ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 28 மார்ச், 2008

ஏகத்துவத்திற்கு பதில்: உவமைக்கு உண்மைக்கும் வித்தியாசம் அறியா அறிஞர்கள் : பாகம் - 2

 
ஏகத்துவத்திற்கு பதில்

உவமைக்கு உண்மைக்கும் வித்தியாசம் அறியா அறிஞர்கள் : பாகம் - 2

எசேக்கியேல் 23 மறுவிசாரணை

முன்னுரை: சமீப காலமாக இஸ்லாமியர்கள் மிகவும் அதிகமாக கோபமாக இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்றால், அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு சும்மா இருக்காமல், மற்றவர்கள் பதில்கள் தருவது தான். மட்டுமல்ல, முகமதுவின் வாழ்க்கையை மற்றவர்கள் கொஞ்சம் புரட்டி கேள்விகள் கேட்டாலே போதும், அப்படியே கண்கள் சிவப்பாக மாறிவிடுகின்றது. முகமதுவின் மற்றும் அல்லாவின் ஆபாச விவரங்கள் எங்கே வெளியே தெரிந்துவிடும் என்று, பைபிளில் உள்ள சில பழைய ஏற்பாட்டு வசனங்களை எடுத்துக்கொண்டு இது ஆபாசம், இது சரியா? இது வேதமா? என்று கேள்விகள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக, எசேக்கியேல் 23ம் அதிகாரத்தை குறிப்பிட்டு இது ஆபாசம் என்று சொன்னார்கள், நான் அதற்கு பதில் கொடுத்தேன் .

ஏகத்துவத்திற்கு பதில்: எசேக்கியேல் 23 ஆபாசமா? இஸ்லாம் ஆபாசமா? பாகம் - 1

நான் இந்த பதிலில், தேவன் சமாரியா மற்றும் எருசலேம் என்ற இரண்டு நாடுகளை இரண்டு சகோதரிகளாக தேவன் பாவித்து, இவர்கள் தன்னைவிட்டு விக்கிரகங்களை வணங்குவதை வேசித்தனத்திற்கு ஒப்பிட்டு இவர்களுக்கு செய்தியை கொடுத்தார், இது உண்மையாக நடந்த கதை அல்ல, இது ஒரு உவமை, அதாவது நாடுகளை பெண்களாக கருதி இவர்களின் தீய செயல்களுக்கு தண்டனை வழங்கும் வண்ணமாக தேவன் வசனத்தை சொல்லியுள்ளார் என்றேன்.

இதற்கு ஏகத்துவ தள சகோதரர் இப்ராஹிம் அவர்கள்

"இல்லை இல்லை இது உவமை இல்லை, இதில் யாரையும் ஒப்பிடவில்லை, வசனங்களில் உவமை என்ற வார்த்தை வருகிறதா? பாருங்கள்"

என்று மறு கேள்வி கேட்டுள்ளார்.

[ஒரு விவரத்தைச் சொல்லும் போது, அதில் "உவமை" என்ற வார்த்தை வந்தால் தான் இவர் "அதில் சொல்லப்பட்டது உவமை" என்று ஏற்றுக்கொள்வாராம். இல்லையானால், அது உவமை இல்லை என்று அடித்துச் சொல்வாராம். என்னே அறிவு! என்னே புலமை! வாழ்க இப்ராஹிம்! வாழ்க இவரது புலமை!]

ஆனால், இதே கட்டுரையில் "முஸ்லீம்கள் சொர்க்கத்திற்கு வந்தால், மிகவும் அழகான திடமான மார்ப்புகள் உள்ள பெண்களை தருவேன் என்று அல்லா சொன்ன வசனத்தைப் பற்றி நான் குறிப்பிட்டு இருந்தேன்" அதைப்பற்றி இவர் மூச்சு விடவில்லை, ஏன்? ஏனென்றால், அல்லா இவர்களுக்கு இப்படிப்பட்ட பெண்களை சொர்க்கத்தில் தருவது, உவமை இல்லை, பொய் இல்லை, அது உண்மை என்று இவருக்கு தெரியும். அதனால், அதைப்பற்றி ஒன்றும் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்.

சரி, இந்த கட்டுரையில்:

ஏகத்துவம் சொன்ன விவரம் சரியா?

எசேக்கியேல் 23ம் அதிகாரத்தில் இரண்டு நாடுகளை இரண்டு சகோதரிகளாக‌ தேவன் ஒப்பிடுகிறாரா இல்லையா?

இஸ்லாமியர்களின் ஆராய்ச்சியின் முடிவு சரியா?

இப்ராஹிம் அவர்களுக்கு உண்மைக்கும் உவமைக்கும் வித்தியாசம் தெரியுமா? இல்லையா? வேண்டுமென்றே இவர் இப்படி மாற்றிச் சொல்கிறாரா?


போன்றவைகளைக் காண்போம்.

இதோ ஏகத்துவம் இப்ராஹிம் அவர்கள் எழுதிய வரிகள்:



இவர்கள் நம்மவர்களுக்கு அளித்த பதிலின் லட்சனம்

அடுத்து இவரின் பதிலின் லட்சனத்திற்கு வருவோம்.

நாம் இதுவரை வெளியிட்டிருந்த இரண்டு கட்டுரைகளில் இரண்டாவதாக எழுதிய 'ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்' என்ற கட்டுரைக்கு என்ன பதில் எழுதி இருந்தார்கள்? எவரோ ஒருவர் எடுத்த வாந்தியை அப்படியே திருப்பி எடுத்துள்ளார்கள். சரி, யாருடைய பதிலாக இருந்தாலும் ஒழுங்கான -அறிவுப்பூர்வமம?ன பதிலாக இருந்திருக்க வேண்டாமா?

எசேக்கியேல்- 23ம் அதிகாரம் முழுவதையும் படித்துப் பாருங்கள். நீங்கள் எழுதியது போல் 'எந்த இடத்தில் இதற்கு இது உவமை' என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்களாகவே ஒரு ஆபாசமான கதைக்கு இப்படி ஒரு விளக்கம் அளித்துக்கொண்டால் அதெல்லாம் விளக்கங்களாகிவிடுமா? அப்படிஎன்றால் இதேபோல் எத்தனையோ ஆபாசக்கதைகள் எத்தனையோ ஆபாசப்புத்தகங்களிலும் தான் வருகிறது. அதற்கும் ஏதேனும் உவமைக் காரணங்கள் இருக்குமோ?

ஏசேக்கியேல் 23ம் அதிகாரத்தின் தொடக்கத்தில் மிக மிக மிகத் தெளிவாக

'கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலே வேசித்தனம் பண்ணினார்கள். தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள்... என்றே தொடங்குகிறது. இதில் எங்கய்யா உவமை கண்டுபிடித்தீர்கள்?
.......
.......
மிக் பச்சையாகவே ஒரு ஆபாசக்கதையை சொல்லப்பட்டுள்ளது. இங்கே எந்த இடத்தில் உவமை என்று வருகின்றது?
......
......
இது தான் இவர்களின் பதிலின் லட்சனம்.


Source: http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_19.html

1. எசேக்கியேல் 23ம் அதிகாரத்தில் வரும் இரண்டு சகோதரிகள் என்பது இரண்டு நாடுகள் ஆகும்.

நம் இஸ்லாமிய நண்பர் என்ன சொல்கிறார் என்றால், இந்த எசேக்கியேல் அதிகாரத்தில் சொல்லப்பட்ட நிகழ்ச்சி, உவமை கிடையாதாம், அதாவது இதில் வரும் இரண்டு சகோதரிகள் சமாரியாவிற்கும், எருசலேமுக்கும் ஒப்பிடப்படவில்லையாம். இவருக்கு "உவமை" என்ற வார்த்தை இருக்கனுமாம்.


எசேக்கியேல் 23:1 – 2:

கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள்.

இந்த வசனங்களில் வரும் "ஒரே தாய்" என்பது ஆபிரகாமின் மனைவி சாராளை குறிக்கும். அதாவது 12 வம்சங்கள் அனைத்தும் ஆபிரகாம் சாராள் என்ற ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர்கள். இந்த தாய்க்கு பிறந்தவர்கள் இரண்டு குமாரத்திகள் என்றால் இரு நாடுகள், முதலில் இஸ்ரவேல் என்று ஒரே நாடாக‌ இருந்த 12 வம்சங்கள், இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டது, அதாவது 12 வம்சங்களில் 10 வம்சங்கள் இஸ்ரவேல் என்றும், 2 வம்சங்கள் யூதா என்றும் இரு நாடுகளாக சாலொமோனின் குமாரனுடைய காலத்தில் பிரிந்தது (1 இராஜாக்கள் 12ம் அதிகாரம்). சமாரியாவை தலைநகரமாகக் கொண்டு "இஸ்ரவேல் நாடும்", எருசலேமை தலைநகரமாகக் கொண்டு "யூதா நாடு" என்று இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது.


எசேக்கியேல் 23:4

அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள், அவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்; இவைகளே அவர்களுடைய பெயர்கள்; அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம்.

மூத்தவளின் பெயர் அகோலாள் : சமாரியா அதாவது இஸ்ரவேல் நாடு, இந்த நாட்டை மூத்தவள் என்று தேவன் சொல்கிறார், ஏனென்றால், இரு நாடுகளாக பிரிக்கப்படாமல் இருந்த போது, இஸ்ரவேல் என்று ஒரு நாடாகத்தான் இருந்தது, மற்றும் இந்த புதிய இஸ்ரவேலில் 10 வம்சங்கள் உள்ளன, மற்றும் அதிகமான நிலப்பரப்பு கொண்டது. அகோலாள் என்றால் "தன் வீடு அல்லது கூடாரம்" என்று பொருள். அதாவது, தேவனின் உடன்படிக்கை பெட்டி இருந்த இருந்தது இஸ்ரவேல் நாட்டில்.


4. Aholah--that is, "Her tent" (put for worship, as the first worship of God in Israel was in a tent or tabernacle), as contrasted with Aholibah, that is, "My tent in her." Source: Search Gods Word Commentary

அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள்: இஸ்ரவேலிலிருந்து யூதா என்ற சிறிய நாடு இரண்டு வம்சங்களோடு தனியாக பிரிந்தது, அதனால், இளையவள் என்று தேவன் சொல்கிறார். அகோலிபாள் என்றால், என் கூடாரம் அவளிடத்தில் உண்டு என்றுப் பொருள். அதாவது, எருசலேமில் தேவனுடைய ஆலையம் சாலொமோனால் கட்டப்பட்டு இருந்தது, அது இப்போது யூதா நாட்டின் தலைநகரமானது.

அவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்; இந்த இரு நாடுகளோடும் மக்களோடும் தேவன் உடன்படிக்கை செய்துள்ளார், இவர்கள் தனக்கு சொந்தமான நாடுகள் என்று தேவன் சொல்கிறார், இந்த இரு நாடுகளில் உள்ள மக்களும் தன் பிள்ளைகள் என்று தேவன் சொல்கிறார்.

[இப்போது இஸ்லாமியர்களுக்கே உரித்தான முறையில் "தேவன் எப்படி ஒரு நாட்டை திருமணம் செய்துக்கொள்ளமுடியும் என்று கேள்வி கேட்காதீர்கள். அவர் எப்படி மக்களை பெறமுடியும் என்று கேள்வி கேட்காதீர்கள். எல்லாரும் சிரிப்பார்கள். "நாம் இந்தியர்கள், ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள்" என்றுச் சொன்னால், எப்படி இது சாத்தியமாகும்? நமக்கு தனித்தனி தந்தை இருக்கிறார்கள் அல்லவா? எப்படி இந்தியர்கள் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் என்றுக் கேட்டு, உங்கள் அறியாமையை உலகம் அறியும் படி செய்யவேண்டாம். மற்றும் இந்த வசனத்தில் தேவன் இந்த இரு சகோதரிகளை(நாடுகள்) தன் மனைவி அல்லது தன்னுடையவர்கள் என்றுச் சொல்வதால், "பார்த்தீர்களா, பைபிளில் உள்ள தேவனும் இரண்டு மனைவிகளை உடையவர் என்று சொல்கிறார், இப்படி இருந்தும், முஸ்லீம்கள் நான்கு திருமணம் செய்துக்கொள்ள அல்லா சொன்னதை போய் உலகம் குற்றம் பிடிக்கிறதே" என்று லாஜிக்காக பேசவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த வசனம் பற்றி ஜாகிர் நாயக் அவர்களுக்கு தெரிந்தால், போதும் இதையும் தன் லாஜிக்கான பேச்சில் ஒரு பாயிண்டாக சேர்த்துக்கொள்வார்.]

தேவன் தனக்கும் மக்களுக்கும் இடையே இருக்கும் உறவு முறையை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துகிறார், சில நேரங்களில் எஜமான் வேலைக்காரன் என்ற முறையில் சில உதாரணங்கள் சொல்வார், தான் ஒரு தோட்டக்காரன், தன் மக்கள் திராட்சை கொடிகள் என்றும், தான் ஒரு மேய்ப்பன் என்றும், மக்கள் தன் ஆடுகள் என்றும் சொல்லுவார், சில நேரங்கள் தான் கணவனாகவும், மக்கள் அனைவரும் மனைவியாகவும் சொல்லுவார், சில இடங்களில், நிலத்தை குத்தகைக்கு விட்டுச்சென்ற எஜமானனாகவும், குத்தகைக்கு பெற்றவர்கள் மக்களாகவும் கருதி பேசுவார். இதனை நாம் பைபிளில் பரவலாக காணலாம்.

அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம்: இப்போது தான் மிகவும் முக்கியமான வார்த்தைகளுக்கு நாம் வந்துள்ளோம். அதாவது தான் சொன்ன இரு சகோதரிகள் இரு நாடுகளின் தலை நகரங்கள் என்று மிகவும் தெளிவாக, பாமர மக்களுக்கும் புரியும் படி சொல்லியுள்ளார்.

இப்போது சொல்லுங்கள், இப்ராஹிம் அவர்களே, இது இரு நாடுகளின் விழுந்துவிட்ட நிலையை விளக்கிய விவரங்களா அல்லது உண்மையில் இரு பெண்கள் இப்படி வேசித்தனம் செய்த நிகழ்ச்சியா?

ஏதாவது எழுதும் போது, நாம் எழுதும் வசனங்களில் உள்ள பின்னனி என்ன என்று தெரிந்துக்கொண்டு எழுதவேண்டும். இந்த நிகழ்ச்சியில் இரு நாடுகளின் தீய வழிகளைப்பற்றிச் சொல்லப்பட்டுள்ளதா? இல்லையா?

எசேக்கியேல் 23:36
பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ அகோலாளையும் அகோலிபாளையும் குறித்து வழக்காடமனதானால், அவர்களுடைய அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டு.

இந்த வசனத்தில் எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு சொல்கிறார், நீ அவர்களுக்காக என்னோடு வழக்காட விரும்பினால், முதலில் இந்த இரு நாடுகளுக்கும் தன் தன் அருவருப்புக்களை தெரியப்படுத்து, அவர்களின் தவறை சுட்டிக்காட்டு, திருந்தும்படி சொல் என்கிறார். பொதுவாக, தீர்க்கதரிசிகள் மூலமாக மிகவும் கடுமையான தண்டனைகளை தேவன் சொல்லும் போது, அவர்கள் தங்கள் நாட்டிற்காக வேண்டிக்கொள்வார்கள், அப்படி வழக்காட வேண்டுமானால், முதலில் அவர்களை திருந்தச்சொல் என்று தேவன் சொல்கிறார்.

எசேக்கியேல் 23 : 37 – 39
அவர்கள் விபசாரம்பண்ணினார்கள்; அவர்கள் கைகளில் இரத்தமும் இருக்கிறது; அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களோடே விபசாரம்பண்ணி, தாங்கள் எனக்குப் பெற்ற தங்கள் பிள்ளைகளையும் அவைகளுக்கு இரையாகத் தீக்கடக்கப்பண்ணினார்கள்.

அன்றியும் அவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்தை அந்நாளிலேதானே தீட்டுப்படுத்தி, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.

அவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் நரகலான விக்கிரகங்களுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என் பரிசுத்தஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்நாளில்தானே அதற்குள் பிரவேசித்தார்கள்; இதோ, என் ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள்.

அவர்கள் தங்கள் மக்களை விக்கிரகங்களுக்கு பலியிட்டு, தீக்கடக்க செய்து தங்கள் பிள்ளைகளை கொன்றார்கள் என்று தேவன் குற்றம் சாட்டுகிறார். பிள்ளைகளை பலியிடுவது தேவன் விரும்புவது இல்லை. தேவனின் ஆலயத்திலும் இப்படி செய்தார்கள் என்றுச் சொல்கிறார்,

இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டது இரண்டு விதமான குற்றங்கள், அதாவது மற்ற நாடுகளோடு நட்புறவு வைத்துக்கொண்டது, அதே நேரத்தில் தேவனை மறந்து விக்கிரகங்களுக்கு ஆராதனை செய்து பிள்ளைகளை கொன்றது.

Outline of Ezekiel 23


A history of the apostacy of God's people from him, and the aggravation thereof.

- In this parable, Samaria and Israel bbear the name Aholah, "her own tabernacle;" because the places of worship those kingdoms had, were of their own devising. Jerusalem and Judah bear the name of Aholibah, "my tabernacle is in her," because their temple was the place which God himself had chosen, to put his name there. The language and figures are according to those times. Will not such humbling representations of nature keep open perpetual repentance and sorrow in the soul, hiding pride from our eyes, and taking us from self-righteousness? Will it not also prompt the soul to look to God continually for grace, that by his Holy Spirit we may mortify the deeds of the body, and live in holy conversation and godliness?

Source :
Matthew Henry's Commentary

எசேக்கியேலில் 7 உவமைகள்:

நம் ஏகத்துவ தள இப்ராஹிம் அவர்கள், "இது உவமை இல்லை" என்று சாதிக்கிறார், ஆனால், எசேக்கியேல் 15ம் அதிகாரத்திலிருந்து 24ம் அதிகாரம் வரை, தேவன் 7 வகையான உவமைகளால் மக்களை எச்சரித்துள்ளார், திருந்தவில்லையானால், தண்டனை நிச்சயம் என்று எச்சரித்துள்ளார். இந்த உவமைகளில் 6வது தான் 23ம் அதிகாரத்தில் உள்ளது. இந்த ஒவ்வொரு உவமையை பயன்படுத்தி தேவன் மக்களை எச்சரிக்க பல வசனங்களை பயன்படுத்தியுள்ளார். இந்த உவமைகள் ஒருவரியில் சொல்லப்பட்ட உவமைகள் அல்ல, பல வசனங்கள் மூலமாக சொல்லப்பட்டுள்ளது.

உவமை 1: இஸ்ரவேல் என்னும் திராட்சைக்கொடி பிரயோஜனமற்றது (எசே 15:1-8)
Parable One -- Israel the Vine is Useless: 15:1-8

உவமை 2: இஸ்ரவேல் கணவனுக்கு துரோகம் செய்த மனைவி (எசே 16:1-63)
Parable Two-- Israel the Adulterous Wife: 16:1-63

உவமை 3: இரண்டு கழுகுகள் (நேபுகாத்நேச்சர் மற்றும் பார்வோன் அரசன்) (எசே 17:1-24)
Parable Three--Two Eagles (Nebuchadnezzar & Pharaoh), the Rise of the First and the Fall of the Second: 17:1-24

உவமை 4: மிகவும் வலிமையுள்ளதாக நினைத்த இரண்டு சிங்கங்கள்: (எசே 19:1-9)
Parable Four--Two Lions Who Thought Themselves Strong (Jehoahaz & Jehoiakim): 19:1-9

உவமை 5: காய்ந்து மடிந்துவிட்ட திராட்சைக்கொடி (எசே 19:10-14)
Parable Five--The Withered Vine (Zedekiah): 19:10-14

உவமை 6: வேசித்தனம் செய்த சமாரியா எருசலேம் என்னும் இரண்டு சகோதரிகள், மற்றும் அவர்களுக்கு வந்த தண்டனை. எருசலேமை பாபிலோன் நாடும், சமாரியாவை அசீரியா நாடும் மேற்கொள்ளும்படி செய்வேன் என்று தணடனைகள் பிரகடனம். (எசே 23:1-49)
Parable Six--As Two Sisters Lusted ( Samaria & Jerusalem ), So Will God Give the Second over to Babylon as He Did the First to Assyria: 23:1-49

உவமை 7: நகரம் பானையில் கொதிக்கும் தண்ணீரைப்போல தத்தளிக்கிறது
Parable Seven--The City Is in Turmoil like a Boiling Pot: 24:1-14

From Bible.org:
எசேக்கியேல் 12ம் அதிகாரத்திலிருந்து 24ம் அதிகாரம் வரை, தேவன் இந்த தீர்க்கதரிசி மூலமாக 5 அடையாளங்கள், 6 செய்திகள், மற்றும் 7 உவமைகள் மூலமாக தான் இஸ்ரவேல் மீது கொண்டுவரப்போகும் நியாயத்தீர்ப்பை விவரிக்கிறார்.


3. Prophecies of Judgment through Five Signs, Six Sermons, and Seven Parables: Through an interchange of signs, sermons, and parables, the Lord has Ezekiel proclaim the varied nature of the coming judgment upon Jerusalem from Babylon because of the nation's sin 12:1--24:27

a. Sign One--Luggage through the hole in the Wall to Symbolize the Coming Exile: 12:1-6

b. Sign Two--Trembling While Eating to Show Impending Judgment: 12:17-18

c. Message One--The Lord Promises to Judge False Prophets for Their Lies: 13:1-23

d. Message Two--The Lord Will Judge the Elders for Their Idolatry: 14:1-11

e. Parable One-- Israel the Vine is Useless: 15:1-8

f. Parable Two-- Israel the Adulterous Wife: 16:1-63

g. Parable Three--Two Eagles (Nebuchadnezzar & Pharaoh), the Rise of the First and the Fall of the Second: 17:1-24

h. Message Three--Each Person Will Be Judged on the Basis of His Own Life, Not for the Sins of their Fathers:4 18:1-32

i. Parable Four--Two Lions Who Thought Themselves Strong (Jehoahaz & Jehoiakim): 19:1-9

j. Parable Five--The Withered Vine (Zedekiah): 19:10-14

k. Message Four--A Review of Israel's Sinful History From Egypt to the Present: 20:1-44

l. Sign Three--Coming Judgment Is Pictured through Ezekiel's Sword and Groaning: 21:1-7

m. Message Five--A Sharpened Sword Will Certainly Come to the Nation: 21:8-17

n. Sign Four--A Signpost Which Shows Babylon the Way to Judah : 21:18-32

o. Message Six--Because of the Sin of the People in the City, Refining Judgment Will Come: 22:1-31

p. Parable Six--As Two Sisters Lusted ( Samaria & Jerusalem ), So Will God Give the Second over to Babylon as He Did the First to Assyria: 23:1-49

q. Parable Seven--The City Is in Turmoil like a Boiling Pot: 24:1-14

r. Sign Five--Ezekiel Is to Be Silent with the Death of His Wife to Foreshadow the Loss of the People in the City with the Coming Judgment: 24:15-27

Source:
Bible.Org Commentary

இதுவரை படித்தவர்கள் சிந்திக்கட்டும்: இது உண்மையாக நடந்த சம்பவமா அல்லது நாடுகளை குறிப்பிட்டு சொல்லப்பட்ட செய்தியா? உவமை என்ற வார்த்தை வந்தால் தான் அது ஒப்பிட்டு சொல்வது ஆகுமா? "நாம் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள்" என்றுச் சொன்னால், உண்மையான நம் தாயை குறிக்குமா? அல்லது நாட்டை குறிக்குமா? இதில் உவமை என்ற வார்த்தை வந்தால் தான் நாட்டை குறிக்கும் என்று யாராவது சொல்லமுடியுமா?

இவ்வளவு விளக்கியும் "இல்லை இது உண்மையாக நடந்த ஒரு நிகழ்ச்சி தான், இது ஒரு உவமை இல்லை என்றுச் சொல்வீர்களானால், அதற்காக நாம் ஒன்றும் செய்யமுடியாது". எனக்கு ஒரு வசனம் நியாபகம் வருகிறது.

மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனைவிட்டு நீங்காது. (நீதிமொழிகள் 27:22)

முடிவுரை: சரி, என் முன் வைத்த கேள்விக்கு பதிலை அளித்துவிட்டேன். இப்போது இஸ்லாமியர்கள் தான் நான் இதற்கு முன்பு சொல்லியிருந்த விவரம் பற்றி விளக்கவேண்டும். அதாவது,

அல்லா முஸ்லீம்களுக்கு தன் சொர்க்கத்தில்:


கொடுக்கப்போகும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

ஒவ்வொரு முஸ்லீமுக்கு எத்தனை பேர்களை அல்லா தருவார்?

சிலர் சொல்வார்கள், ஜிஹாதில் மரிப்பவர்களுக்கு மட்டும் தான் 70 பெண்களை தருவார், சாதாரணமாக மரிப்பவர்களுக்கு இரண்டு பேர் மட்டும் தான் என்பார்கள். இது உண்மையா?

அவர்கள் எப்படி திடமான மார்பகங்களை உடையவர்களாக இருப்பார்கள்?

அல்லா ஏதாவது பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற ஒரு அறுவை சிகிச்சை முறையில் ஏதாவது செய்வாரா?

ஏன் முஸ்லீம்களுக்கு 100 ஆண்களுடைய அந்த வலிமையை அல்லா தருவார்?

ஒரு குடும்பத்தில் திருமணமாகாமல் இருக்கும் வாலிபன் மரித்துவிட்டால் அவனுக்கும் இந்த பாக்கியம் உண்டா?

சொர்க்கத்தில் இந்த பெண்களை அல்லா தருவது ஒரு உவமையா? அல்லது ஒரு கற்பனையா ? அல்லது உண்மையா?

ஒவ்வொரு முறை ஒரு முஸ்லீம் உடலுறவு கொண்டால், மறுபடியும் அந்த பெண்ணை கன்னியாக அல்லா மாற்றுவாரா?

ஒரே வயதுடைய பெண்கள் என்று நம் தமிழ் அறிஞர்கள் மொழி பெயர்த்தார்களே, அப்படியானால் என்ன பொருள்?

அதாவது, 90 வயதில் ஒரு முஸ்லீம் மரித்தாலும், அவருக்கு 90 வயது பெண்கள் கிடைப்பார்களா?

அல்லது இவரை வாலிபராக 18 வயதுடையவராக மாற்றி 18 வயதுடைய பெண்களை அல்லா கொடுப்பாரா?
போன்ற கேள்விகளுக்கு முஸ்லீம்கள் தான் மக்களுக்கு விளக்கவேண்டும்.

ஏனென்றால், நாங்கள் விளக்கமளித்தால் அது இஸ்லாமுக்கு அவதூறு என்றுச் சொல்லி திட்டுவீர்கள், அதனால், நீங்களே விளக்கிவிடுங்கள்.

இந்த விவரங்கள் என் சொந்த கருத்துக்கள் இல்லை, இவைகள் விகிபீடியாவில் உள்ளது மற்றும் இஸ்லாமிய தளங்களில் கேள்விகள் கேட்கப்பட்டால், "ஆமாம், அல்லா இப்படிப்பட்ட பெண்களை தருவார் என்று பதில் அளித்துள்ளார்கள்." அதாவது, அந்த பெண்களின் கை கால்களைப்பார்த்தால், ஒரு பக்கத்திலிருந்து நாம் பார்த்தால், அடுத்த பக்கம் இருக்கும் பொருள் தெரியுமாம், அதாவது அந்த உடல் அப்படி கண்ணாடிப்போன்று இருக்குமாம், எலும்புகளும் அப்படியே கண்ணாடிப்போன்று இருக்குமாம். இந்த இஸ்லாமிய தள கட்டுரையை படியுங்கள், ஒரு நபர் சொர்க்கத்தில் உடலுறவு இருக்குமா என்று கேட்டதற்கு குர்‍ஆன் அடிப்படையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது (Question:
I'm wondering will the men from amongst the human race that enters paradise, will they have sexual intercourse with the "HOURIS" women in the paradise .  - http://www.islamqa.com/index.php?ref=10053&ln=eng )


From Wikipedia: http://en.wikipedia.org/wiki/Houri

Description:

The houri have variously been described as being

"chaste females"[8],
"restraining their glances"[8][9],
"modest gaze"[4],
"wide and beautiful/lovely eyes"[8][10][11][12][3],
"untouched / with hymen unbroken by sexual intercourse"[9][13],
"like pearls"[14],
"virgins"[15],
"voluptuous/full-breasted"[16][5],
"with large, round breasts which are not inclined to hang"[17],
"companions of equal age"[16][2],
"non-menstruating/urinating/defecating and childfree"[17][18],
"60 cubits [27.5 meters] tall"[19][20][18],
"7 cubits [3.2 meters] in width"[18],
"transparent to the marrow of their bones"[17][21],
"eternally young"[22],
"hairless"[22]
with "appetising vaginas"[23],
"pure"[21],
"beautiful"[21],
"white"[24],
"revirginating"[23],
"splendid"[1] and much more besides.

இந்த மேலே உள்ள பட்டியலில் bold செய்யப்பட்ட வார்த்தைகளுக்கு தமிழில் என்ன பொருள் என்று நீங்களே கண்டுபிடியுங்கள்.

அடேங்கப்பா! எவ்வளவு தகுதிகள், இந்த தகுதிகள் இருக்கும் பெண்களை அல்லா சொர்க்கத்தில் கொடுக்காமல், இந்த பூமியிலேயே இதில் சொல்லப்பட்ட தகுதிகள் அனைத்தும் உள்ள பெண்களை படைத்து இருந்தால்,இப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்யும் எந்த ஆணும் வேறு ஒரு பெண் பக்கம் தன் பார்வையை திருப்புவானா? திருப்பவே மாட்டான்.

இதை நான் ஏன் இந்த கட்டுரையில் குறிப்பிட்டேன் என்றுச் சொன்னால், இது கற்பனையா அல்லது உண்மையா என்று முஸ்லீம்களிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம் என்று தான். ஒரு உவமையை சொன்னதால், அது வேதமாக இருக்கமுடியாது என்று நிபந்தனை போடும் முஸ்லீம்கள், இப்படிப்பட்ட பெண்களை அனேகரை முஸ்லீம்களுக்கு தருவேன் என்றுச் சொன்னது உண்மையா? என்பதை தெரிந்துக்கொள்ளலாம் என்று தான்.

மேலும் படிக்க:

1.
Muhammad, Islam, and Sex - (The Prophet of Allah liked three worldly objects - perfume, women and food)

2.
Muhammad's Sexual Prowess.

3. MUHAMMAD AND THE FEMALE CAPTIVES

4.
All About Mohammad

5.
Questionable Language Of The Quran

6.
அபாச ஹதீஸ்களின் பட்டியல்

Source : http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/egaththuvam/ezekielPart-2.html

Isa Koran Home Page Back - Egaththuvam Rebuttal Index page
1

செவ்வாய், 25 மார்ச், 2008

ஏழிலாவிற்கு பதில்: கிறிஸ்தவத்தில் கல்லெரிந்து கொல்வது உண்டா?

ஏழிலாவிற்கு பதில்: கிறிஸ்தவத்தில் கல்லெரிந்து கொல்வது உண்டா?

முன்னுரை:

எழிலா என்ற தளத்தில் "இன்றைய கிறிஸ்துவ போதனை: கிறிஸ்துவ மதத்திலிருந்து யாரேனும் வெளியேறினால், கல்லாலடித்து கொல் " என்ற தலைப்பில் ஒரு செய்தியைக் கண்டு மிரண்டுப்போனேன். எந்த நாட்டில் இப்படிப்பட்ட செய்தியை, எந்த சபை வெளியிட்டது என்று காணலாம் என்று ஆவலாக படித்துப்பார்த்தேன். பிறகு தான் கண்டுக்கொண்டேன், பொய்யின் காற்று இவர்கள் பக்கம் இப்போது வீசியுள்ளது என்று.

நான் ஏன் இப்படி சொல்கிறேன், என்பதை அறிய எழிலா வெளியிட்ட செய்தியை படியுங்கள்:


இன்றைய கிறிஸ்துவ போதனை: கிறிஸ்துவமதத்திலிருந்து யாரேனும் வெளியேறினால், கல்லாலடித்து கொல்

நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,

4. அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்,

5. அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.

17:3 And hath gone and served other gods, and worshipped them, either the sun, or moon, or any of the host of heaven, which I have not commanded;
17:4 And it be told thee, and thou hast heard of it, and enquired diligently, and, behold, it be true, and the thing certain, that such abomination is wrought in Israel:
17:5 Then shalt thou bring forth that man or that woman, which have committed that wicked thing, unto thy gates, even that man or that woman, and shalt stone them with stones, till they die.

http://ezhila.blogspot.com/2008/03/blog-post_5841.html

இந்த செய்தியில் வேண்டுமென்றே அவர்கள் மறைத்த உண்மை என்ன என்பதை காண்போம்.

1. இவர்கள் கொடுத்த தலைப்பின் முதல் பாகத்தை பாருங்கள்:

"இன்றைய கிறிஸ்துவ போதனை: கிறிஸ்துவ மதத்திலிருந்து யாரேனும் வெளியேறினால், கல்லாலடித்து கொல்"

இவர்கள் வேண்டுமென்றே செய்த தவறு, "இன்றைய கிறிஸ்த போதனை" என்று தலைப்பு வைத்தது.

நான் இவர்களிடம் கேட்கும் கேள்வி:

a) எந்த சபையில்(Church) இப்படி போதிக்கிறார்கள்?

b) எந்த நாட்டில் போதிக்கிறார்கள்?

c) புதிய ஏற்பாட்டில் எங்கு இப்படி சொல்லப்பட்டுள்ளது?

d) "இன்றைய கிறிஸ்த போதனை" என்று எப்படி உங்களால் சொல்லமுடிகிறது?
 
2. இவர்கள் கொடுத்த தலைப்பின் இரண்டாம் பாகத்தை பாருங்கள்:

"இன்றைய கிறிஸ்துவ போதனை: கிறிஸ்துவ மதத்திலிருந்து யாரேனும் வெளியேறினால், கல்லாலடித்து கொல்"

அதாவது, "கிறிஸ்த மதத்திலிருந்து வெளியேறினால்" என்று எழுதுகிறார்கள்.புதிய ஏற்பாட்டிற்கும் பழைய ஏற்பாட்டிற்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை என்பது புலனாகிறது.

இவர்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்விகள்:
 
a) இந்த வசனத்திற்கும் கிறிஸ்தத்திற்கும் என்ன சம்மந்தம் என்றுச் சொல்லுங்கள்

b) இந்த வசனம் எந்த புத்தகத்திலிருந்து எடுத்தீர்கள் என்று உங்களுக்கே தெரியுமா? ஒரு வசனத்தை மேற்கோள் காட்டும் போது, அது எங்கிருந்து எடுத்தீர்கள் என்று அதிகாரம் மற்றும் வசன எண்கள் கொடுக்கவேண்டும் என்பது கூட மற்றவர்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்த வசனம் பழைய ஏற்பாட்டு வசனம் என்று தெரிந்தே மறைத்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

c) யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வித்தியாசம் உங்களுக்குத் தெரியுமா?
d) இந்த வசனம் புதிய ஏற்பாட்டில் உள்ளதென்று உங்களால் நிருபிக்கமுடியுமா?

e) கடைசியாக, பழைய ஏற்பாட்டையாவது நீங்கள் படித்ததுண்டா? குறைந்த பட்சம் இந்த வசனம் வரும் புத்தகத்தையாவது, அல்லது அதிகாரத்தையாவது படித்ததுண்டா?
இனி இந்த வசனம் பற்றிய என் பதிலைத் தருகின்றேன்:
 
1) இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் உள்ள  உபாகமம் என்ற  புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.


====================
உபாகமம் 17:2 - 7

உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி,
நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,

அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்,
அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.
சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலைசெய்யப்படவன், ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலைசெய்யப்படலாகாது.
அவனைக் கொலைசெய்கிறதற்குச் சாட்சிகளுடைய கைகள் முந்தியும் எல்லா ஜனங்களுடைய கைகள் பிந்தியும் அவன்மேல் இருப்பதாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
====================

2) இந்த வசனத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் சம்மந்தம் உண்டா?

யூதர்களுக்கு மோசே மூலமாக கொடுக்கப்பட்ட கட்டளைகளை மூன்று வகையாக பிரிக்கலாம்:

 a) ஆன்மீக (ஆவிக்குரிய) கட்டளைகள் (10 கட்டளைகள் போன்றவை)

 b) சமூகம் மற்றும் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட‌ கட்டளைகள்

 c) தேவாலயத்திற்கு சம்மந்தப்பட்ட கட்டளைகள்


a) ஆன்மீக (ஆவிக்குரிய) கட்டளைகள் (10 கட்டளைகள் போன்றவை):

தேவன் மோசே மூலமாக கொடுத்த 10 கட்டளைகள் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். அதாவது  நானே உன் தேவன், விக்கிரகங்களை வணங்க வேண்டாம், விபச்சாரம் செய்யவேண்டாம், திருடவேண்டாம், பொய் சொல்லவேண்டாம், மற்றவர்களின் பொருட்களின் மீது ஆசைப்படவேண்டாம், உன் பெற்றோரை கணம் செய்யவேண்டும் போன்ற கட்டளைகள் ஆகும்.

b) சமூகம் மற்றும் ஆரோக்கியம்  சம்மந்தப்பட்ட‌ கட்டளைகள்:

சமுதாயத்தில் நிகழும் பல குற்றங்களுக்கு என்னென்ன தண்டனைகள் தரவேண்டும், பற்றிய கட்டளைகள் இதில் அடங்குகிறது. திருடும் போது, விபச்சாரம் செய்யும் பொது, மற்றவனை ஏமாற்றும் போது என்ன தணடனை கொடுக்கவேண்டும், போன்ற கட்டளைகள் இதில் அடங்கும்.

இந்த கட்டளைகள் யூதர்களுக்கு மட்டும் தான், கிறிஸ்தவர்களுக்கு இல்லை. எப்படி என்று கேட்பீர்களானால், ஒரு முறை இயேசுவிடம் யூத ஆசாரியர்கள் வந்து இவரிடம் குற்றம் கண்டுபிடிக்கவேண்டும் என்பதற்காக, ஒரு விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணை கொண்டு வந்து, மோசேயின் கட்டளைப்படி இவளை கல்லெரிந்து கொள்ளவேண்டும்,நீர் என்ன சொல்கிறீர் என்று கேட்கும் போது, "இது வரை ஒரு முறையும் பாவம் செய்யாதவன் முதல் கல்லை எரியக்கடவன்" என்று இயேசு சொல்கிறார். உடனே எல்லாரும் சென்றுவிடுகின்றனர். அதாவது, யூதர்கள் ஒரு நாடாக இருந்ததால், சமுக கட்டளைகளை தேவன் பழைய ஏற்பாட்டில் விதித்தார், புதிய ஏற்பாட்டில் அக்கட்டளைகள் கிறிஸ்தவர்களுக்கு பொருந்தாது. கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்ற கட்டளைகளை மாற்றி, எல்லாரையும் நேசியுங்கள் என்று இயேசு சொன்னார். இதை புதிய ஏற்பாட்டில் நீங்கள் படிக்கலாம்.


c) தேவாலயத்திற்கு சம்மந்தப்பட்ட கட்டளைகள்:

பழைய ஏற்பாட்டில் தேவாலயத்தில் பூசாரிகள் செய்யவேண்டியவை மிகவும் அதிகமான வேலைகள் இருந்தது, அவர்களுக்கென்று தனியான உடை இருந்தது, அதற்காக ஒரு வம்சம் அல்லது கோத்திரம் இருந்தது, பஸ்கா போன்ற பண்டிகைகள் அதற்குரிய வழிமுறைகள் இருந்தது. வருடத்திற்கு ஒரு முறை மக்களுக்காக பல ஆசாரங்களை அவர்கள் செய்யவேண்டும். அதையெல்லாம், புதிய ஏற்பாட்டில் இல்லை. பழைய ஏற்பாட்டின் எல்லா தேவாலய வழிமுறைகளும் புதிய ஏற்பாட்டுக்கு நிழலாக இருந்தது.

ஆக, பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாட்டிற்கு வருவது ஆன்மீக கட்டளைகளே தவிர, யூதர்களின் தேவாலய பணிகள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள் இல்லை.

கிறிஸ்தவத்தில் அரசியல் மூலமாக ஒரு நாட்டை ஆளும் கட்டளைகள் இல்லை, இயேசு இதைப்பற்றிச் சொல்லும் போது, என் அரசு(இராஜ்ஜியம்) இந்த உலகத்திற்கு சம்மந்தப்பட்டது இல்லை என்றார். எனவே, நீங்கள் குறிப்பிட்ட பழைய ஏற்பாட்டு வசனங்கள், யூதர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டது, கிறிஸ்தவர்களுக்கு அல்ல.


சரி, பழைய ஏற்பாடு மக்களுக்கு என்றாலும், ஏன் கொல்லவேண்டும் என்று கேட்பீர்கள்:

அதாவது, கி.மு. வில் வாழ்ந்த கிரேக்க மக்களிடையே இருந்த விக்கிர ஆராதனை பழக்கங்களில் சில தீய பழக்கங்கள் இருந்தன. அதாவது, விக்கிர ஆராதனைகளில் விபச்சாரம் என்பது ஒரு பகுதியாக இருந்தது, மற்றும் தங்கள் பிள்ளைகளை சிலைகளுக்கு பலி இடுவது அவர்களுக்கு வழக்கமாக இருந்தது. இதற்காகத் தான் தேவன அவர்களின் "அருவருப்புக்களுக்கு விலகி இருங்கள்" என்றுச் சொல்லி, கட்டளைகளையிட்டார்.

உங்கள் பிள்ளைகளை விக்கிரகங்களுக்கு பலி இடவேண்டாம் என்று கட்டளையிட்டார், இஸ்ரவேல் மக்களில் ஒருவரும் இப்படி விபச்சாரம் வேசித்தனம் செய்கிறவர்களாக இருக்கக்கூடாது என்றார்.


இந்த பகுதிக்காக "இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளும் பதில்களும்" என்ற கேள்வி பதில் கட்டுரையில் நான் கொடுத்த பதிலை இங்கு இணைக்கின்றேன். இந்த என் பதிலில் தேவதாசி முறையும், மற்றும் பழைய ஏற்பாட்டில் தேவன் இப்படிப்பட்ட விஷயங்களுக்கு விலகியிருங்கள் என்றுச் சொன்ன வசனங்களையும் நான் விவரித்துள்ளேன்.

 
7. தேவதாசி (Shrine Prostitute / Temple Prostitute / Devadasi - India) முறை

ஆனால், தாமார் அப்படிச் செய்யவில்லை. இதற்கு காரணம் "கானான்" தேசத்தில் உள்ள மக்களிடையே இருந்த "Shrine or Temple Prostitute முறையாகும்" - இந்தியாவில் இதையே "தேவதாசி" என்றுச் சொல்வார்கள். ஒரு பெண்ணை கோவிலுக்கென்று(God of Fertility) நேர்ந்துக்கொள்வார்கள், அவள் ஒரு பொது பொருளாக கருதப்படுவாள்.


Religious prostitution is the practice of having sexual intercourse (with a person other than one's spouse) for a religious purpose. A woman engaged in such practices is sometimes called a temple prostitute or hierodule, though modern connotations of the term prostitute cause interpretations of these phrases to be highly misleading.

It was revered highly among Sumerians and Babylonians. In ancient sources (Herodotus, Thucydides) there are many traces of hieros gamos (holy wedding), starting perhaps with Babylon, where each woman had to reach, once a year, the sanctuary of Militta (Aphrodite or Nana/Anahita), and there have sex with a foreigner, as a sign of hospitality, for a symbolic price. (Cf. Herodotus, Book I, para 199)

A similar type of prostitution was practiced in Cyprus (Paphos) and in Corinth, Greece, where the temple counted more than a thousand prostitutes (hierodules), according to Strabo. It was widely in use in Sardinia and in some of the Phoenician cultures, usually in honour of the goddess 'Ashtart. Presumably by the Phoenicians[citations needed], this practice was developed in other ports of the Mediterranean Sea, such as Erice (Sicily), Locri Epizephiri, Croton, Rossano Vaglio, and Sicca Veneria. Other hypotheses[specify] concern Asia Minor, Lydia, Syria and Etruscans.

It was common in Israel too, but some prophets, like Hosea and Ezekiel, strongly fought it; it is assumed that it was part of the religions of Canaan, where a significant proportion of prostitutes were male (roughly the same proportion as there were men in society at large, about 50%).[citations needed] [specify] speculates that the Canaanite peoples had a system of religious prostitution, inferring from passages such as Genesis 38:21, where Judah asks Canaanite men of Adullam "Where is the harlot, that was openly by the way side?". The Hebrew original employs the word "kedsha" in Judah's question, as opposed to the standard Hebrew "zonah". The word "kedsha" is derived from the root KaDeSh, which signifies uniqueness and holiness; thus it (according to his speculation) possibly represents a religious prostitute.

India

The practice devadasi and similar customary forms of hierodulic prostitution in Southern India (such as basavi),[1] involving dedicating adolescent girls from villages in a ritual marriage to a deity or a temple, who then work in the temple and act as members of a religious order. Human Rights Watch claims that devadasis are forced at least in some cases to practice prostitution for upper-caste members[2]. Various state governments in India have enacted laws to ban this practice. They include Bombay Devdasi Act, 1934, Devdasi (Prevention of dedication) Madras Act, 1947, Karnataka Devdasi (Prohibition of dedication) Act, 1982, and Andhra Pradesh Devdasi (Prohibition of dedication) Act, 1988.[3]


அந்த காலத்தில், சில நாடுகளில் ஒவ்வொரு பெண்ணும் வருடத்திற்கு ஒரு முறை, இப்படி தன் தெய்வத்திற்காக ஒரு நாள், தன் கணவரல்லாத ஒருவரோடு இருக்கவேண்டும், இதை அவர்கள் புனிதமாக எண்ணினர்.

8. பைபிள் எதிர்க்கும் Shrine or Temple Prostitute or "தேவதாசி" முறை:

நாம் பழைய ஏற்பாட்டில் பார்க்கலாம், பல இடங்களில் தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு "அந்நியர்களுடன் திருமண உறவுமுறைகளை" வைத்துக்கொள்ளவேண்டாம் என்று கட்டளையிடுகிறார். இதற்கு காரணம் அந்நிய ஜனங்களிடையே இருந்த இப்படிப் பட்ட பழக்கங்கள், மற்றும் இஸ்ரவேலர்களில் இப்படிப்பட்ட "தேவதாசியாக" ஒருவரும் இருக்கக்கூடாது என்று தேவன் கட்டளையிடுகிறார்


உபாகமம்: 23:17-18 ( Deuteronomy 23:17-18)

No Israelite man or woman is to become a shrine prostitute. You must not bring the earnings of a female prostitute or of a male prostitute into the house of the LORD your God to pay any vow, because the LORD your God detests them both. (NIV)

17. இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது; இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாயிருக்கக்கூடாது.18. வேசிப்பணயத்தையும், நாயின் கிரயத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கொண்டுவராயாக; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.


மூலமொழியில் இங்கு சொல்லப்படும் வார்த்தை " வேசியில்லை" அது "தேவதாசி"( Shrine Prostitute) என்பதாகும். எந்த ஒரு இஸ்ரவேல் பெண்ணும், ஆணும் இப்படி "தேவதாசியாக" இருக்கக்கூடாது என்பதாகும். அந்த கானானியரின் ஜனங்களில் ஆண்களும் இப்படி இருந்தனர். இப்படி Shrine Prostitute ஈடுபடுபவர்கள் அதற்காக சிறிது பணமும் பெறுவார்கள், அப்படிப்பட்ட பணம் கூட தேவனுடைய ஆலயத்திற்குள் வரக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டுள்ளார். நாயின் கிரயம்(the Price of a Dog) என்றால், ஆண்கள் இப்படி வேசித்தனம் செய்து சம்பாதிக்கும் பணம் ஆகும்.

இப்படியாக தேவன் பலமுறை இஸ்ரவேல் மக்களுக்கு கானானியர் செய்ததுபோல செய்யவேண்டாம் என்று கட்டளையிட்டுள்ளார். பழைய ஏற்பாட்டு இராஜாக்கள் இப்படிப்பட்டவர்களை தங்கள் நாட்டிலிருந்து துரத்தி இருக்கிறார்கள்.


1 இராஜா 14:23-24, 15:11-12, 22:46 & 2 இராஜா 23:7

1 இராஜா 14:23 . அவர்களும் உயர்ந்த சகல மேட்டின் மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்பு விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.24. தேசத்திலே இலச்சையான புணர்ச்சிக்காரரும் இருந்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளுடைய அருவருப்புகளின் படியெல்லாம் செய்தார்கள்.

1 இராஜா 15:11. ஆசா தன் தகப்பனாகிய தாவீதைப் போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.12. அவன் இலச்சையான புணர்ச்சிக் காரரை தேசத்திலிருந்து அகற்றி, தன் பிதாக்கள் உண்டுபண்ணின நரகலான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி,

1 இராஜா 22:46. தன் தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாய் விட்டிருந்த இலச்சையான புணர்ச்சிக்காரரையும் அவன் தேசத்திலிருந்து அற்றுப்போகப்பண்ணினான்.

2 இராஜா 23:7. கர்த்தரின் ஆலயத்திற்கு அருகே ஸ்திரீகள் தோப்பு விக்கிரகத்துக்குக் கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள இலச்சையான புணர்ச்சிக்காரரின் வீடுகளை இடித்துப்போட்டான்.


இஸ்ரவேலில் தேவனுக்கு பயந்த இராஜாக்கள் இப்படிப்பட்டவர்களை நாட்டிலிருந்து விறட்டிவிட்டார்கள்.

புதிய ஏற்பாட்டு காலத்திலும், பவுல் ஊழியம் செய்த "கொரிந்தி" பட்டணமும் இப்படிப்பட்ட அருவருப்புக்களால் நிறைந்திருந்தது. சுமார் இப்படிப்பட்ட ஆண், பெண் தேவதாசிகள் 1000 பேர் இருந்ததாக சொல்லப்படுகிறது.

According to Nelson's Bible Dictionary Corinth was ancient Greece's most important trade city. At Corinth the apostle Paul established a flourishing church made up of a cross section of the worldly minded people who had flocked to Corinth to participate in gambling, legalized temple prostitution, business adventures, and amusements available in this first century navy town. The city soon became a melting pot for the approximately 500,000 people who lived there at the time of Paul's arrival. Source: http://www.christiangay.com/he_loves/corinth.htm

எனவே தான் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் கீழ்கண்டவாறு அவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். புதிதாக இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.


1 கொரி 6:9-11
9. அநியாயக்காரர் தேவனுடைய ராஜயத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும் ,10. திருடரும், பொருளாசைக்காரரும்,வெறியரும், உதாசினரும், கொள்ளைக்கராரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.11. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.


மூலமொழியில், இந்த வசனத்தில் வரும் "வேசிமார்க்கத்தார், விபச்சாரக்காரர், ஆண்புணர்ச்சிக்காரர்" என்பது இந்த "Male/Female Temple Prostituttes " பற்றியே சொல்லப்பட்டுள்ளது.

ஆக, யேகோவாவிற்கு அருவருப்பை உண்டாக்கக்கூடியதாக இருந்தது அந்நியர்களுடைய இப்படிப்பட்ட செயல்கள்.

-----------------

முடிவுரை: இனி மேலாவது ஏதாவது வசனத்தை  குறிப்பிடுவதாக இருந்தால், மேற்கோள் காட்டி, புரிந்துக்கொண்டு எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். "இன்றைய கிறிஸ்தவத்தில்" என்று எழுதி,  பழைய ஏற்பாட்டு வசனத்தை எடுத்து கிறிஸ்தவத்தை சம்மந்தப்படுத்தி இப்படியெல்லாம் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

திங்கள், 24 மார்ச், 2008

நேசமுடன் தளம் வெளியிட்ட செய்தி பொய்யா மெய்யா? - கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்

 
கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா?

நேசமுடன் தளம் வெளியிட்ட செய்தி பொய்யா மெய்யா?


உமர் குறிப்பு: நேசமுடன் தளம் "கிறிஸ்தவ பாதிரிகள் ஜஹ் செய்தார்கள்" என்ற ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது. அவர்கள் சொல்வது உண்மையா என்றுச் சொல்லி நான் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். நேசமுடன் தளம் குறைந்தபட்சம் அவர்கள் சொல்லும் விவரங்களுக்கு தொடுப்புகளாவது கொடுங்கள் என்று நான் என் கட்டுரையில் கேட்டு இருந்தேன். நேசமுடன் தளத்தில் அத்தளத்தின் நிர்வாகியின் மெயில் ஐடியும் இருக்காது, மற்றும் நாம் பின்னூட்டம் தர வசதியும் இருக்காது. அவர் என்ன (பொய்) சொல்வாரோ அதை அப்படியே மக்கள் கேட்கவேண்டும். என் சந்தேகத்தை தீர்க்கும்படி நான் ஜனவரி 15ம் தேதி இந்த கட்டுரையை வெளியிட்டேன். ஆனால், இரண்டு மாதம்( 24th March 2008)ஆகியும் இன்னும் அதற்கு பதில் இல்லை. இந்த என் கட்டுரை Red Islam ( http://redislam.blogspot.com/2008/01/blog-post_15.html ) தளத்திலும் ஜனவரி 15ம் தேதி அன்றே வெளியிடப்பட்டது.

பொதுவாக, நான் சந்தேகம் என்று கேட்கும் கட்டுரைகளை என் தளத்தில் பதிப்பதில்லை, நான் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில்(www.tamilchristians.com) அதை பதிப்பேன், என் இரண்டு தளங்களில்(http://www.geocities.com/isa_koran and http://isakoran.blogspot.com) பதிப்பதில்லை. இதோ, இந்த சந்தேகம் கேட்டு 60 நாட்களுக்கு மேல் ஆகிறது, அதாவது இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் பதில் வரவில்லை. அவர்கள் சொன்னது உண்மையாக இருந்தால் தானே பதில் வருவதற்கு. இரண்டு மாதங்கள் கழித்து இப்போது என் தளத்தில் இதை முதன் முறையாக பதிக்கிறேன். இவர்கள் பதில் சொல்லமாட்டார்கள் என்று நான் முன்னமே முடிவு செய்து இருந்தால், என் தளத்தில் அதை பதித்து இருப்பேன். ஆனால், இந்த செய்தியை பொருத்தவரையில் இவர்கள் பதில் சொல்வார்கள் என்று எண்ணினென். ஆனால், பயனில்லை. இவர்கள் பொய்யர்கள் என்று மறுபடியும் நிருபித்துவிட்டார்கள். வாழ்க இஸ்லாம், வாழ்க இஸ்லாம் தளங்கள்.




என் சந்தேகம் தீர்த்துவிடுங்கள் என்று நான் பதித்த கட்டுரை தொடர்கிறது


முன்னுரை: நம் தமிழ் நாட்டு இஸ்லாமியர்கள்(அறிஞர்கள்) கடந்த ஒரு ஆண்டு காலமாக அதி வேகமாக தளங்களை உருவாக்கிக்கொண்டு இஸ்லாமிய செய்தியை பதித்துக்கொண்டு வருகிறார்கள். கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதிக்கொண்டு வருகிறார்கள். சிலர் உண்மையை பொய் என்றுச் சொல்கிறார்கள். சிலர் பொய்யை உண்மை என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

இஸ்லாம் தளங்களில் பொய் செய்திகள்:

இவர்களில் சிலர்(கவனிக்கவும் "சிலர்") பல பொய்யான தகவல்களை கொடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

பல ஆயிரம் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ போதகர்கள் திடீரென்று இஸ்லாமுக்கு மாறினார்கள் என்று மிகவும் ஆவேசமாக கட்டுரை எழுதினார்கள்? ஆதாரம் எங்கே என்றுக் கேட்டால், "மௌனம்"...... பதில் இருக்காது.....

ஒரு உதாரணம் இதோ:

நேசமுடம் தள கட்டுரைக்கு: "இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள் " , ஆதாரம் எங்கே என்று கேள்வி கேட்கப்பட்டது, இன்றுவரை பதில் இல்லை.

நேசமுடன் தளத்திற்கு ஈஸா குர்-ஆன் கேள்வி: "சந்தேகம் தீர்த்துவிடுங்கள் பிளீஸ்"

இது உண்மையானச் செய்தியா?

இதே நேசமுடன் தளம் இன்னொரு செய்தியை வெளியிட்டது, அதற்கு எந்த ஒரு மூல தொடுப்பையும் கொடுக்கவில்லை.

ஹஜ் கடமையை நிறைவேற்றிய முன்னாள் பாதிரியார்கள்

அபூசாலிஹ்

.....

.....

அலி கவுதமலா என்ற முன்னாள் கிறிஸ்தவ பாதிரியாரும் தனது ஹஜ் கடமையை இவ்வாண்டு நிறைவேற்றினார். .....

.....

செவர்டோ ரோயிஸ் (அலி கவுதமலா கிறிஸ்தவராய் இருந்த போது உள்ள பெயர்) திருக்குர்ஆனை ஒதிய போது அதனால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார். குறிப்பாக திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்பகறாவை ஓதிய போதே சத்தியதீனுல் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கிறார்.

தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் தனது வாழ்வே மறுமலர்ச்சி பெற்றதாகக் கூறுகிறார். குருமடம் என்ற பாதிரியார்களின் பயிற்சிக் கல்விக் கூடத்தில் தனது பட்டப்படிப்பை முடித்து கொண்ட செவர்டோ ரோயிஸ் அமெரிக்காவின் தெற்கு மாநிலத்தில் குயின் சிட்டியில் தனது பணியைத் தொடங்கினார். .....

.....



அழைப்பாளர் கமர் ஹுஸைன் அழைப்பு விடுத்த 'மார்க்கம்' பற்றிய விவாத அரங்கிற்கு 5000 பேர் வருகை புரிந்தனர். இதில் 147 பேர் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். இந்த விவாத அரங்கை சவூதி தலைநகர் ரியாத்தை தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாத்தினை அறிமுகப்படுத்தும் சர்வதேச அமைப்பு நெறிப்படுத்தியது. இத்தகவலை அஷ்ரக் அல் அஸ்வத் செய்தி ஏடும் அல் ஜஸீராஹ் அரபி நாளேடும் வெளியிட்டுள்ளன.

source: http://neshamudan.blogspot.com/2008/01/blog-post_13.html




இவர் கொடுத்த ஒரே ஆதாரம், எந்த செய்தித்தாள்களில் இச்செய்தி வெளியானது என்று மட்டும் தான். அதுவும் அந்த செய்தித்தாள்களில்:

எந்த நாள் இச்செய்தி வெளியானது?

அதன் தொடுப்பு என்ன?

போன்ற விவரங்களை இவர் கொடுக்கவில்லை.


முஸ்லீம்களுக்கு ஒரு வேண்டுகோள்:

நான் பலமுறை சொல்லிவிட்டேன், ஒரு செய்தியை சொல்லும் பொது அதன் மூல தொடுப்பை(Source Link or URL) கொடுக்க வேண்டும், அது தான் இணையத்தில் கட்டுரை எழுதும் போது பின்பற்ற வேண்டிய குறைந்த பட்ச நல்ல பழக்கம். அது கூட உங்களிடம் இல்லாத போது, எங்கே சென்று முறையிடுவது?

1. நீங்கள் சொன்ன விவரம் சரியானதாக இருக்குமானால் அதை ஏன் தைரியமாக சொல்ல பயப்படுகிறீர்கள்?

2. அச்செய்தி எந்த மொழியில் இருந்தால் என்ன? ஆங்கிலமோ அரபியோ அதன் தொடுப்பை கொடுத்துவிட்டால், உங்கள் நேர்மை வெளிப்படும் இல்லையா? இது ஏன் புரியவில்லை உங்களுக்கு?

3. அல்லது இது கூட ஒரு பொய்யான தகவல் தானா?

4. நீங்கள் சொல்லும் செய்தி உண்மையானதா பொய்யா? என்று எப்படி நாங்கள் முடிவு செய்வது? செய்தியை சொல்வது நீங்களாயிற்றே எப்படி உண்மையை உங்களிடம் எதிர்ப்பார்ப்பது, நேசமுடன் தள நிர்வாகத்தவர்களே?

5. உங்கள் கட்டுரை உண்மையானதாக இருக்கலாம், நான் அதை மறுக்கவில்லை. ஆனால் ஆதாரம் எங்கே என்று தான் கேட்கிறேன். உங்களை நாங்கள் ந‌ம்பவேண்டிய அவசியம் என்ன?

இந்த செய்தி வெளியான செய்தித்தாள்களின் தொடுப்பை கொடுக்கமுடியுமா?

1. நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால்?

2. உங்கள் நம்பிக்கை நேர்மையானதாக இருந்தால்?

3. நீங்கள் சொல்வது உண்மை என்று உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்?

4. இஸ்லாமுக்கு இந்த பாதிரியார்கள் மாறினார்கள் என்ற செய்தி உண்மையானதாக இருந்தால்


இக்கட்டுரையை கண்டவுடன், உடனே தேடிக்கண்டுபிடித்து, அதன் தொடுப்பை கொடுத்து, உங்கள் நேர்மையை நிருபித்துக்கொள்ளுங்கள்.

அப்படி தொடுப்பை கொடுப்பீர்களானால், நான் இதே கட்டுரையில் ஒரு பின்னூட்டம் இட்டு, நேசமுடன் இஸ்லாம் தளம் தன் நேர்மையை நிருபித்துவிட்டது, இச்செய்தி உண்மை தான் என்ற வரிகளை பதிப்பேன்.

அப்படி இல்லையானால், நேசமுடன் தளம் ஒரு பிராடு, பித்தலாட்டம், பொய், நேர்மையற்ற இஸ்லாம் தளம் "நேசமுடன்" தளம் என்று எல்லாரும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும், இந்துக்களும், நாத்தீகர்களும் நினைத்துக்கொள்வார்கள்.

இந்த தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்தில் ஒரு கட்டுரையை எழுதி இனி, கிறிஸ்த கட்டுரைகளை மூல தொடுப்புக்கள் இல்லாமல் எழுதும் தளங்களின் பெயர்கள் பட்டியல் இடப்படும். இனிவரும் சந்ததிகளுக்கு உங்கள் "உண்மை முகத்தை" அது காட்டும் என்பதை தாழ்மையுடம் சொல்லிக்கொள்கிறேன்.

உங்கள் தேடல் சுலபமாக சில தொடுப்புக்களை நான் தருகிறேன். நீங்கள் குறிப்பிட்ட செய்தித்தள்கள் இவைகள் என்று நம்புகிறேன்.

http://www.aawsat.com/ -- Arabic Edition

http://www.asharq-e.com/ -- English Edition

http://english.aljazeera.net

http://www.aljazeera.com/


நாங்கள் உங்களிடம் முதலில் எதிர்ப்பார்ப்பது நேர்மை, உங்கள் மார்க்கம் சரியானதா இல்லையா? என்பதைப் பற்றி பிறகு சிந்திக்கலாம்.

ஆமாம், உங்களுக்கு சராசரி இஸ்லாமிய சகோதரர்களிடமிருந்து ஏன் இப்படி செய்கிறீர்கள், ஏன் பொய்யான தகவலை தருகிறீர்கள் என்று கேள்வி கேட்டு மெயில்கள் வருவதில்லையா? ஆச்சரியமாக இருக்கிறதே?

Source: கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா?

நேசமுடன் தளத்தின் முதல் பொய்க் கட்டுரை: நேசமுடன் தளத்திற்கு ஈஸா குர்-ஆன் கேள்வி: "சந்தேகம் தீர்த்துவிடுங்கள் பிளீஸ்"

Isa Koran Home Page Back - Rebuttal Index page
1

வெள்ளி, 21 மார்ச், 2008

இஸ்லாம் இணையத்திற்கு பதில்: இஸ்லாம் சரியான மார்க்கம் என்று தெரிந்தும் கிறிஸ்தவர்கள் நிராகரிக்கின்றார்களா?

 
இஸ்லாம் இணையத்திற்கு பதில்:

இஸ்லாம் சரியான மார்க்கம் என்று தெரிந்தும் கிறிஸ்தவர்கள் நிராகரிக்கின்றார்களா?


முன்னுரை:

சமீப காலமாக இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகள் தமிழ் இணைய உலகில் உலா வந்துக்கொண்டு இருக்கின்றன.இதில் இஸ்லாமியர்கள் "நாங்கள் கேள்விகள் மட்டுமே கேட்போம், பதில் சொல்லமாட்டோம், மற்ற மார்க்கங்களின் வேதங்களில் கை வைத்து, எங்களுக்கு ஏற்ற விதத்தில் பொருள் கூறுவோம், அவர்கள் பதில் சொன்னால் அதை காதில் வாங்க மாட்டோம், எங்கள் குர்‍ஆனை அவர்கள் படித்து கேள்விகள் கேட்டால், இஸ்லாமுக்கும், முகமதுவிற்கும் அவதூறு செய்கிறார்கள் என்று ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்போம், ஆனால், தப்பித்தவறியும் பதில் சொல்லமாட்டோம்" என்ற தோரணையில் இணைய தளங்களை நடத்திக்கொண்டு வருகின்றனர்.

இந்த கட்டுரையில், நாம், "இஸ்லாம் இணைய பேரவை" தளம் எழுதிய ஒரு கட்டுரைக்கான பதிலை காணப்போகிறோம். இந்த கட்டுரையில் இவர்களாகவே சில விஷயங்களை சுயமாக முடிவு செய்துவிட்டு அதை வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் சுயமாக எடுத்த முடிவு என்ன?

1. கிறிஸ்தவர்களுக்கு உண்மை மார்க்கம் இஸ்லாம் என்று தெரியுமாம்

2. அப்படி தெரிந்து இருந்தும், கிறிஸ்தவர்கள் வறட்டு கௌரவத்தால் இஸ்லாமை நிராகரிக்கிறார்களாம்
.

[என்னே கண்டுபிடிப்பு! நான் மட்டும் நோபல் யாருக்கு கொடுக்கலாம் என்று நிர்ணயிக்கும் குழுவில் இருந்தால், 2008ம் ஆண்டிற்கான நோபல் பரிசை இந்த கண்டுபிடிப்பிற்காக இதை எழுதவருக்கு கொடுக்க சிபாரிசு செய்வேன்.]

நான் இந்த கட்டுரையில் மேலே குறிப்பிட்ட இரண்டு குறிப்புகளுக்கு மட்டும் பதில் தரலாம் என்று விரும்புகிறேன். அதே நேரத்தில் இவர்களின் வாடிக்கையான கிளிப்பிள்ளை வார்த்தைகளுக்கும் பதில் ஆங்காங்கே சொல்லிவிடுகிறேன்.

இன்னும் அவர்கள் என்ன என்ன சொல்லியுள்ளார்கள் என்று நீங்களே படியுங்கள்:

இஸ்லாம் இணையம் எழுதியது:

வேதக்காரர்களான யூதர்களும் கிரிஸ்தவர்களும் உண்மை மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்று தெரிந்த பின்னரும் வறட்டு கௌரவத்தால் சத்தியத்தை நிராகரித்து இறைவேதத்தை இருட்டடிப்பு செய்தும், நவிமொழிகளை நாசவேளை செய்தும் உண்மைக்கு மாற்றமான செய்திகளை பரப்பிவருகிறார்கள். அல்குர்ஆனில் சில வசனங்களை மாற்றியமைத்து தனக்கு சாதகமான சூழ் நிலையை உருவாக்குகிறார்கள். இதுபோதுமல்லாது பல இணையதளங்களை நிறுவி அதன்மூலம் காபாவில் சிலைவணங்குதல், நபிகளார்(ஸல்) அவர்களின் குடும்பத்தை பழித்து வர்ணித்தல், காட்டுமிரான்டி மார்க்கம் என்பனபோன்ற எண்ணற்றக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்ற வகையில் உண்மை எதுவென்று தெரிந்த பின்னரும் அவதூராக பரப்பிவருகிறார்கள். இதை இறைவன் அவர்களின் முகத்திறையை இவ்வாறு கிழிக்கிறான்,

வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? (அல்குர்ஆன் 3:71)

இப்படி பல ஆக்கங்களை நிறுவி முஸ்லிம்களின் உள்ளங்களில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தி தவறான வழிக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதே அந்த கோர முகங்களின் நஞ்சு எண்ணமாகும். இவ்வாறு இணையதளத்தில் நிறுவப்பட்ட ஆக்கங்கள் புதிதாக இஸ்லாத்தை அறியவேண்டும் என்பதற்காக ஒருவர் விரும்பி தேடும்போது இதை பார்ப்பாரேயானால் விரண்டோடக்கூடிய ஒரு துர்பாக்கிய சூழ்நிலைதான் அங்கு உருவாகும். ஆகவே இப்படிப்பட்ட பல சூழ்ச்சிகளின் மூலம் இஸ்லாத்தின் எழுச்சியை அமுக்க நாடுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை தங்களது விழிகளை உளியை கொண்டு குத்திக்கொண்டு இருக்கிறோம் என்று. இறைவன் அந்த வேதக்காரர்களின் கூறுகெட்டச் செயலை இவ்வாறு விவரிக்கிறான்.

வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது. எனினும் (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை. (அல்குர்ஆன் 3:69)

Source:


1. இஸ்லாமியர்கள் அளவிற்கு அதிகமாகவே பயந்துள்ளார்கள்:

நாம் சிறுவயதிலே சில இடங்களை கடந்துச்செல்லும் போது, உதாரணத்திற்கு ஒரு பாழடைந்த வீட்டை கடந்துச்செல்லும் போது, அல்லது அதிகமாக மரங்கள் உள்ள இடத்தை கடந்துச்செல்லும் பொது, அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத கல்லரைகளை கடந்துச்செல்லும் போது, மனதிலே பயம் ஒரு புறம் இருந்தாலும், நமக்கு நாமே தைரியம் கொண்டு, ஏதோ ஒரு பாட்டை சத்தமாக பாடிக்கொண்டே, நடுங்கிக்கொண்டே அந்த இடத்தை கடந்துவிடுவோம். சிலர், "நான் பயப்படமாட்டேன், நான் தைரியமானவன், நான் ஒரு வீரன்" என்று சொல்லிகொண்டு ஓடோடி அந்த இடத்தை சீக்கிரமாக கடந்துவிடுவோம். முக்கியமாக கிராமங்களில் இருப்பவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். அந்த இடத்தை கடந்தபிறகு நிம்மதியாக நடந்துச்செல்வோம். உள்ளத்தின் ஆழத்தில் பயம் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல், ஏதேதோ சொல்லிக்கொண்டு அந்த இடத்தை எப்படியாவது கடந்துப்போவோம்.

இதே போலத்தான் இஸ்லாமியர்களும், இவர்கள் கட்டுரைகளை கவனித்தீர்களானால்:

1. நாங்கள் வெற்றி பெற்றே தீருவோம்,

2. நீங்கள் எவ்வளவுதான் இடையூறுகளை ஏற்படுத்தினாலும் இஸ்லாம் என்கின்ற சத்திய ஒளிக்கு என்றைக்குமே திறையிட முடியாது

3. சத்தியம் ஜெயித்தே தீரும்,

4. யாரும் குர்‍ஆனுக்கு எதிராக ஒன்றும் செய்யமுடியாது,

5. சூரியனை கைகளால் மறைக்கமுடியாது,

6. சத்தியமார்க்கம் வெற்றிப்பெறும்

7. நாங்கள் பயப்படமாட்டோம்

இவர்களுக்கு பயம் வரும்போதெல்லாம், ஒரு கட்டுரையாவது இப்படி வெளியிட்டுக்கொண்டே இருப்பார்கள். இதை படிக்கும் இதர முஸ்லீம்கள் அப்படியே பொங்கிப்போவார்கள். குர்‍ஆன் வசனங்களுக்கு இவர்கள் அர்த்தத்தை மாற்றிச் சொல்கிறார்கள், இவர்கள் வெற்றிப்பெறமுடியாது, நாங்கள் தான் வெற்றிப்பெறுவோம் என்று ஓயாமல் கிளிப்பிள்ளைப்போல சொல்லிக்கொண்டே இருப்பார்களே தவிர, இவர்களாகவே குர்‍ஆன் வசனங்களுக்கு சரியான பொருள் கூறமாட்டார்கள், ஹதீஸ்களுக்கு பொருள் கூறமாட்டார்கள், அப்படி கூறுகிறவர்களின் அர்த்தம் தவறு என்றுச் சொல்வார்கள். இந்த வகையில் அவர்கள் எழுதிய கட்டுரைக்குத் தான் இப்போது நாம் பதிலை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

சரி, இவர்களின் "கிறிஸ்தவர்கள் உண்மை மார்க்கம் இஸ்லாம் என்று தெரிந்தே நிராகரிக்கின்றனர" என்ற குற்றச்சாட்டிற்கு பதிலை காண்போம்.

2. கிறிஸ்தவர்கள் உண்மை மார்க்கம் இஸ்லாம் என்று தெரிந்தே நிராகரிக்கின்றனரா?

உண்மையில் "கிறிஸ்தவர்கள் இஸ்லாம் தான் உண்மை மார்க்கம் என்று தெரிந்துவைத்து இருக்கிறார்கள்" என்றுச் சொல்ல உங்களால் எப்படி முடிகிறது. முஸ்லீம்களே! உங்களுக்கு இப்படி எழுதுவது அடிப்படை இல்லாமல் எழுதுவது போல தோன்றவில்லை? எங்களுக்கு எல்லாம் தெரிந்து தான் நாங்கள் எழுதுகிறோம் என்றுச் சொல்வீர்களானால், கீழ் கண்ட வரிகளை முதலில் படியுங்கள்:

"முஸ்லீம்கள் கிறிஸ்தவம் தான் உண்மை மார்க்கம் என்றும், முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்றும், குர்‍ஆன் என்பது இறைவன் அருளிய வேதம் இல்லை என்பதையும் நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டே, முஸ்லீம்கள் வறட்டு கௌரவத்தால், கிறிஸ்தவத்தை எதிர்க்கிறார்கள்"

என்று நான் சொன்னால் எப்படி இருக்கும்? எந்த காரணத்தால் இப்படி இவர் சொல்கிறார்? என்று கேட்கத்தோன்றுகிறது அல்லவா உங்களுக்கு? அதே போலத்தான், நானும் உங்களை கேட்கிறேன், எதை அடிப்படையாக வைத்துக்கொண்டு, "இஸ்லாம் உண்மை மார்க்கம்" என்று கிறிஸ்தவர்களுக்கு தெரியும் என்று நீங்கள் சொல்கிறீர்கள்? மனிதனின் உள்ளத்தில் இருப்பது தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், முதலாவது அம்மனிதன் அதை சொல்லவேண்டும், அல்லது நீங்கள் இறைவனாக இருக்கவேண்டும்?

இவை இரண்டும் இல்லாமல் எப்படி உங்களால் இப்படி பிரயோஜமில்லாத "அறிக்கைகளை" வெளியிடமுடிகிறது?

சரி, எங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் சொன்னதால், "கிறிஸ்தவர்கள் இஸ்லாம் பற்றி என்ன கருதியிருக்கிறார்கள் என்று சொல்லிவிடுகிறேன்."

3. "மார்க்கம் வேண்டாம்" என்றுச் சொல்பவனை இஸ்லாம் போல கிறிஸ்தவம் கொல்வதில்லை, அல்லது மனிதனை கொல்லச்சொல்லும் ஷரியா சட்டம் எங்களுக்கு இல்லை:

ஒரு முஸ்லீம் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளும் பொது, எங்கே இவர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று பயந்துக்கொண்டு வாழுகிறான். பல இஸ்லாமிய நாடுகளிலும் இந்த சட்டம் உண்டு, அதாவது ஒருவன் இஸ்லாமை விட்டு கிறிஸ்தவனானால், அவனுக்கு மரண தண்டனை உண்டு. செய்திகளிலும் நாம் இதனை பார்க்கமுடியும். கிறிஸ்தவத்தில் இப்படி "கொடூரமான‌ சட்டமில்லை", விருப்பமிருப்பவன் இருக்கட்டும் இல்லையானால் போகட்டும், அவ்வளவு தான். வேண்டுமானால், அவன் குடும்ப நபர்கள் அவனுக்கு அறிவுரை கூறுவார்கள், புத்தி சொல்வார்கள், கேட்கமாட்டேன் என்றால் விட்டுவிடுவார்கள். ஆனால், பைபிள் அவனை கொல்லுங்கள் என்று குர்‍ஆன் போல சொல்வதில்லை.

உண்மை இப்படி இருக்க, ஒரு கிறிஸ்தவன் முஸ்லீமாக மாறினால் அவனுக்கு தன் "புதிய இஸ்லாமிய நம்பிக்கையை" வெளிக்காட்ட தடைகள் இல்லை. தன்னை கிறிஸ்தவர்கள் கொன்றுவிடுவார்கள் என்று அவன் பயந்து வாழவேண்டிய அவசியமில்லை. ஆனால், ஒரு முஸ்லீம் கிறிஸ்தவனானால், பல ஆண்டுகள் கடந்தும் தன் நம்பிக்கையை அப்படியே மூடி வைப்பான், காரணம் உயிர்... உயிர்... உயிர்.... மட்டுமல்ல, பல இஸ்லாமிய நாடுகளில் அவன் வாழும் இடத்தில் பிரச்சனை வரும், வேலையில் பிரச்சனை வரும். இப்படி பல கொடுமைகள் இஸ்லாமின் பெயரில் நடந்துக்கொண்டு இருக்கிறது.

நான் இங்கு சொல்லவிரும்புவது இது தான், பல முஸ்லீம்கள் "கிறிஸ்தவம் தான் உண்மை மார்க்கம் என்று நம்பியிருப்பார்கள்", ஆனால், வெளியே சொல்லமுடியாமல் தவிப்பார்கள். ஆனால், ஒரு கிறிஸ்தவன் முஸ்லீமாக மாறி தன்னை மறைத்துக்கொண்டு வாழமாட்டான், அப்படி அவனை மறைந்து வாழச்சொல்வீர்களா நீங்கள்! அடேங்கப்பா மலைகளை கவுத்துவிடமாட்டீர்கள் நீங்கள்?! உண்மை மார்கத்தை ஒருவன் ஏற்றுக்கொண்டாலும் அதற்கு இவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்றுச் சொல்லி, உலகை ஒரு வழி ஆக்கிவிடமாட்டீர்கள் நீங்கள்!

எனவே, நீங்கள் சொல்வது தவறு, ஒருவன் முஸ்லீமானால், அவன் உடனே அதை வெளிப்படுத்துவான், ஆனால், ஒரு முஸ்லீம் கிறிஸ்தவனானால், அவன் இழக்கவேண்டியது மிகவும் அதிகமாக இருக்கும். இதற்கு காரணம், இஸ்லாம் கொடூரம், கிறிஸ்தம் அமைதி என்பதால் தான்.

4.இஸ்லாம், "பொய் மார்க்கம்" என்று எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தெரியும்:

a) இன்னொரு வேதம், இன்னொரு நபி கிறிஸ்தவர்களுக்குத் தேவையில்லை:

பைபிளில் எங்களுக்கு தேவையான எல்லா கட்டளைகளும், நல்ல வழியும், இரட்சிப்பும் உண்டு. எனவே, இன்னொரு வேதம் எங்களுக்குத் தேவையில்லை. நான் ஒரு நபியை எழுப்புவேன், அவரை நம்புங்கள், அவரை அப்படியே அச்சடித்தது போல பின்பற்றுங்கள், அவரின் உடை, நடை பாவனையை அப்படியே காபி அடியுங்கள், என்று இயேசு எங்களுக்குச் சொல்லிவிட்டுப்போகவில்லை. பரிசுத்த ஆவியானவர் உங்கள் உள்ளங்களில் வருவார், அவர் உங்களை நீதியில், சத்தியத்தில் நடக்க உதவிச்செய்வார், நீங்கள் தவறு செய்ய முற்படும் பொது உங்களை கடிந்துக்கொள்வார்,எல்லாரிடத்திலும் அன்பு கூறுங்கள், அதன் மூலம் நீங்கள் என் சீடர்கள் என்று உலகம் அறிந்துக்கொள்ளட்டும் என்று பல அறிவுரைகளை கட்டளைகளை இயேசு கொடுத்துள்ளார். அப்படியே பெந்தகோஸ்தே நாளன்று, பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். குர்‍ஆனை கிறிஸ்தவர்கள் வேதம் என்று நம்புவதுமில்லை, முகமது ஒரு தீர்க்கதரிசி என்று நம்புவதுமில்லை, எங்களுக்கு இப்படிப்பட்ட வேதமும், நபியும் தேவையும் இல்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எனவே, உங்கள் கிளிப்பிள்ளை அறிக்கைகளை நாங்கள் நம்பத்தயாராக இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

b) ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்ட ஓநாய்கள் வருவார்கள் என்றும் இயேசு எச்சரித்துள்ளார்:

இயேசுவின் நற்செய்தியையே நாங்கள் நம்புகிறோம். வேறு ஒரு நற்செய்தி(சுவிசேஷம்) எங்களுக்குத் தேவையில்லை. உலகத்தில் பல பேர் எழும்பி, பல பேரை குழப்புவார்கள் என்றும், ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்ட ஓநாய்கள் வருவார்கள் என்றும் இயேசு எச்சரித்துள்ளார்.

கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் (மத்தேயு 7:15)


இப்படி பலபேர் "தங்களை இயேசுவிற்கு அடுத்த தீர்க்கதரிசிகள்" என்று சொல்லிக்கொண்டு வந்தார்கள், மரித்தார்கள். எனவே, நபி என்று சொல்லிக்கொண்டு வருபவர்களையும் போகிறவர்களையும் நாங்கள் நம்பவேண்டிய அவசியம் இல்லை.

c) வேறு ஒரு சுவிசேஷம் கொண்டுவருபவன் "சபிக்கப்பட்டவன்":

நாங்கள் நம்பியிருக்கின்ற சுவிசேஷம் தவிர வேறு ஒரு சுவிசேஷம் கொண்டுவருபவன், அவன் தேவதூதனே ஆனாலும், அவன் சபிக்கப்பட்டவன் என்று பைபிள் சொல்கிறது.

நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.(கலாத்தியர் 1:8,9)


இஸ்லாம் படி பார்த்தால், இந்த வசனத்தின் படி காபிரியேல் தூதன் சபிக்கப்பட்டவன். எனவே, கிறிஸ்தவர்கள் "இஸ்லாம் உண்மை மார்க்கம் அல்ல என்று தான்" நம்பியிருக்கிறார்கள். கிறிஸ்தவர்களில் "இஸ்லாம் தான் மெய் மார்க்கம்" என்று நம்புகிறவன், எப்போதோ இஸ்லாமுக்கு சென்று இருப்பான் அல்லவா? அவனவனுக்கு தன் தன் மார்க்கம் மெய்மார்க்கம். இதை நான் ஏன் எழுதவேண்டி வந்தது என்றால், "கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைப் பற்றிய அறிக்கையை" இஸ்லாமியர்களே முடிவு செய்து சொன்னதால், உண்மையை அழுத்தமாக சொல்லவேண்டி வருகிறது.

d) பெயரளவிற்காகக் கூட கிறிஸ்தவர்கள், முகமதுவை நபி என்று நம்பமாட்டார்கள்:

இயேசுவின் வாழ்க்கையை நாங்கள் படிக்கிறோம், அதன்படி வாழ முயற்சி எடுக்கிறோம். ஒருவேளை கிறிஸ்தவர்களாகிய எங்களில் சிலர், "இயேசு சொன்னது போல, உன்னைப்போல் பிறனையும்(அவன் இந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லீமாக இருந்தாலும் சரி, நாத்தீகனாக இருந்தாலும் சரி) நேசிப்பாயாக" என்ற கட்டளையை சரியாக பின்பற்ற தவறினாலும், அந்த கட்டளை மிகவும் உன்னதமானது, இறைவன் கொடுத்தது என்று ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் வழி அன்பின் வழி. இயேசு சொன்னது போல, நீங்கள் அன்புள்ளவர்களாக இருந்தால், நீங்கள் என் சீடர்கள் என்று உலகம் அறிந்துக்கொள்ளும், என்ற வார்த்தைக்கு இணங்க, நாங்கள் நடக்க விரும்புகிறோம். அதற்காகத்தான் நீங்கள் எவ்வளவு கேவலமான வார்த்தைகளை சொன்னாலும், எங்கள் இயேசுவைப்போல பொருத்துக்கொண்டு போய்க்கொண்டு இருக்கிறோம்.

ஒருவர் "தன்னை தீர்க்கதரிசி அதுவும் இயேசுவிற்கு அடுத்தபடியாக வந்தவர், உலகத்திற்கு வெளிச்சம் கொடுக்க வந்தவர், சத்திய மார்க்கம் பற்றி சொல்லவந்தவர் என்றுச் சொல்லும் போது, அவருக்கு என்னென்ன‌ குண‌ங்க‌ள் குறைந்த‌ ப‌ட்ச‌ம் இருக்க‌வேண்டும்" என்று எங்க‌ளுக்கு தெளிவாக‌த்தெரியும்.

இந்த வகையில் கிறிஸ்தவர்கள் முகமதுவின் வாழ்க்கையை முழுவதும் தெரிந்துக்கொண்ட பிறகு அவரை ஒரு "பெயரளவிற்காகவாவது, ஒரு நபியாக" நினைக்கவும் எங்களுக்கு மனம் இடம் கொடுப்பதில்லை.

உதாரணத்திற்கு: கிறிஸ்தவத்தில் ஒருவரை "பிஷப்பாக, போதகராக, மூப்பராக etc." நியமிக்க அவருக்கு இருக்கவேண்டிய குணங்கள் என்ன என்று பைபிள் சொல்கிறது. குறைந்த பட்சம் ஒரு போதகருக்கு இருக்கவேண்டிய இந்த குணங்களில், உலகத்தில் சத்திய மார்க்கத்தை பரப்ப வந்தவர் என்று இஸ்லாமியர்களால் சொல்லப்படும் முகமதுவிடம் இந்த குணங்களில் எத்தனை இருக்கிறது என்று நீங்களே சோதித்துப்பாருங்கள். சாதாரண மக்கள் நியமிக்கும் ஊழியர்களுக்கே இந்த தகுதிகள் இருக்கவேண்டும் என்று பைபிள் சொல்வதை படிக்கும் கிறிஸ்தவர்களுக்கு, அல்லா நியமித்த முகமதுவிற்கு எவ்வளவு தகுதிகள் இருக்கவேண்டும் தெரியாதா?

மூப்பருக்கு இருக்கவேண்டிய குணங்கள்:

குற்றஞ்சாட்டப்படாதவனும்,

ஒரே மனைவியையுடைய புருஷனும்,

துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்.

ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய்,

குற்றஞ்சாட்டப்படாதவனும்,

தன் இஷ்டப்படி செய்யாதவனும்,

முற்கோபமில்லாதவனும்,

மதுபானபிரியமில்லாதவனும்,

அடியாதவனும்,

இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்,

அந்நியரை உபசரிக்கிறவனும்,

நல்லோர்மேல் பிரியமுள்ளவனும்,

தெளிந்தபுத்தியுள்ளவனும்,

நீதிமானும்,

பரிசுத்தவானும்,

இச்சையடக்கமுள்ளவனும்,

ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும்,

எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி,

தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.(தீத்து 1:6-9)

சபையில் உதவிக்காரர்களின்(Deacon) தகுதிகள்

மேலும் உதவிக்காரரானவர்கள்

ஒரே மனைவியையுடைய புருஷருமாய்,

தங்கள் பிள்ளைகளையும்சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும்.( 1 தீமோ 3:12)

சபையில் கண்காணிப்பவரின்(பிஷப்) தகுதிகள்:

ஆகையால் கண்காணியானவன்

குற்றஞ்சாட்டப்படாதவனும்,

ஒரே மனைவியை உடைய புருஷனும்,

ஜாக்கிரதையுள்ளவனும்,

தெளிந்த புத்தியுள்ளவனும்,

யோக்கியதையுள்ளவனும்,

அந்நியரை உபசரிக்கிறவனும்,

போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.

அவன் மதுபானப்பிரியனும்,

அடிக்கிறவனும்,

இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல்,

பொறுமையுள்ளவனும்,

சண்டைபண்ணாதவனும்,

பணஆசையில்லாதவனுமாயிருந்து,

தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும்,

தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.

ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது. அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும்.(1 தீமோ 3:2-7)

கர்த்தருடைய ஊழியக்காரனுக்கு இருக்கவேண்டிய தகுதிகள்:

கர்த்தருடைய ஊழியக்காரன்

சண்டைபண்ணுகிறவனாயிராமல்,

எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும்,

போதகசமர்த்தனும்,

தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.

எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும், பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.(2 தீமோ 2:24-26)

நான் உங்களை குற்றப்படுத்த இதனை எழுதவில்லை, நாங்கள் இந்த தகுதிகள் உள்ளவர்களைத் தான் குறைந்த பட்சம் தேவனுடைய ஊழியக்காரர்களாக நியமித்துக்கொள்கிறோம். அப்படி இருக்கும் போது, இந்த தகுதிகளில் பலவற்றை இழந்துள்ள முகமதுவை எப்படி கிறிஸ்தவர்கள் "தீர்க்கதரிசி" என்று நம்புவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அவர் சொன்னது தேவன் சொன்ன வேதம் என்று கிறிஸ்தவர்கள் நம்புவார்கள் என்று எப்படி முடிவு செய்தீர்கள்?

[இன்று நாம் காணும் உலகத்தில் இந்த குணங்கள் உள்ளவரையா நீங்கள் தேவனின் ஊழியக்காரர்களாக் நியமிக்கிறீர்கள், அப்படி சில ஊழியர்கள் இருப்பதாக தெரியவில்லையே என்று என்னைக் கேட்டால், இந்த தகுதிகள் இல்லாதவரை யாராவது போதகராக நியமித்தால், ரொம்ப நாட்கள் நிலைக்காது, அவரை நியமித்தவர் அதன் பலனை நிச்சயமாக அடைவார். செய்திகளில் சில ஊழியர்கள் சபை பணத்தை கலவாடினார்கள், பெண்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று நாம் படிக்கிறோமே, இவர்கள் எல்லாம் இந்த தகுதியில்லாத கேடகரி தான். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி, நீங்களும் உங்கள் இஸ்லாமிய மசூதிகளில் நியமிக்கும் ஊழியருக்கு என்ன என்ன தகுதிகள் இருப்பவரை நியமிக்கிறீர்கள், மற்றுமுள்ள இமாம்கள், இன்னுமுள்ள ஊழியர்களை எப்படி நியமிக்கிறீர்கள் என்று எங்களிடம் பகிர்ந்துக்கொண்டால், தமிழ் மக்கள் அனைவரும் இஸ்லாம் பற்றியும் சிறிது அறிந்துக்கொள்வார்கள்]]

முடிவுரை: "கிறிஸ்தவர்கள் இஸ்லாமை உண்மை மார்க்கம்" என்று நம்பமாட்டார்கள் என்பதை பைபிளை அடிப்படையாகக் கொண்டு இன்னும் பல தகவல்களை கொடுக்கமுடியும், இந்த கட்டுரைக்கு இந்த தகவல்கள் போதும் என்று எண்ணுகின்றேன். மேலும் நீங்கள் ஏதாவது விவரம் கேட்டால் தருவேன்.

தமிழ் இஸ்லாமிய அறிஞர்களுக்கு: இயேசுவின் போதனைகளை கடைபிடிக்கும் எந்த நபரும் முகமதுவின் போதனையை நமபவேண்டுமானால், அது அற்புதம் என்று தான் சொல்லவேண்டும். நீ உன்னில் அன்பு கூருவதுபோல பிறனிடத்தில் அன்பு கூறவேண்டும் என்ற இயேசுவின் கட்டளையை நம்பும் கிறிஸ்தவன், அல்லாவின் பாதையில் போரிடு என்ற குர்‍ஆனின் கட்டளையை நம்புவது என்பது உலக அதியங்களில் ஒன்று.

நாங்கள் பைபிளை நம்புகிறோம், இயேசுவை நம்புகிறோம், அவ்வளவுத்தான், இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நாங்கள் கனவிலும் நம்புவதில்லை.

Source: http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=12579#12579
 
 

ஞாயிறு, 16 மார்ச், 2008

இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்

Answering IslamKalvi:
இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்



முன்னுரை: தலைப்பே ஒரு விதமாக உள்ளதே என்று திகைக்கவேண்டாம், எல்லாம் காரணமாகத்தான் இந்த தலைப்பை நான் வைத்தேன். அதாவது, இஸ்லாம் கல்வியில் வெளியான கட்டுரையில் இயேசுவைப்பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு நாம் தொடர்ச்சியாக பதில்களை கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். இந்த கட்டுரையில், எம். எம். அக்பர் அவர்கள் முன்வைக்கும் திராட்சை ரசம் குற்றச்சாட்டிற்கு என் பதிலை தருகிறேன்.

எம். எம். அக்பர் அவர்கள் எழுத, தேங்கை முனீப் அவர்கள் மொழிபெயர்க்க, இஸ்லாம் கல்வி வெளியிட்ட கட்டுரையிலுருந்து சில வரிகள்:

தீர்க்கதரிசிகளே தீமை புரிந்தனரா?

...

6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து ...... திருமண விருந்தில் தண்ணீரை மதுவாக மாற்றி மக்களுக்குக் கொடுத்து அவர்களுக்குப் போதையூட்டியவராகவும் (யோவான் 2:1-11) அறிமுகப்படுத்துகின்றது. ...

Source: http://www.islamkalvi.com/religions/quran_bible_compare2.htm
Formats mine



எம். எம். அக்பர் அவர்களின் குற்றச்சாட்டு:

ஒரு திருமண விருந்தில் இயேசு தண்ணீரை மதுவாக மாற்றினார். அதை மக்களுக்கு கொடுத்து அவர்களுக்கு போதையூட்டினார்.

இந்த முடிவுக்கு எம். எம். அக்பர் அவர்கள் எப்படி வந்தார்கள் என்று கேட்டால்?

a) அவர் யோவான் 2 : 1-11 வசனங்களை படித்துள்ளார்,

b) அதைப்பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார்,

c) சிந்தித்துள்ளார்,

d) கடைசியாக தன் கண்டுபிடிப்பை சொல்லியுள்ளார்.

இது தான் இஸ்லாமிய அறிஞரின் ஆராய்ச்சியின் முடிவு.

10ம் வகுப்பு படிக்கும் மாணவன் அல்லது மாணவிக்கு ஒரு பரிட்சை:

நான் இந்த யோவான் 2:1-11 வசனங்களை 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கோ, மாணவிக்கோ கொடுத்து, இவ்வசனங்களை படிக்கச்சொல்லி, கீழ் கண்ட சில கேள்விகளுக்கு பதில் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள். இந்த மாண(வி)வன் என்ன பதில் சொல்வா(ள்)ன் என்பதை, இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் சிந்தித்துப்பாருங்கள். பிறகு நாம் இஸ்லாமிய அறிஞர் எம். எம். அக்பர் அவர்களின் ஆராய்ச்சியைப்பற்றி சிறிது சிந்திப்போம்.

கீழ் கண்ட இரண்டு பத்திகளை படித்து கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் எழுதவும்:

யோவான் 2:1-11 வசனங்கள்:


மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு; ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள்.

யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள். அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான். இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவர்டத்தில் விசுவாசம் வைத்தார்கள்.



கேள்விகள்:



கேள்வி 1: திருமணத்திற்கு யார் யார் அழைக்கப்பட்டு இருந்தார்கள்?

A) மரியாளும் இயேசுவும்

B) மரியாளும், இயேசுவின் சீடர்களும், மற்றும் இயேசுவும் அழைக்கப்பட்டு இருந்தார்கள்.

C) இயேசுவின் சீடர்களும், மரியாளும்

10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்: B

கேள்வி 2: யூதர்களின் திருமணங்களில்(குறைந்த பட்சம் இந்த திருமணத்தில்) திராட்சை ரசம் என்பது, திருமண விருந்தில் ஒரு பாகமா? இல்லையா?

A) திருமண விருந்துகளில் (குறைந்த பட்சம் இந்த திருமணத்தில்) திராட்சை ரசமும் ஒரு பாகம் தான்.

B) இல்லை, யூத திருமண விருந்துகளில் (குறைந்த பட்சம் இந்த திருமணத்தில்) திராட்சை ரசம் ஒரு பாகம் அல்ல.

10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்: A

கேள்வி 3: இயேசு ஏன் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார்?

A) திருமண விருந்தில் திராட்சை ரசம் பற்றாக்குறை ஏற்பட்டதால்.

B) திராட்சை ரசம் பற்றாக்குறை இல்லை, இருந்தும் வேண்டுமென்றே மக்களுக்கு போதையூட்டவேண்டும் என்ற கெட்ட தீய எண்ணத்தோடு இயேசு அற்புதம் செய்தார்.

C) இயேசுவின் தாய் மரியாள், இயேசுவை வேண்டிக்கொண்டதால்.

D) A மற்றும் C இவை இரண்டும்.

10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்: D

கேள்வி 4: இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்ட திராட்சை ரசம் என்பது "போதை அளிப்பதாக கருதப்பட்டு ஒரு குறிப்பிட்ட விருந்தினர்களுக்கு(பெரியவர்களுக்கு ) மட்டும் பரிமாறப்பட்டதா"?

அல்லது

போதை தரும் ரசமாக இல்லாமல், சாதாரண விருந்து திராட்சை ரசமாக எல்லாருக்கும் பரிமாறப்பட்டதா?


A) பெரியவர்களுக்கு மட்டும் பரிமாறப்பட்டது

B) எல்லாருக்கும் பரிமாறப்பட்டது. பெரியவர்களுக்கும், குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் பரிமாறப்பட்டதாக எந்த தகவலும் இந்த பத்தியில் இல்லை.

10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்:B

கேள்வி 5: திருமணவிருந்தில் இப்படி திராட்சை ரசம் பரிமாறப்பட்டது, யூதர்களின் திருமண முறையில் இல்லாததால், விருந்தினர்கள் தங்கள் முன் வைக்கப்பட்ட திராட்சை ரசம் குறித்து, "இப்படி போதை தரும் பொருளை எப்படி திருமணத்தில் பரிமாறினாய்?" என்று கேள்வி கேட்டு விருந்துக்கு அழைத்தவரிடம் முறையிட்டார்களா? மற்றும் எதுவும் சாப்பிடாமல் எழுந்துவிட்டார்களா?

A) ஆம், திராட்சை ரசம் திருமணங்களில் சாதாரணமாக பரிமாறப்படும் பொருளாக இல்லாததினால், விருந்தாளிகள் விருந்துக்கு அழைத்தவரை திட்டி, எழுந்து போய் விட்டார்கள்.

B) இல்லை, யூதர்கள் திருமணங்களில் பயன்படுத்தும் போதையில்லாத திராட்சை ரசம் என்பதால், விருந்துக்கு அழைத்தவரை கூப்பிட்டு, நல்ல ரசத்தை கடைசி வரை வைத்ததற்காக அவரை புகழ்ந்தார்கள்.

10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்: B

கேள்வி 6: இயேசு திராட்சை ரசமாக மாற்றியதை குடித்துவிட்டு, விருந்தாளிகள், எல்லாரும் போதையில் திளைத்து, சண்டை போட்டுக்கொண்டு, ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு, திருமண விருந்தின் சந்தோஷத்தை கெடுத்தார்களா? இதனால், கோபமுற்ற திருமண விருந்துக்கு அழைத்தவர், இயேசுவை அழைத்து ஏன் இப்படி செய்தீர் என்று கேட்டாரா?

A) இல்லை, படித்த பாகத்தில் இப்படி நடந்ததாக எந்த தகவலும் இல்லை.

B) ஆம், இப்படியே நடந்தது, மாப்பிள்ளை இயேசு கடிந்துக்கொண்டார்.எல்லாரும் போதையில் திருமண விருந்தின் மகிழ்ச்சியை கெடுக்கும் அளவிற்கு பிரச்சனை செய்தார்கள்.

10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்: A



மேற்கண்ட 6 கேள்விகளுக்கும் ஒரு 10ம் வகுப்பு மாணவன் என்ன பதில் சொல்வான் என்று நானே பதில் கொடுத்துள்ளேன். இதை படிக்கும் நீங்கள், மேலே உள்ள 11 வசனங்களை படித்து புரிந்துக்கொண்டு, நான் கொடுத்த பதில்கள் சரியானவையா இல்லையா என்று சோதித்துப்பாருங்கள்.

[நீங்கள் ஒருவேளை நாத்தீகராக இருப்பீரானால், இயேசு எப்படி அற்புதம் செய்யமுடியும், இதை நாங்கள் நம்பத்தயாராக இல்லை என்றுச் சொல்வீர்கள். ஆனால், நான் சொல்வது என்னவென்றால், இந்த வசனங்கள் உண்மை என்று எண்ணி பதிலைத் தாருங்கள் என்பது தானே தவிர, அற்புதம் செய்தாரா இல்லையா என்பது இங்கு கேள்வியில்லை]

மேலேயுள்ள 11 வசனங்களை, எம். எம். அக்பர் அவர்கள் கீழ்கண்டவாறு புரிந்துக்கொண்டுள்ளார்.


மற்றுமொரு முறை அவர் எழுதியதை படித்துப்பார்க்கவும்:

6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து ...... திருமண விருந்தில் தண்ணீரை மதுவாக மாற்றி மக்களுக்குக் கொடுத்து அவர்களுக்குப் போதையூட்டியவராகவும் (யோவான் 2:1-11) அறிமுகப்படுத்துகின்றது.



 

1) இந்த திருமணத்தில் பரிமாறப்பட்ட திராட்சை ரசம் "போதை தரக்கூடியது" என்று தவறாக கருதிவிட்டார் எம். எம். அக்பர் அவர்கள்.

2) அதாவது, சில இந்திய திருமணங்களில் காண்பது போல, மாப்பிள்ளை தன் நண்பர்களுக்கு நல்ல விருந்து கொடுப்பார், அதாவது மதுபானங்களை வாங்கி நண்பர்களுக்கு தனியாக ஹோட்டல்களில் அறைபோட்டு கொடுப்பார். அவர்கள் இரவெல்லாம் குடித்து கும்மாளம் போடுவார்கள். இப்படி நடந்ததாக இவர் எண்ணிவிட்டார் (மக்கனிக்கவும், எண்ணிவிடவில்லை, வேண்டுமென்றே தெரிந்தே இப்படி எழுதுகிறார்).

3) திராட்சை ரசத்திற்கும் போதை தரும் திராட்சை ரசத்திற்கும் நம் இஸ்லாமிய அறிஞர் எம். எம். அக்பர் அவர்களுக்கு வித்தியாசம் தெரியாமல் போய் விட்டது. [ஆனால், இஸ்லாமிய சொர்க்கத்தில் அல்லா முஸ்லீம்களுக்காக ஓடவிட்டு இருக்கும் "மதுபான நதியில்" எடுத்துக்குடித்தால், போதையிருக்காது என்று அவருக்குத் தெரியும்.]

எம். எம். அக்பர் அவர்களுக்கு சில கேள்விகள்:

1) முதலாவது, நீங்கள் யோவான் 2:1:11 வரையுள்ள வசனங்களை உண்மையாக படித்து தான் இந்த வரிகளை எழுதினீர்களா?

2) யூத திருமணங்களில் திராட்சை ரசம் பரிமாறுவது ஒரு பொதுவான பழக்கம் என்பதை மேற்கண்ட 11 வசனங்களை படித்தும் உங்களுக்கு விளங்கவில்லையா?

கீழ் கண்ட வசனங்களை படித்துப்பாருங்கள், இந்த வசனங்கள் எதை உங்களுக்கு தெரிவிக்கிறது?


யோவான் 2:9 அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:

யோவான் 2:10 எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்


(உங்களுக்கு முஸ்லீம்கள் திருமணங்களுக்கு கால தாமதாக சென்ற பழக்கமில்லை போல் இருக்கிறது, அப்படி சென்று இருந்தீர்களானால், உங்களுக்கு புரிந்திருக்கும், அதாவது காலதாமதாக வந்தால் என்ன கிடைக்கும் என்று, வெறும் பிரியாணி மட்டும் தான் கிடைக்கும், அதில் துண்டுகள் இருக்காது ஏனென்றால், முதலில் எல்லாருக்கும் திருப்தியாக பரிமாறிவிடுவார்கள். பெரும்பான்மையாக நடுத்தர குடும்ப திருமணங்களில் இப்படி நடப்பது உண்டு.)

3) திராட்சை ரசம் எந்தெந்த சூழ்நிலையில் பைபிள் காலங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று நீங்கள் படித்துள்ளீர்களா?

4) நீங்கள் மேற்கோள் காட்டிய வசனங்களில், மக்கள் குடித்து "போதை கொண்டு" கும்மாளம் போட்டதாக அல்லது மதி மயங்கியதாக ஏதாவது ஆதாரம் காட்டமுடியுமா?



எம். எம். அக்பர் அவர்களுக்கு சவால்:

யூதர்களுக்கு திராட்சை ரசம் திருமண விருந்துகளில் பரிமாறப்படுவது பழக்கமில்லை, அதை முதல் முதலில் இயேசு தான் புகுத்தினார், மக்களை போதைக்கு உட்படுத்தினார் என்று உங்களால் நிருபிக்கமுடியுமா?

பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டு காலங்களில் மக்கள் திராட்சை ரசத்தை தினமும் பயன்படுத்தவில்லை, திருமண விருந்துகளில் போதை இல்லாத ரசத்தை பயன்படுத்த வில்லை. இயேசு மட்டும் தான் அதை முதல் முதலில் இப்படி அற்புதம் செய்து, மக்களை போதைக்கு உட்படுத்தினார் என்று உங்களால் நிருபிக்க முடியுமா?


திராட்சை ரசம் பற்றிய சிலவிவரங்கள்:

திராட்சை ரசத்தை பழங்களிலிருந்து பிழியும் போது, அதில் போதை இருக்காது, அதை சரியான அளவில் எடுத்துக்கொண்டால், அது நன்மையைத் தரும். அதே நேரத்தில் பல நாட்கள் அந்த இரசத்தை அப்படியே வைத்தால், அதில் ஆல்கஹால் உருவாகி அது ஒரு போதைப் பொருளாக மாறிவிடும். ஆனால், அந்த போதை தரும் மதுபானத்தையே முஸ்லீம்கள் குடிக்கலாம் என்று அல்லா ஆரம்பத்தில் அனுமதி கொடுத்துள்ளாரே

அல்லா மதுபானத்தையே(Strong Drink) ஆரம்ப காலத்தில் அனுமதித்து இருந்ததாக குர்‍ஆன் வசனம் சொல்கிறதே.


(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" ....... (குர்‍ஆன் 2:219)



இந்த கானா ஊர் திருமணத்தில் விருந்தினருக்கு கொடுத்தது, போதை இல்லாத ரசமாகும். நீங்கள் இல்லை என்று வாதாடமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், ஒருவன் தன் திருமணத்திற்கு அழைக்கும் அனைவருக்கும் சாப்பிடும்போது, மிகவும் அதிக அளவு போதைத் தரும் ரசத்தை கொடுத்து, அவர்கள் அதை அதிகமாக சாப்பிட்டு, போதை அடைந்து திருமண வீட்டை ஒரு சந்தையாக மாற்ற விரும்புவானா? சிந்தித்துப்பாருங்கள்.

தன் மகனை ஆசீர்வதிக்கும் போது, ஈசாக்கு கீழ் கண்டவாறு ஆசீர்வதிக்கிறார்:

தேவன் உனக்கு வானத்துப்பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக.(ஆதியாகமம் 27:28)



அந்த காலத்தில் அவர்கள் இடங்களுக்கு ஏற்ப பயிர்வகைகளை பயிரிட்டனர், அதனால், தானியமும்,திராட்சை இரசமும் குறையாமல் இருக்கவேண்டும் என்று ஆசி வழங்கினர். தானியமும் திராட்சை இரசமும் அவர்களுக்கு செழுமையை குறிக்கிறது, இவைகள் அவர்களது பயிர்வகைகள் ஆகும். இதே இந்தியாவாக இருந்திருக்குமானால், அரிசியும்,பருப்பு, பாலும் தேனும் நெய்யும் என்றுச் சொல்லி ஆசீர்வதித்து இருப்பார்கள்.

தேவன் மக்களை ஆசீர்வதிக்கும் போதும், திராட்சை பயிர் வகையைப்பற்றியும் குறிப்பிடுகிறார்:

உன்மேல் அன்புவைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார். (உபாகமம் 7:13)

நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி, (உபாகமம் 11:14)



இதே திராட்சை ரசம் போதையுள்ளதாக மாறின மதுபானத்தை குறித்து எச்சரிக்கை:

மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே. (நீதிமொழிகள் 23:20)

நீதிமொழிகள்: 23:29-33

ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே .

மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.

முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.உன் கண்கள் பரஸ்திர்களை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.

1 தீமோ 3:3

அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசையில்லாதவனுமாயிருந்து,



புதிய ஏற்பாட்டு காலத்தில் போதையில்லாத திராட்சை ரசத்தையும் சாப்பிடுவதையும் நிறுத்திவிட்டார்கள். இன்னும் திராட்சை ரசத்தைப்பற்றி அதிகமாக எழுதலாம், ஆனால், இப்போதைக்கு இது போதும், யாராவது இக்கட்டுரைக்கு மறுப்பு அல்லது பதில் எழுதுவீர்களானால், மற்ற விவரங்களை தருகிறேன்.

இஸ்லாமும் மதுபானமும்: முஸ்லீம்கள் குடித்து போதைக்கொண்டு நமாஜ் செய்ய அனுமதித்த அல்ல

எம். எம். அக்பர் அவர்கள், இயேசு ஒரு திருமண விருந்தில் போதையில்லாத திராட்சை இரசத்தை மக்களுக்காக கொடுத்ததை குற்றம் சாட்டுகிறார், ஆனால், இஸ்லாம் மதுபானம் பற்றி என்ன சொல்கிறது என்று கவனித்தாரோ இல்லையோ?

முகமது நபியாக தன்னை வெளிக்காட்டிய பிறகு கூட இஸ்லாமிய மக்கள் குடிக்கவும், போதைக்கொள்ளவும் அல்லா அனுமதி அளித்துள்ளார்.

1. குடிக்க அல்லாவின் அனுமதி:

மதுபானம் குடிக்கலாமா இல்லையா என்று முகமதுவிடம் முஸ்லீம்கள் கேட்ட போது, அல்லா மதுபானத்தை தடை செய்யாமல், மதுபானம் குடிப்பதில் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது. நன்மையை விட தீமை தான் அதிகம் என்றுச் சொன்னாரே தவிர, பாருங்கள் முஸ்லீம்களே இனி நீங்கள் குடிக்கவேண்டாம் இது என் கட்டளை என்று சொல்லவில்லை. அதனால், முஸ்லீம்கள் குடித்தார்கள், போதை கொண்டார்கள். அல்லா மதுபானத்தையே(Strong Drink) ஆரம்ப காலத்தில் அனுமதித்து இருந்ததாக குர்‍ஆன் வசனம் சொல்கிறதே.


(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" ....... (குர்‍ஆன் 2:219)



இவ்வசனம் இறக்கிய பிறகு முஸ்லீம்கள் குடியை நிறுத்தவில்லை, காரணம் அல்லா தடை செய்யவில்லையே அதனால் தான்.

2. குடித்து போதை கொண்டு, நமாஜ் செய்யும் போது உளரும் முஸ்லீம்கள்:

அல்லா மதுபானத்திற்கு அனுமதி அளித்தவுடன் முஸ்லீம்கள் நன்றாக குடிக்க ஆரம்பித்தார்கள். எந்த அளவிற்கு என்றால், நமாஜ் செய்யும் போது, சொல்லப்படும் சூராக்களை குடிமயக்கத்தில் தாறுமாறாக சொல்ல ஆரம்பித்தார்கள். பாவம் அல்லா என்ன செய்வார்? மறுபடியும் ஒரு வசனத்தை இறக்கினார். "மதுபான தடை வசனம்" அல்லா இறக்கியிருப்பார் என்று நினைக்கிறீர்களா? உங்கள் கணிப்பு தவறு. அதாவது, முஸ்லீம்களே குடியுங்கள் பரவாயில்லை, ஆனால், குடித்து நமாஜ் செய்யும் போது, போதையில் உளரும் அளவிற்கு குடித்துவிட்டால், தொழுகைக்கு வரவேண்டாம் என்று அல்லா வசனம் இறக்கினார். முஸ்லீம்களின் "குடியை நிறுத்தக்கூடாது என்பதில்" அல்லா எவ்வளவு அக்கரை உள்ளவராக இருக்கிறார் பாருங்கள். அல்லாவை விட நம் நாட்டு மருத்துவர்களே மேல், மதுசாப்பிட்டாலும் கொஞ்சமாக சாப்பிடுங்கள், அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டாம், முடிந்தால் விட்டு விடுங்கள் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால், அல்லா இப்படி இல்லை, குடியுங்கள், போதை ஏறட்டும், அப்படி ஏறினால், தொழுகைக்கு வராதீர்கள், தொழுகைக்கு வரவேண்டுமானால், அதற்கு முன்பு குடிக்காதீர்கள் என்றார். என்னே தெய்வம்!


(குர்‍ஆன் 4:43) நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்;. ........ நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.



இந்த வசனத்தை நன்றாக கவனியுங்கள், யாரை குறிப்பிட்டு அல்லா இந்த வசனத்தை இறக்குகிறார்? முஸ்லீம்களை குறித்து தான் என்பது தெள்ளத்தெளிவு. பாவம் அல்லா, குடிபோதையில் நாக்கு குழம்பி தொழுகையில் ஓதும் சூராக்கள் புரியாமல் போகும் அளவிற்கு போதை இருக்குமானால் முஸ்லீம்களுக்கு, தொழுகைக்கு வராதீர்கள் என்று கட்டளையிடுகிறார். அப்படியென்றால், எப்போதும் ஸ்டடியாக பேசும் குடிக்காரன் நமாஜ் படிக்கலாம். அல்லது தொழுகை ஆன பிறகு நாக்கு குழம்பும் அளவிற்கு குடிக்கலாம் என்று தானே இதன் பொருள்.

The Prohibition of Approaching Prayer When Drunk or Junub:

Allah forbade His believing servants from praying while drunk, for one does not know the meaning of what he is saying in that state, and He forbade them from attending the Masjids while sexually impure, except when one is just passing through the Masjid from one door to another. This Ayah was revealed before alcohol consumption was completely prohibited, as evident by the Hadith that we mentioned in Surat Al-Baqarah when we explained Allah's statement,

Source: http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=660&Itemid=59



சரி, இந்த வசனம் இறங்கிய பிறகு தொழுகைக்கு வரும்போது மட்டும் முஸ்லீம்கள் குடிக்கவில்லை என்பது தெளிவு. ஏனென்றால், அல்லா எதை முகமது மூலம் சொன்னாலும் அப்படியே முஸ்லீம்கள் கேட்பார்கள். எனவே, தொழுமை நேரம் தவிர மற்ற நேரங்களில் குடித்தார்கள், போதையில் மயங்கினார்கள் நம் அருமை இஸ்லாமிய நபித்தோழர்கள். அதாவது முகமது நபியாக தன்னை காட்டிவிட்ட பிறகு, குர்‍ஆனின் வசனங்கள் இறங்கிக்கொண்டு இருக்கும் போது, மதுபானம் குடிப்பது தடை செய்யப்படவில்லை. நான் கேட்கிறேன், இஸ்லாமிய அறிஞர்களே, மதுபானம் தடை வரும் வரை, முஸ்லீம்கள் குடித்தார்களா? இல்லையா?

இந்த வசனத்தின் படி சில முஸ்லீம்கள் குடித்துவிட்டு, தொழும் போது, சொல்லப்படும் குர்‍ஆன் சூராக்களை மாற்றி மாற்றி சொல்லியுள்ளார்கள், போதை மூளைக்கு ஏறினால் வார்த்தைகள் எப்படி சரியாக இருக்கும். எனவே, அல்லா, தம்பிகளா, நமாஜுக்கு வரும் போது மட்டும் குடிக்காதீர்களடா! ஏனென்றால், வார்த்தைகள் சரியாக வராது என்று வசனத்தை இறக்குகிறார். ஆக, மதுபான தடை வசனம் வரும் வரை முஸ்லீம்கள் குடித்தார்கள். இதற்கு முகமதுவும் அனுமதி அளித்துள்ளார்.


16:67 பேரீச்சை, திராட்சை பழங்களிலிருந்து மதுவையும், நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள்; நிச்சயமாக இதிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

(And from the fruits of date palms and grapes, you derive strong drink) This indicates that it was permissible to drink it before it was forbidden. It also indicates that strong drink (i.e., intoxicating drink) derived from dates is the same as strong drink derived from grapes. Also forbidden are strong drinks derived from wheat, barley, corn and honey, as is explained in detail in the Sunnah.

http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=2965&Itemid=71



வெங்காய பூண்டு வாடை, மதுபான வாடையை விட தீயது:

சிறிது இங்கு கவனியுங்கள், பல ஆண்டுகள் மக்கள் குடித்துவிட்டு, குடித்த வாடையோடு வந்தாலும் அல்லா தொழுகைக்கு அனுமதியளித்துள்ளார். ஆனால், பூண்டு, வெங்காயம் என்பது மிகவும் தீய‌ வாடையாக‌ மாறிவிட்டது. பூண்டு வெங்காய வாசனையை விட மதுபான வாசனை அல்லாவிற்கு பெரிய பிரச்சனையாக இல்லை. பூண்டு வெங்காயம் உண்பவர் தொழுகைக்கு வரவேண்டியது இல்லை என்று முகமது சொல்லியுள்ளார்.இதை உண்டு முகமதுவுடன் தொழக்கூடாது ஏன்? "பூண்டு வெங்காய வாடை" வரும். ஆனால், மதுபானம் அறுந்தினவர் தொழலாம். இப்படி மதுபானத்திற்கு சொல்லியிருப்பாரா? [பூண்டு வெங்காய வாடை நல்லது என்று நான் சொல்ல வரவில்லை]


பாகம் 1, அத்தியாயம் 10, எண் 855

ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

"பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலம் அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் பல விதமான துர்வாடையுடைய தாவரங்கள் கொண்டு வரப்பட்டன. அது பற்றி நபி(ஸல்) அவர்கள் விபரம் கேட்டபோது அதிலுள்ள கீரை வகைகள் பற்றி விளக்கம் தரப்பட்டது.

தம்முடன் இருந்த ஒரு தோழருக்கு அதைக் கொடுக்குமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தத் தோழர் சாப்பிட விரும்பாமலிருப்பதைக் கண்டபோது 'நீர் உண்ணுவீராக! நீர் சந்திக்காத (பல விதமான) மக்களிடம் நான் தனிமையில் உரையாட வேண்டியுள்ளது. (இதன் காரணமாகவே நான் சாப்பிடவில்லை.)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 856

அப்துல் அஸீஸ் அறிவித்தார்.

ஒருவர் அனஸ்(ரலி) அவர்களிடம் 'வெங்காயம் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்' என்று கேட்டதற்கு அனஸ்(ரலி) 'அச்செடியிலிருந்து (விளைவதை) உண்ணுகிறவர் நம்மை நெருங்க வேண்டாம்' அல்லது 'நம்முடன் தொழ வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' எனக் குறிப்பிட்டார்கள்.

3. கடைசியாகத்தான் அல்லா மதுபான தடையை கொண்டுவந்துள்ளார்:

பல ஆண்டுகள் முஸ்லீம்கள் குடித்தார்கள், வெறித்தார்கள், தப்பு தப்பாக குர்‍ஆன் சூராக்களை ஓதினார்கள், அல்லா நாமாஜ் செய்யும் போது மட்டும் குடிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார், ஆனால் தடை விதிக்கவில்லை. கடைசியாகத்தான் அவர் கட்டளை கொடுக்கிறார்.

(குர்‍ஆன் 5:90 )ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.



குடிப்பது ஷைத்தானின் செயல் என்று குர்‍ஆன் 5:90 யில் சொல்லும் அல்லாவிற்கு இந்த செயல் ஷைத்தானின் செயல் என்று ஆரம்பத்தில் தெரியவில்லையா? இந்த வசனத்திற்கு பிறகு முஸ்லீம்கள் மதுபானம் குடிப்பதை நிறுத்திவிட்டார்கள் மற்றும் இதன் பிறகு மக்காவிற்கு ஹஜ்ஜிற்கு செல்லவேண்டும், பிரயாணத்தின் போது இடையில் சண்டை போட்டுக்கொண்டு எங்கே இவர்கள் பிரச்சனை செய்வார்கள் என்று அல்லா நினைத்து இவ்வசனத்தை இறக்கியுள்ளார் என்று கீழ்கண்ட தொடுப்பில்(http://www.answering-islam.org/Authors/Arlandson/drinking.htm) சொல்லப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், கிட்டத்தட்ட 23 ஆண்டுகள், முகமது நபித்துவம் வகித்தார், குர்‍ஆனில் உள்ள 114 அதிகாரங்கள் உள்ளன. இந்த மதுபானம் தடை செய்யப்பட்ட அதிகாரம் 5ம் அதிகாரம் ஆகும், இது கடையில் வெளிப்பட்டுள்ளது என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள், அதாவது அதிகாரங்கள் வெளிப்பட்ட வரிசையைச் சொன்னால், இந்த 5வது அதிகாரம் 112வதாக வெளிப்பட்டதாம்(Source : http://www.submission.org/Q-T.html).

அதாவது கிட்டத்தட்ட 18-19 வருடங்கள், குடித்துள்ளார்கள முஸ்லீம்கள். கடைசியாகத்தான் அல்லாவிற்கு கொஞ்சம் ஞானம் வந்து,அவர் மதுபானத்தை தடை செய்துள்ளார்.

Maududi says that Sura 5 was revealed in the timeframe of AD 628 and 629, so it is a late sura (Muhammad dies of a fever in AD 632). It lays down rules for a growing community after the Treaty of Hudaybiyah in AD 628 in which Muslims were promised a free and unmolested pilgrimage to Mecca a year later, which took place. So it was important for Muslims to prepare themselves and to give up all intoxicants. Hence, these two verses came down from Allah:

5:90 You who believe, intoxicants and gambling, idolatrous practices, and [divining with] arrows are repugnant acts—Satan's doing: shun them so that you may prosper. 91 With intoxicants and gambling, Satan seeks only to incite enmity and hatred among you, and to stop you remembering God and prayer. Will you not give them up?

Source: http://www.answering-islam.org/Authors/Arlandson/drinking.htm Formats mine



நான் இதோடு என் கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்.

ஒரு கேள்வி: அல்லா முகமது மூலமாக தன் வசனங்களை 18 வருடங்கள் இறக்கும் போது கூட முஸ்லீம்கள் குடித்துக்கொண்டு இருந்தார்கள், அதுவும் போதையில்லாத திராட்சை இரசமல்ல, போதையுள்ள ரசத்தை குடித்தார்கள்.

அதாவது கி.பி. 628-29 என்று வைத்துக்கொண்டால், அதற்கு முன்பு யூதர்கள்,கிறிஸ்தவர்களுக்கு அல்லா இதன் தடை விதிக்கவில்லை என்று தானே அர்த்தம்.

ஆனால், எம். எம். அக்பர் அவர்கள் எப்படி இயேசு போதையுண்டாக்கினார் என்று குற்றம் சாட்டுகிறார்?

உங்கள் அல்லா தான் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இறைவன் என்றுச் சொல்லும் நீங்கள், அவர் மதுபானத்தை தடை செய்தது முகமதுவின் கடைசி காலத்தில் அல்லவா? அப்படியானால், கிறிஸ்தவர்கள் குடிக்க அனுமதி அல்லா கொடுத்துள்ளார் என்று தான் பொருள் அல்லவா?

ஆனால், ஒரு உண்மையை உங்களுக்குச் சொல்கிறேன், புதிய ஏற்பாடு மதுபானத்தை ஏற்கனவே தடை செய்துவிட்டது. அப்படியானால், மதுபானம் தீமை என்பதை அல்லா தெரிந்துக்கொள்வதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே பைபிளின் தேவன் அதை தடை செய்துள்ளாருங்கோ...


இந்த கட்டுரையை நான் மேலோட்டமாகத்தான் எழுதியுள்ளேன், நம் தமிழ் நாட்டின் இஸ்லாமிய அறிஞர்கள் எனக்கு கேள்விகள் கேட்டாலோ, மறுப்பு எழுதினாலோ, பதில் எழுதினாலோ, அப்போது விவரமாக இஸ்லாமும் மதுபானமும் என்ற பொருளில் எழுத முயற்சிப்பேன்.. இஸ்லாமிய அறிஞர்களே, எம். எம். அக்பர் அவர்களே, இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றி தன் சிடர்களுக்கு குடிக்கவில்லை, இயேசுவின் சீடர்கள் யாரும் குடித்துவிட்டு, போதையுடன் ஜெபிக்கவில்லை. மற்றும் அது போதை தரும் ரசமுமில்லை என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இன்னொரு விவரம், உங்கள் குர்‍ஆனில் அல்லா மதுபானம் தடை செய்தது உண்மையானால், இயேசுவின் காலத்தில் உள்ள மக்கள் அதை உண்பதில் என்ன தவறு இருக்கிறது, இதற்கு காரணம் அல்லா தானே. இனி எந்த குற்றச்சாட்டையும் பைபிள் மீது வைக்கும் போது, முதலாவது உங்கள் குர்‍ஆனில் அது பற்றி என்ன சொல்லியுள்ளது, இஸ்லாம் என்ன சொல்கிறது என்று தெரிந்துக்கொண்டு எழுதினால்... உங்களுக்கு சிறிது நன்றாக இருக்கும், எனக்கும் நேரம் மிச்சமாகும்.

இஸ்லாமில் மதுபானம் பற்றி மேலும் அறிய விரும்பினால், கீழ்கணட தொடுப்புகளில் படிக்கலாம்:


1. Muhammad, the Quran, and Prohibition(Islam's punishments for drinking and gambling)

2. Qur'an Contradiction: Fully Detailed Or Incomplete? E.g., The Statements On Wine

3. Islam And Wine Consumption Examining Muslim Arguments against The Bible in light of Islam's Gradual Prohibition of Wine Consumption

4. Wine: Allah's Provision or Shaitan's Abomination?

5. WINE IN ISLAM



1. இஸ்லாம் கல்விக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள் :

1. எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்

2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில் (குப்பை சடங்குகளை குப்பையில் போடச்சொன்ன இயேசு)

3. இஸ்லாம் கல்வி தள கட்டுரையும் 1 தீமோத்தேயு 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்

4. இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா?

4.1 இந்த கட்டுரைக்கு பதில் அளித்த "ஏகத்துவம்" தளத்திற்கு, உமரின் மறுமொழியை இங்கு படிக்கலாம்.


5. காபாவிற்குள் கள்ள(அநியாய) வியாபாரம் செய்ய அனுமதியுண்டா?



Isa Koran Home Page Back - Islam Kalvi Rebuttals Index  Page