியை கட்ட மறுத்துவிட்டனர். இந்த புரட்சிக்கு பதில் கொடுக்கும் விதமாக, முதல் காலிஃபா, அபூ பக்கர் அவர்கள், இஸ்லாமை விட்டு வெளியேறும் இவர்களோடு சண்டையிடும் படி தன் இராணுவத்திற்கு கட்டளை பிற‌ப்பித்தார்கள். இஸ்லாமை விட்டு வெளியேற முயற்சி செய்த அந்த மக்கள் அனைவரையும் மறுபடியும் இஸ்லாமின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு இரண்டு வருடங்கள் பிடித்தன. இந்த போர்கள் செய்யும் படி முதல் காலிஃபா மட்டும் கட்டளையிடவில்லை, இதனை அல்லாவும் அவனது தூதரும் கட்டளையிட்டுள்ளனர்.

 
இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று குர்‍ஆன் மிகவும் தெளிவாகச் சொல்கிறது: "…. (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்;. (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்." (குர்‍ஆன் 4:89) முகமது அவர்களும், அல்புகாரி ஹதீஸின் படி, "ஒரு முஸ்லீம் அவன் மதத்தை விட்டுவிட்டால், அவனை கொல்லுங்கள்" என்றுச் சொல்லியுள்ளார்கள் (Muhammad also said, as narrated by Al-Bukhari, "If somebody - a Muslim - discards his religion, kill him.")

 
இஸ்லாமை தழுவி பிறகு அதை விட்டு வெளியேறுகிறவர்களை கொல்ல வேண்டும் என்று குர்‍ஆன் கட்டளை இடுவதொடு மட்டுமில்லாமல், முஸ்லீம்கள் எல்லா நாடுகளோடும் சண்டையிட்டு, ஒன்று அந்நாடுகள் இஸ்லாமை அங்கீகரித்து ஜிஸ்யா என்ற வரியை செலுத்தவேண்டும் அல்லது மரணத்தை சந்திக்க தயாராக வேண்டும் என்று குர்‍ஆன் கட்டளையிடுகிறது: வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள். (குர்‍ஆன் 9:29) .

"Fight those who believe not in Allah nor the last day, nor hold that forbidden which hath been forbidden by Allah and his apostle nor acknowledge the religion of truth of the people of the Book (the Jews and the Christians) until they pay the Jizya with willing submission and feel themselves subdued. Surat At-Tauba 9:29"

 
இதே சூரா 5ம் வசனத்தில் குர்‍ஆன் சொல்கிறது: "…முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள்…" இப்போது, இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள் என்று நன்றாக புரிகிறதல்லவா. ஆனால் நம்புவதற்குத் தான் சிறிது கடினம்.



Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/abumuhai/salamislam.html

 

ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)

ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை


அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)


அபூமுஹையும் மறைத்த விவரங்களும்
 

முன்னுரை: முகமது பல அரசர்களுக்கு கடிதம் எழுதினார்கள், அவர்களை இஸ்லாமுக்கு அழைப்பு விடுத்தார்கள். இக்கடிதங்கள் வெறும் அழைப்பிதழ் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம், இவைகளில் முகமது பயப்படவைத்து, அழைப்பு விடுத்தார், அதாவது இஸ்லாமை ஏற்கவில்லையானால், உங்கள் ஆட்சி நிலைக்காது, நான் போர் புரிவேன் என்ற தோரணையில் எழுதினார். முகமது எழுதிய பல கடிதங்களில் நான் ஒரு கடிதத்தை வெளியிட்டு இருந்தேன். அனைத்து கடிதங்களையும் அபூ முஹை அவர்கள் வெளியிட்டார்கள்.

 


அக்கடிதங்களில் பெரும்பான்மையானவற்றில் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை அல்லது வரியை தமிழில் வித்தியாசமாக மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தார்கள், அபூமுஹை அவர்கள்(அக்கடிதங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்ததாக சொன்னார்கள்).

பிறகு நான் கீழ் கண்ட கட்டுரையை வெளியிட்டேன்.
 
 
 
 
இந்த மேலே உள்ள கட்டுரையில் எந்த வரிகளில் வித்தியாசமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்று நான் தெளிவாக விளக்கினேன், இருந்தாலும் மறுபடியும் அபூமுஹை அவர்கள் கேட்டதாலும், ஒரு சில கேள்விகளை முன்வைத்ததாலும், இக்கட்டுரையில் அவைகளை விளக்குகிறேன்.
 
அபூமுஹை அவர்கள் கேட்ட கேள்விகள்:

… "இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்க்கும் போது வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து விட்டார்கள்'' என்று கூறும் பிற மத நண்பர்கள், தங்கள் விமர்சனத்தை உண்மைப்படுத்த, இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்த வார்த்தைகள் எது? என்பதை மூலமொழியிருந்து எடுத்துக்காட்ட கடமைப்பட்டுள்ளனர். …

…கேள்வி எழுப்பியதோடு "மறைத்த உண்மை எது?" என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருக்கலாமே! …

Source: http://abumuhai.blogspot.com/2008/08/blog-post.html
 
 
1) "மறைத்த உண்மை எது?"

 
அபூமுஹை அவர்கள் "மறைத்த உண்மை எது?" என்று நான் எழுதியிருக்கலாம் என்று கேட்கிறார்கள். ஆனால், அவர் என் கட்டுரையை சரியாக படிக்கவில்லை போலத் தெரிகிறது.

 
அதாவது, நான் எழுதிய கட்டுரையில் அவர் எழுதிய அனைத்து கடித கட்டுரைகளிலிருந்து எந்த வார்த்தை வித்தியாசமாக உள்ளது என்றும், அதன் ஆங்கில கட்டுரையும் பட்டியல் இட்டு, அந்த குறிப்பிட்ட வார்த்தைகளை அல்லது வரிகளை குறிப்பிட்டு இருந்தேன். இதை சரியாக பார்த்து படித்து இருந்தாலே, அபூமுஹை அவர்களுக்கு நன்றாக‌ புரிந்திருக்கும்.

 
இன்னும் முஸ்லீம்களுக்கு விளங்கவேண்டுமென்பதற்காக, கீழ் கண்டவாறு எழுதியிருந்தேன்.
 
ஆங்கிலத்தில் "if you embrace Islam, you will find safety" என்று உள்ளதை

தமிழில் "
நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.

 
 
எந்த விவரம் மறைக்கப்பட்டுள்ளது என்று மேலே உள்ள வரிகளை படித்துமா உங்களுக்கு புரியவில்லை? அபூமுஹை அவர்களே?

 
வேண்டுமானால் மறுபடியும் சொல்கிறேன், "அரசர்களை பயப்படவைத்து இஸ்லாமை ஏற்றுக்கொள் என்று முகமது சொன்னதை, முகமது சாதாரணமாக ஒரு அழைப்பிதழ் அனுப்புவதாக எழுதியுள்ளீர்களே" இது தான் மறைக்கப்பட்டுள்ளது.

முகமது தன் கடிதங்களில், இஸ்லாமை வாள் மூலமாக பரப்ப முடிவு செய்துள்ளதை நீங்கள், அமைதியான முறையில் பரப்பும்படி எழுதியுள்ளதாக எழுதியுள்ளீர்களே, இது தான் மறைக்கப்பட்டுள்ளது.
 
 
 
2) அரபியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்த உங்கள் கடிதங்களே போதும் இஸ்லாமை அமைதியான முறையில் முகமது பரப்பவில்லை என்பதற்கு!

 
நீங்கள் அதாவது முஸ்லீம்கள் நேரடியாக அரபியிலிருந்து மொழிபெய‌ர்த்தோம் என்றுச் சொன்னீர்களே, அந்த கடிதங்களே போதும். இதற்கு மூல மொழியில் சரிபார்க்கவேண்டிய அவசியமில்லை. "if you embrace Islam, you will find safety" என்ற வார்த்தைகள் மட்டுமல்ல, நீங்கள் பதித்த கடிதங்களின் இதர வரிகளே சொல்கின்றன, முகமது பயப்படவைத்து தான் இஸ்லாமை பரப்ப முயற்சி செய்தார் என்பதை.

 
உதாரணத்திற்கு, நீங்கள் அரபியிலிருந்து தமிழில் நேரடியாக மொழிபெயர்த்த வரிகளை சிறிது பாருங்கள்.
 
 
நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'

Source: http://abumuhai.blogspot.com/2008/07/8.html
 
 
அ) யார் யாரை ஆட்சியாளர்களாக ஆக்குவது? இஸ்லாமுக்கு அழைப்பிதழ் அனுப்பி அழைத்தவர், இப்படித் தான் அழைப்பார்களா?

ஆ) "இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்கள் ஆட்சி கழிந்துவிடுவது நிச்சயம" என்றால் இதன் பொருள் என்ன? இது அழைப்பிதழா அல்லது பயப்பிதழா?

இ) இஸ்லாமை ஏற்காவிட்டால், ஏன் முகமதுவின் வீரர்கள் அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நாட்டில் வந்து இறங்குவார்கள்? அதாவது, இஸ்லாமை அந்த நாட்டு அரசர் ஏற்கவில்லையானால், முகமதுவின் தோழர்கள் அந்த நாட்டிற்குச் சென்று, நல்ல சமுதாய சேவைகளை செய்து, இஸ்லாம் சொல்லும் நல்ல காரியங்களை மக்களுக்குச் செய்துக்காட்டி, இஸ்லாமுக்கு நல்ல பெயரை கொண்டு வருவதற்காகவா? அந்த நாட்டில் வந்து இறங்குவார்கள் என்று முகமது சொல்லியுள்ளார்? அல்லது இரத்த ஆறை அல்லாவின் பெயரால் உருவாக்குவதற்காகவா?

ஈ) ஏன் இவரது நபித்துவம், மற்றவர்களின் ஆட்சியை வெல்லவேண்டும். மனிதர்களின் மனதில் முகமதுவும் அவரது இஸ்லாமும் ஆட்சி பிடிக்கனுமா அல்லது நாட்டை பிடிக்கனுமா?

அரபியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்த உங்களது அடுத்த கட்டுரை இப்படிச் சொல்கிறது:
அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html
 
 
அ) ஒருவருக்கு இஸ்லாமை தழுவும் படி அழைப்பிதழ் அனுப்பினால், அதை படித்தவுடன் அல்லது அதில் எழுதியதை கேட்டவுடன், ஏன் அந்த அரசன் கோபம் கொள்ளவேண்டும்?

 
ஆ) எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும் என்று அந்த அரசன் ஆவேசமாக கொதித்து எழ காரணமென்ன? உன் ஆட்சியை நான் எடுத்துக்கொள்வேன் என்று அந்த கடிதத்தில்(மன்னிக்கவும், அழைப்பிதழில்) இருந்தால் தானே அந்த அரசன் கோபம் கொண்டு இப்படி பேசமுடியும்?

 
இ) "இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன் என்று கர்ஜித்தான்" என்று நீங்களே மொழிபெயர்த்துள்ளீர்கள். இதன் பொருள் என்ன என்று உங்களுக்கு தெரியும் என்று எண்ணுகின்றேன். ஒரு கடிதத்தில் "இஸ்லாமுக்கு உங்களை அழைக்கிறேன், விருப்பம் இருந்தால், தழுவுங்கள், இல்லையானால் உங்கள் விருப்பம், அழைப்பது என் கடமை என்றுச் சொல்லியிருந்தால், ஏன் அவர் கர்ஜிக்கப்போகிறார்"?

 
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் அபூமுஹை அவர்களே. ஒரு வேளை இப்படி இல்லை, மூல மொழியில் வேறு மாதிரி இருக்கின்றது என்றுச் சொல்லப் போகிறீர்களா? அப்படி சொல்லமாட்டீர்கள் ஏனென்றால், நீங்கள்(முஸ்லீம்கள்) தான் நேரடியாக அரபியிலிருந்து மொழிபெயர்த்தது என்று நீங்களே சொல்லியுள்ளீர்கள்.
 
 
3) உங்களைத் தவிர உலகத்தில் உள்ள மற்ற அனைத்து முஸ்லீம்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு தவறு என்றுச் சொல்கிறீர்களா?

 
அன்பான அபூமுஹை அவர்களே, நான் தமிழில் மொழிபெயர்த்தது தவறு என்றுச் சொல்வதற்காக, ஒரு நொண்டிக் காரணத்தைச் சொல்லியுள்ளீர்கள். அதாவது, அரபியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து, அதைப் பார்த்து நான் தமிழில் மொழிபெயர்த்ததால், நான் சொல்வது தவறு என்றுச் சொல்கிறீர்கள். அப்படியானால், என் கட்டுரையில் அக்கடிதங்கள் ஆங்கிலத்தில் கொடுத்து இருந்தேனே, அது கூட ஒரு இஸ்லாமிய தளம் மொழிபெயர்த்ததையே கொடுத்து இருந்தேனே? அது நேரடியாக அரபியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது தானே. உங்களுக்கு ஆங்கில வார்த்தைகளில் உள்ள பொருள் தென்படவில்லையா?

 
தமிழ் முஸ்லீம்கள் சொல்வது தான் உண்மை, உலகத்தில் மற்ற யார் சொன்னாலும், முஸ்லீமாக இருந்தாலும் அவர்கள் சொல்வது தவறு! அப்படித் தானே?

 
உண்மையிலேயே நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமானால், அதாவது, முகமது யாரையும் பயமுறுத்தி கடிதம் எழுதவில்லை என்று நீங்கள் நம்புகிறவராக இருந்தால், நான் கொடுத்த ஆங்கில தளத்துடன் தொடர்பு கொண்டு,

 
"ஏன் இப்படி இஸ்லாமுக்கு கெட்டபெயரை கொண்டுவருகிறீர்கள்?,

ஏன் தப்பு தப்பான விவரங்களை பதிக்கிறீர்கள்?

நம்முடைய நபி அவர்கள் அமைதியான முறையில் கடிதம் எழுதினால், அதை மாற்றி தப்பாக மொழிபெயர்த்து இப்படி உலகமெல்லாம் ஒரு பொய்யான செய்தியை பரப்புகிறீர்களே, இது நியாயமா? என்று கேட்டு இருப்பீர்கள்.

 
உங்களுக்கு அரபி தெரியவில்லையானால், எங்களிடம்(தமிழ் முஸ்லீம்களிடம்) கேட்டால், நாங்கள் உங்களுக்கு சரியாக மொழிபெயர்த்து தருகிறோம், இனி இப்படி செய்யாதீர்கள்" என்று கேட்டு இருப்பீர்கள்.

 
அதை விட்டுவிட்டு, என்னிடம் மூல மொழியில் எந்த வார்த்தை மறைக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லுங்கள் என்றும், உங்கள் மொழிபெயர்ப்பு தவறு என்றும் சொல்லிக்கொண்டு இருக்கமாட்டீர்கள்.

 
இன்னும் ஒரு படி மேலே சென்று, "இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள், ஈடேற்றம் பெருவீர்கள்" என்று நீங்கள் மொழி பெயர்த்த அரபி வார்த்தையை முகமது எழுதிய கடிதங்களிலிருந்து எடுத்து, அரபியில் அவ்வார்த்தையை பதித்து, இந்த வார்த்தையைத் தான் நாங்கள் தமிழில் இப்படிமொழி பெயர்த்தோம், இதற்கு இது தான் அர்த்தம் என்றுச் சொல்லியிருப்பீர்கள். அதையும் செய்யாமல், "எந்த வார்த்தை என்று சொல்ல நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்" என்று என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்.
 
 
4) ஓமன் நாட்டு அரசாங்கத்திற்கு ஒரு கண்டன கடிதம் எழுதுங்கள், இஸ்லாமியர்களே!

 
ஓமன் நாட்டு அரசாங்கம் தன் அருங்காட்சியகத்தில், ஓமன் நாட்டுக்கு முகமது அவர்கள் எழுதிய க‌டிதத்தை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து பதித்துள்ளார்கள். அதனை ஆங்கிலத்தில் கீழ்கண்டவாறு மொழிபெயர்த்துள்ளார்கள். தமிழ் முஸ்லீம்களுக்கும், இதர தமிழர்களுக்கும் "இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை" என்று முகமது எழுதிய கடிதங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் நான் வெளியிட்டதால், இவர்களுக்கு மட்டுமே தெரிய வாய்ப்பு இருந்தது, அதனை தவறு என்றுச் சொன்னீர்கள். ஆனால், ஓமன் நாட்டிற்கு உலகத்தின் பல நாடுகளின் பயணிகள் யார் சென்றாலும், ஆங்கிலத்தில் அக்கடிதத்தை(தவறாக மொழிப்பெயர்த்துள்ள கடிதத்தை)க் கண்டு இஸ்லாமை பயப்படவைத்து தான் முகமது பரப்பினார் என்பதை "தவறாக" புரிந்துக்கொள்வார்கள். எனவே, அந்நாட்டிற்கு கீழ் கண்டாவாறு அல்லது உங்கள் பாணியில் கடிதம் எழுதி, கண்டனம் தெரிவித்துக்கொள்ளுங்கள், அந்த வரிகள் மாற்றப்படும் வரை தொடர்ந்து செயல்படுங்கள்.

 
"Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom."
 
மேலே உள்ள ஆங்கில எழுத்துக்களில்(அடிக்கோடிட்ட வரிகளில்) முகமது பயப்படவைத்து தன் இறைவன் அல்லாவின் மார்க்கத்தை பரப்பியதாக மொழிபெயர்த்துள்ளார்கள். இஸ்லாமியர்களே, இந்த மொழிபெயர்ப்பும் உங்களுக்கு தவறாக காணப்படலாம், ஒருவேளை உங்களுக்கு தவறாக காணப்பட்டால், உடனே, ஓமன் நாட்டு அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதி, தமிழ் முஸ்லீம்கள் அனைவரும் கையெழுத்து இட்டு, உங்கள் கண்டனத்தை அனுப்புங்கள்.
 
 
"ஓமன் நாட்டு அரசாங்கமே, உனக்கு அரபி தெரியவில்லையானால், எங்களை (தமிழ் முஸ்லீம்களை) கேளுங்கள், நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம் மற்றும் மொழி பெயர்த்துக் கொடுக்கிறோம், ஆனால், இப்படி இஸ்லாமுக்கு கெட்டபெயர்(இந்தியாவில்) கொண்டு வரும்படி நடந்துக்கொள்ள வேண்டாம்"
 
என்று எழுதுங்கள், உங்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பதை நிலை நாட்ட இப்படிப்பட்ட நல்ல செயல்களைச் செய்து உங்கள் ஈமானை அல்லாவிற்காக அவனது அமைதி மார்க்கத்திற்காக, அவரது ரசூலுக்காக காட்டுங்கள்.
 
5) Aslim Taslam (Arabic: أسلم تسلم) என்றால் என்ன?

 
முதலாவதாக, முகமது வாள் மூலமாகத் தான் இஸ்லாமை பரப்பினார் என்பதற்கு ஆங்கிலத்தில் உள்ள கடிதங்களே போதும் சாட்சி சொல்வதற்கு, கார‌ண‌ம் ஆங்கில‌த்தில் மொழிப் பெய‌ர்த்த‌வ‌ர்க‌ளும், உங்க‌ளைப்போல‌ முஸ்லீம்க‌ளே.

இரண்டாவதாக, நீங்கள் நேரடியாக அரபியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தது என்றுச் சொல்லிக்கொள்ளும் கடிதங்களில் உள்ள இதர விவரங்களே போதும், முகமதுவின் பிரச்சாரம் எப்படி இருந்தது என்பதை அறிய.

மூன்றாவதாக, நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, முகமது அவர்கள் தங்கள் கடிதங்களில் எழுதிய அரபி வார்த்தைகளைத் தருகிறேன்.
 
 
Aslim Taslam (Arabic: أسلم تسلم)
 
 
Aslim Taslam (Arabic: أسلم تسلم) is a phrase meaning "accept Islam and you will be saved".[1] that was taken from the letters sent by the Islamic prophet Muhammad to various kings and rulers in which he urged them to convert to Islam.[2][3] ….

References in Hadith

Sahih Muslim narrates in Kitab Al-Jihad wa'l-Siyar (The Book of Jihad and Expedition) Book 19, Number 4294, Chapter 2: Appointment of the Leaders of Expeditions by the Imam and His Advice to Them on Etiquettes of War and Related Matters: "Invite them to (accept) Islam; if they respond to you, accept it from them and desist from fighting against them."[7] …..

Critical responses

In response to the aslim taslam invitation to submit to Islam, the Italian author and journalist Oriana Fallaci asserted the rejoinder "lan astaslem" (Arabic: لن استسلم ) meaning "I will not surrender". [15] [16] Michelle Malkin has taken up this slogan as a response to the WTC terrorist attacks[17]

["lan astaslem" (Arabic: لن استسلم )

இத்தாலிய‌ ஆசிரியர் மற்றும் செய்தியாளர் ஓரியான ஃபல்லசி என்பவர் "லன் அஸ்டஸ்லெம்" என்றாராம், அதாவது, "நான் இஸ்லாமுக்கு சரணடையமாட்டேன்" என்றுப்பொருள். இதே ஸ்லோகத்தை மைக்கேலே மல்கின் என்பவரும், உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதற்கு எதிர்த்து இப்படியே சொன்னாராம். ]


On September 17, 2006, in response to the Pope Benedict XVI Islam controversy, Imad Hamto, a Palestinian religious leader, said: "We want to use the words of the Prophet Muhammad and tell the pope: Aslim Taslam." This was interpreted as a warning.[3][18][vague]

[இஸ்லாம் பற்றி போப் பெனடெக்ட் XVI

இஸ்லாம் பற்றி போப் பெனடெக்ட் XVI அவர்களின் விமர்சனத்திற்கு எதிராக‌(செப்டம்பர் 17 2006) பாலஸ்தீன இஸ்லாம் மத தலைவர் இமத் ஹன்டோ அவர்கள், கூறினார்கள்: " நாம் நம் நபி அவர்கள் சொன்ன அதே வார்த்தையை இப்போது போப்பிற்கு கூற விரும்புகிறோம்: அதாவது, "அஸ்லிம் தஸ்லம்" என்பதாகும். ]


Source: http://en.wikipedia.org/wiki/Aslim_Taslam

 
 
முடிவுரை: அன்பான அபூமுஹை அவர்களே, நீங்கள் இஸ்லாமை இந்தியாவிற்காக திருத்திச் சொல்லவேண்டாம் (Don't try to Customize Islam for India) , எத்தனை நாட்கள் திருத்திச் சொல்வீர்கள்? ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம் நூறு வருடம், ஆயிரம் வருடங்கள் பிறகு ஒரு நாள் உண்மை வெளிவந்தே தீரும். முகமது அவர்கள் அனுப்பிய கடிதங்களில் பயமுறுத்தல்கள் இருந்தன, மற்றும் வாள் மூலமாக தன் மார்க்கத்தை அவர் பரப்பினார் என்று புரிந்திருக்கும். இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? அபூமுஹை அவர்களே , "இல்லை இல்லை" முகமது எழுதிய கடிதங்களில் அன்பு இருந்தது, அராஜம் இல்லை, அமைதி இருந்தது, கொடுமை இல்லை என்றுச் சொல்லப்போகிறீர்களா?

வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை - இயேசு


 

 
 

இதயத்தில் உணர்ந்து கடைபிடிக்கும் உபவாசம் (நோம்பு) மற்றும் மனம் வருந்துதல்

இதயத்தில் உணர்ந்து கடைபிடிக்கும் உபவாசம் (நோம்பு)

மற்றும் மனம் வருந்துதல்

ரோலண்ட் கிளார்க்
Heartfelt Fasting and Repentance
Roland Clarke
 
தேவன் யோவேல் தீர்க்கதரிசி மூலமாக இவ்விதமாக பேசினார்,"ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார். ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்" (யோவேல் 2:12-14)
"Give me your hearts. Come with fasting, weeping and mourning. Don't tear your clothing in your grief, but tear your hearts instead." Return to the Lord your God for he is merciful and compassionate, slow to get angry and filled with unfailing love. He is eager to relent and not punish. Who knows perhaps he will give you a reprieve sending you a blessing instead of this curse. (Joel 2:12-14)
 
 
 
இஸ்ரவேல் மக்கள் இந்த அழிவின் விளிம்பு வரை செல்ல காரணமென்ன? இதற்கு காரணம், அவர்கள் தேவனுக்கு எதிராக கலகம் செய்தார்கள் மற்றும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கைகளை அவர்கள் கவனிக்காமல் விட்டுவிட்டனர். யோவேல் தீர்க்கதரிசி வந்த நேரத்திற்கு முன்பே, தேவன் தன் உக்கிர கோப அக்கினியை வெளிப்படுத்தி அவர்களை அழிக்க திட்டமிட்டுவிட்டார்.
 
நினிவே மக்களை அழிப்பதற்கு "அழிவு நாளை – Dooms Day" இறைவன் நிர்ணயித்த விவரங்கள் குர்‍ஆனிலும் பைபிளிலும் பெரும்பான்மையாக ஒரே வகையில் விவரிக்கப்பட்டுள்ளது. விரைவில் நிகழக்கூடிய அந்த அழிவு நாளைப் பற்றிய பயம் நினிவே மக்களின் இதயங்களைத் தாக்கியது, அதனால் அவர்கள் பச்சாதாபம்(Repented) கொண்டனர், மனம் வருந்தினர் அதனால், வரவிருந்த தண்டணையிலிருந்து தப்பித்துக்கொண்டனர்.
 
யோவேல் மற்றும் யோனா தீர்க்கதரிசிகளின் செய்தியில் உள்ள ஒற்றுமையை நாம் தெளிவாகக் காணலாம். யோவேல் முதல் அதிகாரம் வசனங்கள் 13 மற்றும் 14ல், ஆசாரியர்களுக்கு எவ்விதம் தேவன் கட்டளைகளை கொடுக்கிறார் என்பதை கவனிக்கவும்:
 
"ஆசாரியர்களே, இரட்டுடுத்திப் புலம்புங்கள்; …….. பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக் குடிகளையும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்."
 
 
இதே போல, யோனா தீர்க்கதரிசன புத்தகத்திலும் 3:8,9ம் வசனங்களில், நினிவேயின் அரசன் தன்னை தாழ்த்தி, தன் நாட்டு மக்களுக்கு இது போலவே கட்டளையிட்டார், அதாவது, உயர்ந்த அதிகாரமுடையவன் முதற் கொண்டு, சிறிய வேலைச் செய்கின்ற ஊழியர் வரை அனைவரும் தங்களை தாழ்த்தி வேண்டுதல் செய்யும் படி கட்டளையிட்டார். அந்த அரசன் இவ்விதமாக கட்டளை கொடுத்தார்:
 
 
"மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள். யாருக்குத் தெரியும்; நாம் அழிந்து போகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தை விட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச்சொன்னான்."
 
 
நம்மைச் சுற்றி எப்படிப்பட்ட தீய காரியங்கள் நடக்கின்றன? (உண்மையில் நம்முடைய சொந்த வாழ்விலும் கூட). பாவம் வெவ்வேறு உருவங்களில் வருகிறது, உதாரணத்திற்கு, திருடுதல், பொய் சொல்லுதல், பேராசை, சுயநலம், பெருமை, பொறாமை, கோபத்தால் கொந்தளித்தல், தீய விருந்துகள், மதுபானத்திற்கு அடிமையாகுதல், மற்றும் போதைப் பொருட்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்துதல் அல்லது அடிமையாதல், ம‌ன‌க்க‌ச‌ப்பு, மன்னிக்காத சுபாவம், கொடுமையாக‌ ந‌ட‌ந்துக்கொள்ளுத‌ல், புறங்கூறுத‌ல், காம வேட்கை கொள்ளுத‌ல், ம‌ற்றும் மோக‌ம் கொண்டு செய்ய‌ப்ப‌டும் ஆபாச‌ செயல்க‌ள், இவைகளைப் போல பாவம் வித்தியாசமான விதங்களில் வருகிறது.
 
 
காம வேட்கை கொள்ளுத‌ல், ம‌ற்றும் மோக‌ம் கொண்டு செய்ய‌ப்ப‌டும் ஆபாச‌ செயல்கள் போன்றவைகள் உலகில் அனைத்து பாகங்களிலும் உள்ளது, ஆனால், இது மிகவும் அதிகமாக ஆபாசமான பத்திரிக்கை, இணையம் மற்றும் இது சம்மந்தப்பட்ட துறைகளிலும், ஹாலிவுட் போன்ற திரைப்பட துறையிலும் அதிகமாக உள்ளது. இந்த துறைகளினால், மேற்கத்திய நாடுகளில் நன்னடத்தைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த பொல்லாத விதையினால், மற்ற நாடுகளும் பாதிக்கப்படுகின்றன.
 
 
இந்த வேண்டாத ஆபாச‌ உறவுகளினால் ஏற்படும் விளைவு, வேண்டாத குழந்தைகளை பெற்றெடுத்தலாகும். மக்களில் அனேகர், "கருக்கலைப்பு – Abortion" என்பது குழைந்தைகள் பெரும் சுமையை இறக்கிவைக்க (தடைசெய்ய) சுலபமான வழி என்று நினைக்கிறார்கள். இதன் விளைவாக, கடந்த 35 ஆண்டுகளில் 40 மில்லியன் தேவையில்லாத சிசுக்கள் என்ற பெயரில் அமெரிக்காவில் கொல்லப்பட்டுள்ளன! மேற்கத்திய நாடுகள் யோவேல் தீர்க்கதரிசியின் அறைகூவலை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன என்பதை இது நமக்கு போதிக்கிறது. நாம் இப்போது மனந்திரும்ப வேண்டும், அலறி அழவேண்டும், ஏனென்றால், நாம் "கருக்கலைப்பு" என்ற எண்ணிக்கையில் அடங்கா கொலைகள் நடப்பதை நம் கண்களால் கண்டும் காணாதவர்கள் போல இதுவரை இருந்துள்ளோம்.
 
 
நம் கண்களுக்கு மிகவும் தெளிவாக தெரிந்துக்கொண்டு இருக்கும், உலகத்தின் பல பாக‌ங்களில் நடக்கும் பாவங்களை நாம் பார்த்தும் பார்க்காதவர் போல இருப்பதும் சரியானது அல்ல. உதாரணத்திற்கு, மத்திய கிழக்க(தொலை கிழக்கு) பாகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளைச் சொல்லலாம். பல இஸ்லாமிய நாடுகள் (மற்றும் இஸ்லாமியர்கள்) இஸ்ரவேல் நாடு மீது கொண்டுள்ள தீர்க்கமான கசப்பிற்கும், வெறுப்புத் தன்மைக்கும் நாம் என்ன சொல்லப்போகிறோம்?
 
 
ஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய எழுத்தாளர், ரஸ்லன் டோக்சுகோவ்(Ruslan Tokchukov), இந்த விஷயத்தைப் பற்றி தன் கருத்தை மிகவும் வெளிப்படையாகச் சொல்கிறார்.
 
 
"ஒரு காலத்தில் யூத மக்களின் எதிரிகளாக இருந்த மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளாகிய, எகிப்து நாட்டின் பார்வோன்கள், அசீரியா நாடு, பாபிலோனியா நாடு, ரோம் இராஜ்ஜியம், ஸ்பெயின் நாட்டு மன்னர், ரஷ்ஷியாவின் சரிஸ்ட் இராஜ்ஜியம், மற்றும் நாஜி இயக்கம்," போன்ற அனைத்து நாடுகளின் கொடூரமான முடிவைக் கண்டு, தன் சரித்திர ஆய்வின் முடிவை இப்படியாகச் சொல்கிறார்:
 
 
கிறிஸ்தவர்களின் பைபிளில் ஒரு பகுதியில் சொல்லப்பட்டது போல‌, யூத மக்களை சபிக்கும் மனிதர்களை தேவன் சபிக்கிறார். பிறகு இவர் சொல்கிறார், "உலகத்தின் மொத்த சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால், இந்த விவரம் உண்மை என்று நிருபனமாகிறது, இப்போது, நீங்கள் இறை நம்பிக்கை உள்ளவராக இருக்கலாம் அல்லது இறை நம்பிக்கை இல்லாதவராகவும் இருக்கலாம், ஒரு வேளை நீங்கள் இதை தேவனின் சட்டம் என்றுச் சொல்லக்கூடும், அல்லது சரித்திரத்தின் நியதி என்று சொல்லக்கூடும், ஆனால், யுதர்களை கொடுமைப்படுத்திய எந்த ஒரு நாடும், மிகவும் கொடுமையான விளைவுகளை சந்திக்காமல் தப்பித்ததில்லை என்பதை மட்டும் நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அரபியர்கள் அல்லது இதர இஸ்லாமிய நாடுகள் இதற்கு விதி விலக்கு என்று நான் நினைக்கமாட்டேன். [1]
 
 
அஹமதினெஜத் என்பவர் எழும்பி, "இஸ்ரவேல் என்ற நாடு உலக வரைபடத்தில் இல்லாமல் ஆக்குகிறேன்" என்று தொடர்ந்து தன் பயமுறுத்தலை சொல்வதற்கு முன்பு எழுத்தாளர் டோக்சுகோவ் இந்த எச்சரிக்கைகளை 2003ம் ஆண்டு எழுதிவிட்டார். உலகத்தில் எந்த ஒரு இஸ்லாமிய தலைவராவது எழுந்து, அஹ்மத்னெஜத்தின் இந்த கொடுமையான சவாலை கண்டித்ததுண்டா? இஸ்லாமிய நாடுகள் ரஷ்லனின் எச்சரிக்கையை கேட்டு அதன் படி எச்சரிக்கை அடையாமல் போனால், இந்த வெறுப்பின் விதையானது மிகவும் அதிகமான வளர்ந்து, கடைசியில் சுழல்காற்றிலே அதன் விளைச்சலை அவர்களே அறுக்கவேண்டி வரும் (சகரியா 12 மற்றும் யோவேல் 3ம் அதிகாரத்தில் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டு இருக்கும் விதமாக, அறுக்கவேண்டி வரும்).
 
 
முஸ்லீம் அடிப்படைவாதிகளினால் செய்யப்படும் கொடூரங்களும், மற்றும் ஹிம்சைகளும் மிகவும் தவறானவைகளாகும், ஆனால், ஏமாற்றுவதற்கும் பொய் சொல்வதற்கும் என்ன சொய்யப்படும்? சிந்தித்துப் பாருங்கள், நவீனவாதியாக கருதப்படும் காலம் சென்ற யாசர் அராபத், பலவேடங்களில் நடிப்பதில் கைதேர்ந்தவர். ஓஸ்லோ அமைதி ஒப்பந்தத்தில்(Oslo Peace Accord - 1993) கையெழுத்து இட்டு, அதை அங்கீகறித்து (ஆங்கிலத்தில்), அதன் காரணமாக எப்படி அராபத் நோபல் அமைதிப் பரிசைப்(Nobel Peace Prize) பெற்றார் என்று உலகம் நன்றாக அறியும்.
 
 
இப்படி அமைதி ஒப்பந்தத்தை அங்கீகறித்து, கையெழுத்து இட்டு மூன்று ஆண்டுகள் ஆனவுடன், அரபி தூதுவர்களுடன் ஸ்டாக்ஹாம் என்ற இடத்தில் பேசும் போது, அவரது உண்மை உள் நோக்கம் வெளிச்சத்திற்கு வந்தது, அவர் கூறியதாவது:
 
 
"நாங்கள் இஸ்ரவேல் நாட்டை அகற்ற முடிவு செய்துள்ளோம்... பாலஸ்தீனவர்களாகிய நாங்கள், எருசலேம் முதற் கொண்டு எல்லாவற்றையும் ஆக்கிரமித்துக் கொள்வோம் ("We plan to eliminate the state of
 
Israel ... We Palestinians will take over everything, including all of Jerusalem." (as reported to the Norwegian daily 'Dagen', 6 Feb. 1996)).
 
இதற்கும் மேலாக, அராபத் அவர்கள் இப்படி சொல்லியுள்ளார், "போர் செய்து இஸ்ரவேலை தோற்கடித்து எங்களால் வெற்றிபெற முடியாது என்பதால், இதனை நாங்கள் பகுதி பகுதியாக செய்யப்போகிறோம். பாலஸ்தீனாவுடன் ஒவ்வொரு பகுதியையும் நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இணைத்துக் கொண்டு,.... அதனை அடித்தளமாகக் கொண்டு, இன்னும் அதிகமாக ஆக்கிரமித்துக் கொள்வோம். ஒரு நேரம் வரும், அப்போது அரபி தேசங்கள் அனைத்தையும் எங்களுடன் இணைத்துக் கொண்டு, இஸ்ரவேலை கடைசியாக தாக்குவோம்."
 
 
Furthermore, Arafat explained, "Since we cannot defeat Israel in war, we do this in stages. We take any and every territory we can of Palestine ... and use it as a springboard to take more. When the time comes, we can get the Arab nations to join us for the final blow against Israel." (from an interview on Jordanian Television, as quoted in "The Threat Inherent in a Palestinian State" by Don Feder, Insight Magazine, 13 May 2003)
 
 
கொடுமையைக் கண்டு ஓலமிட்டு அழுதலும் மற்றும் ம‌ன‌ம் வ‌ருந்துத‌லும்
இந்த‌ ஆண்டின் ஆர‌ம்ப‌த்தில், சைனாவும் மியான்மாரும் இய‌ற்கை சீற்ற‌த்தால், மிக‌வும் கொடுமையாக‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌து, கிட்ட‌த்த‌ட்ட‌ 2,00,000 ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டார்க‌ள். இந்த‌ இர‌ண்டு நாடுக‌ளும் இய‌ற்கை சீற்ற‌த்தால் ம‌ரித்த‌வ‌ர்க‌ளுக்காக‌ க‌ண்ணிர் அஞ்ச‌லி செலுத்துவ‌த‌ற்கு மூன்று நாட்க‌ளை ஒதுக்கினார்க‌ள், இந்த‌ நாடுக‌ள் இப்ப‌டி செய்வ‌து ச‌ரியான‌து என்று க‌ண்டார்க‌ள். இப்போது எழும் கேள்வி, "நாடு தழுவிய இந்த அஞ்சலி செலுத்தும் நாட்களுக்கும், தாழ்மைபடுவதற்கும் அல்லது நம் உள்ளத்தில் மாற்றமடைவதற்கும் சம்மந்தமுண்டா?". இதற்கு பதில், இல்லை என்பது தான்(The question arises, "Were these days of national mourning linked in any way to humility or spiritual soul searching? Apparently not.)
 
 
இக்கட்டுரையை படிக்கும் சில வாசகர்கள், "இப்படிப்பட்ட கேள்வியை கேட்பதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று கேட்கக்கூடும்.
 
 
இப்படிப்பட்ட கேள்வியைத் தான் இயேசு கிறிஸ்துவும் எழுப்பினார். தேவாலயத்தில் தொழுதுக்கொண்டு பலிகளை செலுத்தும் வேலையில், மிகவும் கோரமான ஒரு விபத்து நடந்து பல யூதர்கள் மரித்துப்போனார்கள், இதைப் பற்றி ஒரு கூட்ட மக்கள் பேசிக்கொண்டப்போது, இயேசு கீழ் கண்டவிதமாக கேட்டார்:
 
 
"சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளா யிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்ல வென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற் போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப் போவீர்கள் என்றார்." (லூக்கா 13:4-5)
 
 
துன்பப்படுவதற்கும், உபவாசம் இருப்பதற்கும், மனஸ்தாபம் கொள்வதற்கும் சம்மந்தமுண்டா?
 
 
உண்மையான கண்ணீர் தீர்க்கமான மனஸ்தாபத்திற்கு சரியான அடையாளமாகும். பைபிளின் படியும், குர்‍ஆனின் படியும், யோனா என்பவர் தன் துன்ப நேரத்தில் வேதனையின் சிகரத்தில் இருக்கும்போது தன்னை தாழ்த்தினார் என்பதை அறிவோம். பைபிள் நமக்குச் சொல்கிறது, யோனா தன் "நெருக்கத்தின் நேரத்தில் கர்த்தரை நோக்கி கூப்பிட்டார்." (யோனா 2:2). அதே போல குர்‍ஆனும் சொல்கிறது, யோனா "அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது:" …. "எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம்." (குர்‍ஆன் 68:48; 21:88)
 
 
இன்னொரு பைபிள் நிகழ்ச்சி (குர்‍ஆனில் பதிவு செய்யப்பட்டதின் படி) விவரிக்கிறது, சாத்தான் ஆதாமை ஏமாற்றிய பிறகு எப்படி ஆதாம் துன்பத்தில் ஆழ்ந்துவிட்டார் என்று (குர்‍ஆன் 20:117). இன்னும் சொல்லப்போனால், ஒரு இஸ்லாமிய ஹதீஸின் படி, ஆதாமும் ஏவாளும் 40 ஆண்டுகள் மனஸ்தாபப்பட்டு அழுதார்களாம், பிறகு அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்களாம். (Furthermore, according to Islamic tradition Adam and Eve wept in repentance for 40 years, after which they were reunited with each other.)
 
 
துக்கப்படுவதற்கும், மனஸ்தாபப்படுவதைப் பற்றியும் பைபிள் என்ன சொல்கிறது? பைபிள் தெளிவாகச் சொல்கிறது: "… தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே. தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது."("the kind of sorrow God wants us to experience leads us away from sin and results in salvation.... But worldly sorrow, which lacks repentance, results in spiritual death.") (2 கொரிந்தியர் 7:9-10)
 
 
ஆதாமும் யோனாவும் தேவனுக்கு கீழ்படியாமல் போனபோது, அதனால், மிகவும் தீவிரமான விளைவுகளை சந்தித்தார்கள். தாவீது இராஜாவும் தேவனுக்கு எதிராக பாவம் செய்தபோது, மிகவும் தீவிரமான விளைவுகளை சந்தித்தார். தாவீதின் ஜெபத்தை நாம் சங்கீதம் 30ல் காணலாம்,
 
 
என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர். கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர். கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள். அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்….என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம் பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.
 
 
யோனாவின் மற்றும் தாவீதின் தாழ்மையை நான் பார்க்கும் போது எனக்கு ஒரு ஹதீஸ் நியாபகத்தில் வருகிறது, அந்த ஹதீஸ் சொல்கிறது, "ஆதாமின் எல்லா மகன்களும்(சந்ததி) பாவிகளாவார்கள், மற்றும் இவர்களில் மிகவும் சிறப்பானவர்கள் தொடர்ந்து மன்னிப்பிற்காக மனஸ்தாபப்படு பவர்களாவார்கள்" ("Every son of Adam is a sinner and the best of sinners are those who repent constantly.").
 
 
இப்படிப்பட்ட மனப்பான்மையை தாவீது உடையவாராக இருந்ததால் தான் தேவன் தாவீதை இப்படியாக கூப்பிடுகிறார், "என் இருதத்திற்கு ஏற்ற மனிதன்". தேவனுக்கு பிரியமான பலி எது என்று தாவீதுக்கு நன்றாகத் தெரியும், "தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்." (சங்கீதம் 51:17)
 
 
தேவனுக்கு ஏற்ற துக்கம் நம்மை மனஸ்தாபத்திற்கு கொண்டு செல்லும் என்பது உண்மையானால், ஏசாயா 25:7-9 ல் சொல்லப்பட்டது போல, "தேவன் நம் கண்ணீர்கள் யாவையும் துடைப்பார்" என்பதும் மிகவும் உண்மையே. மறுபடியும், 57ம் அதிகாரத்தில் நாம் படிக்கலாம், தேவன் "துக்கப்படுகிறவர்களை ஆறுதல் படுத்துகிறார்". இதற்கு முன்னால் உள்ள வசனங்கள் இவ்விதமாகச் சொல்கின்றன,
 
 
"நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்….. நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச்சோர்ந்துபோகுமே. …. அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன். தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனைச் சிருஷ்டிக்கிறேன்; அவர்களைக் குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." (ஏசாயா 57:15-19)
 
 
தேவன் எதன் அடிப்படையில் யோனாவை காப்பாற்றினார்? ஒருவேளை யோனாவின் தாழ்மைக்கு பதிலாக தன் வலிமை மிக்க வல்லமையை காண்பிக்கவேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக இருக்குமா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா? இதற்கான முதல் துப்பு, அந்த கப்பலில் பயணம் செய்த மாலுமிகள் யோனாவின் தேவனே உண்மையான தேவன் என்றுச் சொன்ன விவரங்களிலிருந்து கிடைக்கிறது. நாம் அவ்வசனத்தில் இப்படியாக படிக்கிறோம், "அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலி யிட்டுப் பொருத்தனைகளைப் பண்ணினார்கள்." (யோனா 1:16)
இரண்டாவது துப்பு, "யோனா தேவனிடம் வேண்டிக்கொண்டார்" மற்றும் "நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது" என்றார். இந்த இரண்டு சூழ்நிலைகளிலும் நாம் தேவனின் செயலை காணமுடியும்.
 
 
மேலும், இரட்சிப்பு என்பது பாவத்தோடு சம்மந்தப்பட்டுள்ளது(salvation is integrally linked to sin). யோனாவின் நிகழ்ச்சியில், மரணத்திலிருந்து அவர் காப்பாற்றப்பட்டது, வெறும் ஆபத்திலிருந்து பாதுகாப்பு அளித்தது மட்டுமல்ல, அவருடைய கீழ்படியாமை என்ற பாவத்திலிருந்து கூட அவர் தேவனிடமிருந்து மன்னிப்பு பெற்றார், தேவனிடமிருந்து இரட்சிப்பு அடைந்தார்.
 
 
யோனா ஒரு இஸ்ர‌வேல‌ராக‌வும், மோசேயின் ச‌ட்ட‌த்தின் கீழும் இருந்தார் என்ப‌தை நாம் ம‌ற‌க்க‌க்கூடாது. ஒவ்வொரு இஸ்ரவேலரும் மோசேயின் ச‌ட்ட‌ம் சொல்வது போல பல சுத்திக‌ரிப்பு செய‌ல்க‌ளை செய்ய‌வேண்டியுள்ளது, அதாவது தங்களை சுத்திகரித்துக்கொள்வது, பலியிடுவது போன்றவைகளாகும். ஒவ்வொரு ச‌ட‌ங்கிற்கும் ஒரு நாள் ஒதுக்க‌ப்ப‌ட்டு இருந்த‌து, அதாவ‌து பாவ‌ நிவார‌ண‌ பலி, க‌ன்றுகளை பலியிடுவது, என்று இன்னும் பல சுத்திகரிப்பு காரியங்களைச் செய்யவேண்டும், ஒருவர் பிணத்தை தொட்டுவிட்டால் அதற்கும் ஒரு சுத்திகரிப்பு செய்யவேண்டி இருந்தது.
 
 
உண்மையில், மோசேயின் சட்டம் மனிதன் பாவத்திலிருந்து, குற்ற உணர்விலிருந்து விடுபட தேவையான சுத்திகரிப்பு பற்றிச் சொல்கிறது. வேதம் சொல்கிறது, "நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது." (எபிரேயர் 9:22) யோனா தேவனின் கட்டளைக்கு கீழ்படியவில்லை என்பது மட்டும் தெளிவாக விளங்குகிறது. ஆகையால், ஒரு ப‌க்தியுள்ள‌ யூதர், முத‌லாவ‌து யோனா பாவ‌ நிவார‌ண‌த்திற்கு தேவையான‌ பொருத்த‌னைக‌ளை செய்யாமல், நன்றி பலியை செலுத்தியிருப்பார் என்று கற்பனை செய்துபார்க்க முடியாது(Therefore, it would be unthinkable for a devout Jew to imagine Jonah making a thank offering of an animal sacrifice – without first performing an offering for his sin!)
 
 
தேவன் ஆபத்திலிருந்து காப்பாற்றுவார், ஆனால், பாவத்திலிருந்தும் அவர் காப்பாரா?
தேவ‌ன் இர‌ட்சிக்கிற‌வ‌ராக‌(Saviour) இருக்கிறார் என்பது மிக‌வும் தெளிவாக‌ உள்ள‌து. ப‌ழைய‌ ஏற்பாட்டு தீர்க்க‌த‌ரிசிக‌ள் தேவனை "இர‌ட்சிக்கிற‌வர் - Saviour" என்று ஆமோதித்த‌ன‌ர், அவ‌ர்க‌ள் அழுது கூப்பிடும்போது அவ‌ர் வ‌ந்து விடுத‌லையை கொடுக்கிறார் என்ப‌த‌ற்காக‌ மட்டும‌ல்ல‌, அவர்க‌ளின் பாவ‌ங்க‌ளிலிருந்து கூட‌ தேவ‌னே இரட்சித்து இருக்கிறார் என்ப‌த‌ற்காக‌ தீர்க்க‌த‌ரிசிக‌ள் அவ‌ரை "இர‌ட்ச‌க‌ர் - Saviour" என்று க‌ண்ட‌ன‌ர்.
 
 
யூதர்களும் கிறிஸ்தவர்களும் தீர்க்கதரிசிகள் பாவம் செய்தனர் என்றுச் சொல்லும் போது, இது மிகப்பெரிய விவாதமாக மாறுகிறது, ஏனென்றால், தீர்க்கதரிசிகள் பாவம் செய்யாதவர்கள் என்று முஸ்லீம்கள் போதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தீர்க்கதரிசிகள் நம்மைப் போல பாவம் செய்பவர்கள் என்ற விவரம் பைபிளில் (அவ்வளவு ஏன் குர்‍ஆனிலும் கூட) தெள்ளத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
 
 
வேதத்தில் இவ்விதமாக சொல்லப்பட்டுள்ளது, "ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை." (பிரசங்கி 7:20) மற்றும் குர்‍ஆனில் இவ்விதமாக நாம் படிக்கிறோம்:
 
 
"மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை(ப் பிடிக்காது) பிற்படுத்துகிறான் - அவர்களுடைய தவம?ை வந்து விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்." (குர்‍ஆன் 16:61)
 
"If God were to punish men for their wrong-doing, He would not leave, on the (earth), a single living creature: but He gives them respite for a stated Term." (surah 16:61)
 
 
ஆதாம் பாவம் செய்தார் என்பதை தட்டிக்கழிப்பதற்கு பல இஸ்லாமிய அறிஞர்கள் முயற்சி எடுக்கிறார்கள். இவர்கள், "ஆதாம் வெறும் ஒரு சின்ன பிழையைச் செய்தார்" அல்லது அவர் "இறைவனின் கட்டளையை மறந்துவிட்டார்" என்றுச் சொல்வார்கள். ஆனால், ஆதாம் அந்த மரத்தின் கனியை புசிப்பதற்கு முன்பாக "மிகவும் தெளிவாக எச்சரிக்கை செய்யப்பட்டார்" என்ற விவரம் இஸ்லாமிய அறிஞர்களுக்கு நன்றாகவே தெரியும் (யூசுப் அலி அவர்கள் தன் மொழிப்பெயர்ப்பின் 20:117ம் வசனத்தின் பின்குறிப்பில் குறிப்பிட்டது போல‌).
 
ஆதாம் ஒரு சிறிய மறதியினால் தான் இப்படிப்பட்ட செயலைச் செய்தார் என்ற இஸ்லாமியர்களின் வழக்கமான இந்த கருத்தை ஜான் கில்கிறைஸ்ட்(John GilChrist) கீழ் கண்டவாறு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் எழுதுகிறார்,
 
 
"அந்த குறிப்பிட்ட மரத்தின் கனியை புசிக்கவேண்டாம் என்று இறைவன் எச்சரிக்கை செய்தது மட்டுமல்ல, சாத்தானும் அவர்களை சோதித்த வேளையில் அந்த எச்சரிக்கையை அவர்களுக்கு நியாபகப்படுத்தியதாக நாம் கண்டுபிடிக்கமுடியும். ஆதாம் இறைவனின் கட்டளையை வெறுமனே மறந்துவிட்டார் என்ற வாதத்தை எப்படி ஒருவர் சகித்து(ஏற்று)க் கொள்ளமுடியும்? அது மட்டுமல்ல, சாத்தான் நியாபகப்படுத்தியதை கருத்தில் கொள்ள வில்லையானாலும், இது நம்புவதற்கு மிகவும் கடினம், அதாவது, இறைவனிடமிருந்து நேரடியாக வந்த தடை செய்யப்பட்ட ஒரே ஒரு கட்டளையை ஆதாமினால் எப்படி மறந்துப்போக முடியும்? மேலும், இந்த பிழை ஒரு சிறிய பிழையாக இருக்கிறது என்றுச் சொன்னால், ஏன் இந்த சிறிய பிழைக்கான தண்டனை மிகவும் கொடியதாக இருந்தது, அதாவது ஆதாம் ஏவாள் தம்பதிகளையும், அவர்களோடு சேர்த்து இந்த முழு உலக மனித வர்க்கத்தையும் ஏன் தோட்டத்திலிருது துரத்தவேண்டும்?
 
"Not only did God warn them against eating of the tree but we discover that Satan even reminded them of his warning while tempting them to sin. How can one possibly sustain the argument that Adam merely forgot his Lord's command? Satan's reminder aside, it is surely too hard to believe that Adam could have forgotten the one and only thing prohibited to him especially when the order came directly from God himself. Furthermore, if this was only a minor 'mistake', why was the penalty so severe - the permanent banishment of the couple and the whole human race with them from the Garden?" (p. 278 in Muhammad and the Religion of Islam)
 
 
ஆதாம் தேவனின் கட்டளையை மறந்துவிட்டாரா இல்லையா ? என்ற வாதத்தை பக்கத்தில் வைத்துவிட்டாலும், ஒரு உண்மையை மட்டும் நாம் மறுக்கமுடியாது, அதாவது குர்‍ஆன் மிகவும் தெளிவாகச் சொல்கிறது, "ஆதாம் தன் இறைவனுக்கு கீழ்படியவில்லை." (The Arabic word Asa - disobey - comes from infinitive isyan which lexically means sin.)
 
 
சிந்திக்கவேண்டிய விவரம்:
 
இறைவனின் 99 பெயர்களின் பட்டியலோடு "இரட்சகர் – Saviour " என்ற பெயரை எப்படி இஸ்லாமிய அறிஞர்கள்(உலைமாக்கள்) விட்டுவிட்டார்கள் என்ற விவரத்தை இந்த கட்டுரை "A Dialog about the One True God" விளக்குகிறது. இந்த கட்டுரையின் கருப்பொருள், இறைவன் எப்படி மிகவும் கொடுமையான ஆபத்தில் இருந்தவர்களை இரட்சித்தார்? என்பதை விளக்குவதாகும். தற்போது படித்துக்கொண்டு இருக்கும் இந்த கட்டுரையில் நாம் "பாவம்" பற்றி மிகவும் விவரமாகக் கண்டோம். இரட்சகர் என்ற பெயரை இஸ்லாமியர்கள் இறைவனுக்கு சூட்டுவதை விட்டுவிட்டார்கள், ஆனால், இக்கட்டுரையை படித்தபின்பு "இரட்சகர்" என்ற வார்த்தை இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் அறியலாம்.
 
 
இறைவன் தீர்க்கதரிசனமாக, "என் தாசன் என் இரட்சிப்பை கொண்டுவருவார்" என்றுச் சொல்லியுள்ளார்.(ஏசாயா 49:6) ஆனால், ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள், "இயேசு இறைவனின் இரட்சிப்பை எப்படி கொண்டுவருவார்?" இயேசு இரட்சிப்பை கொண்டுவருவார் என்பதின் அர்த்தம், பலவிதமான வியாதிகளால் பீடிக்கப்பட்டு இருந்த மக்களை சுகமாக்குவது மட்டும் தானா? அல்லது கலிலேயா கடலின் புயலில் சிக்கித் தவித்தவர்களை காப்பாற்றுவது மட்டும் தானா? இயேசு இவைகளை மட்டுமல்லாமல், பாவசுபாவத்தால் அடிமைப்ப‌ட்டு இருந்த மக்களுக்கு விடுதலையையும், குற்ற மன சாட்சியின் உணர்வுடன் அழிந்துக்கொண்டு இருந்தவர்களையும் அவர் இரட்சித்தார் என்பதும் உண்மையில்லையா? (படித்துப் பார்க்கவும், மத்தேயு 1:21;லூக்கா 7:36-48; 19:1-10, யோவான் 1:29; 3:16,17; 8:32.) 
 
 
ஆசிரியரோடு தொடர்பு கொள்ள விரும்பினால், இங்கு சொடுக்கவும்

பின் குறிப்பு:
1 Our Place in the World: Road map leads to darkness by Ruslan Tokhchukov, Seattle Post-Intelligencer, November 14, 2003

ரோலண்ட் கிளார்க் அவர்களின் இதர கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்

வெள்ளி, 26 செப்டம்பர், 2008

நித்திய நம்பிக்கை - மரண‌ம் என்பது முடிவா? (ETERNAL HOPE)

நித்திய நம்பிக்கை

ரோலண்ட் கிளார்க்

ETERNAL HOPE

 
மரண‌ம் என்பது முடிவா?


ஒவ்வொரு இனத்தையும் ஒவ்வொரு மதத்தையும் சார்ந்தவர்களும் மரணத்திற்குப் பின்பும் ஏதோ ஒரு வாழ்க்கை உள்ளது என நம்புகிறார்கள். மரணம் என்பது முடிவுதான் எனப் பெரும்பாலும் ஒருவரும் நம்புவதில்லை - அதாவது நம் உடல்கள் அழுகிவிடுவது போன்று நாமும் அழிந்து விடுகிறோம் என்பதுபோல. நாம் மிகவும் நேசிப்பவர் மரிக்கும் போது, அவர்களை மறுபடியும் எங்கேயாவது எப்போதாவது பார்ப்போம் என நம்புகிறோம். நமக்கும்கூட, நம் மரணத்திற்குப் பிறகும் நமது வாழ்க்கை தொடரும் என்கின்ற ஓர் உள்ளுணர்வு உண்டு. மரணத்திற்குப்பின் வரும் மகிழ்வான வாழ்க்கை பற்றிய ஆசை ஒவ்வொரு கலச்சாரத்திலும் ஒவ்வொரு விதமாக விவரிக்கப்படுகிறது, ஆனால் இவையனைத்தும் முக்கியமாக ஒன்றே ஒன்றைத் தான் இறுதியாக நாடுகின்றது - அதுதான் நித்திய வாழ்வு.

தற்கால எழுத்தாளர் ஒருவர் இந்த ஆவலை இவ்விதமாகக் குறிப்பிடுகிறார் :"நம்மில் ஒவ்வொரு அணுவும் சாவதற்கு எதிராக ஓலமிட்டு, நிரந்தரமாக வாழ வாஞ்சிக்கிறது" (Ugo Betti in 'Struggle to Dawn', 1949). மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பு, சாலொமோன் ராஜா இதற்கொப்ப இவ்விதமாய் எழுதினார். "உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்."(பிரசங்கி 3 : 11) இந்த வாஞ்சை நம்மைப் படைத்தவரின் பிரதிபலிப்பே. நித்தியமானவர் நம் உள்ளத்தில் நித்தியத்தைப் பதித்து வைத்திருக்கிறார். தேவன் நாம் நித்தியத்தை வாஞ்சிப்பதற்கு வகை செய்துள்ளார், அவர் அதை நிறைவேற்றவும் சித்தமாயுள்ளார். எனினும், நித்திய வாழ்வு ஒன்றே நமது மேலான இலக்காய் இருத்தலாகாது. நமது இறுதியான ஆசை, அது நிறைவேறும்போது, தேவனுடன் அவரது நித்திய வீட்டில் குடியிருத்தல் என்பதாகவே இருக்க வேண்டும்.

சாலொமோன் மரணத்தை வீடு திரும்புதல் என்பதாகவே விளக்குகிறார். அந்திம காலத்தை(முதிர் வயது காலத்தை ) அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார் :
 
 
"...மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்கு முன்னும், ...இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்கு முன்னும்..."பிரசங்கி 12 : 5-7
 
 
ஆனால் இந்த "வீடு திரும்புதல் _ Home Coming", ஏனைய அனேக‌ நிகழ்வுகளில், அதாவது, மக்கள் பல ஆண்டுகள் பிரிவிற்குப் பிறகு மறுபடியும் ஒன்று சேருவது போல, ஒரு மகிழ்ச்சியான சம்பவம் அல்ல. இது மரண வாயிலாக, ‍அதாவது, சாதாரணமாக நாம் துக்கம், வேதனை மற்றும் பயம் போன்ற உணர்வுகளுடன் கலந்து, உள்ளே செல்வது எனப் பொருள் படும். என்னே ஒரு மாறுபாடு! நாம் மரணத்தினாலுண்டாகும் கசப்பான உணர்வுகளைக் கண்டுகொள்ளாதபடி, இந்தப் புதிரை மிகவும் அவசரக் கோலத்தில் தீர்க்க முயலாமல் இருப்போம்.
 
 
இந்தப் புதிரை விடுவிப்பது எப்படி?

 
சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய தாயார் மரணமடைந்தார். அச்சமயத்தில் நான் அடைந்த வேதனையை எளிதில் என்னால் மறக்க இயலாது. இது என் மனதில் வேறொரு நெஞ்சத்தைப்பிழியும் சம்பவத்தையும் நினைவு படுத்தியது, அதாவது, எனது எட்டாவது இளைய வயதில் என்னுடைய தந்தையை இழந்த சம்பவம் அது. நாம் இள வயதினரோ அல்லது முதியவரோ, நாம் நேசிக்கும் ஒருவரை இழக்கும்போது மிகவும் வருத்தத்திற்குள்ளாகிறோம். இது சில கலாச்சாரத்திற்கு மட்டும் என்பது இல்லாமல், எல்லா இடங்களிலும் எல்லா மக்களுக்கும் பொதுவானது தான்.

 
ம‌ர‌ண‌ம் என்ப‌து உண‌ர்வுபூர்வ‌மான‌ வேத‌னை ம‌ட்டும‌ல்லாம‌ல், உடல்ரீதியாகவும் நம்மை வருத்துகிறது. மரணத்திற்குக் கொண்டுச் செல்லும் மிகச் சாதாரணமான சூழ்நிலை ஏதாவதொரு நோய் மூலமாக இருக்கும். நாம் பொதுவாக இத்தகைய வேதனைகளினின்று விடுபட‌, அது மேலும் தீவிரமாகி நம்மைத் துன்புறுத்தாதபடி ஏதாவதொரு சிகிட்சையை மேற்கொண்டு சாவதைக் கூடியமட்டும் தவிர்க்க முயலுகிறோம்.

 
மரணத்தைக்கண்டு பயப்படுதலும், அதற்காக துக்கம் கொண்டு, வேதனைப்பட்டு அதற்கெதிராகப் போரடுவதே மரண‌த்திற்கெதிராக மனிதர்களின் வழியாய் இருக்கிறது. பைபிள் மனிதர்களை இவ்விதமாய் விவரிக்கிறது : ஜீவ காலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத் தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்." (எபிரேயர் 2:15) புற்று நோய் அல்லது எய்ட்ஸ் போன்ற தீராத வியாதியினால் நாம் பீடிக்கப்பட்டு இருக்கும்போது, நாம் மருத்துவ சிகிட்சையையோ அல்லது தெய்வீக குணப்படுத்துதலையோ நாடுகிறோம். ஏனெனில் நாம் மரணத்திற்கு பயந்து அதை வெறுக்கிறோம். இத்தகைய மனோனிலை தாவீது அரசன் மற்றும் இயேசுவின் ஜெபங்களிலும் காணப்படுகிறது.
 
 
ஒருமுறை தாவீது ஒரு மிகவும் பயங்கரமான சூழ்நிலையில் இருந்தபோது தேவனிடம் இவ்வாறு கதறினார், "என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது. பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று."(ச‌ங்கீத‌ம் 55:4-5)

 
மீட்ப‌ராகிய‌ இயேசுவும் கூட‌ ம‌ர‌ண‌த்தைச் ச‌ந்திக்கும்போது ஏற்ப‌டும் ம‌ன‌ச்ச‌ஞ்ச‌ல‌த்தினை அறிவார், "அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,"(எபிரேய‌ர் 5:7)

 
மரணம் எதிர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்தும் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் பின் வரும் வசனம் சில ஆழமான வெளிப்படுகளைக் காண்பிக்கிறது. இதனை சாலொமோன் கூறுகிறார், "பரிமளதைலத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜநநநாளைப்பார்க்கிலும் மரணநாளும் நல்லது. விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான். நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும். ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் களிப்புவீட்டிலே இருக்கும்." (பிர‌ச‌ங்கி 7:1-4)

 
மோசேயும் இதேபோன்று மரணத்தின் அர்த்தத்தை ஆழ்ந்து சிந்திக்கிறார், "அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்….. எங்கள் அக்கிரமங்களை உமக்குமுன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்….. உமது கோபத்தின் வல்லமையையும் உமக்குப் பயப்படத்தக்க விதமாயும் உமது உக்கிரத்தையும் அறிந்து கொள்ளுகிறவன் யார்? நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்." (சங்கீதம் 90:5-12)
 
 
ம‌ர‌ண‌ம் எனும் புதிரை விடுவித்த‌ல்

 
இந்த‌ ச‌ங்கீத‌த்தில் ம‌ர‌ண‌த்தின் பார‌மான‌ உண‌ர்வுகளைப் புரிந்துகொள்ள நமக்கு ஒரு தடம் கிடைக்கிறது. ந‌ம‌து பாவ‌ம் தேவ‌னின் கோப‌த்தைத் தூண்டுகிற‌தென்றும், அத‌னால் இறுதியில் நம்மில் ம‌ர‌ண‌ம் ச‌ம்ப‌விக்கிற‌து என்றும் மோசே ம‌றுப‌டியும் ம‌றுப‌டியும் சொல்கிறார். இந்த சங்கீதத்தின் வாயிலாக நாம் காணும்போது, இஸ்ரவேலருக்கு எதிரான தேவனின் தண்டனையின் எதிரொலியை நாம் கேட்க முடியும்.

 
"அப்படியே கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின்மேல் மூண்டது; கர்த்தருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்த அந்தச் சந்ததியெல்லாம் நிர்மூலமாகுமட்டும் அவர்களை வனாந்தரத்திலே நாற்பது வருஷம் அலையப்பண்ணினார்." (எண்ணாக‌ம‌ம் 32:13).

 
பாவ‌த்தை நாம் ம‌ர‌ணத்தின் மூல‌ கார‌ண‌மாகப் புரிந்துகொள்ளும்போது, ம‌ர‌ண‌ம் ஏன் இவ்வளவு எதிர்மறையான உணர்வுகளை உருவ‌க்குகிற‌து என‌ ந‌ம‌க்குப் புல‌ப்ப‌டும். இதுவரை ம‌ர‌ண‌ம் எவ்வாறு ம‌னித‌ர்க‌ளைப் பாதிக்கிற‌து என‌ப் பார்த்தோம். இப்போது ம‌ரண‌த்தை தேவ‌னின் பார்வையில் நோக்குவோம்.

 
தேவ‌ன் ம‌ர‌ண‌த்தை அருவெறுக்கிறார்

 
செத்து அழுகிய‌ நிலையில் உள்ள‌ ஒரு பிண‌த்தினின்று வீசும் துர்நாற்றத்தை மனிதர்களாகிய நாம் அருவ‌றுத்து வில‌கி ஓடுகிறோம். என‌வே தேவ‌னும் ம‌ர‌ணத்தில் அருவெறுப்பு கொள்கிறார் என நாம் அறிவ‌தில் ஆச்ச‌ரிய‌ம் ஒன்றுமில்லை. மரணம் தொட‌ர்பான‌ க‌ட்ட‌ளைக‌ளை தேவ‌ன் மோசே மூல‌மாக‌க் கொடுத்தார். இஸ்ர‌வேல‌ரின் பரிசுத்தத் தொழுகை இட‌மான‌ ஆச‌ரிப்புக்கூட‌த்திற்கு, ஒரு எலும்பைத் தொட்ட‌வ‌னாவ‌து அல்ல‌து புதைக்க‌ ஒரு உட‌லைச் சும‌ந்த‌வ‌னாவ‌து ஏழு நாளைக்கு உள் நுழைய‌ அனும‌தியில்லை. ஏதாவ‌து இறந்த‌வ‌ரின் வீட்டிற்குப் போயிருப்பின், சுத்திக‌ரிப்பின் முறைக‌ளின்ப‌டி சுத்த‌மாக‌ வேண்டுமென‌ ம‌க்க‌ள் நிர்ப‌ந்திக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். உண்மையில், இந்த ஆணைக‌ளெல்லாம் ஏதாவ‌தொரு சுத்திக‌ரிப்பின் முறைமை இல்லாமல், தேவனின் கூடாரத்தில் தொழுகை செய்ய நுழைவதற்கு முழுமைய‌டையாது. (எண்ணாக‌ம‌ம் 19 ம் அதிகாரம் )

 
தேவ‌ன் ம‌ர‌ண‌த்தில் ம‌கிழ்ப‌வ‌ர‌ல்ல‌ர்

 
தேவ‌ன் இஸ்ர‌வேல‌ருட‌ன் எசேக்கியேல் தீர்க்க‌த‌ரிசி மூலமாய்ப் பேசியபோது, அவர்கள் பாவம் செய்வதை விட்டு மனம் திரும்பாவிட்டால் அவர்கள் சாகவே சாவார்கள் என எச்சரித்தார். "இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்...மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.(எசேக்கியேல் 18:31-32)
 
 
தேவ‌ன் ம‌ர‌ண‌த்திற்கு எதிர்த்து நிற்ப‌வ‌ர், அத‌னை அவ‌ர் அழிப்பார்

 
ம‌ர‌ண‌த்தைக் குறித்த‌ தேவ‌னின் ம‌னோநிலை இவ்வளவாய் எதிர்ம‌றையானதினால், ஏசாயா தீர்க்கதரிசியின் இந்த எழுத்தில் நாம் வியப்படையத் தேவையில்லை, "சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார். அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.;. அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்" (ஏசாயா 25:7-9)

 
இந்த வாக்குறுதி உண்மையிலேயே மிகவும் குறிப்பிடத்தக்கது மற்றும் சிறப்பானது. ஆனால், இது எவ்வாறு நிறைவேற்றப்படும்?

 
தேவ‌ன் எவ்வித‌ம் ம‌ரண‌த்தைத் தோற்க‌டிப்பார்?

 
தேவ‌ன் க‌ல்ல‌றையினின்று ம‌க்க‌ளை எழுப்பும் நாள் ஒன்று வ‌ருகிற‌து. ம‌ர‌ண‌ம் மேற்கொள்ள‌ப்ப‌டும். ம‌ர‌ண‌த்தின் பிடியினின்று ம‌க்க‌ள் விடுவிக்க‌ப்ப‌டுவார்க‌ள். அப்போஸ்த‌ல‌னாகிய யோவான்கூட‌ இந்த‌ நாள் ப‌ற்றிப் பேசினார். உயிர்த்தெழும் நாளுக்குப்பிற‌கு, விசுவாசிப்போருக்கு வாழ்க்கை எவ்வித‌ம் இருக்கும் என‌ அவ‌ர் விள‌க்கியிருக்கிறார், "அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின." (வெளிப்ப‌டுத்துத‌ல் 21:4 குர்‍ஆன் 44:56உடன் ஒப்பிட்டுப்பார்க்கவும்)

 
"அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்" என்கின்ற‌ எண்ண‌ம் ந‌ம் ம‌ன‌த்தில் நாம் உள் ம‌ன‌தில் சிந்திக்கும் ம‌ர‌ண‌த்தைத் தோற்க‌டிப்பேன் என்ற‌ வார்த்தையை நினைவு ப‌டுத்துகிற‌து.

 
இந்த‌ இறைவாக்கு எப்ப‌டியும் விண்ண‌க‌த்தில் நிறைவேறும் என்ற‌ ந‌ம்பிக்கை ந‌ம‌க்கு உருவாகிற‌து. மரணத்தை தேவ‌ன் எவ்வாறு அழிப்பார் என்ப‌தை நாம் புரிந்துகொள்ள‌ உத‌வும் வ‌கையில், அவ‌ர் ந‌ம‌க்கு மற்றும் ஒரு தடத்தைக் காண்பிக்கிறார். இந்த‌த்த‌ட‌ம் வெகு நாட்க‌ள் க‌ழித்த‌ல்லாம‌ல் இப்போதே நடந்துக்கொண்டு இருக்கிறது. ஒரு விசேஷித்த‌ ஊழிய‌ன் தேவ‌னின் இர‌ட்சிப்பை பூமியின் கடைசி வரைக்கும் கொண்டுவ‌ருவான் என‌ ஏசாயா தீர்க்க‌த‌ரிசி முன் மொழிகிறார். (ஏசாயா 49:6). ஏசாயா, தேவ‌ன் ம‌ர‌ண‌த்தை வெற்றிகொள்ளும் நாளையே இர‌ட்சிப்பின் நாள் என‌க்குறிப்பிடுகிறார் என்ப‌தை நாம் நினைவில் கொள்ள‌வேண்டும். "அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்…; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்." (ஏசாயா 25:9)

 
தேவனின் இரட்சிப்பைக் கொண்டுவரும் 'ஊழியன்' யார்? ஏசாயா இந்த தீர்க்கதரிசனத்தைக் கொடுத்து எழுனூறு ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு கன்னிப்பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்தது. தேவன் தன் தூதன் மூலம் ஒரு விசேஷித்த பெயரைக் அவருக்கு கொடுத்தார். இந்த நபர் யார் என நீங்கள் நிச்சயம் கண்டுகொண்டிருப்பீர்கள். அவருடைய பெயர் என்ன? இயேசு என்பதற்குப் பொருள் "தேவனே இரட்சிப்பு" என்பதாகும். இது இரட்சிப்பைக் குறித்த ஏசாயாவின் தீர்க்கதரிசனத்திற்கு முற்றிலும் பொருந்துகிறது. இப்பெயரின் அர்த்தம் மேசியாவின் செயல்களிலும் குண நலன்களிலும் அதிகமாக பிரதிபலிக்கின்றது.

 
இயேசு, குஷ்டரோகம் போன்ற தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கினார். இத்தகைய அற்புதங்கள் எண்ணற்றவர்களை மரணத்தினின்று காப்பாற்றியது. இதுவும் ஒருவகையில் மரணத்தை மேற்கொள்ளும் வல்லமையே.(மத்தேயு 11:5 மற்றும் குர்‍ஆன் 5:113)

 
இயேசு மரணத்தின் எல்லையில் இருந்தவர்களைக் காப்பாற்றினார். அதற்கப்பால் சென்றவர்களையும், அதாவது, கல்லறைக்குள் சென்றவர்களையும் அதனின்று எழுப்பினார். இந்த அற்புதம் மரணத்தின் மீதான அவரின் வல்லமையை மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் விளங்கச்செய்தது. ஆனால் இந்த அற்புதத்தின் அடையாளம் வரப்போகும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடும்போது மிகவும் சிறியதே. இயேசு கீழ்கண்டவாறு முன்னறிவித்தார்:

 
"மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார் ... இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்." (யோவான் 5:25-29) இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, மரித்தவர்கள் அனைவரும் "அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்… எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்" என்பதே

 
உயிர்த்தெழுதல் பற்றிய இந்தக் குறிப்பிடத்தக்க போதனை, லாசருவின் கல்லறையினருகில் இயேசு சம்பாஷித்த வார்த்தைகளின் மூலம் மேலும் உறுதிப்படுகிறது. மார்த்தாளை துக்கத்தினின்று தேற்றும்படிக்கு,

"இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்" என்றார்.

அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.

 
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்."(யோவான் 11:23-26)

 
இந்த‌ வார்த்தைக‌ள், இயேசு, "பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, ...எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்." என‌க்கூறிய‌போது, அத‌னுடைய‌ அர்த்த‌த்தை ந‌ம‌க்கு விள‌ங்க‌ப்ப‌ண்ணுகிற‌து. இதைச் சிந்திக்கும்போது, ஒரு சாதார‌ண‌ ம‌னித‌ன் "நானே உயிர்த்தெழுத‌ல்" என்றுச் சொன்னால் அது ந‌ம்ப‌த்த‌காததாக‌ இருக்கும்; ஆயினும் இயேசு லாச‌ருவை உயிரோடு எழுப்பிய‌வரான‌ப‌டியினால், இத்த‌கைய‌ வார்த்தைகள் சொல்ல அவர் அதிகார‌முடைய‌வ‌ராகிறார்.

 
உங்க‌ளை ம‌ரியாளாக‌ எண்ணிக்கொள்ளுங்க‌ள். ம‌ரித்து நான்கு நாட்க‌ள் ஆகிய‌ உங்க‌ள் ச‌கோத‌ர‌ன் க‌ல்ல‌றையிலிருந்து எழும்பி வருவதை நீங்கள் காணும்போது, மேசியாவின் "உயிர்த்தெழுத‌ல்" குறித்து உங்க‌ளுக்கு ஏதாகிலும் ச‌ந்தேக‌ம் வ‌ருமா? தேவ‌ன் இவ்விட‌த்தில், ஒவ்வொருவ‌ரையும் உயிர்த்தெழுதலின் நாளிலே, அவ‌ர‌வ‌ர்க‌ள் க‌ல்ல‌றையினின்று உயிர்பெற‌ச்செய்ய‌ அவ‌ருக்கு அதிகார‌ம் கொடுக்கிறார், என‌த் தெளிவாக‌க் காண்கிறோம்.

 
ஏசாயா தீர்க்க‌த‌ரிசி எவ்வித‌ம் ம‌ர‌ண‌ம் மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌து என‌ உரைத்த‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌த்தைக் க‌வ‌ன‌மாக‌ ஆராய்ந்த‌தில், தேவ‌ன் அவ‌ர‌து ஊழிய‌னாகிய‌ மேசியாவின் மூல‌ம் இர‌ட்சிப்பைக் கொண்டுவ‌ரும் திட்ட‌த்திற்கு அது மிக‌ச்ச‌ரியாக‌ப் பொருந்துவ‌தைக் கண்டோம். தேவ‌ன் மேசியாவுக்குக் கொடுத்த‌ "இயேசு" என்ற‌ பெய‌ரும் அவ‌ர் செய்த‌ அற்புத‌ங்க‌ளும் இந்த‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌த்துக்குப் பொருத்த‌மாக‌வே அமைவ‌தைப் பார்க்கிறோம். எனினும், மேலும் ஓர் விவ‌ர‌த்தை ஏசாயாவின் தீர்க்க‌த‌ரிச‌ன‌த்தில் நாம் ஆராய‌ வேண்டியுள்ள‌து.
 
 
ம‌ர‌ண‌ம் எங்கு முறிய‌டிக்க‌ப்ப‌டும்?

 
ஏசாயாவின் தீர்க்க‌த‌ரிச‌ன‌த்தின்ப‌டி, ம‌ர‌ண‌த்திற்கு எதிரான‌ யுத்த‌ம் "இந்த‌ ம‌லையில்" (ஏசாயா 25:7) ந‌ட‌க்கும். ஆனால் அந்த‌ ம‌லையின் பெய‌ர் சொல்ல‌ப்ப‌ட‌வில்லை. என‌வே நாம் அத‌ற்கு முந்திய‌ ப‌த்தியில் பார்ப்போமானால் அது "சீயோன் ம‌லை, எருச‌லேம்" என‌ப் பெய‌ரிட‌ப்ப‌ட்டிருப்ப‌தைக் காண‌லாம். (ஏசாயா 24:23).

 
இந்த‌ யுத்த‌ம் எங்கு ந‌டைபெறும் என்ப‌தை முன்ன‌றிவித்த‌வ‌ர் ஏசாயா ஒருவ‌ர் ம‌ட்டும‌ல்ல‌. மேசியாவும் இத‌ற்கொப்பான‌ தீர்க‌த‌ரிச‌னத்தினைச் சொல்லி, அந்த‌ இட‌ம் எருச‌லேம் தான் என‌வும் அங்கு தான் அவ‌ர் ம‌ர‌ண‌த்துட‌ன் மோதி வெற்றிக்க‌ளிப்புட‌ன் எழும்புவார் என‌வும் வெளிப்ப‌டுத்துகிறார்.

 
லூக்காவின் சுவிசேஷ‌த்தில், இயேசு த‌ம்முடைய‌ ப‌ன்னிர‌ண்டு சீஷ‌ரையும் த‌ம்மிடையே வ‌ர‌வ‌ழைத்து இவ்வாறாக‌க் கூறுவ‌தைக் காண்கிறோம். "பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும். எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார். அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்" (லூக்கா 18: 31-33)

 
இயேசு முன்ன‌றிவித்த‌தை ஆழ்ந்து சிந்திப்போமானால், அது மரணத்தின் முறியடிப்பும், அது ந‌டைபெறும் இடம் எருசலேம் தான் என்பதுமான ஏசாயாவின் தீர்க்க‌த‌ரிசனத்துடன் ஒத்துப் போவ‌தை அறிய‌லாம்.
 
 
பொருத்த‌மான‌ உச்சக‌ட்ட‌ம்

 
உயிர்த்தெழுத‌ல் மேசியாவின் வாழ்க்கைக்கு ஒரு பொருத்த‌மான‌ முடிவு. இது குரானின் வார்தைக்கு மாறாக‌க் காண‌ப்ப‌டுகிற‌து. "எந்த‌ வ‌ழி தேவ ஊழியனாகிய மேசியாவின் மூலம் ம‌ர‌ண‌த்தை வெல்ல‌ தேவ‌னுக்கு உக‌ந்த‌து?" என‌ ந‌ம‌க்கு நாமே இவ்விரு வ‌ழிக‌ளையும் ஒப்பிட்டுக் கேட்டுப் பார்க்க‌லாம்.

 
பைபிளில் போதித்துள்ள‌ப‌டி, கிறிஸ்துவின் உயித்தெழுத‌ல் என்ப‌து ம‌ர‌ண‌த்தின் மீதான‌ ம‌க‌த்தான‌ வ‌ல்ல‌மைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இது அவ‌ர் ம‌ர‌ணத்தை ஜெயித்தார் என‌ அறிக்கையிடுகிற‌து. இயேசுவின் உயிர்த்தெழுத‌ல் ச‌ர்வ‌வ‌ல்ல‌மையுள்ள‌ தேவ‌னின் வெற்றிக்க‌ளிப்பான‌ செய‌ல் என‌ வேத‌ம் ந‌ம‌க்குச் சொல்கிற‌து. "தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக் கூடாதிருந்தது." (அப்போஸ்த‌ல‌ர் ந‌ட‌ப‌டிக‌ள் 2:24)

 
இஸ்லாமிய‌ரின் பார்வையின்படி, மேசியா இறுதியில் தான் உல‌கிற்கு வ‌ருவார் என்ப‌தாகும். அவ‌ர் மேலும் 40 ஆண்டுக‌ள் வாழ்ந்து, ம‌ரித்து, பின்பு அட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌டுவார். இது மேசியாவின் வாழ்க்கைக்கு ஒரு பொருத்த‌மான‌ முடிவு என‌ நீங்க‌ள் எண்ணுகிறீர்க‌ளா? அதாவ‌து அவ‌ர் ம‌ரித்து, க‌ல்ல‌றையிலேயே உயிர்த்தெழுதல் நாள் வ‌ரை செய‌ல‌ற்றுப்போய் இருப்பார் என‌ ந‌ம்புகிறீர்க‌ளா?

 
சிந்த‌னைக்கு இதோ ம‌ற்றும் ஓர் கேள்வி. உயித்தெழுத‌லின் நாளில் கிறிஸ்து ஒரு க‌ல்ல‌றையில் இருந்துகொண்டு, அந்த‌ உத‌விய‌ற்ற‌ நிலையில், "க‌ல்ல‌றையில் உள்ள‌ அனைவ‌ரும் எழும்பி வாருங்க‌ள்" என‌ அறைகூவ‌ல் விடுப்பார் என‌ச் சிந்திப்ப‌து அறிவுடைமையா? மேசியா இவ்வித‌ம் அறைகூவ‌ல் விடுக்கையில், உயிருட‌னும் ந‌ன்றாக‌வும் இருக்க‌த்தான் வேண்டும் என‌ எதிர்பார்ப்ப‌தே பொருத்த‌முள்ள‌தாய் இருக்கும் அல்ல‌வா? இயேசு இவ்வித‌ம் ம‌ரித்த‌வ‌ர்க‌ளை எழுப்ப‌ அறைகூவும்போது க‌ல்ல‌றையினுள் அல்ல‌, மாறாக‌ ப‌ர‌லோக‌த்தில் ஒரு மகா உன்ன‌த‌ நிலையில் இருப்பார் என‌ பைபிளில் நாம் காண்கிறோம்.

 
முடிவாக‌ இயேசுவின் இவ்வார்த்தைக‌ளை நோக்குவோம்: "நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்கு முரிய திறவு கோல்களை உடையவராயிருக்கிறேன்." (வெளிப்ப‌டுத்துத‌ல் 1:17-18)
 
 
முடிவுரை

 
தேவ‌ன் பாவ‌த்தை வெறுத்து அத‌ற்கான‌ த‌ண்ட‌னையையும் கொடுக்கிறார் என்பதைக் காண்பது நமக்கு அரிதல்ல. ஆனால், பாவத்தின் கொடிய விளைவுகளை அறிந்துகொள்ளாமல் அதன் உண்மையான அர்த்தத்தினை நாம் விளங்கிக்கொள்ள முடியாது. பாவ‌ம், ம‌ர‌ண‌த்திற்கு ந‌ம்மை வ‌ழிந்ட‌த்துகிற‌து. ஆனால் தேவ‌ன் ந‌ம‌க்கு வேத‌னை உண்ட‌க்க‌வோ அல்ல‌து ந‌ம்மை வ‌ருத்த‌ப்ப‌ட‌ வைக்க‌வோ விரும்ப‌வில்லை. அவ‌ர் க‌ருணை மிக்க‌வ‌ர்; நம் கண்ணீரைத் துடைத்து ந‌ம்மைத் தேற்றுப‌வ‌ர். அவ‌ர் முத‌லில் ம‌ர‌ண‌த்தை அழித்து, நிச்ச‌ய‌மாக‌வே இவைக‌ளைச் செய்வார்.
 
 
இவ்வுண்மைக‌ளை ந‌ம‌க்குரிய‌தாக்குத‌ல்

ஒருவேளை நாம், "மார்த்தாளைப் போன்று தேவ‌னின் அன்பையும் அர‌வ‌ணைப்பையும் எவ்வித‌ம் பெற்றுக்கொள்வ‌து?" என‌ விய‌ப்புட‌ன் சிந்திக்க‌லாம். த‌ன்னுடைய சோகத்தில், மார்த்தாள், அவ‌ளின் ச‌கோத‌ர‌னான‌ லாச‌ருவை குண‌மாக்க‌ இயேசு மிகவும் தாம‌த‌மாக‌ வ‌ந்தார் என‌த் த‌ன‌து வ‌ருத்த‌த்தை தெரிவித்தாள். இயேசு அவனை குணமாக்கி அவ‌ளின் அதிகமான அழுகையைத் த‌விர்த்திருக்க‌லாம். அவ‌ள் உணராமலிருந்தது என்ன‌வென்றால், இயேசு லாச‌ருவை வெறுமனே வியாதியினின்று மட்டுமே குணமாக்குபவர் மட்டுமல்ல‌, க‌ல்ல‌றையினின்றும் கூட எழுப்ப‌ வ‌ல்ல‌வ‌ர் என்பதை அவள் அறியவில்லை. அவ‌ர் அவ‌னை உயிரோடு எழுப்பிய‌தும், முன்பாக‌வே இயேசு அவ‌னை வியாதியினின்று எழுப்பியிருந்தால் கூட‌ அடையும் ம‌கிழ்ச்சியை விட அவள் அதிக‌ ஆழ‌மான‌ ம‌கிழ்வ‌டைந்தாள். இது ஒரு தனிப்பட்ட சொந்த‌ உண்மை ஆகிவிட்ட‌து.

 
ஒரு வகையில் மார்த்தாள் தாற்காலிகமாகவே ஆறுதல் அடைந்தாள் எனச் சொல்லலாம், ஏனெனில், லாசரு எல்லா மனிதர்களையும் போலவே முதிர்வயதில் மரணமடைந்தான். எனவே இந்த தாற்காலிகமான ஆறுதல் பின்பு வரும் ஒரு சிறப்புக்கு முன்னோடியாக இருக்கிறது எனக் கருதலாம், அதாவது, இந்த வாழ்க்கையில் உள்ளதைவிட அதிக ஆறுதலும் சமாதானமும். மார்த்தாளைப் போலவே நீங்களும் நானும் "இயேசுவே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார்" என விசுவாசிக்க வேண்டும். அவளைப் போலவே இந்த மேசியாவின் வாக்குறுதியில் நீங்களும் நித்திய ஆறுதல் அடைவீர்கள்:

 
"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்." (யோவான்: 11:25-26)

 
மார்த்தாள் த‌ன் இத‌ய‌பூர்வ‌மாக‌ இத‌ற்குப் பணிவான‌ "ஆம்" என்ற‌ ப‌திலை அளித்தாள். நீங்க‌ள் எப்ப‌டி, உங்க‌ள் ப‌தில் என்ன‌?

 
இயேசுவைக் குறித்த‌ உங்க‌ள் ப‌தில் சிறு வ‌ய‌துமுத‌ல் உங்கள் உள்ளத்தில் ஊட்டப்பட்ட‌ எதிர்ம‌றை சிந்த‌னைக‌ளால் சூழ‌ப்பட்டிருக்க‌லாம் - இதற்குச் சிலுவை ஒரு எடுத்துக்காட்டு. நீங்க‌ள் க‌டின‌மான‌ உண‌ர்வுக‌ளால் வேத‌னைப்ப‌ட்டு ம‌ர‌ண‌த்தைக் குறித்த‌ கோப‌ம் கூட‌ உங்க‌ளில் இருக்க‌லாம். கோப‌ம் என்ப‌து ம‌ர‌ண‌த்தைக் குறித்த‌ ந‌டைமுறையில் ஏற்ப‌டும் ஒரு சாதாரண‌ நிக‌ழ்வுதான் என்று விவ‌ர‌ம் அறிந்தோர்(நிபுணர்கள் – Experts) கூறுகின்ற‌ன‌ர். இயேசுவும் கூட லாசருவின் கல்லறையின் அருகே அழுதுகொண்டிருந்தவர்களை நோக்கும் போது, ம‌ர‌ண‌த்தின் மீது த‌ம் ப‌ரிசுத்த‌மான‌ கோப‌த்தினை வெளிப்ப‌டுத்தினார் என்ப‌து ஒரு குறிப்பிடத்தக்க விஷ‌ய‌ம்.

 
"அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து," என‌ யோவான் 11:33 ல் வாசிக்கிறோம்.

 
எனவே ந‌ம‌து கோப‌ம் ச‌ரியான‌து தான் என‌ப் புரிந்துகொள்ள வகை செய்யும் அதே வேளையில், இயேசுவை ம‌ர‌ண‌த்தின் மீது வெற்றி சிற‌ந்த‌வ‌ராக‌வும் நித்திய‌ வாழ்வினை அளிப்ப‌வ‌ராக‌வும் இருக்கிறார் என்பதை காணுவ‌தில் நாம் இட‌ற‌ல‌டைய‌க்கூடாது.

 
பாவ‌மே ம‌ர‌ண‌த்தின் ஆணிவேர் என‌ நாம் அறிந்திருக்கிறோம். இந்த‌ அடிப்படைப் பிர‌ச்சனைக்கு இயேசு கிறிஸ்துவே தீர்வு. யோவான் 1:29 மற்றும் ஆதியாகமம் 22:1-14 இல் நாம் அறிந்துகொண்டபடி, மேசியாவே "உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி". உங்க‌ள் பாவங்க‌ளை நீங்க‌ள் ஒப்புக்கொண்டு இயேசு ந‌ம‌க்காகவும், நமது பாவங்களுக்காகவும் ம‌ரித்தார் என‌ விசுவாசித்தால், தேவ‌னின் ம‌ன்னிப்பை அறிந்துகொள்வீர்க‌ள். மேசியாவின் ம‌ர‌ண‌த்தையும் உயிர்த்தெழுத‌லையும் விசுவாசித்தால் ம‌ட்டுமே நீங்க‌ள் நியாய‌த்தீர்ப்பின் ப‌ய‌ம் இல்லாம‌ல் ம‌ர‌ண‌த்தை எதிர்கொள்ள‌ முடியும்.
 
 
தியானிக்க‌ ஒரு நீதி மொழி

 
ஆர‌ம்ப‌த்தில் நாம் பார்த்த நீதி மொழி நினைவில் உள்ள‌தா?

 
"பரிமள தைலத்தைப் பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜநநநாளைப் பார்க்கிலும் மரணநாளும் நல்லது. விருந்து வீட்டுக்குப் போவதிலும் துக்க வீட்டுக்குப் போவது நலம்;" (பிர‌ச‌ங்கி 7:1,2)

 
இந்தப் நீதி மொழி அல்லது வசனம் நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் ம‌ர‌ண‌ம் என்கின்ற‌ த‌லைப்புக்கு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌து. விலையுய‌ர்ந்த‌ வாச‌னைப் பொருளுக்கும் ம‌ர‌ண‌த்திற்கும் தொட‌ர்பு உண்டா? ப‌ழ‌ங்கால‌த்தில், ஏன் இன்றும் கூட‌, ம‌க்க‌ள் சில‌ நேர‌ங்க‌ளில், மரித்த உடலின் மீது அதைப் புதைப்பதற்கு முன் விலையுய‌ர்ந்த‌ வாச‌னைப் பொருட்க‌ளைத் தெளிக்கிறார்க‌ள். ஆனால் இந்த‌ ந‌றும‌ண‌ம் எவ்வ‌ள‌வு நேர‌ம் நீடிக்கும்? - அது அழுகும் வ‌ரையிலும், துர்நாற்ற‌ம் நறுமணத்தை மேற்கொள்ளும் வ‌ரையிலும் தானே?

 
ஒரு தேவ‌ ம‌னித‌ன் (நல்ல மனிதன் ) புதைக்க‌ப்ப‌டும் போது, அவ‌ன‌து புக‌ழ் அவ‌னைச் சுற்றி இருக்கிற‌து. அது விலையுய‌ர்ந்த‌ ந‌றும‌ண‌ தைல‌த்தைவிட‌ அதிக‌ நேர‌ம் நீடிக்கிற‌து. இது எவ்வாறு நாம் மேற்க‌ண்ட‌ ப‌ழ‌மொழியின் இர‌ண்டாவ‌து பாக‌த்தைப் புரிந்து கொள்ள‌ உத‌வுகிற‌து? சங்கீதம் 116:15 ல் நாம் வாசிக்கிறோம், "கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது." நீதிமொழிகள் 14:32 சொல்கிறது: "துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்." ஏசாயா தீர்க்கதரிசியும் இதேபோன்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்: "நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்…. மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடே கூட எழுந்திருப்பார்கள்;…"ஏசாயா 57:2; 26:19

 
நீதிமான் மரிக்கும் நாள் அவனது பிறந்த நாளைக்காட்டிலும் நல்லது, ஏனெனில் அவன் மேலும் சிறந்த இடத்துக்கே போகிறான். அங்கு " ......இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின..." (வெளிப்படுத்துதல் 21:4) " நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை." நீதிமொழிகள் 12:28 . இதே போன்று அப்போஸ்தலனாகிய பவுலும் விவரிக்கிறார்:

 
"பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்….." (2 கொரிந்தியர் 5:1-6) மேலும் அவர்,"…. தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்…" (2 கொரிந்தியர் 5:1-6; பிலிப்பியர் 1:21-24)

 
நீதிமொழிக‌ளில் சால‌மோன் கூறுவதை மேலும் புரிந்துகொள்ள‌ ந‌ம் ஆண்ட‌வ‌ராகிய‌ இயேசுவின் எடுத்துக்காட்டிலேயே நாம் காண‌லாம். அவ‌ர் ம‌ரிப்ப‌த‌ற்குச் ச‌ற்று முன்பு அவ‌ர‌து ம‌ர‌ண‌மே ம‌கிமையின் வ‌ழி என‌ விள‌க்கினார், "அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்." யோவான் 12:23,24

 
இயேசு, சிலுவையின் மீது ஒரு அவ‌மான‌மான‌ சாவைச் ச‌ந்திக்க‌ நேர்ந்தாலும், பின்பு வ‌ர‌ப்போகும் ம‌கிழ்ச்சியினை அவர் அறிந்திருந்ததினால் அவரால் அதை எதிர்கொள்ள முடிந்தது.(எபிரேயர் 12:2) கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்குப் பின் அவர் எதிர்பார்த்த‌ மகிழ்ச்சியான தருணம் எது? "இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து" என எபிரேயர் 10:12 ல் வாசிக்கிறோம். இதன் மூலம், கிறிஸ்துவின் மரணம் அவர் மகிமையில் உயர்த்தப்பட வழி வகுத்தது என்பது தெளிவு.

 
இயேசு என்கின்ற‌ மீட்பர் "மரணத்திற்கும் பாதாளத்திற்குமான திறவுகோல்களை உடையவராய் இருக்கிறார்" என்று நாம் அறிகிறோம். எனவே, அவரை நம்புகின்ற யாவருக்கும் மரணம் என்பது நித்திய வாழ்வுக்கு ஒரு படிக்கல் ஆகும். இது இயேசுவின் கீழ்கண்ட வார்த்தைகளினால் ஊர்ஜிதமாகிறது.

 
"...பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்." …"குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்திய ஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்." (யோவான் 5:28,29 ;6:40 )

மேலும் அதிகபடியான விவரங்கள் அறிய தொடர்பு கொள்ளவும்


 
 
பின் குறிப்புக்கள்

 
1. இஸ்லாமிய‌ர்கள் தினமும் மரணம் குறித்து தியானிக்க வேண்டும் என நம்புகிறார்கள்; ஏனெனில், மரணம் குறித்த பயம் அவர்களை நல்வழிப்படுத்தும் என்பதினாலேயே. "Sakrat Nama: The Agony of Death" என்ற புத்தகத்தில், அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்: "தீர்க்கதரிசிகளும் கூட இத்தருணத்தில் பயம் கொள்கிறார்கள். மரணத்தின் நாள் எத்துனை கொடியது! ஆதாமும் நோவாவும் மரண‌ பயத்தினால் இரவும் பகலும் அழுதார்கள். யோனா இதுகுறித்து பெருமூச்சுவிட்டு அழுதார், ஏனெனில் இதை விடக் கொடிதான நேரம் உலகில் இல்லை என அவர் உணர்ந்தார்........ மரணம் தவிர்க்க முடியாதது; நமது இதயம் அதின் பயத்தினால் நிரம்பியுள்ளது."(பக்கம் 2,3)

 
2. தேவனின் கோபம் கொடியது முழுத் தலைமுறையையும் அழிக்க வல்லது; அனால் அனைத்து மனிதரையும் அவர் அழிப்பாரா? தேவன் மல்கியா தீர்க்கதரிசி மூலம் பேசி இவ்விதம் தெளிவுபடுத்துகிறார்: "நான் கர்த்தர் நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை. நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; " (மல்கியா 3:6,7). இக்காரியத்தின் உண்மை என்னவெனில், தேவன் பாவத்துக்கு எதிரான தம் கோபத்தை பொறுமையும் கருணையும் இன்றி வெளிப்படுத்துவாரானால், அவர் பூமியில் ஒருவரையும் விடமாட்டார் என்பதே. பைபிள் இதித்தெளிவாகக் கூறுகிறது - குர்‍ஆனும் கூட. (ஆதியாகமம் 6:5..8,செப்ப‌னியா 1:18, ஏசாயா 57:16, குர்‍ஆன் 16:61). இவ்வுலகின் சில சமுதாயங்கள் இன்று எய்ட்ஸ் நோயினால் பிடிக்கப்பட்டு தலைமுறையே அழியும் என்ற நிலையில் இருக்கிறார்கள். நாம் தேவனின் வல்லமையான கரங்களுக்குள் நம்மை தாழ்த்தி அடங்கியிருக்கிறோமா?

 
3. இஸ்லாமிய‌ர்க‌ள் இற‌ந்த‌வ‌ர்க‌ளைப் புதைக்கும்போது செய்யும் புனித்ச்சடங்குகளில் ஆச்சாரமான சுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இறந்த சடலத்தை சுத்தீகரிப்பதில் நீடிய வழிமுறைகள் வைத்திருக்கிறார்கள் (ghusl). அவர்கள் இறந்தவர்களை உயிரோடு இருப்ப‌வ‌ர்க‌ளிலிருந்து எதுவும் மாசு படாத‌ப‌டி பாதுகாக்கிறார்க‌ள். (உதார‌ண‌மாக: தங்க‌ளின் மாதந்திர நாட்களில் இருக்கும் பெண்கள்). இது குறித்து மோசே கொடுத்த ஆணைகளை நாம் நன்கு ஆராய்வோமானால், இஸ்லாமியரின் நடைமுறைகள் தேவன் ஆகமங்களில் கொடுத்த விவரங்களுக்கு முரணாக இருப்பதைக் காணலாம். ஆகமங்களின்படி, மாசுபடும் பாதிப்பு (தீட்டு) என்ப‌து உயிரோடு இருப்ப‌வ‌ர்க‌ளுக்குத் தானேய‌ன்றி, இற‌ந்த‌வ‌ர்க‌ளுக்கு அல்ல‌. மாசுப‌டுதல் (தீட்டு) இற‌ந்த‌வ‌ர்க‌ளினின்று உயிரோடிருப்ப‌வ‌ர்க‌ளுக்கு வருமேயன்றி எதிர் வழியில் அல்ல. (எண்ணாகமம் 19). சுத்தீகரிப்பது உயிரோடிருப்பவர்களுக்கே செய்திடல் வேண்டும், இறந்தவர்களுக்கல்ல

 
4. பரலோகத்தில் விசுவாசிகளின் நிலை பற்றி குரான் கூறுவது:"முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான்." என்பதே. (சுரா 44:56)

5. நமக்குள் இந்த‌க் கேள்வி எழுகிற‌து: "நற்கிரியைக‌ள், உண்மையான ஆவிக்குரிய‌ காரிய‌ங்களுடன் எவ்வித‌த்தில் தொட‌ர்பு கொண்டுள்ள‌து?". யூத‌த் த‌லைவ‌ர்க‌ள் இயேசுவிட‌மிருந்து அறிந்துகொள்ளும்ப‌டி முக்கிய‌மாக‌க்கேட்ட‌து இதுதான்: "தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும்?" இந்த‌க் கேள்வியில் "கிரியைக‌ள்" என்ற‌ வார்த்தைக்கு அழுத்த‌ம் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ளதை நாம் க‌வ‌னிக்க‌லாம். யூத மார்க்கத்தில் தேவனைப் பிரியப்படுத்த ஆச்சாரமான நல்ல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளதில் வியப்பில்லை. ஆனால் இயேசு அவ‌ர்க‌ளைத் த‌ம் வார்த்தைக‌ளினால் விய‌ப்பிலாழ்த்தினார் :"அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது" (யோவான் 6:28,29). மீட்ப‌ரின் மீது மெய்யான விசுவாச‌ம் வைப்ப‌து தேவ‌னோடான‌ நித்திய‌ வாழ்க்கையினை அதிக‌ நிச்ச‌ய‌மாக்குகிற‌து. தேவ‌னின் மீட்ப‌ரை விசுவாசித்த‌லே இ‌க்காரிய‌த்தில் முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌து. இது ப‌ரிசேயர் செய்யச் சம்மதிக்காத‌ ஒன்று. மேலும் ஒருவ‌ன் உண்மை விசுவாச‌த்துட‌ன் இருந்தால், அவ‌னுடைய‌ செயல்க‌ளினால் அது வெளிப்படும்.(யக்கோபு 2:17)

 
யூதத் தலைவர்கள் வேதத்தை உண்மையுடன் பின்பற்றி இருப்பார்களேயானால், "தேவனுக்கு அபராதம் செலுத்தித் தங்களைத் தாங்க‌ளே மரணத்தினின்று இரட்சிக்க முடியாது" என அறிந்து கொண்டிருப்பார்கள். மீட்பு எளிதில் வருவதில்லை, ஏனெனில், ஒருவரும் ஒருபோதும் காலங்காலமாக கல்லறையையே காணாதபடி வாழ்வதற்குப் போதுமான அளவுக்கு மீட்கும் பொருளைச் செலுத்தமுடியாது. (ச‌ங்கீதம் 49:7,8). ஆனால் தேவன் நம்மை நிச்சயம் மீட்டார்.(வசனம் 15) அவர் அவரது மீட்பரான மேசியாவை பலி ஆடாய், மீட்கும் பொருளாய்க் கொடுத்தார். இதுதான் தேவனுடைய மீட்பின் திட்டம் என இயேசு உறுதி செய்தார்."அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யுவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார்" என இயேசு சொன்னார்.(மாற்கு 10:45).

கீழ்க்காணும் தொடுப்பில் உள்ள கட்டுரையைப் படித்து அபிரகாமுக்கு தேவன் முன்பொரு காலத்தில் வாக்குப்பண்ணின ஆட்டுக்குட்டியாக‌ எவ்விதம் இயேசு பயன்பட்டார் என அறிந்து கொள்ளுங்கள்.

 
 
சங்கீதம்:49, வசனங்கள் 1 முதல் 15 வரை (மரணத்தின் பொருள் எனும் புதிரைப் பற்றி ஆராய ஒரு தியானம்)

ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள். பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள். என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும். என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்.

 
என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளுந் தீங்குநாட்களில் நான் பயப்படவேண்டியதென்ன? தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற, ஒருவனாவது தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங் கூடாதே. அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒருபோதும் முடியாது. ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான். தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம், அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள். ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.

 
இதுதான் அவர்கள் வழி; இதுதான் அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள்.

ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக் கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.

 
ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். 


ரோலண்ட் கிளார்க் அவர்களின் இதர கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்